-
15th October 2014, 07:30 PM
#421
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th October 2014 07:30 PM
# ADS
Circuit advertisement
-
15th October 2014, 07:31 PM
#422
Senior Member
Diamond Hubber
K.S.R.doss style
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2014, 07:32 PM
#423
Senior Member
Diamond Hubber
மோசக்காரனுக்கு மோசக்காரன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2014, 08:56 PM
#424
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி,
ஓடும் நதி பாடலை நானும் சமீபத்தில் யூடியூபில் கண்டு மகிழ்ச்சி அடைந்து முகனூல் இசையரசி குழுமத்தில் பதிவு செய்தேன்.. எனக்கு பிடித்த பாடல்
குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி, காலமகள் மடியினிலே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ..
இந்த டூயட் பாடலும் அருமை .. வித்தியாசமான பாடல் இசையரசியும், ஏழிசை வேந்தரும் சும்ம பின்னி பெடலெடுத்திருப்பார்கள் 
பதிவிற்கு நன்றி நன்றி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th October 2014, 09:55 PM
#425
Senior Member
Senior Hubber
ஹாய் குட் ஈவ்னிங்க் ஆல்..
ஹோம் ஒர்க் நெறய்ய இருக்கே..
முதலில் ராகவேந்த்ரா சார்.. மிக்க நன்றி.. எனக்கு டெடிகேட் பண்ண பாட்டுக்கு...ஒர்ரே சிரிப்பு+சந்தோஷம் (எனக்கில்லை விஜிக்கும் அருணாவுக்கும்.. பார்த்த எனக்குக் கொஞ்சம் சோகம் தான்).. மதுண்ணா வீடியோவிற்கு தாங்க்ஸ் கொஞ்சம் வெவகாரமாத் தான் இருக்குங்க.. சரின்னு பாட் உள்ற போய் பார்த்தேனா..
ஹை…கோல்கேட் சிரிப்பு விஜயகாந்த் நாவல்பழக் கண்ணு அருணா..
சிக்கு சிக்காம் சிக்கா சிக்காம் சிக்கிடுச்சாம்
சின்ன மச்சான் கண்ணு ரொம்ப சொக்கிடுச்சாம்..
தாவி உன்னைப்பார்க்கும் பருவ மனசு கேக்கும்
பார்வை தந்த ஏக்கம் பொண்ணுக்கேது தூக்கம்..
தனியா வரவா ராசா ( வந்துட்டாங்களே..)
கண்ணன் கூட கருப்பு நிறம் அழகில்லையா கோபிகள் மயங்கலையா..
கண்ணில் அன்பு இருந்தா ஒரு கரியும் வைரம் தானே (?!)
காதல் வந்த நெஞ்சிலே கனவு தோன்றுமே..
இரவு வந்தா நினைப்பு எல்லாம் ஒம்மேல் தான் நினைச்சா சந்தோஷம் தான்
கட்டி வச்ச தேரு இந்தக் கட்டழகைப் பாரு (தேருஎப்படி ஒய்ட் அண்ட் ஒய்ட்ல இருக்கும்?) காதலிச்சா பாவமா கன்னி தோஷமா..
நினைச்சு இங்கே தனிச்சிருக்கு துடிச்சுக்கிட்டு உன்னையே நெனச்சுக்கிட்டு
தானே வந்து நின்னு துணை தேடும் சின்னப் பொண்ணு..(ம்ம்ஹூம்ம்.. பெருமூச்சு!)
தெரிஞ்சுக்காத பாவமா..தெரிஞ்சும் வேஷமா..
(பார்த்துப் பார்த்து கேட்டுக் கேட்டு சிரித்து சிரித்துடைப்படிச்சேன்.. புலியூர் சரோஜா டான்ஸ் தெரிகிறது..ரூம்போட்டு உட்கார்ந்து பாட் எழுதினது யாரு?)
சிக்கு சிக்காம் சிக்கிக்கிடுச்சு மனசு ராகவேந்திரா சார் அருளாலே+ மதுண்ணாவின் வழிமொழிதலாலே.. நீதி பிழைச்சதான்னு தெரியாது..மனசு சொக்கிடுச்சு..
**
'//இல்லை இல்லை எனக்குத்தான் உரிமை' என்று நான் ராம் ஜெத்மாலனியாக வாதாட, இன்பச் சண்டை இனிதே இன்றுவரை நடந்து வருகிறது எங்களுக்கிடையில்.// வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே//போதும் என்பது இல்லையென்று
நாம் வாழ்ந்து பார்க்கலாம் வா // வாவ் .. சூப்பர் பாட்டு வாசு சார்.. வழக்கம்போல நல்ல விவரணை…. நான் முன்பே பாடல் கேட்டிருக்கிறேன்..சமீபத்திய குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களில் இந்தப் பாட்டு கேட்டதில்லை.. இப்போதுதான் உங்களினால் வீடியோவாகவும் பார்க்கிறேன்.. ஃபர்ஸ்ட்களாஸ்..ஒண்ணாங்க்ளாஸ்.. தாங்க்ஸ் அகெய்ன்..
*
ரோசா மலரே அழுவக் கூடாது – ஆடியோகொடுத்த ராகவேந்திராசாருக்கும் வீடியோ கொடுத்த மதுண்ணாவிற்கும் மறுபடி ஒரு ஓ..என்னாது… சந்திரசேகர் விஜயசாந்தியா .ம்ம் என்னா ரசனையோ
*
கிருஷ்ணா ஜி பணம் என்னடா பணம் பணம் பாட்டுக்கு தேங்க்ஸ்..இதோ பின்பக்கமா ஓடி வந்துக்கிட்டே இருக்கேன்.. பாராட்டியதற்கு மிக்க நன்றி..
*
எஸ்வி.சார்.. நா.காமராசன் நல்ல கவிஞர்..போய்வா நதியலையே பிடிக்க்கும்.. கனவுகளே பாட்டிற்கும் தாங்க்ஸ்.. கைவளை விலங்குகள் உடையட்டுமே அங்கு காதல் சிறகுகள் உயரட்டுமே..ம்ம் நல்ல லைன்ஸ்..பாவாடை சட்டையில் இருந்த அடக்கம் ஸாரி கட்டியவுடன் காணமல் போய்விட்டது.. காவியம் தொட்டிலில் தவழட்டுமே சரி..எதுக்கு தாவிக் குதிக்கணும் இப்படி லத்து?!
*கே.எஸ். ஆர் தாஸ் பதிவுக்கு தாங்க்ஸ்.. நான் ஏதாவது அந்த டப்பிங்க் படம் பார்த்திருக்கேனா என்ன (இந்தக்காலத்தில் வருபவற்றைப் பார்த்திருக்கிறேன்..எனக்கு மிக இஷ்டலுவாக்கும்) மஞ்சள்பேண்ட் ஹீரோ செகப்பு பேண்ட் ஹீரோயின்.. இதில் குட் பேட் அக்ளியின் ட்யூன் ஆரம்பத்தில் தென் காஷ்மீரா சிம்லாவா..ம்ம்
*
ராஜேஷ் கண்ணா! வளர தாங்க்ஸும்மா. பாராட்டியதற்கு..
//“குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் “ என்ற பாடல். மெல்லிசை மன்னரின் இசை, கவியரசரின் வரிகள், இசையரசியின் குரல் என இந்த பாடல் என்றுமே மறக்க முடியாத பாடல்.// இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப்பிடிக்குமாக்கும்.. அகெய்ன் தாங்க்ஸ்..
தேவா சீரீஸ் தான்- ஓ ஓ மதுபாலா நல்ல பாட்டு தான்..நான் இப்பதான்கேட்டு, பார்க்கிறேனாக்கும்.. யாராக்கும் அது..ம்ம் ராஜேஷைக் கேட்க வேண்டாம்.பாவம் அவர்க்குத் தெரியாது! வானத்துல வெள்ளி ரதம்..பாட்டும் ஓகே..ஆனா ராமராஜன் கெளதமி.. ம்ம் ராமராஜன் கொடுத்துவைத்தவர்…தொடருங்கள்..அதென்ன மக்கள்ஸ்லாம் கானா பிடிக்காதுங்கறாங்க..சின்னக்கண்ணா எழுதின கானா நினைவிருக்கா ராஜேஷ்.. தேடிப் போடறேன்!
பொங்கும்பூம்புனலில் பாடல்களுக்கென்றே ஒரு சனிக்கிழமை ஒதுக்கலாம் என்றிருக்கிறேன் ராகவேந்தர் சார்..மிக்க நன்றி..
ஹோம் ஒர்க் பண்ணி முடிக்கவே டைம் ஆகிடுச்சு..மி. நை ம வேற எழுதணும்..ஆமா… நான் தொடர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் அதே டைப்பில பாட்டு போட்டா எனக்கு மிச்சமிருக்காதே!
சரி போய்ட்டு சற்று நேரத்தில் வாரேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th October 2014, 11:47 PM
#426
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
இது நியாயமா...
'ஓடும் நதி'யில் என்னைத் தவிக்க விட்டு விட்டு நீங்களும் கோபாலும் மட்டும் கரை கடந்து விட்டீர்களே..
நான் என்ன பாவம் செய்தேன்...
காலமகள் வழியினிலே ஓடும் நதியினில் நீந்தி வந்து தங்களுடன் இணைந்து விடுவேன்...
...
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் பாட்டைப் பொறுத்த வரையில் நான் சென்னை வானொலி நிலையத்தை கோயில் கட்டி கும்பிடுவேன்... இப்படம் ஓடிய கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் மதராஸ் ஏ அலைவரிசையிலும் இரவு 7 மணி சுமாருக்கு மதராஸ் பி அலைவரிசையிலும் இரவு விவித் பாரதியிலும் (அப்போது தான் விவித்பாரதி தமிழ் ஒலிபரப்பு ஆரம்பித்த புதிது. ஏப்ரல் 1969ல் தமிழ்ப்புத்தாண்டு நாளன்று ஆரம்பிக்கப் பட்டது.) சக்கைப் போடு போட்ட பாடல். அப்போதெல்லாம் படம் வெளியாகும் முன் விவித் பாரதியில் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார்கள். விவித்பாரதிக்கு முன்னால் படம் வெளியான பிறகு தான் மதராஸ் வானொலியில் படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். சிலோன் ரேடியோவில் மட்டும் தான் முன்பாகவே ஒலிபரப்புவார்கள். அதுவும் புதியதாக ஒரு பாடலை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் அதை பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்வார்கள்.
இந்த ஓடும் நதி பாட்டைப் பொறுத்த வரையில் விவித்பாரதியில் அதிகம் ஒலிபரப்பினார்கள். அப்போதெல்லாம் சென்னை மற்றும் ஒரு சில ஊர்களில் மட்டும் தான் விவித்பாரதியின் ஒலிபரப்பைக் கேட்க முடியும். செங்கல்பட்டைத் தாண்டினால் அதிகம் சிக்னல் கிடைக்காது. சிலோன் ரேடியோவின் புண்ணியம் தான். அதே போல் சிலோன் ரேடியோவின் ஒலிபரப்பு சென்னைக்குக் கேட்காது. காலையில் ஒரு சில மணி நேரம், மாலையில் ஒரு சில மணி நேரம் மட்டுமே கேட்கும். ஷார்ட் வேவ் சிற்றலை ஒலிபரப்பில் தான் சிலோன் ரேடியோ கேட்கும். ஆனால் தெளிவாக இருக்காது.
அப்படி விவித்பாரதியில் இப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அன்று முதல் இன்று வரை என் நெஞ்சில் நிரந்தரமாகக் குடிகொண்டதுடன் நம்மையெல்லாம் தீவிர எம்எஸ்வி வெறியர்களாகவும் ஆக்கி விட்டது.
விவித்பாரதி ஆரம்பித்த புதிதில் காலை 9.30 முதல் 10.00 வரை உங்கள் விருப்பம், மதியம் 2.30 மணிக்கு திரை அமுதம், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாலை இசை, இரவு 7.45 மணி முதல் 9.00 மணி வரை தேன்கிண்ணம், 9.00-9.15 மணி வரை வண்ணச்சுடர் இவ்வளவு தான். இதில் காலை 9.30 மணிக்கு உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் பல நாட்கள் இடம் பெற்றது. கூடவே சிவந்த மண், நம்நாடு, தங்க சுரங்கம், அடிமைப் பெண், சாந்தி நிலையம் என கொடிகட்டிப் பறக்கும்.
சென்னை குளோப் தியேட்டர் என நினைக்கிறேன். இந்தப் பாட்டிற்காகவே சென்று படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு இது வரை பார்க்கவில்லை.
இப்பாடல் காட்சியில் சூழ்நிலையை மெல்லிசை மன்னர் தன்னுடைய இசையில் அருமையாக கொண்டு வந்திருப்பார். கதைப்படி ஒரு நிர்ப்பந்தத்திற்காக சரோஜா தேவி ரவிச்சந்திரனுடன் டூயட் பாடுவாரே தவிர மனதில் ஒரு சோகம், பயம் போன்ற வேறு உணர்வுகள் இருக்கும். ரொம்ப நாளைக்கு முன்பு பார்த்ததால் முழுசாக நினைவில்லை. ஆனால் சரோஜா தேவி சோகமாத்தான் டூயட் பாடுவார். அவருடைய முகத்தை நன்கு கவனித்தால் தெரியும். அதை விட அருமையாக இசையரசியின் குரலில் இதை கவனிக்கலாம். இதை கவியரசர் வரிகளில் சொல்லி யிருப்பார் வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே ஒன்றில் ஒன்றாக வேண்டும்.. இதிலேயே பாடல் மற்றும் படத்தின் கதையையே சொல்லி யிருப்பார்.
இந்தப் பாடல் முடிவடைந்தவுடன் சரோஜா தேவியின் நடிப்பு நம் கண்களைக் குளமாக்கி விடும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இப்படம் நினைவிருக்கிறது..
அருமையான பாடலை வழங்கிய வாசு சாருக்கு பாராட்டுக்கள்..
முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்..
இப்படத்தை ரவியின் அற்புதமான நடிப்பிற்காக கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
அப்புறம்..
ஒரு நூறு முறையாவது மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காகப் பார்க்க வேண்டும்.
Last edited by RAGHAVENDRA; 15th October 2014 at 11:51 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th October 2014, 11:59 PM
#427
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்

தமிழில் புதியதாக ஒரு டிக்ஷனரி உருவாக்கி பாராட்டுவதற்கென்றே ஒரு லட்சம் வார்த்தைகளாவது போட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும். அதை வைத்து இசையரசியின் குரலை வர்ணிக்கலாம்.
கேட்கும் போதெல்லாம் உள்ளத்தில் பரவசம் ஏற்படுத்தும் உன்னதமான பாடல்....
பால்குடம் படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில் (வரிகள் வாலி?) காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்...
முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ...
http://www.inbaminge.com/t/p/Paal%20Kudam/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2014, 12:03 AM
#428
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
சீர்காழியாரின் குரலில் சோகம் என்கிற உணர்வு அவர் சொல்கிற படியெல்லாம் கேட்கிறது... அதே போல அனைத்து உணர்வுகளும்...சும்மாவா அவரைப் பாட வைத்தார்கள் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களையெல்லாம்...
சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா... என்றும் நம்மை கட்டிப் போடும் அருமையான பாடல்..
முதல் படத்தையை முத்திரைப் படமாகத் தந்த குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் வா ராஜா வா படத்திலிருந்து ...
http://www.inbaminge.com/t/v/Vaa%20Raja%20Vaa/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2014, 12:06 AM
#429
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
ஈஸ்வரியின் மெலோடி பாடல்கள் கொஞ்சமாக இருந்தாலும் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து நிற்கும் பாடலாக அமைந்தன. அதற்கு ஓர் உதாரணம் மனைவி படத்தில் இடம் பெற்ற இப்பாடல். திரை இசைத் திலகம் கே.வி.எம். இசையில் அருமையான பாடலைக் கேளுங்கள்..
அன்னை போல என்னைக் காத்த அன்பு தெய்வமே..
http://www.inbaminge.com/t/m/Manaivi/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2014, 12:11 AM
#430
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
அன்றாட அலுவல்களை முடித்தீர்களா
வீடு திரும்பினீர்களா
சாப்பிட்டு விட்டீர்களா
ஒரு சின்ன குளியல் போட்டீர்களா..
பாயை எடுத்துக் கொள்ளுங்கள்..
தலையணை இருந்தால் சரி இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது தலைக்குப் பின்புறம் கைகள் கட்டி தலையை சாய்த்துக் கொள்ளுங்கள்..
நிலா வானில் உலா வரும் பின்னிரவு...
எம்பி3 பிளேயரில் இப்பாட்டை ஒலிக்க விடுங்கள்..
கண்ணை மூடுங்கள்..
தூக்கிப் போடுங்கள் ரத்த அழுத்த மாத்திரைகளை... டாக்டர் ஃபீஸை மிச்சப் படுத்துங்கள்..

இசையரசியின் குரலை விட மன பாரத்தைக் குறைக்கும் மருந்து வேறேதேனும் உள்ளதா என்ன...
குழந்தைக்காக படத்திலிருந்து தைமாத மேகம் பாடலைக் கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/k/Kuzhandhaikkaaga/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks