Page 38 of 397 FirstFirst ... 2836373839404888138 ... LastLast
Results 371 to 380 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #371
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி!

    தங்கள் தேனிசை 'தென்றலின் முத்துக்கள்' பாடல்களின் தொடருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். (எனக்கு 90ஏ புதுசுதான்) அப்போ ராஜேஷ் வயசு?!

    உண்மையை சொல்லட்டுமா?....தேவாவின் சில பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவரின் 'கானா' வில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவாக கானா என்றாலே காத தூரம் ஓடி விடுவேன். அப்படி ஒரு வெறுப்பு கானா மீது.

    தேவாவும் நல்ல பாடல்கள் தந்துள்ளார் என்பதும் உண்மை. அதை நீங்கள் தேடி வெளிக் கொணர்வீர்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

    கலக்குங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #372
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ்ஜி!

    தங்கள் தேனிசை 'தென்றலின் முத்துக்கள்' பாடல்களின் தொடருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். (எனக்கு 90’ஏ புதுசுதான்) அப்போ ராஜேஷ் வயசு?!

    உண்மையை சொல்லட்டுமா?....தேவாவின் சில பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவரின் 'கானா' வில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவாக கானா என்றாலே காத தூரம் ஓடி விடுவேன். அப்படி ஒரு வெறுப்பு கானா மீது.

    தேவாவும் நல்ல பாடல்கள் தந்துள்ளார் என்பதும் உண்மை. அதை நீங்கள் தேடி வெளிக் கொணர்வீர்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

    கலக்குங்கள்.

    வாசு ஜி , நானும் கானா பாடல்கள் விரும்பி அல்ல.. ஆனாலும் தேவாவும் நல்ல மெலோடி பாடல்களை தந்துள்ளார். அதை இங்கே கொண்டு வருவதே நோக்கம்.
    தங்களது ஊக்கத்தாலும் வாழ்த்தினாலும் அது சாத்தியமே

    நன்றி நன்றி

  4. Thanks vasudevan31355 thanked for this post
  5. #373
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி!



    'எங்க ஊரு மாப்பிள்ளை' என்ற ராமராஜனும், கெளதமியும் நடித்த படம் ஒன்று உண்டல்லவா! அந்தப் படத்தில் 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

    அப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்காத நேரமே கிடையாது. TDK 90 ஆடியோ கேசட்டில் முதன் முதலாகப் பதிந்த இப்பாடல் இப்போதும் மெருகு குலையாமல் அப்படியே என்னிடம் உள்ளது. ஆனால் டேப் ரிகார்டர்தான் இல்லை. எபெக்ட் அவ்வளவு அருமையாக இருக்கும்.

    'வானத்துல வெள்ளி ரதம்
    அது வீதியில வந்ததென்ன
    வீதியில வந்த ரதம்
    ஒரு சேதி இன்று சொன்னதென்ன'

    மிக அருமையான பாடல். மனோவும் சித்ராவும் மனம் லயித்துப் பாடியிருப்பார்கள்.

    எதற்கு இந்தப் பதிவை இடுகிறேன் என்றால் தேவா இளையராஜாவைப் பின்பற்றி இது போல நிறையப் பாடல்கள் கொடுத்திருப்பார். அதுவும் நன்றாகவே இருக்கும். அதனால் என் மனம் கவர்ந்த பின்னாளைய பாடலான இந்தப் பாடல் நினைவுக்கு வந்து உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மனோ சித்ரா கூட்டணி என்றாலே கூட்டாஞ்சோறின் சுகம்தானே. நான் இருவர் கூட்டணிக்கும் மிகப் பெரிய விசிறி.

    இதோ மனதை சுண்டி இழுக்கும் அந்தப் பாடல்.

    Last edited by vasudevan31355; 14th October 2014 at 10:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai, rajeshkrv liked this post
  7. #374
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வாசு ஜி . ஆம் நல்ல பாடல் ... கெளதமி ராமராஜனுடன் தான் நிறைய நடித்தார்.. வெள்ளி கொலுசு மணி, அரும்பாகி மொட்டாகி, மாலை நிலவே பாடல்கள் எல்லாம் என்னை கவர்ந்தவை ..

    மனோ- சித்ரா எனக்கும் பிடிக்கும். மனோ-ஸ்வர்ணலதா ஒரு படி மேலே பிடிக்கும்

  8. Thanks vasudevan31355 thanked for this post
  9. #375
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Rajeshji,

    p.m.paarunga. G.N.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #376
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவரவர்கள் ஆளுக்கொரு தலைப்பை ப் பிடித்து க் கொண்டார்கள்..பொங்கும் பூம்புனல், பகல்பாட்டு, மாலை மதுரம் இரவின் மடியில் என.. ஞான் எந்து செய்யும் விக் விக் வி.க்

    எனில் வீட்டிற்கு வந்து ரூம் போட்டு யோசித்ததில் ஹையா சிக்கிக்கிடுச்சு…

    மிட் நைட் மசாலா..- 1

    அவள் ப்யூட்டிஃபுல் பொண்ணு..அவனோ ஹேண்ட்ஸம் பையன் பின் என்ன லவ் தான்....இருங்க..யாருங்க கல்லால அடிக்கறது.. நிறுத்துங்க..சரி சரி..வேற ஆரம்பிக்கிறேன்..

    நடுத்தர வயதுப் பெரியவன் தான் அவன்..அவனுக்கு ஒரு மனைவி..ஒரே ஒரு கறிவேப்பிலைக் கொத்துப் போன்ற தம்பி.. அந்த அண்ணனுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை.. தன் கிராமத்தில் கூரையில்லாமல் இருக்கும் பெருமாளுக்கு (அண்ணனின் பெயரும் பெருமாள்..தம்பியின் பெயர் நாராயணன் ) ஒருகோவில்கட்டிக்கும்பாபிஷேகம் பண்ண வேண்டும் என்று.. பட் அவனோ அன்றாடம்காய்ச்சி..தம்பிக்கோ வேலை நிரந்தரமில்லை..என்ன செய்யலாம்.. பெருமாளே என வாழ்க்கை போய்க்கொண்டிருந் போது..

    தம்பியைக் காதலிக்கும் பெண் லதா.. அவளையே கல்யாணமும் செய்து வைத்துவிட.. ஆஹா வாழ்க்கையே சந்தோஷமாகத் தான் இருக்கிறதே என நினைக்கும்போது..

    தம்பி மேல்கொலைப் பழி விழுந்து போலீஸ் கைது செய்து ஜெயிலில் போட பெருமாளுக்குப் பெருமாள் பேரிலேயே கோபம் வருகிறது.. யோவ் நாராயணா..உனக்கு கோவில் தானேய்யா கட்ட ஆசைப்பட்டேன்..இப்படி என்னைப் பண்ணிப்புட்டயே.. இது பாரு என் தம்பி சம்சாரம்..இதுக்கும் பைத்தியம் பிடிச்சுருச்சான்னு தெரியலை முட்டை முட்டைக் கண்ணை முழிச்சு முழிச்சு மலங்க மலங்க முழிக்கிறா.. நான் என்னையா பண்ணினேன் எனக் கோவில்கோவிலாய்ப் பாடுகிறான்..

    பின் கைதியாய் இருக்கும்தம்பியை சக கைதி அடித்து சிறைக்கு வெளியில் போட..மேலே இருக்கும் கடவுள் பெருமாள் கைதியாய் சிறையிலிருக்க.. தம்பிக்கு நினைவு வந்து பெருமாள் கோவில்திருப்பணிக்குபெருமாளின் நகையும் எதிர்பாராமல்கிடைக்க..கோவில்கட்டிமுடிக்கிறான். .
    அண்ணன் பெருமாள் ஊர் ஊராய்ப் போய் பத்ரி முதலான இடங்களெல்லாம் போய்விட்டு ஊருக்கு வந்தால் கோவில்கட்டி கும்பாபிஷேகத்திற்கு ரெடியாக இருக்க தம்பி தாடியுடன் இருப்பதால் அடையாளமும் தெரியாமலிருக்க…

    ஆனால் என்னதான் இருந்தாலும் ஆம்படையான் மனசும் முகமும் ஆத்துக்காரிக்கு மறக்குமோ..தாடியுடன் இருப்பது தனது உயிர் நாடி என அவளுக்குத் தெரிந்துவிட..

    இறுதியில் கைதி நாராயணப் பெருமாள் ஓடி இந்தக் கோவிலுக்கு வந்து கருவறையில் மறைய தம்பி தம்பிமனைவி, அண்ணா அண்ணன்பெண்டாட்டி எனக் குடும்பம் இணைய…

    சுபம் எனப் போட்டு பாட்டிற்குப் போவதற்கு முன்..

    படம் சுப்ரபாதம் அண்ணன் நம்பியார் அண்ணி விஜயகுமாரி தம்பி ஜெய்கணேஷ் தம்பி மனைவி லத்து என்றலதா..
    ஓஹோ என்றில்லாவிட்டாலும் கொஞ்சம் ஓகேயான படம் தான்..(கதை மறந்து போனதால் இன்னிக்கு ஓட்டி ஓட்டிப் பார்த்தேனாக்கும்)(கண்ணா எவ்ளோ கஷ்டப் படறடா நீ..)

    என் முன்னோடி வாசு சார் செய்தாற்போல பாடல்கிடைக்கவில்லை ஆதலின் கீழே படத்தின் லிங்க்.. முப்பத்தி எட்டாம் நிமிடத்தில் நம்பியார் பாடும் கோபப்பாட்டு ஆரம்பிக்கும் என்று சம்சயம்..

    படத்தின் ஹைலைட் கண்ணனை நினைத்தால் சொன்னதுபலிக்கும் பாட்டு, முத்துராமனின் பார்த்த சாரதிப் பெருமாள் வேஷம் (என்ன கம்பீரமான உடற்தோற்றம்), பின் பத்ரி நாத்பண்டரி புரத்தில் பாடும் உன்னைத்தான் நீ அறிவாய் என்ற அனதர் பக்திப்பாடல்.. கே.ஆர்.விக்கும் ஒரு பாட் உண்டு..
    இந்தப் பெருமாளிடம் கோபித்துக் கொண்டு பாடும் பாடலில் ஒரு பக்தி டூரே அடித்திருப்பார் நம்பியார்..(அனேகமாக வயதானதிற்கப்புறம் கொஞ்சம்குணசித்திரத்திற்கு மாறிய முதல் படம் இதுவாய்த் தானிருக்கும்) காஞ்சீபுரம் என்ன குடந்தை என்ன ஸ்ரீ ரங்கம் என்ன.. ஆனால் என்ன கோவில் சென்று என்ன

    கட்டக்கடோசியில் சோளிங்கரில் படிக்கட்டுகளில் லொங்கிடி லொங்கிடி என நம்பியார்,விஜயகுமாரி லதா(குழந்தை ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கும்!) என ஏறிப் பாடி முடித்ததற்கு அப்புறம் தான் லதாவிற்கே குணமாகும்..ம்ம்

    பாடியவர்கள் சீர்காழி கோவிந்த ராஜன், வாணிஜெயராம் + கோரஸ்..

    **
    பாடல் வரி..
    *
    http://www.youtube.com/watch?feature...&v=o_1h1QVr5ec
    38 ம் நிமிடத்திற்குப் போகவும்
    திருக்கோயில் கட்ட எண்ணி
    பொறுப்போடு வந்த என்னை
    வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே

    பலர் மிதித்தாலும் விடமாட்டேன் திருமாலே
    காஞ்சிநகர் வரதராஜா உன் கருணை பெருமை என்ன லேசா
    வாஞ்சையுடன் எனக்கு அருள காஞ்சி வரதா விரைந்தோடி வருக
    திருப்பணி செய்வதற்கு உடந்தை
    நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை

    தினம் தோறும் சேவை செய்ய வரவா
    ரங்க ஶ்ரீவில்லிப்புத்தூரின் தலைவா

    பூலோக வைகுண்ட வாசா
    புகழோங்கும் ஶ்ரீரங்கநாதா
    திருவரங்கத்து ரங்கநாதா
    என் தேவைக்கு துணை புரிய வா வா

    அனந்த பத்மநாபா ஆனந்த விஸ்வரூபா
    திருவனந்தை பத்மநாபா
    உனக்கு சிங்கார கோயில் கட்ட வா வா

    நாராயண நாராயண நாராயண நாராயண
    நாராயண நாராயண நாராயண கிருஷ்ணா
    குருவாயூர் தன்னில் ஒரு குழந்தை
    நடக்கக் கொஞ்சுதம்மா இரண்டு சலங்கை

    வரவேண்டும் ஶ்ரீகிருஷ்ண பாலா
    நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா
    பழமை நிறைந்த திருப்பதியே
    எங்கள் அழகர்மலை கருணை நிதியே

    சோளிங்கர் ஆள்கின்ற முகமே
    பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே

    தொண்டு செய்யும் அடியார்கள் தமக்கு
    உன் சோதனை போதுமடா
    சோதனை தீர்த்து உன் பாத மலர்களில்
    எங்களை சேர்த்திடடா
    கொண்டது கொள்கை என்றதில்
    நின்றவர் கூறுதல் கேளுமடா

    கோவில் பிறந்திடவில்லை எனில்
    வைகுண்டத்தில் சேர்த்திடடா

    நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
    வைகுந்தா வைகுந்தா வைகுந்தா
    ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா
    மைவண்ண மேனி கொண்ட ஶ்ரீநாதா
    திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா

    நெய் கூந்தல் வேதவல்லி தலைமகனே
    மனம் நிறைந்திருக்கும் அலமேலு மணந்தவனே
    எத்தனையோ உலகில் வடிவெடுத்தாய்
    அங்கு எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்
    பித்துப் பிடித்த பெண்ணை அறியாயோ
    இன்று பித்தம் தெளிந்ததென்று அருள்வாயோ

    பாண்டுரங்கா பண்டரிநாதா பன்னக சயனா மணிவண்ணா
    பத்மநாபனே வீரராகவா ஆதிகேசவா ஶ்ரீகிருஷ்ணா
    ரிஷிகேசா ரிஷிகேசா ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா
    திருமாலே திருமாலே நரசிம்மா நரசிம்மா

    ***/

    தலைப்பு என்னமோ வெச்சுட்டு பக்திபாட்டெல்லாம் போடறேன்கறீங்களா.. முதல் பாட்டு ஒம்மாச்சிக்கு..ஓகே..யா.. அண்ட் திஸ் பாட் இஸ் டெடிகேட்டட் டு கோபால்sir3000!

    அடுத்த பாட்டு ஃபார் க்ருஷ்ணா ஜி..(க்ளூ..he knows everything!)

    (இன்று போய் நாளை வாரேன்)
    Last edited by chinnakkannan; 15th October 2014 at 12:58 AM.

  11. Likes Russellcaj, Russellmai, rajeshkrv liked this post
  12. #377
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    சி.க அருமை. தூள். உங்கள் எழுத்து நடை தூள்

  13. Thanks chinnakkannan thanked for this post
  14. #378
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Laddu Laddu Laddu Mittai VENumaa (for DeepavaLi) ?

    From Apoorva SagotharargaL:

    Bhanumathi sings

    Laddu Laddu.......




    Happy DeepaavaLi to all of you! Have fun with fireworks , sweets and kaaram- laddu, jilebi,jangiri,adhirasam, halwa, seedai, murukku,kaara boondhi etc!

    I miss Halwa from Arya Bhavan, Kumbakonam and their degree coffee !

    Another restaurant I miss is KaLiyagudi im Mayavaram (Mayiladuthurai)

    Migration has its own price !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  15. Thanks madhu thanked for this post
    Likes Russellmai, rajeshkrv liked this post
  16. #379
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மிட் நைட் மசாலா..- 1

    என் முன்னோடி வாசு சார் செய்தாற்போல பாடல்கிடைக்கவில்லை ஆதலின் கீழே படத்தின் லிங்க்.. முப்பத்தி எட்டாம் நிமிடத்தில் நம்பியார் பாடும் கோபப்பாட்டு ஆரம்பிக்கும் என்று சம்சயம்..

    பாடியவர்கள் சீர்காழி கோவிந்த ராஜன், வாணிஜெயராம் + கோரஸ்..

    திருக்கோயில் கட்ட எண்ணி

    தலைப்பு என்னமோ வெச்சுட்டு பக்திபாட்டெல்லாம் போடறேன்கறீங்களா.. முதல் பாட்டு ஒம்மாச்சிக்கு..ஓகே..யா.. அண்ட் திஸ் பாட் இஸ் டெடிகேட்டட் டு கோபால்sir3000!

    அடுத்த பாட்டு ஃபார் க்ருஷ்ணா ஜி..(க்ளூ..he knows everything!)
    கோபால்ஜி... 38 நிமிஷம் உங்களை வெயிட் செய்ய விடமாட்டேன்.
    சிக்கா... பாட்டு லிங்கைப் புடியுங்க..
    ( மிட் நைட்ல கோவில் கட்டினவர் நீங்கதானுங்கோ ! )


  17. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, rajeshkrv liked this post
  18. #380
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    krishna: Chinanchiru kiLiye is in raagamaaligai beginning with Kapi. There has been a lot of discussion about this song and the ragas used. We had a thread 'raga of songs please', where it was discussed.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •