-
16th October 2014, 02:26 PM
#471
சி கே சார்
உங்கள் நாடக அனுபவம் கட்டுரை அருமை. திரு பூர்ணம் விஸ்வநாதன் கூட சுஜாதாவின் மேடை நாடகங்களை கொண்டு வந்தார்.
'கடவுள் வந்து இருந்தார்' ,'அடிமைகள்','ஊஞ்சல்','டாக்டர் நரேந்தர் வினோத வழக்கு ' .இதுல 'டாக்டர் நரேந்தர் வினோத வழக்கு ' ரொம்ப ரசித்த நாடகம்
-
16th October 2014 02:26 PM
# ADS
Circuit advertisement
-
16th October 2014, 02:33 PM
#472
( அமுதசுரபி ஏப்ரல் 2008, நன்றி: மெலட்டூர். இரா.நடராஜன் )
எழுத்தாளர் சுஜாதவின் விஞ்ஞானக் கதைகளில் கால இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி பயணிப்பது மாதிரி கற்பனைகள் வரும். அந்த மாதிரி நாம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போக வாய்ப்புக் கிடைத்தால், அதே சுஜாதா பூர்ணம் விஸ்வநாதனோடு கை கோர்த்துக் கொண்டு வழங்கிய மேடை நாடகங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா என்று பட்டி மன்றமே நிகழ்த்தலாம். தன் நீண்ட கால நாடக அனுபவங்களில் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் பூர்ணம்.
அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்டோம்.
"சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங்கள் கொண்டு வருவோம். அது இன்னும் மெருகு சேர்க்கும். அந்த மாதிரி பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தில் என் பேத்தி 'நீங்க பாட்டியை பெண் பார்க்க போன போது என்ன பேசினீர்கள்' என்று கேட்பாள். அதற்கு நான் சொல்லும் டயலாக் ஸ்கிரிப்டில் உள்ளதைவிட கொஞ்சம் கூடுதலாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும். அந்த சீன் வரும்போது சுஜாதா சீட்டின் நுனிக்கே வந்து மிக ஆர்வமாக கவனித்து ரசித்திருக்கிறார்" என்றார் பூர்ணம்.
ஒர் ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பூர்ணத்துக்கு முழுக்கப் பொருந்தும். பூர்ணம் மேடையில் சுடர் விட்டுப் பிரகாசித்தார் என்றால் அதற்கு இன்றும் இயங்கு சக்தியாக இருப்பவர் திருமதி சுசீலா விஸ்வநாதன்.
"பூர்ணம் நியூ தியேட்டர் சென்னையை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்தாலும் ஸ்கிரிப்ட் எழுதித்தரும் சுஜாதா அந்த சமயத்தில் பெங்களூரில்தான் இருந்தார். சாதா போஸ்டில்தான் ஸ்கிரிப்ட் வரும். சுஜாதாவின் எக்ஸ்பிரஸ் ஸ்பீட் கையெழுத்தைப் படிப்பது என்பதே மிகப் பெரிய சவால். பெரும்பாலும் அந்தப் பணி எனக்குத்தான் வரும். கடிதம் வந்ததும் அந்தக் கணமே படிக்க வேண்டும் என்பார் என் கணவர். என்க்கு நானே ஒரு முறை தனியாக ரிஹர்சல் செய்து கொண்டு படித்தால்தான், அவர் மனம் கோனாமல் பிசிறில்லாமல் படிக்க வரும். எனவே கடிதம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, நான் முழுவதுமாக தயாரான பிறகுதான் கடிதத்தையே அவர் கண் முன்னால் காட்டுவேன்" என்றார் திருமதி சுசீலா பூர்ணம்.
"சுஜாதாவின் பல நாடகங்களில் உச்சமான நாடகமாக நான் கருதுவது ஊஞ்சல் நாடகம்தான். அதில்தான் சுஜாதா எழுத்தின் வீச்சு மிகவும் உயர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் நான் நடித்தபோது அந்தப் பாத்திரத்தை ரசித்து ரசித்து செய்திருக்கிறேன். அந்த நாடகத்தில் நான் ஓர் அறிவு ஜீவி. ஆனால் எனது கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்துக்கு ஒத்துவராது என்பதை அறியாதவன். அப்படிச் சொன்னாலும் அதை ஏற்க மறுப்பவன். நிகழ்காலத்தால் உதாசீனப்படுத்தப்படும் ஒர் இறந்தகால மனிதன். ஒரு கட்டத்தில் என் ப்ராஜெக்ட்டுக்காக என் மகள் தன் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருக்கும் மேமிப்பிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயைக் கடனாக கேட்பேன். என் மகளும் தன் தந்தை படும் மன வேதனையை உணர்ந்து தர ஒப்புக் கொள்வாள். ஆனால் என் மனைவியோ அதை வன்மையாக கண்டிப்பாள். மனதை பிழியும் காட்சி அது. இது கற்பனை என்றாலும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த என் மகள் பத்மஜா உணர்ச்சிக் கொந்தளிப்பில் நாடகம் முடிந்ததும் ரூபாய் பதினைந்தாயிரத்துக்கு என் பெயருக்கு செக் எழுதி என் டேபிளில் வைத்துவிட்டாள். அப்பறம் அவளுக்கு புரியவைத்து சமாதானபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்றும் அவளைக் கிண்டலடிக்க 'அந்த பதினைந்தாயிரம் செக்' என்று சொல்லி சொல்லி சிரித்து மகிழ்வோம். என்னால் அந்த பரிமாணத்தை கொடுக்க முடிந்ததற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துதான்".
" ஊஞ்சல் நாடகத்துக்காக மும்பை போனதை என்னால் மறக்கவே முடியாது. இந்த நாடகத்துக்கு முக்கிய செட் பிராப்பர்டி மேடையில் பிரதானமாக முன்னும் பின்னுமாக ஆடும் ஊஞ்சல்தான். ஆனால் மும்பை வந்து சேர்ந்ததும் எங்களுக்கு ஆரம்ப சோதனையே அந்த ஊஞ்சல்தான். எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஊஞ்சல் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. தெரிந்தவர்களின் விலாசங்களை வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினோம். நேரம் ஆக ஆக ஒரு நாள் கிரிக்கெட்டின் கடைசி ஓவர்கள் மாதிரி டென்ஷன் தலைக்கேற ஆரம்பித்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக கடைசி ஒரு சில மணி நேரங்களில் கண்டேன் சீதையை என்ற மாதிரி ஒரு ஊஞ்சலை கண்டு கொண்டோம். மும்பை ஊஞ்சல் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றால் அதில் அந்த ஊஞ்சலுக்கும் பங்குண்டு" என்று சிரித்தார் பூர்ணம்.
"மற்ற நாடகக் குழுவில் இருப்பது போல தனக்கு ஏ.சி. ரூம் மற்றவர்களுக்கு சாதாரண ரூம்கள் என்பது பூர்ணம் நியூ தியேட்டரில் கிடையாது. பூர்ணமும் சுஜாதாவும் அந்த நாட்களில் எங்களோடு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணித்திருக்கிறார்கள். ஒரு முறை வெளியூருக்குச் சென்றிருந்தபோது அவர்கள் அளித்திருந்த ரூம்கள் சராசரிக்கும் குறைவாக இருந்தது என்பதை எங்கள் முக பாவனைகளிலேயே புரிந்து கொண்ட பூர்ணம், உடனடியாக செயலில் இறங்கி மாற்று ஏற்பாடுகள் செய்து அதன் பிறகுதான் சாப்பிட்டார்" என்கிறார் நாடக மற்றும் டி.வி. சீரியல் நடிகையான உஷா.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2014, 02:44 PM
#473
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணா ஜி.. தாங்க்ஸ்.. சுஜாதாவை எப்படி விட்டேன்..ஏனெனில் அவரது நாடகங்கள் திரையில் வரவில்லை..
ஆனால் அடிமைகள் கடவுள் வந்திருந்தார்..டா.வி.வ படிக்க நன்றாக இருக்கும்.. நாடகங்கள் எதுவும் பார்த்ததில்லை..டி.விக்காக எடுக்கப் பட்ட போது டா. ந.வி.வ அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை..அதே போல் ஒரு கொலை ஒரு பிரயாணம்.. நாடகம். நன்றாக இருக்கும்.. டிவியில் ஓ.. நோ.. மாறுதல் வரும் மட்டும் (செட் ஆஃப் ஓரங்க நாடகங்கள்) பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்..
டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - சிட்னி ஷெல்டனின் நத்திங்க் லாஸ்ட்ஸ் ஃபாரெவர் இரண்டையும் படித்தால் இரண்டுக்கும் கொஞ்சம் ஒற்றுமை தென்படும்..
பூர்ணம் விஸ்வனாதன் நல்ல நடிகர்..அவரை அவ்வளவாக வெள்ளித் திரை உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை என என் அபிப்ராயம்..
ஓஹ்.. மறந்துட்டேனே கிருஷ்ணாஜி.. நாடகம் பார்க்காமல் படமாய்ப் பார்த்தது எது தெரியுமா மெரீனாவின் “தனிக்குடித்தனம்”.. சினிமாவில் பூர்ண்ம் ரோல் சோ..
பூர்ணம்பற்றிய பதிவிற்கு தாங்க்ஸ்..
வாசு சார்..இன்றைய ஸ்பெஷல் பார்த்து கேட்டு சொல்கிறேன்.. ஏன் ஏரிக்கரையில் போடவில்லை..ம்ம்க்கும்..
Originally Posted by
gkrishna
சி கே சார்
உங்கள் நாடக அனுபவம் கட்டுரை அருமை. திரு பூர்ணம் விஸ்வநாதன் கூட சுஜாதாவின் மேடை நாடகங்களை கொண்டு வந்தார்.
'கடவுள் வந்து இருந்தார்' ,'அடிமைகள்','ஊஞ்சல்','டாக்டர் நரேந்தர் வினோத வழக்கு ' .இதுல 'டாக்டர் நரேந்தர் வினோத வழக்கு ' ரொம்ப ரசித்த நாடகம்
-
16th October 2014, 02:50 PM
#474
டியர் சி கே
இப்ப சமீபத்தில் (4 அல்லது 5 மாசம் இருக்கும்) சென்னையில் பொன்னியின் செல்வன் நாடகம் பார்த்தேன் .ரொம்ப interesting . நிறைய செலவு செய்து இருந்தார்கள் .விருமாண்டி பசுபதி கூட நடித்து இருந்தார் .அவர் தான் ஆதித்த கரிகாலன. வந்திய தேவன்,ஆழ்வார்கடியான் இவங்களுக்கு நல்ல கைத்தட்டு கிடைத்தது. டிக்கெட் காஸ்ட்லி .நிறைய நடிகர்கள் யார் யார் என்று தெரியவில்லை
Last edited by gkrishna; 16th October 2014 at 02:59 PM.
gkrishna
-
16th October 2014, 02:56 PM
#475
உங்கள் எழுத்தில் வசீகர நடை உள்ளது சி கே என்று முரளி சார் சொல்வது ரொம்ப சரி . என்ன அழகாய் எழுதுகிறீர்கள் . வெறும் புகழ்ச்சி அல்ல
நீங்கள் கால சக்ரம் நரசிம்ஹன் (ஹிந்து சப் எடிட்டர் - காதலிக்க நேரமில்லை கோபு சடகோபன் - கமலா சடகோபன் (கதவு நாவல் புகழ்) அவர்களின் புதல்வர் ) எழுதிய சங்கத்தார படித்து இருக்கிறீர்களா ?. ஆதித்த கரிகாலன் கொலையை வேறு விதமாக அணுகி இருப்பார்
-
16th October 2014, 03:05 PM
#476
Senior Member
Senior Hubber
அகெய்ன் தாங்க்ஸ்..
இல்லீங்க க்ருஷ்ணா ஜி.. ஆனால் சமீபத்தில் படித்தது மாயா என்று ஒரு பெண்மணி எழுதிய கடாரம் என்ற சரித்திர நாவல்..(ராஜேந்திர சோழன் காலம்) கிட்டத்தட்ட 600 பக்கங்கள் கொண்ட நாவலில் இருநூறு பக்கங்களுக்குள் 75 கேரக்டர்ஸ் அண்ட் கடாரம் படையெடுப்பும் முடிந்துவிடும்..பின்னும் படிக்கத்தூண்டி, அத்தியாயத்துக்கு அத்தியாயம் சஸ்பென்ஸ் கொடுத்துக் கொடுத்து ஒரு லெவலுக்கு மேல்..சரி முடித்துவிடுவோம் என முடித்தேன்.. நன்றாக எழுதியிருக்கிறார் அவர்..ஆனால் நிறைய கேரக்டர்ஸ் நிறைய சஸ்பென்ஸ்..
கங்கை கொண்ட சோழன் நான்காம் பாகம் இன்னும் பாதியிலேயே நிற்கிறது..உடையார் பாலகுமாரன் ஆறு பாகங்கள்.. படிக்கவில்லை எனில் படித்து விடுங்கள்..கொஞ்சம் படக்கென படிக்க இயலாது எனக்கு மூன்று மாதங்கள் ஆயின..
நந்திபுரத்து நாயகி என விக்கிரமன் பொன்னியின் செல்வனைத் தொடர்ந்திருந்தார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்..ஆனால் பார்த்தீர்களெனில்..விக்ரமன் சீனியர் எழுத்தாளர் தான்..எனக்கென்னவோ கொஞ்சம் ஸ்லோவாகப் போவது போலப் பிரமை..
நீங்கள் சொன்ன காலசக்ரம் நரசிம்ஹன் புத்தகம் அடுத்த லீவு வரும்போது வாங்க வேண்டும்..
பொன்னியின் செல்வன் பார்த்தீர்களா..கொடுத்து வைத்தவர்.. நான் சிவகாமியின் சபதம் இங்கு மார்ச் மாதமோ பிப்ரவரியோ நினைவு..தோட்டா தரணியின் செட்.. ஆனால் நடித்தவர்கள் கொஞ்சம் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் போலும் .. சிவகாமிக்கு மொத்தமே மூணே மூணு டிரஸ் தான்..பரஞ்சோதி நல்ல ஒல்லியாய்க் குறுந்தாடியெல்லாம் வைத்துக் கொண்டு வேலெறிவார்..சுகமில்லை..
-
16th October 2014, 03:08 PM
#477
Senior Member
Senior Hubber
இப்போது மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் என்ன தெரியுமா..சமுத்திர ராஜ குமாரி சுகபுஷ்ப சுகுமாரி.. ஆனால் பாடல் வரிகள் கிடைக்கவேயில்லை.. பாட்டு வீடியோ கிடைத்தது..சாயந்திரம் பார்த்து பாடல் வரிகளை இடுகிறேன்..சரியா..( நல்ல பாட்டு)
-
16th October 2014, 03:31 PM
#478
Junior Member
Newbie Hubber
கிருஷ்ணா/சி.க,
ஏதோ casual ஆக சொல்ல போக ,தகவல் களஞ்சியம் ஆகவே ஆகி விட்டது.சோ,விசு,மௌலி,எஸ்.வீ.சேகர்,கிரேசி ,கோமல்,மெரினா,பூரணம் ஒரு நாடகம் கூட விட்டதில்லை.சிவாஜியின் வியட்நாம் வீடு, எம்.ஆர்.ராதா தூக்கு மேடை,ரத்த கண்ணீர் என்று சில.
சிறு வயதில் நானே எழுதி ,நானே நடிப்பேன். எம்.ஐ period ,என் சொந்த கதைகளை எழுதி,படிக்க சொல்லி என்னை ஊக்குவித்தார்கள் ராஜேந்திரன் ,ஆர்.பீ சார்.(11,12 வயதில்).D.E .O வந்தால்,இலக்கிய மன்றங்களில்,ஆண்டு விழாக்களில்,ரேடியோ நாடகங்களில் (பாண்டி,திருச்சி) நானே எழுதி ,இயக்கியவை.நான் தான் ராஜா ரோல் ஆண்டு விழாக்களில் (கதாநாயகிகள் ,தோழிகள்,ராணிகள் இத்யாதி. மீரா,ஜெயந்தி,விமலா என்று)
என் நாடகம் பற்றிய பார்வை,புரிதல் மாறியது ஞானியை சந்தித்த பின். முத்துசாமி,இந்திரா பார்த்தசாரதி,அம்பை,பிரபஞ்சன்,வண்ணநிலவன்,பாதல் சர்க்கார் (work shop ),டெண்டுல்கர் என்ற ஜாம்பவான்களுடன் சந்திப்பு. பரீக்ஷாவில் 6 வருடம் தொடர்ந்த பங்களிப்பு.கூத்து பட்டறை,எம்.பீ.எஸ் youth coir என்று ஒரு பெரிய வட்டம்.
பிறகுதான் வியாபாரியாகி விட்டேனே??
-
16th October 2014, 04:12 PM
#479
Originally Posted by
Gopal,S.
கிருஷ்ணா/சி.க,
ஏதோ casual ஆக சொல்ல போக ,தகவல் களஞ்சியம் ஆகவே ஆகி விட்டது.சோ,விசு,மௌலி,எஸ்.வீ.சேகர்,கிரேசி ,கோமல்,மெரினா,பூரணம் ஒரு நாடகம் கூட விட்டதில்லை.சிவாஜியின் வியட்நாம் வீடு, எம்.ஆர்.ராதா தூக்கு மேடை,ரத்த கண்ணீர் என்று சில.
சிறு வயதில் நானே எழுதி ,நானே நடிப்பேன். எம்.ஐ period ,என் சொந்த கதைகளை எழுதி,படிக்க சொல்லி என்னை ஊக்குவித்தார்கள் ராஜேந்திரன் ,ஆர்.பீ சார்.(11,12 வயதில்).D.E .O வந்தால்,இலக்கிய மன்றங்களில்,ஆண்டு விழாக்களில்,ரேடியோ நாடகங்களில் (பாண்டி,திருச்சி) நானே எழுதி ,இயக்கியவை.நான் தான் ராஜா ரோல் ஆண்டு விழாக்களில் (கதாநாயகிகள் ,தோழிகள்,ராணிகள் இத்யாதி. மீரா,ஜெயந்தி,விமலா என்று)
என் நாடகம் பற்றிய பார்வை,புரிதல் மாறியது ஞானியை சந்தித்த பின். முத்துசாமி,இந்திரா பார்த்தசாரதி,அம்பை,பிரபஞ்சன்,வண்ணநிலவன்,பாதல் சர்க்கார் (work shop ),டெண்டுல்கர் என்ற ஜாம்பவான்களுடன் சந்திப்பு. பரீக்ஷாவில் 6 வருடம் தொடர்ந்த பங்களிப்பு.கூத்து பட்டறை,எம்.பீ.எஸ் youth coir என்று ஒரு பெரிய வட்டம்.
பிறகுதான் வியாபாரியாகி விட்டேனே??
Great
-
16th October 2014, 04:12 PM
#480
Senior Member
Senior Hubber
குரு கோபால் ஜி.. ஹையாங்க்..இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ்லாம் வச்சுக்கிட்டு அதப் பத்தி சொல்லாம் கொய்ங்க் கொய்ங்க்னு குதிச்சா எப்படி.. ஞானியின் மொழிப்யர்ப்பு நாடகங்கள் சில படித்திருக்கிறேன்..
சமீபத்தில் எழுத்தாள நண்பர் இரா.முருகனின் சிலிக்கன் வாசல் நாடகம் பார்த்தீர்களா ஷ்ரத்தா என நினைவு.. ஒண்ணு ரெண்டு கதைகளை கதைகள் த்ரெட்ல எழுதுங்களேன்..இரா.முருகன் அவரது சில கதைகளை நாடகப் படுத்தி உள்ளார்..உத்தராயணம் முதல் ஆட்டம்..அவரது இணைய தளத்தில் இருக்கும்..நேரமிருப்பின் படித்து ப் பாருங்கள் நன்றாக இருக்கும்
Bookmarks