-
12th November 2014, 01:59 PM
#1121
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
நேற்று இரவு ஓடி விளையாடு தாத்தா 'சின்ன நாக்கு ' பாடலை கேட்டேன். நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல். டி எம் எஸ் தான் என்னமா பாடி இருக்கிறார் . அதுவும் vkr நடிப்பில் 'அவன் கூட ஒருவகைக்கு அப்பன் தானம்மா உன் அப்பாவுக்கு தாலி கட்டிய அப்புறம் தானம்மா ' என்று பாடும் போது சம்திங் சுபெர்ப்
'உன் அம்மாவுக்கு தாலி கட்டினகப்புறம்தானம்மா'
-
12th November 2014 01:59 PM
# ADS
Circuit advertisement
-
12th November 2014, 02:07 PM
#1122
Senior Member
Senior Hubber
//அபூர்வமான பாடலைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! இந்த முயற்சி எனக்கும் ரொம்பப் பிடிக்கும். வாழ்த்துக்கள்.// நன்றி வாசு சார்.. யெஸ்
அந்த..குளிக்குது ரோஜா நாத்து - தான் ரிஸெம்பிள் பண்ணுகிறது..
//தாலாட்டு
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித் தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்'
நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே நீ குளிக்கலாம் வா // அச்சாணி பாடல்கள் மூன்றுமே கேட்டிருக்கிறேன்..அஸ் பெர் ராஜேஷ்.. எனக்கும் தாலாட்டுப் பிடிக்கும்
வாசு சார்..நல்ல எழுத்து.. மேலே வையுங்கள் ( குட் ரைட் அப் கீப் இட் அப் இன் தமிழ்!!)
-
12th November 2014, 02:12 PM
#1123
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
வாசு சார்..நல்ல எழுத்து.. மேலே வையுங்கள் ( குட் ரைட் அப் கீப் இட் அப் இன் தமிழ்!!)

யப்பா! முடியல சாமி.
-
12th November 2014, 02:13 PM
#1124
Senior Member
Diamond Hubber
சி.க சார்,
லஞ்ச் ஆச்சா? என்ன ஸ்பெஷல்? ஆச்சா? என்ன ஸ்பெஷல்?
-
12th November 2014, 02:28 PM
#1125
Senior Member
Senior Hubber
இனிமேல் தான் வாசு சார்
அடை + மிளகாய்ப்பொடி+ கீரை மோர்க்கூட்டு +வெள்ளரிக்காய் சாலட்..
அவிடத்துல..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th November 2014, 02:35 PM
#1126

Originally Posted by
vasudevan31355
அதை விட வேடிக்கை அசோகனையும் சுருளியையும் காட்டி உன் சித்தப்பனும், பெரியப்பனும் பக்கத்திலே என்று வி.கே.ஆர் போடுவாரே ஒரு போடு. தொடரில் விவரமாக எழுதியிருக்கேன் கிருஷ்ணா சார்.
'உன் அம்மாவுக்கு தாலி கட்டினகப்புறம்தானம்மா'
திருத்தத்திற்கு நன்றி வாசு சார்
உங்க பதிவை படித்து பார்த்து விட்டு தான் பாடலை கேட்டேன்.
எஸ் எ அசோகனின் 'வாழ்கையிலே பாதி போச்சு பட்டாளத்திலே மீதியும் போச்சு ஏமாததிலே ' ஒரு அழுகை அமர்க்களம்.
சுருளியின் அந்த கௌன் உடை 
அஞ்சல் பெட்டி 520 எடுத்த டி என் பாலுவின் படம் ஓடி விளையாடு தாத்தா இதை தொடர்ந்து சட்டம் என் கையில்,நல்லதுக்கு காலமில்லை,சங்கர்லால் போன்ற படங்களை எடுத்தார். கமல்,ஸ்ரீப்ரிய நடித்து 'மரியா மை டார்லிங்' என்று படம் வந்தது . ஸ்ரீகாந்த் கூட பிரெஞ்சு கட் குறுந்தாடி வைத்து ஒரு ஸ்டில் உண்டு . இந்த படம் யார் டைரக்டர் ?
சங்கர் கணேஷ் இசை 'மரியா மை டார்லிங் ' நல்ல பாட்டு
Last edited by gkrishna; 12th November 2014 at 02:40 PM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th November 2014, 02:53 PM
#1127
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார் ,
மரியா மை டார்லிங் படத்திற்கு இயக்கம் நம் 'பசி' துரை சார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th November 2014, 02:56 PM
#1128
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
இனிமேல் தான் வாசு சார்

அடை + மிளகாய்ப்பொடி+ கீரை மோர்க்கூட்டு +வெள்ளரிக்காய் சாலட்..

அவிடத்துல..
கத்தரிக்காய் முருங்கைக்காய் காரக் குழம்பு, பீன்ஸ் பொரியல், முட்டை ஆம்லெட், அஸ் யூஷுவல் ரசம், தயிர். அவ்வளவே சி.க.சார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th November 2014, 03:12 PM
#1129

கடந்த 7/11/2014 அன்று கமல் 60 வயதை எட்டியிருக்கிறார் .நேற்று இரவு 'கலக்க போவது கமல் ' என்ற நிகழ்ச்சி ஒன்று ஜெயா தொலை காட்சி ஒளி பரப்பியது. என் அலுவலக நண்பர் ஒருவர் உடன் பேசி கொண்டே அந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்தேன் . அவர் கூறிய ஒரு கருத்து.
கமல் 1960 களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகம் ஆனாலும் 76-77 களில் தான் கதாநாயகன் நிலைக்கு உயர்கிறார். கதாநாயகன் ஆனாலும் உடன் ரஜினி 79 வரை நிறைய படங்களில் கமல் படங்களில் உடன் தொடர்கிறார். 80 களில் இருந்து தனி ஹீரோ ஆகவே வலம் வருகிறார்.76-77 கால கட்டத்தில் தான் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, இளையராஜா,ருத்ரையா (காணாமல் போனவர்) போன்றவர்களும் தங்கள் கணக்கைத் தொடங்கினார்கள் .எல்லோரும் சொல்லும் தமிழ் வெகுஜன சினிமாவில் புதுமையின் பொற்காலம் ஆரம்பித்தது 76-77 களில். மேற்கண்ட பெயர்களில் மகேந்திரன் தவிர, அனைத்துக் கலைஞர்களின் ஆரம்ப கால முயற்சிகளில் கமலும் இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில், நல்ல திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற தாகத்துடன் வருபவர்கள் இயல்பாகவே கமலை நாடுவார்கள்.இதில் ஆச்சர்யம் என்ன என்றால் இயக்குனர் மகேந்திரன் எடுத்த ஒரு திரை படத்தில் கூட கமல் நடித்தது இல்லை .இருவருமே அறிவு ஜீவி என்று பெயர் எடுத்தவர்கள். மகேந்திரனின் இயக்கத்தில் கமல் நடிக்காததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ?
நல்ல கருத்தாகத்தான் தெரிகிறது
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th November 2014, 03:16 PM
#1130
Senior Member
Senior Hubber
வாவ்.. காரக்குழம்பு..ம்ம் கொஞ்சம் காரம் எனக்கு ஒத்துக்கொள்ளாது.. இங்கு சரவண பவனில் தருவார்கள்..கொஞ்சம் புளிப்பு தூக்கலாக இருக்கும்..நைஸ்..
**
பி.சுசீலாவின் பாடல் உங்களுக்கு வாசுசார்..
கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று சேய் நந்த பாலன் வந்தான்
நாளொரு ஆனந்த ராகம் தந்தான்..
கோபியர் தம்மை தொட்டு கொஞ்சிய கைகள் எந்தன்
கூந்தலை தொட வேண்டாம்
நான் கோடியில் ஒன்று அல்ல
கோவியன் பெண்மை என்னை கொஞ்சிட வர வேண்டாம்
கோவியன் பெண்மை என்னை கொஞ்சிட வர வேண்டாம்
இனி என் கோலமும் கெட வேண்டாம்
ராதையில் ஊடலுக்கும் கீதை படித்த கண்ணன்
கோதையை வசியம் செய்தான்
கோதையை வசியம் செய்தான்
அங்கு சோலை யமுனை வெள்ளம்
துள்ளி எழுந்து அவள் மேனியை தொடவும் செய்தான்
கண்ணன் மீண்டொரு கலகம் செய்தான்
**
கண்ணதாசன் பாட்டு எம்.எஸ்.வி. இசை..அழகிய பாடல்..
ம்ம் என்னதான் சொல்லுங்கள் ஊடலுக்கு அப்புறம் ஏற்படும் இன்பம் இருக்கிறதே அது நைஸ் தானே..(உங்க கிட்ட அமிர்தாஞ்சன் இருக்கா..கொஞ்சம் தலை வீக்கம் வலிக்குது.. நேத்தி வீட்ல சின்ன ஊடல்
)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks