-
11th November 2014, 09:23 AM
#2981
Junior Member
Diamond Hubber
பழைய கதை இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு பொருந்துகிறது கலைவேந்தன் சார்
இதிகாசத்தில் விஷ்ணுவின் திருவடி அடைய ஏழு ஜென்மங்கள் எவன் ஒருவன் விஷ்ணுவின் புகழை துதி பாடுகிறானோ அவனே விஷ்ணுவின் திருவடி அடையாளம் என்ற நிலை இருந்தது அப்பொழுது பக்தர்கள் ஏழு ஜென்மங்கள் எங்களால் காத்திருக்க முடியாது சீக்கிரமே உங்கள் திருவடி அடையவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு விஷ்ணு என்னையும் என் பக்தர்களையும் உங்களால் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்தால் என்னை நீங்கள் மூன்றே ஜென்மத்தில் என்னுடைய திருவடி அடையலாம் என்றார் விஷ்ணு உடனே அவருடைய பக்தன் கம்சன் , இரணியன் ,இராவணன் என மூன்று ஜென்மம் எடுத்து மிகப்பெரிய இன்னல்களை விஷ்ணுவின் பக்தர்களுக்கும் , விஷ்ணுவை கண்டபடி பேசியும் மூன்றே ஜென்மங்களில் விஷ்ணுவின் திருவடி அடைந்தான்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th November 2014 09:23 AM
# ADS
Circuit advertisement
-
11th November 2014, 09:28 AM
#2982
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகம் தனது மாம்பலம் அலுவலகத்தில் :
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th November 2014, 09:57 AM
#2983
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
மாற்றுத்திரியில் தங்கள் அபிமான நடிகரின் புகழ் பரப்பும் செய்திகளை விட, நம் மக்கள் திலகத்தைப் பற்றிய அவதூறு செய்திகளையும், பொய்யான தகவல்களையும் பதிவிட்டு அற்ப சந்தோஷமடையும் சில அன்பர்களுக்கு தகுந்த பாடலை, தக்க சமயத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி, சகோதரரர் சைலேஷ் பாசு அவர்களே !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th November 2014, 10:14 AM
#2984
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
பழைய கதை இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு பொருந்துகிறது கலைவேந்தன் சார்
இதிகாசத்தில் விஷ்ணுவின் திருவடி அடைய ஏழு ஜென்மங்கள் எவன் ஒருவன் விஷ்ணுவின் புகழை துதி பாடுகிறானோ அவனே விஷ்ணுவின் திருவடி அடையாளம் என்ற நிலை இருந்தது அப்பொழுது பக்தர்கள் ஏழு ஜென்மங்கள் எங்களால் காத்திருக்க முடியாது சீக்கிரமே உங்கள் திருவடி அடையவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு விஷ்ணு என்னையும் என் பக்தர்களையும் உங்களால் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்தால் என்னை நீங்கள் மூன்றே ஜென்மத்தில் என்னுடைய திருவடி அடையலாம் என்றார் விஷ்ணு உடனே அவருடைய பக்தன் கம்சன் , இரணியன் ,இராவணன் என மூன்று ஜென்மம் எடுத்து மிகப்பெரிய இன்னல்களை விஷ்ணுவின் பக்தர்களுக்கும் , விஷ்ணுவை கண்டபடி பேசியும் மூன்றே ஜென்மங்களில் விஷ்ணுவின் திருவடி அடைந்தான்
நம் புரட்சித்தலைவரை விஷ்ணுவாக பாவித்தும், கம்சன், இரணியன் மற்றும் இராவணன் ஆகியோரை குறிப்பிட்டு உதாரணமாக எழுதி இருந்தாலும், புராணக் கதையில் மகாவிஷ்ணு தன் பக்தர்களுக்கு எந்த அளவுக்கு துன்புறுத்த முடியுமோ அந்த அளவுக்கு துன்புறுத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டுவது சற்று நெருடலாக இருக்கிறது.
இத்தருணத்தில், பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1972 கால கட்டத்தில், நம் புரட்சித்தலைவரை கட்சியை விட்டு நீக்கி, பின்பு அவருடன் சமாதானம் பேச அன்றைய ஆளும் கட்சியினர் முற்பட்டிருந்த வேளையில், தனது கட்சி தொண்டர்களும், அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற தலைவர் மறைதிரு. முசிறிப்புத்தன் அவர்களும் தாக்கப்பட்டனர். இதனை அறிந்த, பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் எந்த சமரச பேச்சுக்கும் இனி இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
அதுதான் புரட்சித்தலவைரின் மாண்பு ! கலியுகத்தில் மக்களை காப்பாற்ற வந்த மகான் என்பதால்தான், அவர் " கலியுக கடவுள் " என்று அவர் அழைக்கப்படுகிறார்.
Last edited by makkal thilagam mgr; 11th November 2014 at 10:23 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th November 2014, 12:00 PM
#2985
Junior Member
Veteran Hubber
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல் காட்சியமைப்பு இப்படி இருக்கலாமா?
ஆமாம்... தலைவரைப் பார்த்து முதுமை, ஆபாசமாக நடித்தார் என்றெல்லாம் கூறுகிறீர்களே? எனக்கு ஒரு படமும் அதில் நடித்த நடிகரின் பெயரும் மறந்து போய் விட்டது. உங்களைக் கேட்டால் தெரியும் என்பதற்காக கேட்கிறேன்.
‘தொந்தி சரிய.. மயிரே வெளிர ...’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதைப் போல, ஒரு நடிகர் ஒரு நடிகையை தனது மூக்கு நசுங்க உடல் முழுவதும் முகம் புதைத்து புரட்டி எடுத்திருப்பார். அந்த பாடல் கூட ‘நாலு பக்கம் வேடருண்டு, நடுவினிலே மானிரண்டு.. காதல்..அம்மம்மா...’ என்று வரும். அந்த படம் மற்றும் நடிகரின் பெயர் என்ன?
by Kalaivendhan
தமிழ் திரைப்படங்களில் காதல் காட்சியமைப்புக்கள் வரையறை மீறும்போது நடிப்பது திரையுலக மூவேந்தர்களே என்றாலும் மனம் கசப்படைவது தவிர்க்க இயலாது
குடும்பத்துடன் அமர்ந்து நாம் திரைப்படங்களை ரசிக்கும்போது வியாபாரநோக்கில் காமம்கலந்த கவர்ச்சிப்பூச்சில் வெளிவந்த இந்தவகை 'காதல்' நோதலே!
மென்மையான இதமான இனிமையான காதல் காட்சியமைப்புக்களில் காதல் மன்னராக முடிசூட்டப்பட்ட ஜெமினிகணேசனும்கூட காலம்கடந்த வேளையில் குறத்திமகன் திரைப்படத்தில் ஒரு சிறிய திருஷ்டிப்பொட்டு வைத்தவர்தான்!
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
இப்படி இருக்கலாமா?
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
இப்படி இருக்கலாமா?
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
இப்படி இருக்கலாமா?
Better not to continue such bitter matters as it may shatter the cult images of our icons, augmenting only hatred among us!
Last edited by sivajisenthil; 11th November 2014 at 01:47 PM.
-
11th November 2014, 12:23 PM
#2986
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆருக்கும் ,சிவகுமாருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு...
இருவருமே பிஞ்சுப் பருவ பிள்ளை வயதிலேயே , தந்தையை இழந்தவர்கள்....
எம் ஜி ஆருடன் தன் முதல் சந்திப்பு பற்றி சிவகுமார்....
முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார்.
அப்படிப்பட்ட ஆள் வந்து துப்பாக்கியால் சுடப்பட்டு , பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது , நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர். எம்.வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார்.
எம்.ஜி.ஆர்.அருகில் சென்று அண்ணே ..சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல.. அப்படீன்னு சொன்னேன்.
ஊருக்கு போயிருந்தியா? ...அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார்.
அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார்.
அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.
# சிவகுமார் சொன்ன இந்த செய்தியைப் படித்ததும் எனக்கு ஏனோ இப்படி தோன்றியது...
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!!!"
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th November 2014, 12:33 PM
#2987
Junior Member
Veteran Hubber
மற்றவர்கள் ஒத்துக்கொண்டால்தான் நம் மக்கள் திலகம் மகான் ஆவார் என்றில்லை. அவர் வாழ்வாங்கு வாழ்ந்து வையத்தில் தெய்வமாகிவிட்டார்.
திரையில் தன்னிகரில்லா நடிகராகி, அரசியலில் எவரும் அடைய முடியா புகழடைந்து, அனைத்திற்கும் மேலாய் மனித நேயத்தால் மனிதப் புனிதராகி, தமிழ் மக்களின் உள்ளங்களில் எல்லாம் மங்காத தீபமாய் ஒளிவீசிக்கொண்டிருக்கிறார். அவர் புகழை பொறுக்கமுடியாத ஒரு சிலரின் வெற்றுக்கூச்சல் இது என்பது நமக்கல்ல...இந்த திரியைக் கண்ணுறும் அனைவருக்கும் வெளிச்சமாய் தெரியும்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒளிவிளக்கை, எவருடனும் ஒப்பிட்டு, அவர் தனித்தன்மை அறியாதவர்களிடம் வாதிட்டு அதை இந்த திரியில் பதிவிட்டு, அதனால், ஆக்க பூர்வமான பதிவுகளுக்கு தேவைப்படும் நேரத்தை குறைத்துக்கொள்வதில் யாருக்கு என்ன லாபம். அவர்களுக்கு நீங்கள் என்னதான் அறிவுறுத்தினாலும், ஆதாரங்கள் காட்டினாலும், திரும்பவும் அவர்கள் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடுகிறார்கள். இதையெல்லாம் பல காலம் பார்த்தாகிவிட்டது. எனவே தாங்கள் பதிவிடும் மிகச் சிறந்த பதிவுகள் விழலுக்கு இறைத்த நீராகின்றன. நம் திரியின் மாண்பு குறையாமல் இருக்க வேண்டுமானால், மாற்று திரியில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு இங்கே பதில் சொல்லி நம் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.
நம் தலைவரின் புகழ் பொங்குதமிழ் போல பெருகிக்கொண்டே இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் காட்டாற்று வெள்ளம்போல் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றை நாம் ஆராய்ந்தாலே நமக்கு ஆயுள் போதாது. அப்படியிருக்க எதற்கு இந்த வீண் வாதங்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th November 2014, 01:03 PM
#2988
Junior Member
Platinum Hubber
அட்வகேட் அமரன் நாடகத்தில் ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெறும். தாயார் வேடத்தில் நடிக்கும் பி.ஸ்.சீதாலக்ஷ்மிக்கு எம்.ஜி.ஆர்தான் தன் உண்மையான மகன் என்று தெரிய வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்க அவரை கட்டிப்பிடித்து அழுவார். இவருடைய அழுகைக்கு ஈடு கொடுத்து எம்.ஜி.ஆரும் அதைவிட உணர்ச்சியைக் கொட்டி அழுவார். மேடையில் ஜுகல் பந்தி நடப்பது போலிருக்கும். நடந்துக் கொண்டிருப்பது நாடகம் என்பதையும் மறந்து ரசிகர்களும் விசும்பலுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள்.
எல்லோரையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பவரல்லவா நீங்கள் என்று மறைமுகமாக சீதாலக்ஷ்மியின் நடிப்புத்திறனைப் பாராட்டுவார் பழம்பெரும் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்.
எம்.ஜி.ஆருக்கு அழவேத் தெரியாது என்று பொதுவாகவே ஓர் அபிப்பிராயம் நிலவுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல.
நிருபரொருவர் எம்.ஜி.ஆரிடம் நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உங்கள் அனுபவத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்? என்று கேட்டபோது எனக்கு அழுவதென்றால் மிகவும் இஷ்டம். நாடகத்தில் கிளிசரீன் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். சினிமாவிலும் கிளிசரீன் உபயோகப்படுத்தவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஒரு சில படங்களில் நான் அழுது படப்பிடிப்பு செய்த காட்சிகளில் திரையில் அழுவது போலவே தெரியாது. அதிகப்படியான விளக்கின் சூட்டில் கன்னத்தில் விழுமுன்னரே கண்ணீர் உலர்ந்து விடும். அதற்குப் பிறகுதான் நான் கிளிசரீன் போடவே ஆரம்பித்தேன் என்று பேட்டி கொடுத்தார்.
courtesy - net
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th November 2014, 02:00 PM
#2989
Junior Member
Diamond Hubber

Originally Posted by
yukesh babu
பழைய கதை இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு பொருந்துகிறது கலைவேந்தன் சார்
இதிகாசத்தில் விஷ்ணுவின் திருவடி அடைய ஏழு ஜென்மங்கள் எவன் ஒருவன் விஷ்ணுவின் புகழை துதி பாடுகிறானோ அவனே விஷ்ணுவின் திருவடி அடையாளம் என்ற நிலை இருந்தது அப்பொழுது பக்தர்கள் ஏழு ஜென்மங்கள் எங்களால் காத்திருக்க முடியாது சீக்கிரமே உங்கள் திருவடி அடையவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு விஷ்ணு என்னையும் என் பக்தர்களையும் உங்களால் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்தால் என்னை நீங்கள் மூன்றே ஜென்மத்தில் என்னுடைய திருவடி அடையலாம் என்றார் விஷ்ணு உடனே அவருடைய பக்தன் கம்சன் , இரணியன் ,இராவணன் என மூன்று ஜென்மம் எடுத்து மிகப்பெரிய இன்னல்களை விஷ்ணுவின் பக்தர்களுக்கும் , விஷ்ணுவை கண்டபடி பேசியும் மூன்றே ஜென்மங்களில் விஷ்ணுவின் திருவடி அடைந்தான்
V.V.correct historical fact [for persons who have belief in religion].
In my personal opinion who is responsible is one chief [intentionally misspelt] personality. We should always see the core issue every other problems will disappear on its own.
I leave it to your assumption!
Last edited by saileshbasu; 11th November 2014 at 02:55 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th November 2014, 04:40 PM
#2990
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
realy super sir
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks