-
18th October 2014, 10:00 AM
#531
Senior Member
Diamond Hubber
'நினைத்துப் பார்க்கிறேன்'
ஏற்கனவே போட்டுட்டாலும் பாடல் வரிகள் தந்ததற்கு நன்றி சின்னக் கண்ணன் சார். அது என்ன கொஞ்சம் பிடித்த பாடல் என்று சுளுவாகச் சொல்லி விட்டீர்கள். பாலா உயிரைக் கொடுத்துப் பாடிய பாடல் அது. சும்மா கலக்கி விடுவார் கலக்கி. நிறையவே பிடிக்கும். வீடியோ இல்லைதான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th October 2014 10:00 AM
# ADS
Circuit advertisement
-
18th October 2014, 10:05 AM
#532
Senior Member
Diamond Hubber
அருமையான பாடல் ராஜேஷ் சார். அம்பரீஷ் மோகன்பாபு ரோலா? நடிகை யார்? ஷீலா, சித்திக் பேட்டியும் தூள். (இசையரசி மேல் உள்ள பற்றில் பாடலை இரண்டு தடவை பதித்து விட்டீர்களே!)
-
18th October 2014, 10:08 AM
#533
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
அருமையான பாடல் ராஜேஷ் சார். அம்பரீஷ் மோகன்பாபு ரோலா? நடிகை யார்? ஷீலா, சித்திக் பேட்டியும் தூள். (இசையரசி மேல் உள்ள பற்றில் பாடலை இரண்டு தடவை பதித்து விட்டீர்களே!)
வாசு ஜி காப்பி பேஸ்ட் மிஸ்டேக் அப்பொழுதே சரி செய்து மலையாள பாடலை பதித்து விட்டேன் ..
-
18th October 2014, 10:12 AM
#534
Senior Member
Seasoned Hubber
ஆம் அம்பரீஷ் மோகன் பாபு ரோல், அந்த நாயகி பெயர் ஜெயலெக்*ஷ்மி . நிறைய நடிக்க வில்லை என நினைக்கிறேன்
-
18th October 2014, 10:17 AM
#535
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (97)

சித்ரா பிலிம்ஸ் பிலிம்லேண்ட்ஸ் அளிக்கும் 'சியாரா பிலிம்ஸ்' (அடேங்கப்பா!) 'சங்கமம்' திரைப்படத்திலிருந்து ஒரு வித்தியாசமான பாடல். ஜெமினி, விஜயா, 'வெண்ணிற ஆடை' நிர்மலா, கீதாஞ்சலி, வீரப்பா, நாகேஷ், கே.டி.சந்தானம் முதலியோர் நடித்த வண்ணப் படம் இது. ரவீந்தர் வசனம் எழுத, கண்ணதாசன் பாடல்கள் எழுத, மெல்லிசை மன்னர்களின் ஒரு மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில், பாடல்களில் பின்னி எடுத்த படம் இது. இயக்கம் தாதாமிராசி. இந்தப் படத்தின் இன்னொரு அம்சம் ஒளிப்பதிவு. கே.எஸ்.பிரசாத் காமரா 'பளிச்'. அருமையான வண்ணம். எல்லாம் இருந்தும் சொதப்பல் கதையால் படம் தோல்வியுற்றது. ஜெமினிக்கு இரட்டை வேடம் வேறு. ஆள் 'சிக்' கென்று இருப்பார்.

பாடல்கள் காலாகாலத்துக்கும் அழியாப் புகழ் பெற்றவை.
'ஒரு பாட்டுக்குப் பல ராகம்'
'கண்ணனிடம் கேட்டிருந்தேன்'
'வண்ண பூப்போட்ட சேலை கட்டி'
'தன்னந்தனியாக நீ வந்த போது'
ஜல்சா...பார்த்தால் பார்க்கலாம்'
என்று மனம் மயக்கும் பாடல்கள்.
இன்று பார்க்கப் போகும் பாடல் ஒரு tribal டைப் பாடல். மிக வித்தியாசமாக, மிக அழகாக எடுக்கப்பட்ட பாடல். மலைஜாதிப் பெண் போல 'வெண்ணிற ஆடை' நிரமலா ஓடி வர, அவர் பின்னால் மலை ஜாதிப் பெண்களின் கோஷ்டி ஓடிவர, இயற்கை அழகு கொஞ்சும் மலைகளிலும், அருவிகளிலும் படமாக்கப்பட்ட எழில் பாடல். நிர்மலா இயற்கையாகவே அழகு. வண்ணத்தில் மின்னுகிறார். நிர்மலா அணிந்திருக்கும் சேலை பெரிய பூக்களுடன் அழகோ அழகு!
ஜெமினி யூத் போல் ரெட் கோட், எம்.ஜி.ஆர் குல்லா, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கலக்குகிறார். உடன் ஆடும் துணை நடன நடிகைகளில் ஆலம், ராஜேஸ்வரி தென் படுகின்றனர்.
இந்தப் பாடலில் வரும் குறும்பு ஒன்று என்னை மிக ரசிக்க வைத்தது. பாடலின் இறுதி சரணத்தில் அருவியில் நின்று கொண்டு ஜெமனி, நிர்மலா, துணை நடிகைகள் பாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது நிர்மலா
'கையிரண்டில் பாலெடுத்து
கட்டிலறை செல்லுமுன்னே
காதலர்கள் பேசிக்கொள்ள
என்ன வேணும்?'
என்று கேள்விக்கணை போட, அதற்கு ஜெமினி கூலாக, ஸ்டைலாக அருகில் உள்ள துணை நடன நடிகைகளைப் பார்த்தபடி,
'இவர்கள் செல்ல வேணும்'
என்று பதில் தந்து அடிப்பாரே ஒரு நக்கல். செம கிண்டல். (அவர்கள் அருகிலேயே இருந்து தொல்லை கொடுக்கிறார்களாம்... அதனால் அவர்கள் போக வேண்டுமாம்... அப்போதே இப்படி ஒரு கிண்டலான நகைச்சுவை) இயக்குனரின் நகைச்சுவை உணர்வு மெச்சத் தகுந்தது.
'வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்கு சரளா பின்னணி கொடுத்திருப்பார். அம்சமான அள்ளிக் கொண்டு போகும் குரல். குரலில் செம கிக். தெளிவான மயக்கும் குரல். ஜெமினிக்கு குரல் கொடுத்திருப்பது திருவையாறு ரமணியா? நண்பர்கள் விளக்கவும். அப்படியே ஏ.எல்.ராகவன் குரல் போல் உள்ளது. மதுஜி! ப்ளீஸ்!
மிக இனிமையான, அழகான மலைஜாதி நடனப் பாடல். பாடலின் இடையில் விதவிதமாக ஒலிக்கும் கோரஸ் மறக்க முடியாதது. அதே போல புல்லாங்குழல் இசையும். நடனமும் நிரம்ப அழகு.
இனி பாடலின் வரிகள்
(கோரஸ்)
தந்தன தய்யன தந்தன தய்யன தந்தன தய்யானா
தய்யன தந்தன தய்யன தந்தன தய்யன தந்தானா
தந்தன தய்யன தந்தன தய்யன தந்தன தய்யானா
தய்யன தந்தன தய்யன தந்தன தய்யன தந்தானா
வண்ண பூப்போட்ட சேலை கட்டி
புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும்
அம்மா மயக்கம் வரும்
வண்ண பூப்போட்ட சேலை கட்டி
புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும்
அம்மா மயக்கம் வரும்
(கோரஸ்)
தள்ளாடும் கால்கள் ரெண்டில்
தண்டைகள் ஜல் ஜல் என்றே
தள்ளாடும் கால்கள் ரெண்டில்
தண்டைகள் ஜல் ஜல் என்றே
சங்கீதம் பாடும் போது என்ன வரும்
அன்பே சரசம் வரும்
வண்ண பூப்போட்ட சேலை கட்டி
புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும்
அம்மா மயக்கம் வரும்
ஓ......ஹோய்.
முத்துக்களைக் கட்டினால் மாலை வரும்
கட்டும் வேளை வரும்
கோவிலைக் கட்டினால் ஓசை வரும்
கட்டும் நேரம் வரும்
(கோரஸ்)
முன்வட்டத் தங்கச் சங்கு
கண் பட்டு மின்னும் போது
முன்வட்டத் தங்கச் சங்கு
கண் பட்டு மின்னும் போது
மூடிக் கொண்டோடச் சொல்லும்
நாணம் வரும்
குணம் நாலும் வரும்
வண்ண பூப்போட்ட சேலை கட்டி
புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும்
அம்மா மயக்கம் வரும்
ஓ......ஹோய்.
சந்திக்கும் கண்களில் என்ன வேணும்
ஒரு சொந்தம் வேணும்
ஓஹோ
சாமத்தில் பெண்ணுக்கு என்ன வேணும்
ஒரு மன்னன் வேணும்
ம்ஹூம்
கையிரண்டில் பாலெடுத்து
கட்டிலறை செல்லுமுன்னே
கையிரண்டில் பாலெடுத்து
கட்டிலறை செல்லுமுன்னே
காதலர்கள் பேசிக்கொள்ள
என்ன வேணும்
இவர்கள் செல்ல வேணும்.
தன்ன தானானா தானனன்னா.......
Last edited by vasudevan31355; 18th October 2014 at 10:33 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th October 2014, 10:27 AM
#536
Senior Member
Seasoned Hubber
சங்கமம் ராமமூர்த்தி கலக்கிய படம்
எல்லா பாட்டும் சூப்பார் , தன்னந்தனியாக, ஒரு பாட்டுக்கு பல ராகம் ஆஹா
அருமை வாசு ஜி.. அடி தூள்
-
18th October 2014, 10:45 AM
#537
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
சங்கமம் ராமமூர்த்தி கலக்கிய படம்
எல்லா பாட்டும் சூப்பார் , தன்னந்தனியாக, ஒரு பாட்டுக்கு பல ராகம் ஆஹா
அருமை வாசு ஜி.. அடி தூள்
நன்றி ராஜேஷ்ஜி.
// ஒரு பாட்டுக்கு பல ராகம் ஆஹா//
அடடா! ராட்சஸியின் அந்த அஅ..... ஆஆ.... ஹம்மிங். சான்ஸே இல்லைஜி. டி.எம்.எஸ்ஸும் எடுப்பார் பாருங்கள் ஒரு ஹைபிச். 'லல்லல்லா லலலலா' முடித்து விட்டு 'ஆஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா' கொடுப்பார் பாருங்கள். ஜென்மம் சாபல்யமடையலாம் ஜி.
சுசீலா அம்மாவின் 'கண்ணனிடம் கேட்டிருந்தேன்' மட்டும் என்னவாம்? சூப்பர். (இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் 'பிராயச் சித்தம்' படத்தில் சுசீலாம்மா பாடும் 'சாமி செஞ்ச பொம்மைகள் போலே'.... 'மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி' பாடல்களும் எனக்கு உடனே ஞாபகம் வரும் ராஜேஷ்ஜி. அது ஏன்னு தெரியல.
Last edited by vasudevan31355; 18th October 2014 at 11:11 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th October 2014, 10:49 AM
#538
Senior Member
Diamond Hubber
தன்னந்தனியாகவே 'தன்னந்தனியாக' வை கலக்கியிருப்பார் ராமமூர்த்தி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th October 2014, 10:53 AM
#539
Senior Member
Seasoned Hubber
வாசி ஜி
ஒரு அறிய புகைப்படம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th October 2014, 10:58 AM
#540
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி!
'கண்ணதாசனே கண்ணதாசனே' பாடல் தேவாவின் சூப்பர் ஹிட் பாடல். எல்லோருக்கும் பிடித்தமான படலை அளித்ததற்கு நன்றி!

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா கருப்பு நிறம் கொண்ட பெண்ணாக நடித்திருப்பார்தானே!
எனக்குப் பிடித்த காமரா கூச்சம் இல்லாத நடிகை. அருமையாக நடிக்கக் கூடியவர் அவர் அம்மா மாதிரியே. ஏனோ சோபிக்காமல் போனார். ஆனால் பிரகாஷ்ராஜ் படமான 'அபியும் நானும்' படத்தில் த்ரிஷா அம்மாவாக இவர் நடிப்பு கொடி கட்டிப் பறந்தது. ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரகாஷ்ராஜ் திரிஷாவுக்கு செல்லம் கொடுத்து ஏதாவது பெண்ணுக்கு ஆகிவிடுமோ என்று பயந்தபடியே இருக்க, அதற்கு ஐஸ்வர்யா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவரை சமாளித்து கலாய்க்கும் அழகு ஏ.ஒன். நீங்க பார்த்தீர்களா ஜி?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks