Page 87 of 397 FirstFirst ... 3777858687888997137187 ... LastLast
Results 861 to 870 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #861
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    படித்ததில் பிடித்தது

    குறளை ஒட்டி தமிழிசை மழையில் நனைய வான் மழையை புகழ்ந்து வரவேற்ற கவிஞர் வாலியின் தனி கவிதை

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.

    மழை - ஒருமகத்தான சொல்;மற்றவர்க்கும் - அதன்மகத்துவம் சொல் !
    உலகோர் -உண்ணும்...
    ஆகாரத்திற்கு அதுவேஆதார மாகும்; அங்ஙனம்ஆதார மான அதுவேஆகார மாகும் !
    நீருணவு;சோறுணவு; என -ஈருணவாய் இருப்பது மழை !
    அதை -ஏத்திப் பிழை;ஏத்தாதிருப்பது பிழை !
    Last edited by gkrishna; 29th October 2014 at 04:38 PM.
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #862
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    நமக்கெல்லாம் எதிர்காலம் எப்படி இருக்குமோ!?!? என்று திரு நாகேஷ் அவர்கள் இளமை காலங்களில் போட் கிளப்பில் ஒன்றாக இருந்த போது புலம்பிய வேதனைக்கு ஆறுதலாய் தந்த கவிதை ...

    "கால மகன் கட்டிவைத்த ஆலமர ஊஞ்சலிலே ஏழை மக்கள் ஆடுகின்றார் ஆராரோ ஆராரோ இதில் எதிர்கால மன்னவர்கள் யார் யாரோ? யார் யாரோ?"
    gkrishna

  4. #863
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    அன்பு வாசு

    கோவை செழியன்,ஸ்ரீதர்,மெல்லிசை மன்னர்,கவிஞர் தவிர மற்றவர்கள் பற்றி சொல்ல முடியுமா ? ஒருவர் கோபு போல் தெரிகிறது. எந்த தருணத்தில் எடுக்கப்பட்ட படம் .இணையத்தில் கிடைத்த படம் இது

    நட்புடன்

    கிருஷ்ணா
    gkrishna

  5. Likes Russellmai liked this post
  6. #864
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் ஈவ்னிங்க் ஆல்..(இது நேற்றுச் சொன்ன குட் ஈவ்னிங் யா.. எழுதி வைத்து விட்டு போஸ்டே செய்யவில்லை..எனில் எழுதியதை முதலில் போஸ்ட்ட்டு..)

    ம்ம் இன்னிக்கும் கொஞ்சம் வேலைப் பளு..ஹோம் ஒர்க் இனிமேல்ட்டு தான் பண்ணனும்..

    வேற வேலை ப் பாடல்கள் என்ன இருக்கு..

    விழியே விழியே உனக்கென்னெ வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

    வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன் தான் வீரமான வேலைக்காரன்

    இரவுக்கும்பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை..

    இதில் விழியே, இரவுக்கும் பகலுக்கும் பாடல் பற்றி ஏற்கெனவே எழுதி விட்டதால்.. வேலைக்காரன் பாட்டு… பாடல் மு.மேத்தா என நினைக்கிறேன்..

    http://www.youtube.com/watch?feature...&v=D48tthj0RLY

  7. #865
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இசைக்கலைஞர்கள் - இறைவனின் தூதர்கள் - டி.ஆர்.பாப்பா



    குமார ராஜா...

    ஒண்ணுமே புரியலே என்ற காலத்தால் அழியாத பாடலால் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்ட திரைப்படம்...

    சந்திரபாபு வின் அற்புத நடிப்பிற்கு மிகச் சிறந்த உதாரணம்..

    துவக்கம் முதல் வணக்கம் வரை சந்திரபாபுவின் ஆளுமை ...

    பாடல்களில் டி.ஆர்.பாப்பாவும் சந்திரபாபுவும் இணைந்து அளித்துள்ள வித்தியாசமான அணுகுமுறை பின்னாளில் வந்த பல படங்களின் பாடல்களுக்கு முன்னுதாரணம்.. குறிப்பாக மூடினாலும் திறந்தாலும் பாடலைச் சொல்ல வேண்டும்..What a variety ... landing notes fantastic... finishing every note with perfection... Fusion என்பதற்கு சிறந்த உதாரணமான பாடல்களில் ஒன்று..

    கேளுங்கள் உணருங்கள்..

    http://www.inbaminge.com/t/k/Kumara%20Raja/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes Russellmai, chinnakkannan liked this post
  9. #866
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    கொஞ்சம் நிறைய வேலை வந்துடுத்து..அதனால வரமுடியலை.. உங்களை நிம்மதியா இருக்க விட்டதுக்கு என்னை மன்னிக்கவும்!

    **

    மிஞ்சுதல் என்றால் என்ன..

    கொய்ங்க் கொய்ங்க்னு கோச்சுண்டு மூஞ்சியை த் தூக்கி வச்சுண்டிருக்கா காதலி..காதலனுக்குப் புரியலை..ரீஸன் சொன்னா ப் புரியும்..லேட்டா வந்ததுனாலா, அல்லது நேத்திக்கு வாங்கிக் கொடுத்த சரவண பவன் குலோப் ஜாமூன் பார்சல் நல்லா இல்லையா… தீபாவளிக்கு ஆசையா நாம பாலம் சில்க்ல வாங்கிக் கொடுத்த லேட்டஸ்ட் ஃபாஷன் சுரிதார் மெட்டீரியல டெய்லர் சொதப்பிட்டாளா.. வாஸ்ஸப்ல புகழ்ந்துக்கிட்டு தானே இருக்கோம் அவ அழகை..ம்ஹூம் எதுக்குன்னு சொன்னாத் தானே தெரியும்..

    ஏய் என்னா விஷயம்

    போடான்னு மொதல்ல செல்லத் திட்டு..அப்புறம் விஷயத்தையே சொல்லாம நீ இப்படிஉன்னோட தங்கச்சி இப்படி.. அப்புறம் உன்னோட அம்மா என்னமோ உம்னு ஒட்டகம் மாதிரி மூஞ்சியத் தூக்கி வச்சுக்கிட்டிருந்தாங்க நீ என்னை இன் ட் ரோ பண்றச்சே.. அப்படி இப்படின்னு கிளி பருந்தா மாறி வார்த்தை அலகால கொத்த ஆரம்பிச்சா காதலன் என்னாவான்.. அவனுக்கும்கோபம் தான் வரும். யாரும் இல்லைன்னா குட்டியா அடிக்கவே செஞ்சுடுவான்.. எதனால…


    கொஞ்சும் கிளியென கோதையுனை மன்னித்தால்
    மிஞ்சல் நியாயமோ டீ..

    யெஸ்.. பாவமேன்னு கொஞ்சி க் கொஞ்சி ப் பேசினா இவ என்னடானா வார்த்தைகள்ள எல்லை மீறிப் பேசறா அப்படின்னு..யெஸ்..இங்க மிஞ்சுதல் என்பது மீறுதல் என்று வருகிறது. எல்லை மீறுதல்..

    ஆமா தீபாவளி பட்சணம் மிஞ்சியிருந்ததே.. வேலைக்காரி அபீதாக்குக் கொடுத்தியா என்ன சொன்னா..

    ம்க்கும்.. வேணாமாம்…. நிறைய தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிட்டு அலுத்துடுத்தாம்..அதுக்குப் பதிலா அரச்சு விட்ட வெங்காய சாம்பார் பண்ணிக் கொடும்மா எடுத்துட்டுப் போறேன்னா..”

    இங்கே மிஞ்சுதல் என்றால் மீதி இருப்பவை என அர்த்தமாகிறது..

    அந்த எக்ஸ் நடிகை ஒய் நடிகையை விட கவர்ச்சியில் மிஞ்சுகிறார் என்றால் ஒய் நடிகை சுடிதார் அணிந்தால் எக்ஸ் நடிகை கை யில்லாத சுடிதார் அணிந்திருக்கிறார் என்று அர்த்தம் ( ஹி ஹி ரவிக் சுடிதார் மோர் க்ளாமரஸ் என ஆன்றோர்கள் சொல்வார்கள்!)

    இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆ ஆ – இதில் மிஞ்சும் என்பது மிச்சமிருப்பது என்ற அர்த்தம்..

    ஸ்மாயியாயி ஸ்மாயியாயிமாக்னெட் விழியால் மனதை கவர்ந்து விட்டாய் ஒரு செண்டிமீட்டர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய் இல்

    புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ
    என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
    ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே

    என வைரமுத்து க.கொ க.கொ படத்திற்காக தபுவைப் பற்றி அஜீத் பாடுவது போல எழுதியிருப்பார்.. இங்கும் மிச்சம் தான் வருகிறது அர்த்தமாய்

    இளவயசு எல்.விஜயலட்சுமி அழகாய் நாட்டியமாடும் எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதைக் கவர்ந்தவராம் - பொம்மைப் படப் பாடலில் என்னவாக்கும் சொல்கிறார்..

    மலரை மிஞ்சும் அழகியென்று மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்
    மலரும் கோபம் கொண்டதம்மா தூது இல்லையே..

    இங்கே மலரை விட மேலான அழகு வைஜூவாம்..என்ற அர்த்தத்தில் வருகிறதாக்கும்..

    ரெட் ஸேண்ட்ல என்னவாக்கும் வருது.. ந.தி காஞ்சனா பாட்டு..

    ஒரு நாளிலே என்னவாம் உறவானதே தெரியுமே
    கனவாயிரம் நினைவானதே எனத் தொடரும் பாடலில் வரும் வரிகள்…

    மஞ்சம் இது மஞ்சம் என
    மார்பில் விழி மூடு
    கொஞ்சும் இதழ் சிந்தும் என்
    நெஞ்சில் ஒரு கோடு

    தஞ்சம் இது தஞ்சம் என
    தழுவும் சுவையோடு
    மிஞ்சும் சுகம் யாவும் வர
    வேண்டும் துணையோடு

    இந்தப் பாட்டுல அர்த்தம் சொல்லலாம்னா வார்த்தைகள் கொஞ்சம் வெட்கப் படுது சரி… மேலான சுகங்கள் என்ற அர்த்தம் இங்கே வருகிறது..

    சிறு பொன் மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
    இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்
    இதமும் பதமும் தொடரும் கனவும் இனி தாளாது
    ராக பாவ தாளம் போல நானும் நீயும் சேர வேண்டும்..

    என்ற வெகு அழகான கல்லுக்குள் ஈரம் பாட்டில் இளையராஜா ஜானகி.. வரும் வரியும்..


    வழி தேடுது விழிவாடுது கிளி பாடுது உன் நினைவில்.. அப்புறம்..என்னவாம்..

    நதியும் முழுமதியும் இரு இதயம் தனில் பதியும்
    ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்

    விதையூன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
    கதைபேசுது கவிபாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்

    உயிர் உன்வசம் உடல் என் வசம் பயிரானது உன் நினைவுகள் நு வருதோன்னோ..
    இங்க மிஞ்சும் மிச்சம்கற அர்த்தத்துல வருதாக்கும்.. ஆடியோ தாம்ப்பா கிடைச்சது (படம்பார்த்ததில்லை பாட்டு மட்டும் உசிரு)..




    ஹை கிடைச்சுடுச்சு..ஆனா விஷூவல் பார்த்தா கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சுது..!




    88
    ஆக க் கூடி நெறைய மிஞ்சும் பாட்டு இருக்கத் தான் இருக்கு.. இன்னும் மிஞ்சியிருக்கற பாட்டு உங்களுக்குத் தெரியும் தானே!
    Last edited by chinnakkannan; 29th October 2014 at 10:19 PM.

  10. Likes Russellmai liked this post
  11. #867
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் மிக மிக மதிக்கும் திரை பாடல் கவிஞர்களில் மூவேந்தர்களில்(வாலி,கண்ணதாசன்,வைரமுத்து ) ,மிக முக்கியமான வாலி ஐயாவின் பிறந்த நாளில் ,உங்கள் அனைவருடனும் அன்னாரின் நினைவை பகிர்கிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes rajeshkrv liked this post
  13. #868
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணா,



    நடிகர்திலகம் விஷயத்தில் ,நான் வலிக்க கூறியதை ,வாசு வலிக்காமல் கூறி விட்டார். அவரின் ரசிகன் என சொல்லி கொள்ளும்,உங்களால் இந்த தவறு,இனி திரும்பாதென ,மகிழ்ச்சி கொள்கிறேன்.



    நன்றி வாசு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. #869
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாலி பிறந்த நாள்- நன்றி பாடல் தொகுக்க உதவிய நண்பர் ராம் அவர்களுக்கு

    பல்வேறு நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பாடிய தேச ஒற்றுமையை உணர்த்தும் பாரத விலாஸ் பாடல் : இந்திய நாடு என் வீடு .

    எம்மதமும் சம்மதம்

    தாய் மூகாம்பிகை : ஜனனி ஜனனி
    முகம்மதுப்பின் துக்ளக் : அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை
    வெள்ளை ரோஜா : தேவனின் கோயிலிலே

    உறவில் மிக சிறந்த உறவு தாய் - கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்

    தேடி வந்த மாப்பிள்ளை : வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
    மன்னன் : அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
    நியூ : காலையில் தினமும் கண் விழித்தால்

    பிரபலங்களே பாடி நடித்த பாடல்கள்

    நடிகர் திலகம் - போற்றிபாடடி பெண்ணே - தேவர் மகன்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடி நடித்த அம்மா என்றால் அன்பு-அடிமைப்பெண்,
    ரஜினி காந்த் பாடி நடித்த அடிக்குது குளிரு- மன்னன்,
    கமல் பாடி நடித்த இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்

    சாகா வரம் பெற்ற தத்துவ பாடல் - கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்

    நாயகி தன் தோழியரோடு பாடல் :

    அன்று : பருவம் எனது பாடல் : ஆயிரத்தில் ஒருவன்
    இன்று : அக்கடான்னு நாங்க உடை போட்டா : இந்தியன்

    கடிதப்பாடல் :

    அன்று : அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும்
    இன்று : கண்மணி அன்புடன் நான் எழுதும் - குணா

    கேலிப்பாடல் :

    அன்று: என்ன வேகம் நில்லு - குழந்தையும் தெய்வமும்
    இன்று - ஏ மாமா மாமா - மின்னலே

    காதலியிடம்

    அன்று : இந்த புன்னகை என்ன விலை -தெய்வத்தாய்
    இன்று : என்ன விலை அழகே - காதலர் தினம்

    பெண் வர்ணனைப் பாடல் :

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
    நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ

    (இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் தன காதலி விமலா எப்படி இருக்கிறாள் என்பதை பாடல் நாயகன் முருகன் வர்ணனை (பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் நடிகை மஞ்சுளாவிற்கு அப்படியே பொருந்தும் )

    (மற்றும் உறவு முறை நடிகர்களின் வரிசையில்)

    ஆழியிலே பிறவாத - பேசும் தெய்வம் (நடிகர் திலகம் )
    பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன் (இளைய திலகம்)

    அன்று : அவளுக்கும் தமிழ் - பஞ்சவர்ணக்கிளி (முத்துராமன்)
    இன்று : ராஜா ராஜாதி -அக்னி நட்சத்திரம் (கார்த்திக்)

    அன்று: உறவு என்றொரு சொல்லிருந்தால் - இதயத்தில் நீ (தேவிகா)
    இன்று : அன்பே வா அருகிலே -கிளிப்பேச்சு கேட்கவா (கனகா )

    அன்று- என்கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் (சிவகுமார்)
    இன்று- முன்பே வா -ஜில்லுனு ஒரு காதல் (சூர்யா) அலெக்ஸ் பாண்டியன்,பிரியாணி படத்திற்காக-கார்த்தி அவர்களுக்கு.

    அன்று- ஜெயுச்சுட்டே கண்ணா நீ -கலியுகக்கண்ணன் (தேங்காய் ஸ்ரீனிவாசன்)
    இன்று - குக்காத்து மனுஷா -நளதமயந்தி ,மற்றும் செல்லமே செல்லம் நீ தானடி (ஆல்பம்) (அவர் பேத்தி ஸ்ருதிகா ),

    அன்று ஷோபா சந்திரசேகர் பாடிய பாடல் ஓடிப்பிடிச்சு விளையாட :இரு மலர்கள் படத்தின் மகராஜா ஒரு மகராணி
    இன்று அவர் மகன் விஜய் பாடிய ஒ ப்யாரி- பூவே உனக்காக

    கலைஞர் கருணாதி மகன் முக முத்துவிற்கு 'மூன்று தமிழ் ' - பிள்ளையோ பிள்ளை
    பேரன் அருள்நிதி - 'மன்னாதி மன்னரு' வம்சம்

    கிருஷ்ணா ஜி, அருமை அருமை. என் தமிழாசானுக்கு இதை விட ஒரு நல்ல பதிவு இட்டுவிட முடியாது. அன்றும் இன்றும்.. நானும் இது போல் ஒன்று எழுதினேன் சில வருடங்க முன்பு..

    எனினும் அழகாக என் தமிழாசானுக்கு பிறந்த நாள் பா பாடிய உமக்கு ஆயிரம் பொற்காசுகள் ....

  15. #870
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி .. மழையை பற்றி கவிதை ஒன்று பதித்திருந்தீர்கள்

    இதோ வாலி ஐயாவின் மழைப்பாடல்

    சின்னச் சின்ன, தூரல் என்ன
    என்னைக் கொஞ்சும், சாரல் என்ன
    சிந்தச் சிந்த, ஆவல் பின்ன
    நெஞ்சில் பொங்கும், பாடல் என்ன
    சின்னச் சின்ன..

    உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா..
    அது தீண்டும் 'மேகம்' இல்ல, 'தேகம்' சிலிர்க்குதம்மா!

    உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா..!
    நனைந்த பொழுதினில், குளிர்ந்த மனதினில், ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..!
    மனித ஜாதியின், பசியும் தாகமும், உன்னால் என்றும் தீருமம்மா..!

    வாரித்தந்த வள்ளல் என்று, பாரில் உன்னை சொல்வதுண்டு!
    இனமும் குலமும் இருக்கும் உலகில்,
    அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே
    சின்னச் சின்ன
    சின்னச் சின்ன, தூரல் என்ன

    பிழைக்கு யாவரும், தவிக்கும் நாட்களில், நீயோ இங்கே வருவதில்லை..
    படிச்சவன் பாட்டக் கெடுத்தான் கதையா இல்ல இருக்கு,
    பிழைக்கு-னு எழுதலயே, மழைக்கு-னு தான எழுதியிருக்கேன்!


    மழைக்கு யாவரும், தவிக்கும் நாட்களில், நீயோ இங்கே வருவதில்லை..!
    வெடித்த பூமியும், வானம் பார்க்கையில், நீயோ கண்ணில் தெரிவதில்லை..!
    உனது சேதியை, பொழியும் தேதியை, முன்னால் இங்கே யாரரிவார்..?

    நஞ்சை மண்ணும், புஞ்சை மண்ணும், நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்!
    உனது பெருமை உலகம் அறியும்,
    இடியெனும் இசை முழங்கிட வரும், மழையெனும் மகளே
    சின்னச் சின்ன..


  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •