-
13th November 2014, 08:20 AM
#1151
Senior Member
Seasoned Hubber
பிறந்த நாள் பரிசாக இதோ
இரண்டு வித்தியாசமான பாடல்கள்
ஒன்று .. ஹிந்தியில் அனூப் ஜலோட்டாவுடன் இசையரசி பாடிய அற்புத பாடல்
மொஹபத் கி பைகாம் திரையில் பப்பி லஹரியின் இசையில்
(தரவேற்றியவர் ஜானகி என்று தவறாக குறிப்பிட்டுள்ளார்)
அதே போல் சூலமங்கலம் என்று தவறாக குறிப்பிடப்பட்ட இசையரசி பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th November 2014 08:20 AM
# ADS
Circuit advertisement
-
13th November 2014, 08:25 AM
#1152
Senior Member
Diamond Hubber
இசையரசிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th November 2014, 09:04 AM
#1153
Senior Member
Diamond Hubber
இசையரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை

எண்பது அகவை காணும் எங்கள்
எழுச்சிப் பாடகியே
எவரும் எட்ட முடியாத
எவரெஸ்ட் பாடகியே
மனதுக்கு சுகம் தருவதால்
சுசீலா என்று பெயர் வைத்தனரோ
நவரசங்களைப் பிழிந்து நடிப்பில்
காட்டினான் எங்கள் நடிக வேந்தன்
நீ அதே ரசங்களை உன் குரலில் காட்டினாய்
வசியம் கலந்த வசீகரக் குரலாலே
வையம் கவர்ந்த இனிய குரலாளே
உன் நாவசைந்தால் நாதம் தானே ஒலிக்கும்
தேனடையிலிருந்து எடுத்து
பிரம்மா உன் நாவைப் படைத்தானோ
உன் குரல் ஒலித்தால்
பாறையிலும் பாசம் சுரக்குமே
கடவுளுக்கும் களங்கங்கள் உண்டே
உன் குரலில் என்றும் அது உண்டா
உலகில் முழுமை பெற்றதாய்
நான் கருதுவது இரண்டு
ஒன்று என் மன்னவனின் நடிப்பு
அடுத்து உன் கல்கண்டு குரல்
உன் பெயரை உச்சரித்தாலே
உடலில் ஒரு மரியாதை பிறக்குமே
என் பாட்டன் முதல் என் புதல்வன் வரை
ரசித்து மகிழும் ரசகுல்லா குரல் அமுதமே
உன் குரல் கேட்டால் ரத்த அழுத்தம் சரியாகுமே
உன் குரல் கேட்டால் இதயத் துடிப்பு சீராகுமே
உன் குரல் கேட்டால் நிதமாய் சுகமாய் நித்திரை வருமே
உன் குரல் கேட்டால் உடல் சிலிர்ப்பு ஏற்படுமே
நாவின் நரம்புகளெல்லாம் நாத வித்தை கற்றவளே
பயணங்கள் முழுவதும் எங்களுடன் குரலால் பயணிப்பவளே
மன்னனவன் வந்தானடி என்று
என் மன்னவனுக்கு நடையழகு கொடுத்தவளே
நீராடும் கண்கள் இங்கே என்று
நீங்காமல் என்றும் கலங்க வைப்பவளே
என்ன என்ன வார்த்தைகள் சொல்லி
உன்னை நான் பாராட்ட
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தவளே
இந்தப் இசைபூமிக்கு அவன் இட்ட
ப(பா)ட்டுச் சட்டை நீதானோ
அப்பழுக்கில்லாத பிறவியே
எங்கள் பிறவியே உன் குரல்
கேட்டுத்தானே உயிர் வாழ்கிறது
பண்பது கொண்டாடும் எண்பது
இசைக்கு எண்பதாவது வயது
உலகழிந்தாலும் அழியாதது
மன்னவன் நடிப்பு
உயிரிழந்தாலும் உணரக் கூடியது
உன் குரலின் இனிப்பு
வாழ்த்தத்தான் வயதில்லை எனக்கு
என் கலை மகளின் கால்கள்
தொட்டு பூஜிக்கிறேன்
இன்னும் 800 கண்டு எக்காலமும்
உன் அமுதக் குரலால்
இன்பம் தருக.
இறைவனை இறைஞ்சி வேண்டுவது
இது மட்டுமே
Last edited by vasudevan31355; 13th November 2014 at 09:08 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
13th November 2014, 09:10 AM
#1154
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி
தமிழ் உமது விரலில் விளையாடுகிறது. இசையரசிக்கு அற்புத பாட்டுமாலை தொடுத்துவிட்டீர்
-
13th November 2014, 09:20 AM
#1155
Senior Member
Diamond Hubber
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 1
இந்த ஒரு பாடல் போதும் என் வாழ்நாள் முழுதும் இனம் புரியா இன்ப, துன்பக் கலவரத்துடன் வாழ.
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த பின்னே நிம்மதி ஏது நிம்மதி ஏது
'நீராடும் கண்கள் இங்கே' முடிவில்...ஏ....... ஏ... இந்த அம்மா கொடுக்கும் அந்த வைப்ரேஷன்ஸ், அந்த அதிர்வு
அப்படியே நெஞ்சுக்குள் நுழைந்து நொறுக்குமே சுக்கு நூறாக நம் இதயத்தை. கண்களில் கண்ணீர் நயாக்ராவாகப் பெருகுமே.
Last edited by vasudevan31355; 13th November 2014 at 09:49 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
13th November 2014, 09:40 AM
#1156
Senior Member
Diamond Hubber
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 2
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
அடடா! இப்படியெல்லாம் பாடத்தான் முடியுமா? உலகில் உள்ள அத்தனை இனிப்புக்களும் ஒன்று சேர்ந்தாலும் இந்தப் பாடலுக்கு, இந்த இசைக்குயிலின் குரலுக்கு அவை ஈடு செய்யத்தான் முடியுமா?
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கனத்து கண்களில் என்னையுமறியாமல் தாரைதாரையாய் கண்களில் கண்ணீர் பெருகுகிறதே. ஏன் அப்படி? யாராவது விளக்க இயலுமா?
Last edited by vasudevan31355; 13th November 2014 at 09:49 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th November 2014, 09:48 AM
#1157
Senior Member
Diamond Hubber
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 3
பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ
இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கண்ணனின் மனமும் கல்மனமோ
எங்கள் மன்னனுக்கிதுதான் சம்மதமோ
கல்யாணம் ஆகாமல் தவிக்கும் கன்னியர்களின் மன நிலையை அப்படியே தன் குரல் பாவங்களால் பிரதிபலித்த குயிலின் சோக கீதம். ஆண்களுக்கே அழுகை அடக்க முடியாத போது பெண்களுக்கு?
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th November 2014, 09:53 AM
#1158
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி
வணக்கம்
நலம் தானே..
-
13th November 2014, 10:01 AM
#1159
Senior Member
Diamond Hubber
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 4
சோகம் மட்டுமா? என்ன வேண்டும் கேட்டுக்கோ. கேட்டதை உடனே வாங்கிக்கோ.
இதோ. இந்த அமைதிப் புறா ஆக்ரோஷப் புறாவாக அலம்பல் பண்ணுவதைப் பாருங்கள். சாது மிரண்டால்? பாடல் இப்படித்தான் வரும்.
பாவை பாவைதான்
ஆசை ஆசைதான்
பார்த்துப் பேசினால்
ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
யார் யாரிடம் கண்டதோ தந்ததோ
கசப்பும் இனிப்பும் மனத்தின் நினைப்பு
ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது
ஜொலிக்கும் விளக்கில் இருக்கும் நெருப்பு
பாதையும் காட்டலாம் தீயையும் மூட்டலாம்
அருமையான வரிகளுக்கு அளவிட்டுவிட முடியாத குரல்வளம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th November 2014, 10:04 AM
#1160
Senior Member
Diamond Hubber
நலமே ராஜேஷ்ஜி! தாங்களும் சுகம்தானே! இசையரசியின் பிறந்த நாளுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள் தங்களுக்கு. அம்மாவுக்கு வாழ்த்துக் கூறினீர்களா? என்னுடைய வாழ்த்துக்களையும் கூறவும். நம் திரி நண்பர்களின் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தவும்.
Bookmarks