Quote Originally Posted by kalaiventhan View Post
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,

தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தொடரில் திரு.விஜயகுமார் கூறியிருந்த செய்தியை நான் தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல, பலரும் அதைப் படித்திருக்கலாம். அது புத்தக வடிவில் கூட வந்துள்ளது.

தயவு செய்து உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால், எனக்கு நிஜமாகவே ஒன்று புரிவதே இல்லை. டில்லியிலும் திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடைசி வரை ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கவே இல்லை? அகில இந்திய காங்கிரசில் மூப்பனார் ஐயாவுக்கு இருந்த மரியாதையும் அங்கீகாரமும் திரு.சிவாஜி கணேசனுக்கு கிடைக்காதது எனக்கும் வருத்தமே.

ஆமாம், எங்கே இவ்வளவு நாட்களாக காணோம்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
ஹலோ கலை வேந்தன் சார்

வணக்கங்கள் !

விசாரித்தமைக்கு நன்றி ! அலுவல் நிமித்தமாக ஒன்றிரண்டு வாரங்கள் வெளியூர் சென்றிருந்ததால் தொடர்ந்து பங்களிக்கமுடியாமல் போனது. இதை நான் type செய்யும்போது கூட..இன்று குல்பர்கா செல்ல இருக்கிறேன் அலுவல் நிமித்தமாக தான். நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். சென்னையில் conjunctivitis பரவுகின்றது. தாங்கள் சென்னையில் இருப்பின் கவனம். மருத்துவ துறையில் sales பிரிவில் உள்ளதால் கூறுகிறேன்.

"பொம்மை பத்திரிகையில் ஆர்.கே.தவானுடன் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான செய்தியை வெளியிடுவார். அந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அவ்வளவு செல்வாக்கு பெற்றவருக்கு ஏன் காங்கிரஸ் தலைவர் பதவியை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் வழங்கவில்லை? என்பது இன்று வரை உண்மையிலேயே எனக்கு புரியாத புதிர். ஒருவேளை மூப்பனார் ஐயா முட்டுக்கட்டையாக இருந்தார் என்றால் அவரது பேச்சைத்தான் இந்திரா காந்தி கேட்டாரா?" <---------இது உங்கள் கேள்வி ! :-d

மூப்பனார் அவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எப்படி வந்தார் என்பது உங்களுக்கு தெரியாததால் வந்த கேள்வி என்பதை இதிலிருந்து எனக்கு ...எனக்கு மட்டும் அல்ல ....அதை தெரிந்த அனைவருக்கும் ஊர்ஜித படுத்துகிறது..! நீங்கள் கேட்ட கேள்வியை அவர் பாராட்டியதால் உங்களை போல தான் திரு செல்வகுமார் அவர்களின் நிலையும் என்றே இது உணர்த்துகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவி பற்றிய கேள்வி திரு இந்திரா காந்தி அவர்களிடம் times magazine அன்று எழுப்பியது. அதன் தமிழாக்கம் இதோ.

கேள்வி. நீங்கள் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு திரு. சிவாஜி கணேசன் அவர்களை தேர்ந்தேடுதுள்ளதாக பேச்சு நிலவுகிறது. அப்படி அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் எதன் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்க படுகிறார் என்பதை உரைக்க முடியுமா ?

பதில் : தமிழக காங்கிரஸ் தலைமைக்கு நல்ல அனுபவமும் காங்கிரஸ் பற்றி நன்கு அறிந்தவர் மட்டுமே வரமுடியும். திரு சிவாஜி கணேசன் காங்கிரஸ் அஸ்திவாரம் தொட்டு இன்றுவரை நன்கு அறிந்தவர். மேலும், (இதை நான் ஆங்கிலத்திலேயே குறிப்பிடவிரும்புகிறேன் திரு கலைவேந்தன் )

if he is selected he deserved it . He has worked like dog for sustaining congress principles and ideologies across every street of tamilnadu than any other . Why not he head the tamilnadu congress , if we announce ?

மேற்கூறியது தான் பாரத பிரதமர் இந்திராவின் பதில் times பத்திரிகைக்கு அவர் கொடுத்தது.

திரைத்துறையில் 1953 முதல் மற்ற எந்த நடிகரை காட்டிலும் நடிகர் திலகம் பிஸியாக இருந்தவர் என்பது உலகறிந்த விஷயம். அது 1989 வரை பெருகிக்கொண்டு போனதே தவிர எள்ளளவும் குறையவில்லை.

தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தகுதிவாய்ந்த ஒருவர் தேவை என்பதை உணர்ந்த திருமதி இந்திரா காந்தி, தேர்ந்தெடுத்த முதல் நபர், இன்னும் சொல்லப்போனால் ஒரே நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது காங்கிரஸ் பற்றி நன்கு அறிந்த அனைவரும் ஒத்துகொள்ளும் விஷயம்.

தன்னுடைய திரை அலுவல் அதிக அளவில் இருந்ததால் திரு மூப்பனார் அவர்களை திருமதி இந்திராகாந்தி அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்து அவரை பற்றி நல்ல ஒரு recommendation கொடுத்து தமிழ காங்கிரஸ் தலைமைக்கு இவர் ஏற்றவர் என்று அந்த பதவியை மூபனாருக்கு கிடைக்க செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் திரு கலைவேந்தன் அவர்களே...!

இதை நீங்கள் உங்களை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு verify செய்து கொள்ளலாம்..! நீங்கள் மட்டுமல்ல திரு செல்வகுமார் கூட இதை செய்யலாம். !

Regards

rks