-
11th November 2014, 12:23 PM
#11
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆருக்கும் ,சிவகுமாருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு...
இருவருமே பிஞ்சுப் பருவ பிள்ளை வயதிலேயே , தந்தையை இழந்தவர்கள்....
எம் ஜி ஆருடன் தன் முதல் சந்திப்பு பற்றி சிவகுமார்....
“முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார்.”
“அப்படிப்பட்ட ஆள் வந்து துப்பாக்கியால் சுடப்பட்டு , பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது , நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர். எம்.வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார்.
எம்.ஜி.ஆர்.அருகில் சென்று “அண்ணே ..சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல..” அப்படீன்னு சொன்னேன்.
“ஊருக்கு போயிருந்தியா? ...அம்மா செளக்கியமா..?” அப்படின்னு விசாரித்தார்.
அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார்.
அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.”
# சிவகுமார் சொன்ன இந்த செய்தியைப் படித்ததும் எனக்கு ஏனோ இப்படி தோன்றியது...
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!!!"
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th November 2014 12:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks