-
5th November 2014, 10:33 AM
#11
Junior Member
Newbie Hubber
சுமைதாங்கி- என்னை மிக மிக கவர்ந்த தமிழ் பட வரிசையில் ஒன்று.
எனது ஆதர்ச எழுத்தாளர் ர.கி.ரங்கராஜனின் அற்புத படைப்பு.
ஸ்ரீதர்,கண்ணதாசன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவில் மிளிர்ந்தாலும், நாயகன் ஜெமினி தான் முன்னிலை.
சரியான திரைகதை தளம், spacing ,narrative time ,development எல்லாவற்றிலும் முழுமையானது.
ஜெமினி, முதல் ஒரு மணி நேரம் துள்ளல் கல்லூரி வாலிபன், காதல் வய படும் காதல் மன்னன்.
அடுத்த ஒரு மணி- துன்ப-துயரங்களை தன் மேல் சுமந்து, சுயநலத்தில் ஆடும் அண்ணன்-தங்கை-அப்பாக்களின் வெறியாட்டத்தில் தன் ஆசைகள் சிதைந்தாலும், குடும்பத்தை கட்டி காத்து கரையேற்றும் பொறுமை. காதலியினால் புரிந்து கொள்ள படாத வெறுமை.
அடுத்த அரை மணி- விரக்தி, வெறுப்பு,துறவு நிலை கொண்டு ,தன்னிரக்கத்திலும்,நிலையாமையிலும் வாடும் நிலை.
ஜெமினி தவிர ,இன்னொருவரை ,கற்பனையிலும் நினைக்க முடியுமா,இந்த கதாபாத்திரத்தில்?இவ்வளவு இயல்பாக பொருந்த?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th November 2014 10:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks