Page 82 of 397 FirstFirst ... 3272808182838492132182 ... LastLast
Results 811 to 820 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #811
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Congratulations Rajesh Sir for 2000 posts. Expecting more and more from you.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #812
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    கடலூர் முத்துக்குமரன் அவர்களுடனான தங்களின் பரிச்சயமும் நடிகர் திலகத்துடன் தாங்கள் செலவழித்த நாட்களும் மிகவும் மகிழ்வுடனும் பெருமையுடனும் தங்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. நாங்களும் அதை உணர்கிறோம்.
    மிகவும் அதிர்ஷ்டசாலி சார் நீங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #813
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ராம்பூர் கா லக்ஷ்மன் சத்ருகன் சின்ஹா நடிப்பு அபராமாக இருக்கும் .
    ரேகா கேட்கவே வேண்டாம் . சென்ற வாரம் என் மேல் அதிகாரி ஒருவரிடம் ரேகாவுக்கு சமீபத்தில் 60 வயது பூர்த்தி ஆகி விட்டது என்று ஹிந்து நாள் இதழில் வந்த தகவலை தெரிவித்தேன் . நாமும் நமது திரியில் அதை கொண்டாடினோம் . அப்போது அவர் 'நிச்சயமாக இருக்காது ' என்று வாதம் செய்தார். சரி பார்ட்டி ரேகா ரசிகர் என்று நினைத்து கொண்டு 'என்ன சார் நீங்கள் ரேகா உடற்கட்டை பார்த்து 50 அல்லது 55 தான் மதிப்பிடுகிறீர்கள். ரேகாவின் அந்த உடற்கட்டை அவர் யோகா மற்றும் லக்ஸ் சினிமா நட்சத்ரங்களின் அழகு சோப்பு போட்டு குளிப்பதாலும் உங்களுக்கு அப்படி தெரிகிறது ' என்று கூறினேன் . உடனே அவர் 'நீ வேறே நான் சொல்ல வந்ததே வேற ரேகா பாட்டிக்கு மன்னிக்கவும் பார்ட்டிக்கு 65க்கு மேல் இருக்கும் நடிக்க வந்தே 50 வருஷம் ஆச்சு ' என்றாரே பார்க்கலாம்

    என்ன cute face சார்
    gkrishna

  5. #814
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜீ
    வருக வருக வருக...
    தங்கள் புதல்வியின் சாதனைக்கு பாராட்டுக்களும் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #815
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜீ...
    ராம்பூர் கா லக்ஷ்மண்.. சென்னை ஸ்டார் தியேட்டரில் சத்ருகன் சிகரெட் ஸ்டைலுக்காகவே இளைஞர்கள் பலர் படையெடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.
    நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைலைப் பார்த்து ரசித்த எனக்கு அதில் அதிகம் நாட்டமில்லை என்ற போதிலும் பாடல்கள் மிகவும் ஈர்த்து படத்தைப் பார்த்த நாட்கள் மறக்க முடியாது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #816
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ராகவேந்தர் சார் . உங்களை போன்ற,மற்ற நம் திரி நண்பர் பெருமக்கள் போன்ற நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதம் இருந்தால் எல்லா நன்மைகளும் எல்லோரும் பெறுவார்கள் என்பதில் ஐயம் இல்லை
    gkrishna

  8. #817
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கிருஷ்ணா ஜீ...
    ராம்பூர் கா லக்ஷ்மண்.. சென்னை ஸ்டார் தியேட்டரில் சத்ருகன் சிகரெட் ஸ்டைலுக்காகவே இளைஞர்கள் பலர் படையெடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.
    நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைலைப் பார்த்து ரசித்த எனக்கு அதில் அதிகம் நாட்டமில்லை என்ற போதிலும் பாடல்கள் மிகவும் ஈர்த்து படத்தைப் பார்த்த நாட்கள் மறக்க முடியாது.
    dear raagavender sir

    சத்ருகன் சின்ஹாவே ஒரு பேட்டியில் 'நடிகர் திலகத்திடம் தான் இருந்து நிறைய ஸ்டைல் கற்று கொண்டதாக ' கூறியிருக்கிறார் .நம் நடிகர் திலகத்திடம் மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்
    gkrishna

  9. #818
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //தேவன் திருச்சபை மலரிது
    வேதம் ஒலிக்கின்ற மணி இது
    எங்கெல்லாம் உன் புன்னகைக் கோலம்
    அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்// வெகு ஜோரான பாட்டு வாசு சார்.. நான் இந்தப் பாடல் இதுவரை கேட்டதிலலை.. தேவன் திருச்சபைமலர்களே மட்டும் கேட்டிருக்கிறேன்..உருகியிருக்கிறேன்.. வெரி நைஸ் அண்ட் தாங்க்ஸ் டு யு..

    தேவன் திருச்சபை மலரிது, அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்..- இப்படி ப் பெண்ணை இதுவெனச் சொல்வது தவறு யுவர் ஆனர் என்றுசொல்ல வருகையிலே..அதீத மரியாதை காரணமாக மதுரைக்காரர்கள் உயர்திணையை அஃறிணையாகக் குறிப்பிடுவார்கள் என்பது நினைவுக்கு வருகிறது..(இரண்டு பாட்டும் கண்ணதாசன் தானா)

    //பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே // ஹூம் ஃபடாபட்.. விஜயகுமார் முழுமனசுடன் ஆசி கூறவில்லை போலும்..!

    வழக்கம் போல் சுவாரஸ்யமான பதிவுகள் தர ஆரம்பித்துவிட்டீர்கள் நன்றி கிருஷ்ணா ஜி..

    *

    ஒரே வேலை வேலை வேலைம்ம் என்ன செய்ய.. வேலைன்னு என்னல்லாம் பாடலிருக்குன்னு யோசிச்சேன்..

    உடுமலை நாராயண கவி தான் எங்க வீட்டு மகாலஷ்மிக்காக நினைவில் வந்தார்..

    ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது
    அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது....ம்ம்( கண்டசாலா சுசீலாம்மா)

    http://www.youtube.com/watch?feature...&v=iajWHacIvcg

    அதே போல் இவர் எழுதிய காதல் பாடல் ஒன்று எனக்குப் பிடிக்குமாக்கும்..

    காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
    தாலி கட்டிக்கொள்ள தட்டிக் கழித்தால் கவலைப்படுகிறது.. டிஎம் எஸ் பிஎஸ்.. பிஜிஎம் அண்ட் ஒஹோஹோய் ரொம்பப் பிடிக்கும்..

    http://www.youtube.com/watch?feature...&v=2tTXDyZKHBw

    (ஆமா ஏதோ வேலை பத்தி எழுதலாம்னு சொன்ன…
    ஆமால்ல நெக்ஸ்ட் போஸ்ட் ஓகேயா... .)

  10. #819
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதர்கள்



    கலை மனிதனை இறைவனிடம் தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு பாலம்.
    இசையென்பது, மனிதனை இறைவனிடம் கொண்டு செல்லும் தூது. மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பது இசை. இந்தப் பணியை செய்யும் இசைக்கலைஞர்கள் இறைவனின் தூதர்கள்.

    இந்தக் கருத்தினை அடிப்படையாக வைத்து இந்தப் பகுதியில் இசைக்கலைஞர்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள், தகவல்கள், மறக்கவொண்ணா பாடல்கள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம்.

    மனதை மயக்கும் மதுர கானம் எனத் தொடங்கி இன்று மய்யம் திரியில் நாளுக்கு நாள் பார்வையாளர்கள் பங்கேற்பாளர்கள் என அனைவரிடமும் அதிகரிக்கும் எண்ணிக்கையைக் கொண்டு முன்னணியில் கொண்டு வந்துள்ள வாசு சாரின் மனதில் இடம் பெற்ற டி.ஆர். பாப்பா அவர்களுடன் இப்பகுதி துவங்குகிறது.


    டி.ஆர்.பாப்பா



    தமிழ்த்திரையுலகின் இசை வரலாற்றில் மறக்க முடியாத பெயர் டி.ஆர்.பாப்பா. இயற்பெயர் சிவசங்கரன். பிறந்த ஊர் திருத்துறைப்பூண்டி. அந்நாளில் அகில இந்திய ரேடியோவின் ஏ கிரேடு இசைக்கலைஞராக விளங்கியவர். வயலினில் மிகச் சிறந்த நிபுணர். அந்நாளில் இசைக்கலைஞர்களில் வயலின் இசைக்கென மிக அதிகமான ஊதியம் பெற்ற இருவரில் ஒருவர் டி.ஆர்.பாப்பா, மற்றவர் மெல்லிசை மன்னர் டி.கே.ராம மூர்த்தி.

    ஏராளமான பாடல்கள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டு, அவருடைய பெயரைப் பறை சாற்றிக்கொண்டுள்ளன. தன்னுடைய இறுதி மூச்சு வரை இசைக்காகவே வாழ்ந்தவர். சீர்காழி கோவிந்தராஜன் மறைவதற்கு முன்பு டி.ஆர்.பாப்பாவின் இசையில் திவ்யப்பிரபந்தம் பாடிக் கொண்டிருந்தாராம். அவர் திடீரென காலமாகி விட, பின்னர் சீர்காழி சிவ சிதம்பரம் அவர்கள் அதனை முடித்துக் கொடுத்தாராம். அதே போல் டி.ஆர்.பாப்பா மறைவதற்கு முன் சீர்காழி சிவ சிதம்பரம் பாட, திருப்புகழை இசையமைத்துக்கொண்டிருந்தாராம்.

    ஜோசப் தளியத்தின் சிட்டாடல் நிறுவனம் தயாரித்த ஆத்மசாந்தி என்கின்ற மலையாளப் படம் மூலம் திரையுலகில் இவர் அறிமுகமானதாக விக்கிபீடியா கூறுகிறது. இப்படம் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
    அதைத் தொடர்ந்து சிட்டாடல் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகத் திகழ்ந்தார்.
    இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் வகுப்புத் தோழர் . இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் அமர்ரானவதற்கு முன் இசையமைத்துக் கொண்டிருந்த அருணகிரிநாதர் திரைப்படத்தை முடித்துக் கொடுத்தார் டி.ஆர்.பாப்பா.
    தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் பெற்றவர் டி.ஆர்.பாப்பா. இவையன்றி பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றவர்.
    இசைக்காகவே வாழ்ந்த இவரைப் போன்ற இசை மேதைகளைப் பற்றி இத்தொடரில் கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். டி.ஆர்.பாப்பாவைப் பொறுத்த வரையில் அறிமுகம் அதிகம் தேவையில்லை என எண்ணுகிறேன்.
    இவருடைய பாடல்களுக்கென்றே ரசிகர்கள் பலர் இன்றும் இருக்கிறார்கள். இதுவே இவருடைய இசையின் வெற்றிக்கு அடையாளம்.
    ஏராளமான பாடல்கள் இவருடைய இசையில் அமரத்துவம் பெற்று விளங்குகின்றன. எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு அவருடைய இசையமுதைப் பருகலாம்.

    மேற்காணும் தகவல்கள் விக்கிபீடியா இணையதளத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன.
    இதற்கான இணைப்பு - http://en.wikipedia.org/wiki/T._R._Papa#Filmography

    தொடக்கமாக கந்த சஷ்டி விழா தமிழகமெங்கும் விமரிசையாக நடைபெறும் இந்நேரத்தில் அவருடைய புகழ் பெற்ற முத்தைத்தரு பத்தித்திருநகை என்கின்ற திருப்புகழ் பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்..அருணகிரிநாதர் திரைப்படத்திலிருந்து



    குறிப்பு...

    1960களின் இறுதி வரையிலான கால வரையறையை வைத்துக் கொண்டு அதற்கு முந்தைய கால கட்டத்தில் தமிழ்த்திரையுலக இசைக்குப் பங்களித்த கலைஞர்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள உத்தேசம்.
    Last edited by RAGHAVENDRA; 27th October 2014 at 11:20 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks kalnayak thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #820
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வேலை கிடைத்துடுச்சு என ஒரு சத்யராஜ் படம்.. நினைச்சது நடந்தாச்சு கேட்டது கிடைச்சாச்சு எனப் பாடல் நினைவில் சத்யராஜ் கெளதமி....இளையராஜாவா தெரியவில்லை..பாடல் வீடியோகிடைக்கவில்லை..

    *

    வேற வேலைன்னு போட்டா வேளைன்னு பாட்டு வந்துடுத்து..

    ஏகாந்த வேளைஇனிக்கும் இன்பத்தின் வாசல் திறக்கும்
    ஆனந்தப் பாடம் நடத்தும் ஆனந்தகங்கை…

    கார்த்திக்க் பானுப்ரியா நடித்த பாடும்பறவைகள்படம் வெகு எதேச்சையாகத் தான் வீடியோ கிடைத்துப் பார்த்தேன்..பலவருடம் முன்பு.. எதிர்பார்க்காத த்ரில்லர்.. நன்றாக இருந்தது..மேற்கண்ட பாட்டும் கீரவாணி இரவிலே பகலிலே பாட வா நீ பாட்டும் வெகு இனிமை..விஷூவலிலும்..! இசை இளைய ராஜா..!

    http://www.youtube.com/watch?feature...&v=5PsGfmLzZxM

    //பரவால்லடா கண்ணா.. நைஸா எம் என் எம் பாட்டு ஒண்ணு போட்டுட்ட.. கில்லாடி டா நீ..
    ஷ்ஷ்..மன்ச்சு..கம்னுஇரு/

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •