-
17th October 2014, 08:35 AM
#171
Junior Member
Platinum Hubber
ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அந்நாளில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு விஷயத்தில் தங்களுடைய அபிமானத்தை செலுத்தியிருப்பர். குறைந்த செலவிலான பொழுது போக்கு சாதனம் என்கிற வகையில் சினிமாவின் மேல் ஏற்பட்டிருக்கக் கூடிய அபிமானம், அதைத் தாண்டி அதிலிருந்து narrow down ஆகி ஒரு குறிப்பிட்ட நடிகர் அல்லது இசையமைப்பாளர் என்கிற வகையில் அபிமானம் focus ஆகி அது ரசிகர் என்ற பரிமாணத்தையும் அதற்கு அடுத்த பரிமாணத்தையும் அடைந்திருக்கும். அந்த நினைவுகளும் அதையொட்டிய நிகழ்வுகளும் வாழ்வில் என்றைக்கும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
இவற்றைத் தவிர்க்க முடியாது.
THANKS RAGAVENDRAN SIR
-
17th October 2014 08:35 AM
# ADS
Circuit advertisement
-
17th October 2014, 08:50 AM
#172
Junior Member
Platinum Hubber
கீற்று கொட்டகை
கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது அவரவர் விருப்பமான நடிகர்கள் படங்களை பற்றி பதிவிடுவதை பற்றி கிண்டல் கேலி செய்யும் திரு கோபால் முதலில் தன்னுடைய ''நான் '' என்ற
அகந்தையை மாற்றி கொள்ளட்டும் .பிறரின் பதிவை மதிக்க முடியாத கோபாலுக்கு எங்கே நாகரீகம்தெரிய போகிறது ? எந்த திரிக்கு போனாலும் கோபாலின் நிலைமை இதே தான் .
உங்களுக்கு பிடித்தமான வற்றை பதிவிடுங்கள் . நாங்கள் இதுவரை எந்த நிபந்தனையும் , நிர்பந்தங்களையும் யார் மீதும் திணிக்கவில்லை .நீங்கள் வல்லவனாகவே இருங்கள் . கொஞ்சம் நல்லவனாக மாற யோசியுங்கள் .
-
17th October 2014, 09:48 AM
#173
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
கீற்று கொட்டகை
கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது அவரவர் விருப்பமான நடிகர்கள் படங்களை பற்றி பதிவிடுவதை பற்றி கிண்டல் கேலி செய்யும் திரு கோபால் முதலில் தன்னுடைய ''நான் '' என்ற
அகந்தையை மாற்றி கொள்ளட்டும் .பிறரின் பதிவை மதிக்க முடியாத கோபாலுக்கு எங்கே நாகரீகம்தெரிய போகிறது ? எந்த திரிக்கு போனாலும் கோபாலின் நிலைமை இதே தான் .
உங்களுக்கு பிடித்தமான வற்றை பதிவிடுங்கள் . நாங்கள் இதுவரை எந்த நிபந்தனையும் , நிர்பந்தங்களையும் யார் மீதும் திணிக்கவில்லை .நீங்கள் வல்லவனாகவே இருங்கள் . கொஞ்சம் நல்லவனாக மாற யோசியுங்கள் .
எஸ்.வீ,
எங்கு வந்தாலும் ஒற்றை agenda வுடன் வரும் ஆள் நானல்ல. பதிவுகளுக்கு இடம்,பொருள்,ஏவல்,உண்மை தன்மை அவசியம்.
உங்கள் பெயரையே குறிப்பிடாத போது ,எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லாத போது ஏன் வந்து தலை கொடுக்கிறீர்கள் என்றே புரியவில்லை.
அப்படி நாகரிகம் பார்ப்பவரானால் ,இன்றைக்கு உங்கள் கட்சியை கட்டி காக்கும் ,படித்தவர்கள் மத்தியில் உங்கள் கட்சிக்கு ஒரு பிடிப்பினை ஏற்படுத்திய உங்கள் தலைவியை பற்றியே ஒரு அநாகரிக பதிவு பதித்தீர்களே,அது என்ன வகை நாகரிகம்?
ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் பதிலில்லை என்னும் போது ,மற்றவருக்காக நீங்களும் எல்லை மீறியுள்ளீர்கள் என்னும் போது ,உங்கள் gentleman இமேஜ் எங்கே போனது?
என்னை பொறுத்த வரை வார்த்தைகள் மட்டுமே நாகரிக எல்லை இல்ல. இடம் பொருள் ஏவல் அறிந்து உரிய பங்களிப்பு, பொய் உரைக்காமை , அநாகரிக தாக்குதலை தவிர்த்தல் (விருதுகள் பற்றிய பதிவுகளின் போது பூப்பறிக்க போனீர்களா?பதிலுக்கு நாங்கள் விருது வந்த விதத்தை தீர அலசியிருந்தால் எங்கே கொண்டு போய் முகத்தை வைப்பீர்கள்),அளவு மீறி புகழ்ச்சி தவிர்த்தல் எல்லாமே நாகரிகம்தான்.
என் பதிவுகள் பொய்யுரையோ,முகஸ் துதியோ இல்லை. ஒவ்வொரு பதிவும் உழைப்பை,அறிவை சார்ந்தது.எங்கு வந்தாலும் என் பிரிய நடிகரை சுமந்து வந்து மற்றவரை போர் அடித்ததில்லை.
தோன்றியதை தோன்றிய படி உரைத்தாலும்,யாரிடமும் வன்மம் பாராட்டியதில்லை. என்னை பற்றிய விமர்சனங்களையும் நான் எதிர்கொண்டே உள்ளேன்.இன்று நாகரிகம் பற்றி lecture கொடுப்பவர்களின் சில பழைய பதிவுகளை போட்டால் உண்மை புரியும்.
நான் உங்களின் பதிவுகளுக்கு உரிய பெருமைகளை வழங்கியே உள்ளேன். இன்று கூட உங்களை நண்பராக கருதித்தான் பேசுகிறேன்.எழுதுகிறேன். அதே போல என் அபிமான நடிகருக்காக என் எழுதுகோல் பொய்மையாக வளைந்து கொடுத்ததேயில்லை.
இதற்கு மேலும் நாகரிகம் தேவையென்றால் அதை நான் எந்த பள்ளியிலும் கற்றதில்லை. பொய்யாக வாழ்வோருக்குத்தான் ,சார் போட்டு வார்த்தைகளில் பசப்பி, விஷம் விதைக்கும் வித்தை தெரியும்.
நானோ யாருக்கும் சலாமோ,சாரோ போடாதவன். போடுவதையும் விரும்பாதவன்.
இந்த திரியின் நோக்கம் குறுகி விடாமல் இருக்க ஆலோசனையாகவே கருத்துகளை வெளியிட்டேன். புரிய வேண்டிய மனித மூளைகளுக்கு புரிந்து விட்டது.சிறு மூளையில் மட்டுமே ஜீவிப்பவற்றுக்கு வயிற்றுக்கு மட்டுமே சோறிட முடியும்.
-
17th October 2014, 09:59 AM
#174
Junior Member
Platinum Hubber
வார்த்தை விளையாட்டு - உமது ஒரு பக்கத்தை காட்டுகிறது .சம்பந்தமே இல்லாதவார்த்தைகள் .
அளவோடு இருந்தால் எல்லாமே நலம் . உங்களுக்குத்தான் ....... நண்பனாக பரிதாப படுகிறேன் .
உங்கள் உள் மனதில் உள்ள வன்மங்கள் எனக்குதானே தெரியும் ?
இத்துடன் நிறுத்தி கொண்டு முடிந்தால் நல்லவற்றையே நினைத்து நல்லதையே பதிவிடுங்கள் .
மீண்டும் கிளறாதீர்கள் .வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு .
-
17th October 2014, 10:15 AM
#175
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
வார்த்தை விளையாட்டு - உமது ஒரு பக்கத்தை காட்டுகிறது .சம்பந்தமே இல்லாதவார்த்தைகள் .
அளவோடு இருந்தால் எல்லாமே நலம் . உங்களுக்குத்தான் ....... நண்பனாக பரிதாப படுகிறேன் .
உங்கள் உள் மனதில் உள்ள வன்மங்கள் எனக்குதானே தெரியும் ?
இத்துடன் நிறுத்தி கொண்டு முடிந்தால் நல்லவற்றையே நினைத்து நல்லதையே பதிவிடுங்கள் .
மீண்டும் கிளறாதீர்கள் .வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு .
நண்பர்களாக இருந்தால் ,ஒருவரது பலம்,பலவீனம் மற்றவர்களுக்கு புரிந்தே இருக்கும். ஆனால் அதை வைத்து பொதுவில் மிரட்டுவது, நாகரிக எல்லை மீறுவதாகும். இங்கு நிறைய நண்பர்களின் நிறைய விவரங்கள் எனக்கும் தெரியும். ஆனால் அவை என்னோடு மட்டுமே தங்கும்.அதுதான் நாகரிகம்.
என்னை விட வல்லவனை இதுவரை சந்தித்ததில்லை. இனிமேல் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சி அடைவேனே தவிர வருந்த மாட்டேன்.
-
17th October 2014, 11:35 AM
#176
Junior Member
Platinum Hubber
-
17th October 2014, 11:36 AM
#177
Junior Member
Platinum Hubber
MADURAI - ALANKAR
-
17th October 2014, 11:40 AM
#178
Junior Member
Platinum Hubber
1966
CHENNAI - GAIETY
-
17th October 2014, 03:21 PM
#179
Senior Member
Senior Hubber
”ஹவுஸ் ஃபுல்” நினைவுகள்
பகுதி ஒன்று..
ஹாய் ஆல்..
அந்தக்கால மதுரை தியேட்டர்களைப் பற்றி சில பகுதிகளாய் எழுதிப் பார்க்க உத்தேசம் என்றவுடன் நினைவுப்புறா மனதினிலிருந்து எழுந்து மெளஸருகில் அமர்ந்து என் விரல் விளையாடுவதைப் பார்க்க ஆரம்பித்தது..
அதாகப் பட்டது அறுபதுகளின் இறுதியில் என் தாய் தந்தையருக்கு எட்டாவதுமகனாகப் பிறந்த இளங்குருத்தாகிய நான் ( “பக் பக்..ஏன் ஆரம்பத்திலேயே பொய் சொல்றே” “ஹேய் மடப்ப்ரா.. ஸாரி டைப்போ மடப்புறா..நீ என்ன என் மனசாட்சியா..இப்படில்லாம் கொத்தப்படாது..சமத்தா வேடிக்கை பாரு”) என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்… எட்டாவது பையன் (எனக்கு முன் இருவர் பிறந்து ஒருவர் பிறப்பிலேயே மரிக்க, இன்னொரு ஐந்து வயது சகோதரி நான் பிறப்பதற்கு சிலவருடங்கள் முன் இடிந்து விழுந்த சரஸ்வதி ஸ்கூலில் (முரளி சாருக்குத் தெரிந்திருக்கலாம்)இடிபாட்டில் இறந்து போய்விட்டதாக அம்மா சொல்லியிருக்கிறார்) ஆகப் பிறந்த நான் வளர்ந்தது கல்லூரிப்படிப்பை முடித்தது எல்லாம் தேவி தியேட்டரின் அருகிலிருந்த கிருஷ்ணா ராயர் தெப்பக்குள வெஸ்ட் தெருவில் இருந்த எங்களது வீட்டில் தான்..
எனில் சுயசரிதையை விட்டால்..தேவி தியேட்டர்.. வீட்டின் ஆரம்பம் ஒரு தெருவென்றால் வீட்டின் முடிவு அடுத்த தெரு .( நீளமான எட் கட்டு வீடு) கொல்லைப் புறக் கதவைத்திறந்து வலதுபக்கம் பார்த்தால் சற்றுத் தொலைவில் தேவி தியேட்டர் வாசல் தெரியும்.. அங்கு தான் வரும் புதுப்படங்களின் கட் அவுட்கள் எல்லாம் பார்த்து ரசித்திருக்கிறேன்
தியேட்டர் வாசலில் இருந்து தியேட்டர் போவதற்கு ஒரு மணல் பாதை.. அதற்கு முன்னாலேயே பாதியில் இடது புறம் எண்பது பைசா தொண்ணூறு பைசா – ஆண்கள் டிக்கட் வலது புறம் 1.45. 2.90 டிக்கட்.. பின் ஒரு பெரிய கேட்..
புதுப்படம் ரிலீஸானால் க்யூவில் நிற்கும் போது அந்த ப் பெரிய கேட் வாசலில் ஒரு தலை நரைத்த நபர் குட்டிக் குட்டிக் கருங்கற்களை மிக்ஸியில் அரைத்தால் எழும்பும் ஒலியைப் போல ஹேய் ஒழுங்கா நில்லுப்பா கூட்டம் போடாதே எனச் சத்தம்போட்டு கையிலிருக்கும் ஒரு குச்சியால் தட் தட் எனக் கம்பிகளையும் தட்டுவார் – அவர் உள்ளிருந்த படியே..
என்னை சின்ன வயதில் எல்லாப் படங்களுக்கும் அழைத்துச் செல்வது அம்மா தான்.. என் சகோதரிகளுடன். . மூத்த அண்ணன் ஸ்டேட்பாங்க்கில் வேலைக்குச் சென்று விட இரண்டாவது அண்ணன் கல்லூரியில் பியுசி படித்திருந்த காலகட்டம்.. மூத்த அக்கா கூட கோவைக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாய் நினைவு..
எனில் பார்த்த படங்கள் கணக்கில.. வயது விவரம் தெரிவதற்கு முன்பே பார்த்த பல படங்களில் சில எங்கிருந்தோ வந்தாள், நாளை நமதே, சவாலே சமாளி, தர்மம் எங்கே குலமா குணமா.வைர நெஞ்சம்... திடீர் திடீரென பழைய படங்க்ளும் போடுவதுண்டு அப்படிப்பார்த்த படங்கள் சிவகவி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சபாஷ் மீனா..இன்னும் இன்னும்..
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சமயத்தில் தான் கண்ணாக்குத் தனியாகப் படம் பார்க்க முடியும் எனத் தெம்பு வந்து என்னிடம் தொண்ணூறு பைசா கொடுத்து அனுப்பினார்கள்..ஒரு மேட்னி ஷோ.(காரணம் நான் வளர்ந்துவிட்டேனே மம்மி! அது அடுத்த பாரா)
அதற்கு முன் தான் டெஸ்ட் ட்ரைவ் என்பது போல சாந்தி தியேட்டரில் (மதுரை) மன்னாதி மன்னனுக்கு இளைய சகோதரி அம்மா எனப் போய் பார்த்த போது டிக்கட்டிற்கு (இந்தப் பையனை எல்லாம் பெண்கள் டிக்கட்ல விட முடியாதும்மா..ஆளு பாரு வளத்தியா இருக்கான்…: டிக்கட் கொடுக்கலேன்னா போ.. ஏன் கொழந்தையக் கண்ணு வைக்கறே என அம்மா திட்டி..கண்ணா இந்தா தொண்ணூறு காசு போய் ஆண்கள் செக்ஷன்ல ஒக்காந்துக்கோ என அனுப்பி- மறக்காம இண்டர்வெல்ல எட்டிப் பாரு – எனச் சொல்லி அனுப்ப, நான் சென்று ஆசையாய் அமர்ந்து படம்பார்த்து இண்டர்வெல்லில் எழுந்து நிற்க திரும்பிப் பார்த்த அம்மாவின் கண்களில் நிம்மதி.
இப்படியாகத்தானே மற்ற தியேட்டர்களுக்கும் தனியாகச் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது ( ஒன்பதாம் வகுப்பு என நினைக்கிறேன்)
தேவி தியேட்டர்- வீட்டின் அருகாமை என்பதால் படம் பார்ப்பதும் சுலபம்..புதுப்படம் வந்தாலும் வீக் டேஸில் எப்படியாவது நின்று பார்த்தது உண்டு.. தெரு முனை திரும்பினால் சாலைகடக்காத இடது புறத்தில் ஒரு டீஸ்டால் ஒரு பெட்டிக்கடை..சாலைகடந்தால் எம்.ஆர்.எஸ் மணி சைக்கிள் கடை அதை ஒட்டி பார்பர் ஷாப் இட்லிக்கடை பின் ஒருவெற்றிலைபாக்குக் கடை (அந்த இட்லிக்கடைக்கே சொந்தம் என நினைக்கிறேன்) குண்டாக இருக்கும் ஒரே ஜாடையில் இருக்கும் சகோதரர்கள் அந்த வெ.பா.கடையில் எப்போதும் இருப்பார்கள் ஈவ்னிங் நைட் ஷோவில் அந்தக் கடைகளில் கூட்டமாயிருக்கும்..கோல்ட் ஸ்பாட் பொவொண்டோ, கோல்ட் ஃப்ளேக் ப்ளெய்ன் என சேல்ஸ் தூள் பரத்தும்..
தேவியில்பார்த்த பழைய படங்களில் இப்போது நினைவுக்கு வருபவை படித்தால் மட்டும் போதுமா, போலீஸ்காரன் மகள், வானம்பாடி, ஆலய மணி., பாலும் பழமும்..இந்த ஆலயமணி கொஞ்சம் மறக்க முடியாது..
அப்போது என் இரண்டாவது அண்ணன் கல்லூரி முடித்து குவைத் சென்று விடுமுறைக்கு வந்திருந்தார்.. வா போலாம் நைட் ஷோ என அழைத்துச் சென்றார்.. பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து பூட்டியிருந்த கம்பிகேட் திறந்து திண்ணை வழியாக குறுகலான மாடியில் ஏறி மொட்டை மாடியிலேயே தூங்கிவிட்டோம் (சூடு குறைய ஏற்கெனவே தண்ணீர் தெளித்து வைத்திருந்தோம்)
அதன் பின் வந்த நான்கு நாட்களில் இரவெல்லாம் மொட்டை மாடி தான்.. ஊர் அடங்கி நிசப்தமாய் இருக்கையில் தேவி தியேட்ட்ரில் இருந்து இரவுக் காட்சி கொஞ்சம் சத்தமாய்ப் பாட்டுக் கேட்கும்.. நான்கு நாட்களும் அண்ணனும் என்னுடன் மொட்டை மாடியில் தூங்கியதால் யாரும் ஆட்சேபம் சொல்லவில்லை..தொடர்ச்சியாக கண்ணான கண்ணானுக்கு அவசரமாவில் ஆரம்பித்து சட்டி சுட்டதடா பாட்டு வரை கேட்டு பின் தியேட்டர் விட்டு ஜல் ஜல் கலகல பேங்க் பேங்க் டங் டங் என சத்தமிட்டு இரவுக்காட்சி முடித்த ஜனத்தின் ஒலிகள் கலைந்த பிறகு தான் தூங்கியிருக்கிறேன்..(அவர் லீவ் முடிந்துசென்றுவிட மொ. மா அனுபவத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி)
நினைவலைகள் கொஞ்சம் முன்னும்பின்னுமாய் அடிக்கின்றன.. எதற்கோ ஸ்கூலில் அரை நாள் திரும்பி வந்து அம்மாவைத் தொந்தரவு பண்ணிப் பார்த்த படம் வைர நெஞ்சம்.. அப்புறம் நாளை நமதே ரிலீஸின் சமயத்தில் ஹவுஸ் புஃல் ஆகி விட எண்பதுபைசா டிக்கட்டை இரண்டும் இரண்டும் நான்கு ரூபாய்க் கொடுத்து – பாவம் கண்ணா வோட முகம் வாடிடுச்சு எனக் கூட்டிச் சென்றது (ஐய ஏன் இந்தச் சின்னப்புள்ளய இந்த எம்சியார் படத்துக்கு கூட்டி வந்துருக்க.. ஏன் உனக்கென்ன டிக்கட் கொடு) ம்ம்
சாந்தி தியேட்டர் – மேலமாசி வீதி நேரு ஆலால சுந்தர வினாயகர் கோவில் தாண்டி இருக்கும்.. நுழைவாயிலைக் கடந்து சிறிது தூரம் நடந்து உள் செல்ல வேண்டும்.. மோஸ்ட்லி பழைய படங்கள் தான்.. வெள்ளி வெள்ளி ரிலீஸாகும் விட்டுப் போன பல பழைய படங்களை இங்கு தான் பார்த்திருக்கிறேன்..
குறிப்பாக என்னைமாதிரி லெஸ்பாக்கெட் மணி ஹோல்டருக்கெல்லாம் பஸ்காஸ் கொடுத்து கலெக்டர் ஆஃபீஸ் அருகில் இருக்கும் மினிப்ரியா சினிப்ரியா சுகப்ரியா போவதென்றால் காஸ்ட்லி சமாச்சாரங்கள்..எனில் அங்கு வந்த புதுப்படங்களை ஓடி முடித்ததும் இங்கு போடுவார்கள்.. மோகம் முப்பது வருஷம், மன்மதலீலை எனப் பார்த்திருக்கிறேன்..
நவராத்திரி முதன் முதல் பார்த்தது இங்கே தான்.. பார்த்துவிட்டுப் புரியாமல் வீடு வந்து அக்காவிடம் பேந்தப் பேந்த முழித்தவாறே ஏன் ஒன்பது சிவாஜி வராரு அவர்கள் ரொம்ப சஸ்பென்ஸ் வைத்து அப்புறம் சொல்றேன் என டபாய்க்க கடைசியில் .. அதாவது கண்ணா உலகத்தில ஒரே மாதிரி ஒன்பது பேர் இருப்பாளோன்னோ.. அதான் படம்.. என குன்சாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது..
அப்படியே சாந்தி தியேட்டர் ரோட்டிலேயே ஒரு மிதி மிதித்து இடது புறம் திரும்பினால் கோவில் போகும் பாதை கொண்ட கசகசா ரோட்டின் நடுவில் சென் ட்ரல் தியேட்டர்.. அங்கு பார்த்த படங்களும் கணக்கில பட்டிக்காடா பட்டணமா சத்திய சுந்தரம் வறுமையின் நிறம் சிகப்பு ஆதிபராசக்தி.. ராம ஹனுமான் யுத்தம்..
சென் ட்ரல் தியேட்டரில் இளைய சகோதரிக்குக் கல்யாணம் ஆகி வந்திருந்த புது அத்திம்பேருடன் பார்த்த படம் ( மேலே 2.905க்குக் கூட்டிச் சென்றாராக்கும்) சட்டம் என் கையில். படம் பார்க்கையில் கமலின் வெளி நாட்டுக் காதலி இறந்து விட்டதாக கமல்ஹாசன் மதுக்களுடனும் மாதுக்களுடனும் பாடும் சொர்க்கம் மதுவிலே பாட்டில் எதேச்சையாக என்னைப் பார்த்த அத்திம்பேர் திடுக்கிட்டுப் போனார்.. என் இருகண்களிலிருந்தும் கண்ணீர் வழியத்துடைத்து கொண்டிருந்தேன்.. கண்ணா..இதெல்லாம் படம் தான்ப்பா.. இப்படி உணர்ச்சி வசப் படக் கூடாது என அவர் சொல்ல இல்லை அத்திம்பேர்..படம் பார்த்தா கண்ணுல தண்ணி வருது எனக்கு எனச் சொல்ல மறு நாளே டிவிஎஸ் ஆஃபீஸ் பின்புறம் இருந்த கண் டாக்டர் சுப்பராமனிடம் (அவரிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி.. ஒரு பத்து ரூபாய் தான் ஃபீஸ்.. அப்புறம் ஒருவருடத்திற்கு வாங்க மாட்டார்.. ) அழைத்துச் சென்று அவர் தினசரி வா..மருந்து போடுகிறேன் எனச் சொல்ல தொடர்ந்து ஒரு மாதம் போய்ப் போட்டுவிட்டு (குட்டிக்குட்டி ஸாம்பிள் ட்யூப் தான் .. டபக்கென பிசுக்கி கண்ணில் போட கண் பசைபோட்டற்போல் ஒட்டிக்கொண்டு கொஞ்சம் எரிந்து பத்து நிமிடம்கழித்து தான் திறக்கவே முடியும்) வந்ததில் என் படம் பார்க்கும் கண்ணீர் நின்றது)
அதே சாந்தி தியேட்டரில் இருந்து நேர் ரோட்டில் சென் ட்ரலுக்குத் திரும்பாமல் இன்னும் கொஞ்சம் எண்ண சைக்கிளை மிதித்தால் வலதுபுறத்தில் ஆரியபவன் ஹோட்டல்..பின் குறுக்கில்வருகிற ரோடு தான் டவுன்ஹால் ரோடு..அதில் இடதுபுறம் திரும்பி ஒருமிதி மிதித்தால் மாடர்ன் ரெஸ்டாரெண்ட் அதை ஒட்டி லெஃப்டில் ஒய் எம் சிஏ ஆப்போசிட் சைட் ஒரு பூங்கா..பூங்காவின் முன்னால் அந்தக்காலத்தில் குதிரை வண்டிகள் (ஒய் எம் சி ஏ ஆப்போஸிட்) பூங்காவிற்கு அந்தப்புறம் தான் நியூ சினிமா..
வஸந்த மாளிகை, ராமன் எத்தனை ராமனடி, எக்ஸார்ஸிஸ்ட் என நிறையப் படங்கள் இங்கு பார்த்திருக்கிறேன்..கொஞ்சம் சின்ன தியேட்டர் தான்..
சாந்தி தியேட்டரிலிருந்து நேர் ரோட்டில் சென்று டவுன்ஹால் ரோட்டிலும் திரும்பாமல் குறுக்கில் வரும் பெருமாள் கோவில் தெருவிலும் திரும்பாமல் (தெற்குமாசி வீதி திரும்பும் என நினைக்கிறேன்) நேரே ஒரு ரோட்டில் சென்று மெய்ன் ரோட்டிலிருந்து சற்றுக் குறுகலான சாலையில் சென்று திரும்பினால் மீனாட்சி தியேட்டர்..
முதலில் கருவேப்பிலையாய் ஒரு தியேட்டராய் இருந்தது பின் மினி பாரடைஸாகவும் இருந்தது.. மீனாட்சியில் பல படங்கள்.. சின்ன வயதில் ஆராதனா ஒளி விளக்கு, கர்ணன் ( ரீரன்) வாழ்க்கைப் படகு(பகல் பதினொருமணிக் காட்சி!) காதலிக்க நேரமில்லை.. மீனாட்சிபாரடைஸில் பார்த்தது பூவே பூச்சூட வா
கொஞ்ச்ம் மீனாட்சி பாரடைசின் பின்புறம் என்று தான் நினைக்கிறேன்..அமிர்தம் ஏஸி எனப் புதிய தியேட்டர் – அந்த சமயத்தில் கட்டினார்கள்..அங்கு பார்த்தபடங்களில் நினைவுக்கு வருவது ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க், மந்திரப் புன்னகை..
சாந்திதியேட்டரில் இருந்து வலது புறம் திரும்பி நாம் பார்த்த தியேட்டர்கள் சென் ட்ரல், நியூசினிமா, மீனாட்சி மீனாட்சி மினி.ஓகேயா..இனி இடது புறம் திரும்பி ஹிக்கின்பாதம்ஸ் பக்கம் வந்துவடக்குவெளி வீதியிலொ அல்லது குட்ஷெப்பர்ட் ஸ்ட்ரீட்டிலோ(தானே) ஆரம்பத்தில் இருக்கும் ஷக்தி சிவம் தியேட்டர்.. ஷக்தி ஏசி..முதன்முதலில் நான் பார்த்த ஏ.சி.தியேட்டர்..அமர் அக்பர் அண்ட்டோனி (78) முதல் படம்.. அப்போது தான் மணமுடித்திருந்த இளைய சகோதரியும் கணவரும் என்னைத் தவிக்கத் தவிக்க விட்டுவிட்டு அவர்கள் போய்விட்டு வந்தார்க்ள்..அந்தக் கோபத்திலோ என்னவோ இன்றுவரை அமர் அக்பர் அண்ட்டனியைப் பார்த்ததே இல்லை..
சிவம் ஓப்பன் பண்ணிய போது போட்ட படம் தப்புத் தாளங்கள்.. க்யூவில் நின்றும் டிக்கட் கிடைக்காமல் ப்ளாக்கில் வாங்கி உள் சென்றால் உன் சீட் இது என்றார்கள் (எனக்கு அது தெரியாது) பார்த்தால் ஸ்க்ரீனுக்கு அருகாமையில் இரண்டாவது சீட்.. பட ஆரம்பத்தில் என்னடா பொல்லா த வாழ்க்கை எனப் பாடி ரஜினி என் தலையில் கால்வைப்பது போன்ற பிரமை! பின் பழகி விட்டது(முத்லும் கடைசியுமாய் அவ்வளவுகிட்டத்தில் பார்த்த படம்)
அதே போல தீபாவளி ரிலீஸில் அண்டர் லைன் செய்து வைத்திருந்து பார்த்த படம்( நல்லா இருக்கும் நு ஃபீலிங்கில்) சிகப்பு ரோஜாக்கள்.. அஞ்சு ஷோ போட்டு ஓட்டுகையில் டயம் தெரியாமல் மூன்று மணிக்கு மதியம் சென்று டிக்கட் எடுக்க படம் ஏழரைக்குத் தான் எனச் சொல்லி பார்த்து ( நல்லவேளை சீட் கொஞ்சம் கடைசியில் தான் இருந்தது..குட்ட்டித் தியேட்டர் ஆரம்பத்தில் கொஞ்சம் ஏசி..அப்புறம் நிறுத்தி கசகசா..வியர்வை) பத்தரைக்கு வீட்டுக்குச் சென்று ரேழியில் கொசுவலைக்குள் அப்பா உறங்கியிருக்க ஓசைப்படாமல் சென்று கவாங்கவாங்கெனபசித்த வயிற்றுக்கு அம்மா கொஞ்சம் குட்டித்திட்டலுடன் உணவளித்தது மறக்க முடியாது..
தேவி தியேட்டர் ரோட்டை திருவிக சாலை என்றும் வொர்க் ஷாப் ரோடு என்றும் சொல்வார்கள்..தேவி தியேட்டர் பார்த்த படி இருக்கும் இடத்தை வைத்து இடதுபுறம் வலதுபுறம் என இருக்கும் தியேட்டர்க்ள் பற்றி…
அடுத்த பதிவில்
(பர்ஸ்ட் இன் ட்டர்வெல்)
Last edited by chinnakkannan; 17th October 2014 at 03:59 PM.
-
17th October 2014, 03:22 PM
#180
Senior Member
Senior Hubber
”ஹவுஸ் ஃபுல்” நினைவுகள்
பகுதி இரண்டு..
ஹாய் ஆல்.. கொஞ்சம் போரடிக்கிறேனா..இல்லை என நினைக்கிறேன்..இருந்தாலும் வேறு வழியில்லை..
கலையாம் நடிப்பினைக் காட்டும் அரங்கில்
அலைகள் அடிக்கிறதே ஆம்..
தேவிதியேட்டரின் இடது புறம் ஒர்க் ஷாப் ரோட்டில் மன சைக்கிளை ( சொல்ல மறந்துவிட்டேனே.. மதுரையில் நான்பயன் படுத்திய வாகனங்கள்…பாண்டியன் பேருந்து, கனமான உயரமான ராலே சைக்கிள் (டாடியினுடையது) புத்தம்புது ஹீரோ சைக்கிள் (அத்திம்பேரினுடையது) லூனா மொபெட், அண்ணனின் சில்வர் ப்ளஸ்) ஓட விட்டால் ஆறு முச்சந்தி வரும்..அதில் குறுக்கால் சென்றால் ஆட்டுமந்தை, மாவட்ட மைய நூலகமருகில் குட்டி ரெளண்டபெளட், தாண்டினால் சிம்மக்கல்..போவதற்கு முன் இடதுபுறம் நுழைந்து சென்றால் கல்பனா தியேட்டர்..
வெய்ட் வெய்.ட் ..இந்த ஆட்டு மந்தை என்று சொன்னேனே..அதற்கு முன் ஒரு பெரிய பஸ்களை எல்லாம் ரிப்பேர் செய்யும் மிகப்பெரிய ஒர்க்ஷாப் இருந்தது..அதை இடித்து அங்கு இரண்டு தியேட்டர்கள் கட்டினார்கள்..தீபா ஏசி ரூபா ஏசி.. தீபாவில் சிகப்பு சூரியன் பார்த்த நினைவு.. பின் ஆங்கிலத்தில் ப்ரொடெக்டர், போல்டர் கீஸ்ட் எனப் பார்த்த நினைவு.. சில காலத்தில் அந்தத்தியேட்டர்கள் கொஞ்சம் பலான பிட் ஓட்டும் தியேட்டர்களாய் மாறியது ஒரு சோகம் (ரொம்ப ச் சின்னவை தான்)
கல்பனா தியேட்டரில் பார்த்த படங்கள் கணக்கில..மோஸ்ட்லி பழையபடங்கள்.. பார்த்து நினைவிலிருக்கும்புதுப்படம் செளந்தர்யமே வருக வருக..காரணம் மூத்த சகோதரி லீவில் வந்திருந்த் போது ரொம்பக் குடும்ப உறவுகளை அழைத்து (ஒரு பதினைந்து பேர்) சேர்ந்து போய்ப் பார்த்த படம்..!
கல்பனா தியேட்டரிலிருந்து மெய்ன் ரோட்டிற்கு வந்து யானைக்கல்லில் கீழ்ப்பாலம் இறங்காமல் சென்றால் இடதுபுறம் ஆல்பர்ட் விக்டர் ப்ரிட்ஜ் எனப்படும் மேற்பாலம் வரும்..அதில் செல்லாமல் கீழ்வழியாகவே சென்றால் நெல்பேட்டை..பின் வெத்தலைப்பேட்டை கம் சிந்தாமணி டாக்கீஸ்.. இந்த சிந்தாம்ணி டாக்கீஸில் பார்த்தபடங்களும் நிறைய.. உலகம் சுற்றும் வாலிபன், திரிசூலம்..என.. வீட்டிலிருந்து சின்னவயதில் செல்வதென்றால் மெய்னாக குதிரை வண்டி வைத்து நான் முன்னால் ஏற அம்மா அக்காகள் புடை சூழ இங்கு சென்றிருக்கிறேன்.. திரும்பும் போது ரிக்ஷா(இரண்டு) அல்லது குதிரை வண்டி..
பக்கத்துத் தியேட்ட்ருக்கெல்லாம் சென்றால் ஒன்றும் சொல்லாத அப்பா இப்படி இந்தத் தியேட்டர்களுக்கெல்லாம் (மோஸ்ட்லி ஈவ்னிங்க் ஷோ) போய் வந்தால் வரும் வரை வாசலிலேயே அமர்ந்திருப்பார்.. என்ன படமோ போ..அப்படியாவது அவ்வளவு தூரம் போகணுமா..எனச் சொல்ல அம்மா ஏதோ முணுமுணுத்தபடியே உள் செல்வாள்..பின் சுடச்சுட இரவுடிஃபன் தயாராகும்..(அப்பா ஏற்கெனவே சாப்பிட்டிருப்பார்) அப்பா உறங்க ஆயத்தமாகி (ஷார்ப்பா ஒன்பதரை பத்துமணிக்கெல்லாம் தூங்கிவிடுவார்)ப் படுத்ததும் அவரை டிஸ்டர்ப் செய்யாமல் பார்த்த படத்தை ஹிஸ்ஹிஸ்ஸென ஒலியெழுப்பாமல் நானும் சகோதரிகளும் பேசியபடி தோசையோ சப்பாத்தியோ சாப்பிடுவோம்.
சிந்தாமணியிலிருந்து சற்றுத் தூரம் இடது புறம் எண்ண சைக்கிளை மிதித்து கீழ மாசிவீதியில் திரும்பினால் ( நேரே சென்றால் நான்படித்த செய்ண்ட் மேரீஸ் ஸ்கூல் அதற்கு இந்தப்பக்கம் உள்ள தெருவில் திருமலை நாயக்கர் மஹால்) சற்றுத் தள்ளி அலங்க்கார் தியேட்டர் வரும்..
அலங்கார் தியேட்டரில் பலபடங்கள்.. பார்த்திருக்கிறேன்..குறிப்பிட்டுச் சொல்வதானால் சொல்லத் தான் நினைக்கிறேன், ஒரு தலை ராகம்..
சொல்லத் தான் நினைக்கிறேன் அம்மா பார்க்கவேண்டும் என நினைக்கவேயில்லை..பக்கத்து வீட்டுப் பொன்னம்மா ஆச்சி நான் போறேன் சினிமாவுக்கு.. ரிக்ஷால தான் போறேன் கண்ணாவை அனுப்பறீங்க்ளா என அம்மாவைக் கேட்க அம்மா அவனைத் தனியாகவெல்லாம் அனுப்ப முடியாது என்று விட எதற்கோ வந்த நான் அதைக் கேட்டுவிட ஒரே அழுகை பிடிவாதம் தான்.. சரி..அவங்க ரிக்ஷால போய்க்கட்டும்.. நாம குதிரைவண்டில போலாம் எனச் சொல்லி கு.வ வைத்துப் போய்ப் பார்த்த் படம்.. படம் பார்த்த போது படம்பற்றி எனக்கொன்றும் புரியவில்லை தான்..இருந்தாலும் சந்தோஷம்..
ஒருதலை ராகம் ராலே சைக்கிளில் போனபோது ஓட்டவே கஷ்டமாஅ இருந்தது..கனம் வேறு..இருந்தாலும் நானும் சில நண்பர்க்ளும் போய் சுலபமாகவே டிக்கட் கிடைக்க – படம் எப்படி இருக்குமோ தெரியலை.. சரி பார்க்கலாம் – எனப் பார்த்தால் சர்ப்ரைஸ்.. எங்க்ளுக்குப் பிடித்துவிட்டது..மறு நாளோ அப்புறமோ விகடன் விமர்சனம் ஓஹோ என்று வர அடித்ததுலக்கி ப்ரைஸ் அலங்கார் தியேட்டருக்கு.. படம் ஓடு ஓடு என ஓடி நூறாவது நாளோ என்னவோ தியேட்டருக்கு பெய்ண்ட் எல்லாம் மாற்றிவிட்டார்கள். மாற்றிய பின் இன்னொருமுறை பார்த்ததாக நினைவு..
அலங்காரிலிருந்து தொடர்ந்தால் அபிராமி தியேட்டர்..(மஞ்ஞில் விரிந்த பூக்கள், கர்ஸ், ஏக் துஜேகேலியே, வா கண்ணா வா, சின்னஞ்சிறுசுகள் எனப் பல படங்க்ள்) அதன் பின் இன்னும்சைக்கிளை ஒரு மிதி மிதித்தால் இடது புறம் திரும்ப கணேஷா தியேட்டர் (!)..( ஓரிரண்டுபடங்க்ள் தான் பார்த்திருக்கிறேன்)..
க்ணேஷா தியேட்டர் வழியாகவும் செல்லலாம்.. அந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் வழியாகவும் செல்லலாம் சில தியேட்டர்களுக்கு..அது அடுத்த பகுதியில்
(செகண்ட் இன் ட்டர்வெல்)
Last edited by chinnakkannan; 17th October 2014 at 04:23 PM.
Bookmarks