Page 80 of 397 FirstFirst ... 3070787980818290130180 ... LastLast
Results 791 to 800 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #791
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சமீபத்தில் பழைய நண்பர் ஒருவர் சந்திக்க நேர்ந்தது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் (இப்போது அமெரிக்காவில் வாசம் ).
    நிறைய விஷயங்கள் கருத்து பரிமாற்றங்கள் (மோடி முதல் பொன்னார் வரை) எல்லாம் முடிந்து புறப்படும் போது அவர் விடுத்த வேண்டுகோள் . கீழ் கண்ட படங்களின் dvd சென்னையில் எங்கே கிடைக்கும்
    மதனமஞ்சரி
    ஜெகன்மோகினி
    மாயமந்திர குள்ளன்
    கந்தர்வ கன்னி
    பாதாள பைரவி (புதிய டப்பிங்)


    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.



    http://www.dailymotion.com/video/xvk...amalini-05_fun
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #792
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பாகம் இரண்டில் இவரை பற்றி பேசி இருக்கிறோம் வாசு சார்
    நிறம் மாறாத பூக்கள் படத்தில் 'சுதாகரு' என்று இழுக்கும் போது ஒரு சுவை இருக்கும் என்று நீங்கள் கூட குறிப்பிட்டு இருந்தீர்கள் .
    இவர் பற்றிய தகவல் நண்பர் நாகேஷ் ரவிச்சந்திரன் பகிர்ந்து கொண்டு உள்ளார் .



    ஜெமினி ராஜேஸ்வரி பழம்பெரும் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகை.

    ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவளாச்சே என்ற பழமொழி வார்த்தையைக் காந்திமதியை அர்ச்சித்து 16 வயதினிலே படத்தில் ஒரு வசனம் வரும். அந்த ஆவேசமான, ஆனால் இனிமையாக பேசி அசத்திய குரலுக்குரியவர்தான் ஜெமினி ராஜேஸ்வரி.

    இவரது பூர்வீகம் காரைக்குடி. இவரது சின்ன வயதிலேயே நாடக மேடை ஏறிவிட்டார். ஜெமினியின் வெற்றிப்படமான சந்திரலேகா-வில் குரூப் டான்ஸ் ஆடியவர். அப்போது இவரது வயது எட்டு. மாதச் சம்பளம் ரூ-75/-.ஜெமினியின் விதிகளை மீறி வெளி நாடகம் ஒன்றில் நடித்ததனால் அங்கிருந்து விலக்கப்பட்டார்.

    1000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி வில்லன் கே.கண்ணனின் கண்ணும் இமையும் நாடகத்தில் இவர் நடித்தபோது அதைப்பார்த்த இயக்குநர் ஜோசப் தளியத் காதல் படுத்தும் பாடு படத்தில் ஒரு வாய்ப்பை இவருக்கு அளித்தார்.

    இதுவரை விளையாட்டுக் கல்யாணம், நிறம் மாறாத பூக்கள் (தமிழ்-தெலுங்கு), பிரியா, சூறாவளி, ஜோதி, நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, 16 வயதினிலே, கண்ணுக்கு இமை காவல், மண்வாசனை போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கே.பாலாஜி அவரது பல படங்களில் இவருக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளார்.இவர் எத்தனைப் படங்கள் நடித்திருந்தாலும் இவரை ரசிகர்களிடத்தில் தெரிய வைத்தவர் பாரதிராஜா.

    சின்ன வீடு திரைபடத்தில் நடிகை அனுவின் உதவியாளர் ஆக வருவார்.தற்போதும் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிரார். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான எதிர் நீச்சல் படத்தில் இவர் நடித்துள்ளார்.



    சினிமா எக்ஸ்பிரஸ் 15.03.1983 வார இதழிலிருந்து எடுக்கப்பெற்று தொகுக்கப்பெற்றது
    gkrishna

  4. Likes Russellmai liked this post
  5. #793
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    படித்ததில் பிடித்தது

    தீக்கதிர் இதழில் திரு டி எம் எஸ் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நண்பர் திரு எஸ் வி வேணுகோபால் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை

    உணர்ச்சிகர பாடகன் விடை பெறுகிறான், பாடல்களை நம்மிடம் விட்டு....

    எஸ் வி வேணுகோபாலன்




    ஒரு கண்ணதாசன், ஒரு சிவாஜி, ஒரு எம் ஜி ஆர், ஒரு விஸ்வநாதன், ஒரு சவுந்திரராஜன்....இதெல்லாம் ஒரு சகாப்தம்..திரும்ப வராது....

    மேலே நீங்கள் படித்த வாக்கியம் சாட்சாத் டி எம் எஸ் அவர்களே சொன்னது. கவியரசு கண்ணதாசன் மறைவை அடுத்து சென்னை தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க அவர் சொன்ன செய்தி அது. உள்ளபடியே சகாப்தம் தான் அந்தக் காலம்.

    பி பி ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி என மறைந்து கொண்டிருக்கும் இசை மேதைகளின் வரிசையில் இப்போது டி எம் சவுந்திரராஜன் காலமாகிவிட்டார். இசை தேவதைக்கு துயரம் மிகுந்த காலமும் கூட இது.

    டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.

    பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்....இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் - ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.

    கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.

    துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

    கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த 'பாட்டும் நானே பாவமும் நானே' (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.

    சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்.... என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.

    கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய 'யாரந்த நிலவு...' அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. 'இது மாலை நேரத்து மயக்கம் ' (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்....

    திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்....அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி...இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

    அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, 'ன்' என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு 'ல்' சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.

    தமிழ் அவரது தாய்மொழி இல்லை என்றபோதும் (அவரது சவுராஷ்டிரா மொழி), மொழியின் தூய்மை கெடாது உச்சரிக்கும் திறன் அவருக்கிருந்தது. தெருக்கூத்து, எம் கே தியாகராய பாகவதர் பாடிய ராதே உனக்கு கோபம் ஆகாதடி பாடலின் சற்றே மாற்றப்பட்ட வடிவத்தில் டி எம் எஸ் பாடிய பாடலும் பிரபலம் பெற்றது. அந்த உயர்ந்த கட்டைகளில் பாடிய காலம் பின்னர் மாறிக் கொண்டு வந்தது. அடிமைப் பெண் படத்தில் எம் ஜி ஆர்,புதிதாக அறிமுகப் படுத்திய எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆயிரம் நிலவே பாடல் வெற்றி பெற்றபோது இனி அவர் தான் தமக்குக் குரல் கொடுப்பார் என்று சொன்னது டி எம் எஸ் அவர்களின் பாடல்க குறையத் தொடங்கிய காலம். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, டி ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்திற்குப் பாட அழைத்தார். இரண்டு பாடல்கள். ஒன்றின் முதல் வரி, என் கதை முடியும் நேரம் இது...அடுத்தது: நான் ஒரு ராசியில்லா ராஜா. அதற்குப் பிறகு பெரிய அளவில் பாடல்கள் இல்லை...வயது அவரது குரலை உடைத்தது.

    பெரிய அங்கீகாரம் அற்ற அண்மைக் காலத்தில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கைரளி தொலைகாட்சி அவரை அழைத்து சிறப்பித்து பரிசும் நிதியும் வழங்கியது குறிப்பிடத் தக்கது. கலைஞர்களை, எழுத்தாளர்களை, ஓவியர்களை தமிழ் சமூகம் கொண்டாடும் காலம் எப்போது வரும் என்ற கேள்வியை எழுப்பியது அந்த விழாவின் புகைப்படம். அவரது மறைவுச் செய்தி கேட்ட பிறகு, இணைய தலத்தில் அவரது கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (கவிஞர் வாலி) என்ற ஆரம்ப கால பக்திப் பாடலைக் கேட்டேன்....இளமை சொட்டும் குரலில், பிசிறற்ற இழைவும், குழைவும், ராக ஏற்ற இறக்கங்களும் மனத்தைக் கொள்ளை கொண்டது.

    அவரது மறைவு, அவரது பாடல்களை - அவரது வளமிக்க குரலை மேலும் நிரந்தரமாக்கவே செய்கிறது. கிராமப்புற திருமண இல்லங்களின் ஒலி பெருக்கிகளில், நகர்ப்புற இசைக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில், ஆலய திருவிழாக்களில், மன்றங்களின் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத குரலாக டி எம் எஸ் ஒலித்துக் கொண்டு தான் இருப்பார். என்ன தான் புதிய பாடல்களை இசை நிகழ்ச்சியில் அடுத்தடுத்துப் பாடிக் கொண்டிருந்தாலும், அரை மணி நேரம் கழித்து ஒருவர் ஓசைப் படாமல் பழைய டயரியை எடுத்துத் திருப்பிக் கொண்டே வந்து, 'பாவாடை தாவணியில்...' (நிச்சய தாம்பூலம்) என்று மைக்கில் குரலெடுக்கும் போது சபை களைகட்டிவிடும். அப்புறம் 'இன்பமே உந்தன் பேர்...(இதயக்கனி)' தொடரும். சிவாஜியே பாடியது போல, எம் ஜி ஆரே வந்து இசைத்தது போல மக்கள் புளகாங்கிதம் அடைந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.....
    gkrishna

  6. Likes Russellmai liked this post
  7. #794
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai liked this post
  9. #795
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜெயலஷ்மி, ஜோதி மாலினி சே சே ஜெயமாலினி, ஜோதி லஷ்மி (ஜெயமாலினி படத்தைப் பாரதத் உடனே கையும் உடலை காலும் ஓடல கிருஷ்ணா) அமெரிக்காவை என்ன அகில உலகத்தையும் ஆட்டிப் படிக்கும் நிரந்தர சக்தியைப் பெற்றவர்கள் ஆயிற்றே. ஓம் விட்டாலாச்சார்யா நமஹ.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #796
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    திரு எஸ் வி வேணுகோபால் அவர்களின் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவலைகள் அருமை கிருஷ்ணா. எழுத்தில் குறும்பு கொப்பளிகிறது.
    Last edited by vasudevan31355; 27th October 2014 at 01:02 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #797
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Rare picture

    நடிகர் திலகமே தெய்வம்

  12. #798
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    rare picture MGR ,சக்ரபாணி மற்றவர்கள் யார் வாசு ?
    கொஞ்சம் details
    gkrishna

  13. #799
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    rare picture MGR ,சக்ரபாணி மற்றவர்கள் யார் வாசு ?
    கொஞ்சம் details
    கிருஷ்ணா சார்,

    எம்.ஜி.ஆரின் வலது ஓரம் நிற்பவர் இயக்குனர் சங்கர். இடது ஓரம் கடைசியில் இருப்பவர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி. கண்ணாடி அணிந்திருப்பவர் பெயர் தெரியவில்லை. வெளிவராத எம்.ஜி.ஆர். படம் ஒன்றின் தயாரிப்பாளர் அவர் என்று வினோத் சார் கூறினார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks gkrishna thanked for this post
  15. #800
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நச்' பாடல். அற்புத அரிதான ஒரு பாடல்.

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.

    இந்தப் பாடலை வாணி ஜெயராமின் தீவிர ரசிகரான நமது நண்பர் SSS என்னும் சுந்தரபாண்டியன் சார் அவர்களுக்காக அளிக்கிறேன்.

    என்ன பாடல் என்கிறீர்களா?



    வாணி ஜெயராம் குரலில் 'மாங்குடி மைனர்' படத்தில் ஒலிக்கும் அற்புத அரிதான ஒரு பாடல். எதிர்பாராத விதமாக சில லோ-கிளாஸ் படங்களில் இந்த மாதிரி பாடல்கள் ஷோக்காக அமைந்து விடுவது உண்டு. இத்தகைய பாடல்களாலேயே நாம் இந்த மாதிரிப் பாடங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதும் உண்டு. அந்த வகை அருமை கானம் இது.

    கவர்ச்சி அழகு ஸ்ரீப்ரியா விஜயகுமாரை விரட்டி காதல் பண்ணும் அம்சமான பாட்டு. பாடல் வரிகளும் அற்புதம்.

    விஜயகுமார் 'இன்று போல் என்றும் வாழ்க' எம்.ஜி.ஆர் ஸ்டைலில். ரிக்ஷவெல்லாம் ஓட்டுவார். கையில் டிரங்க் பெட்டி மற்றும் கம்பில் மூட்டை முடிச்சுக்களை மாட்டி வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகளில் வலம் வருவார். அவுட்டோரில் படப்பிடிப்பு. ஒளிப்பதிவு அம்சம்.

    ரொம்ப நாளாக பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    உங்களுக்காகவே இதோ பாடல் வரிகள்.

    கண்ணன் அங்கே
    ராதை இங்கே
    அன்பே வா
    உனக்காகவே தந்த உள்ளம் எங்கே

    தேடும் கண்ணில் தேவன் வராததென்ன
    திருடிக் கொண்ட நெஞ்சைத் தராததென்ன
    வாடும் பூவை கைகள் தொடாததென்ன
    மன்னன் கிண்ணம் கன்னம் பெறாததென்ன

    ரராரராராரரரரரரா
    ரராரராராரரரரரரா

    வாரானோ

    கண்ணன் அங்கே
    ராதை இங்கே
    அன்பே வா
    உனக்காகவே தந்த உள்ளம் எங்கே

    இளமை கொஞ்சும் பதுமை உன்னோடு வந்தாள்
    இணையே பிரியா நிழலாய் பின்னோடு வந்தாள்
    தனிமை துயரம் சிறிதும் தாளாமல் நின்றாள்
    தலைவன் நினைவே மனதில் மீளாமல் நின்றாள்

    ரராரராராரரரரரரா
    ரராரராராரரரரரரா

    நான் வேண்டும்

    கண்ணன் அங்கே
    ராதை இங்கே
    அன்பே வா
    உனக்காகவே தந்த உள்ளம் எங்கே

    வாணி 'அன்பே வா' என்று உச்சரிக்கும் அழகு அற்புதம். அதிலும் அந்த எக்கோ 'வா...வா...வா அருமையோ அருமை.

    வாணியின் அம்சாமான பாடல்களுள் இதுவும் ஒன்று. சந்திரபோஸின் கலக்கல் டியூனில்.

    என்ஜாய்.

    Last edited by vasudevan31355; 27th October 2014 at 02:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks sss thanked for this post
    Likes Russellmai, sss liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •