Page 159 of 400 FirstFirst ... 59109149157158159160161169209259 ... LastLast
Results 1,581 to 1,590 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #1581
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ‘தாழம்பூவில்’ கட்டழகன்!

    ஸ்ரீ பாலகுமாரன் புரொடெக்சன்ஸ் தயாரிப்பில், எம்.எஸ். ராம்தாஸ் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், புரட்சி நடிகரும், ‘புன்னகை அரசி’ கே.ஆர். விஜயாவும் இணைந்து நடித்த ‘தாழம்பூ’ திரைப்படம்23.10.1965 அன்று வெளியானது.

    படத்தில் கண்ணதாசனின் முத்தான மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

    அவற்றுள் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

    “பங்குனி மாதத்தில் ஓரிரவு
    பால்போல் காய்ந்தது வெண்ணிலவு
    தங்கத்தில் மிதந்தது மண்ணழகு – அங்கு
    தனியே தவித்தது பெண்ணழகு!….”

    என்று தொடங்கும் பாடல் காட்சியில், தன் இளமைக்காலப் பருவ அழகைப் பக்குவமாய்க் காட்டி கே.ஆர். விஜயா, கவிஞரின் பாடலுக்கு உன்னத உயிரோட்டத்தைத் தந்திருப்பார்.

    பேசும் பெண்ணழகி, கூறுவதைக் கேளுங்களேன்!

    “காலடி ஒசை கேட்டுவிட்டாள் – அந்தக்
    கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்!
    நாலடி நடந்தாள் முன்னாலே – அங்கு
    நடந்தது என்னவோ? பின்னாலே!….”

    ……கேட்டீர்களா? காலடிஓசை கேட்டுவிட்டாளாம்? யார் காலடி ஓசை? அது அவளுக்குத்தான் தெரியுமே! அந்தக் கட்டழகன்… ‘கட்டான கட்டழகுக் கண்ணா!’ என்றழைக்கப்படும் கட்டழகன் (எம்.ஜி.ஆரின்) முகத்தைப் பார்த்து விட்டாளாம்.

    பார்த்தவுடன்,

    நாலடி நடந்தாளாம் முன்னாலே!
    அதன்பின்பு, அங்கு நடந்தது….
    என்னவோ?… பின்னாலே!’

    இதனைக் கூறுவது நாகரிகமில்லையே’….இத்தகு நயத்தக்க நாகரிகமான காதல் பாடலைக் கவிஞர் தந்தால், எம்.ஜி.ஆரின் கட்டழகு முகத்தைப் பற்றிய பாடலைப் பாராமல் நாமதான் பாய்ந்தோட முடியுமா?

    அடுத்து….தூவானந்தான்!…ஆம்!

    “தூவானம் இது தூவானம் இது தூவானம்
    சொட்ட சொட்டா உதிருது உதிருது!….”

    எனத் தொடங்கி,

    “பூவாடும் இளங் கூந்தலுக்குள்
    புகுந்து புகுந்து ஓடுது!…..”

    என நீண்டு செல்லும் பாடலும், நம் செவிகளுக்கு இன்பம் சேர்க்கும் கவிஞரின் பாடலே.

    இன்னும்….!

    ஆண்: “ஏரிக்கரை ஓரத்திலே
    எட்டுவேலி நிலமிருக்கு
    எட்டுவேலி நிலத்திலேயும்
    என்ன வைத்தால் தோப்பாகும்?”

    என எழிலான வினாவுடன் தொடங்கி,

    பெண்: “வாழை வைத்தால் தோப்பாகும்!
    மஞ்சள் வைத்தால் பிஞ்சுவிடும்!
    ஆழமாக உழுது வைத்தால்
    அத்தனையும் பொன்னாகும்!….”

    இவ்விதமாகப் பல விடைகளைப் பெற்றுத் தரும் சுவை மிகுந்த கவியரசர் பாடலில்,

    கண்ட கனா பலிக்காதா?
    கதவு இன்று திறக்காதோ?
    நினைத்துவிட்டால் நடக்காதோ?
    நெருங்கிவிட்டால் பிறக்காதோ?….”

    என, அழகின் ஆராதனைகளாய்த் தொடரும், ஆசைமனங்கள் பேசும் பாடலைச் சுவைத்தால் சுவை கூடுந்தானே!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1582
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    VELLORE RECORDS 62
    தாழம்பூ படத்தின் வரவேற்பு நோட்டீஸ் 5 காட்சிகளுடன் அன்றே ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
    Last edited by MGRRAAMAMOORTHI; 23rd October 2014 at 01:25 PM. Reason: correction

  4. #1583
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    VELLORE RECORDS 63
    தாழம்பூ 4 வது வாரம் விளம்பர நோட்டீஸ்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  5. #1584
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    சினிக்கூத்து 24th August 2014


    Last edited by saileshbasu; 23rd October 2014 at 02:00 PM.

  6. #1585
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  7. #1586
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  8. #1587
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  9. #1588
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சற்று முன் படித்த ஒரு பதிவு…
    “எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...
    பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
    "எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”
    ஆம்..நிஜம்தானே..!
    “காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது...
    வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..
    “பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...
    ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்...
    “இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
    நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...
    பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...
    சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்...
    “காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.
    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்"
    ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
    சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!
    சந்திக்கத் தயாராவோம்..சவால்களை...!!!

  10. #1589
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    மிக அருமையான தலைவரின் டான்ஸ்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  11. #1590
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    தனக்கு வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் நம் தலைவர் நல்ல பதிவு யுகேஷ்
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    சற்று முன் படித்த ஒரு பதிவு…
    “எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...
    பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
    "எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”
    ஆம்..நிஜம்தானே..!
    “காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது...
    வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..
    “பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...
    ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்...
    “இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
    நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...
    பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...
    சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்...
    “காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.
    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்"
    ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
    சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!
    சந்திக்கத் தயாராவோம்..சவால்களை...!!!
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •