Page 117 of 397 FirstFirst ... 1767107115116117118119127167217 ... LastLast
Results 1,161 to 1,170 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1161
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நலமே ராஜேஷ்ஜி! தாங்களும் சுகம்தானே! இசையரசியின் பிறந்த நாளுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள் தங்களுக்கு. அம்மாவுக்கு வாழ்த்துக் கூறினீர்களா? என்னுடைய வாழ்த்துக்களையும் கூறவும். நம் திரி நண்பர்களின் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தவும்.
    அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் கூறி ஆசியும் பெற்று விட்டேன்.. எல்லோரது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டேன்

  2. Thanks gkrishna thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1162
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    பாவை பாவை தான் ஒரு அசுரப்பாடல் ... மிகவும் பிரமாதம்

  5. #1163
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 5

    இதோ! இன்னொரு கானம். அசைத்துப் பார்க்க முடியாத ஆணித்தரமான குரல்வளத்தில். பெண்மையின் பெருமை பேசும் தேசிய கீதம். காதலின் மகத்துவத்தை உணர்த்தும் காயகல்பக் குரலில்.

    ஆயிரம் பெண்மை மலரட்டுமே
    ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
    ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
    சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

    ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி
    ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதி
    காதல் நாயகன் ஒரு பாதி
    காதலி தானும் மறு பாதி
    இருமனம் அங்கே ஒரு மனம் என்றே
    சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....

    மன்னவனே ஆனாலும் பொன்னளந்து கொடுத்தாலும்
    பெண் மனதை நீ அடைய முடியாது
    வாள் முனையில் கேட்டாலும்
    வெஞ்சிறையில் போட்டாலும்
    உடலன்றி உள்ளமுன்னைச் சேராது

    தவறு செய்யாதே
    அருகில் வராதே நில்.. நில்.. நில்...

    கட்டளை என்றால் அப்படி ஒரு கட்டளை. மன்னவனுக்கே. இடுவது இசையரசி.

    என்ன ஒரு வாதம்?! என்ன ஒரு அசையா தன்னம்பிக்கை?!

    குரலில் தெரியும் அந்த அவசிய ஆணவ கர்வம். என்னை அதிகாரத்தால் அடி பணிய வைத்துவிட முடியாது என்ற எகத்தாளம் பாடலின் கருத்துக்கு ஏற்ப. குரலுக்குக் கூடத்தான் இந்த சவால்.

    ஆயிரம் பாடகி பாடட்டுமே
    ஆயிரம் குரல்கள் கேட்கட்டுமே
    எங்கள் அனைவரின் நெஞ்சம்
    உன் குரலுக்கென்றே சொல் சொல் சொல்

    சரிதானே!

    Last edited by vasudevan31355; 13th November 2014 at 10:22 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks Russellmai thanked for this post
    Likes kalnayak, gkrishna liked this post
  7. #1164
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    p-susheela-day-today



    பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு ரசிகர்களை தனது தேன் குரலில் மயங்கச் செய்த பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆந்திராவில் இருந்து வந்து தமிழகத்தை தனது இசை மழையால் நனைத்த அவரின் பிறந்தநாள்

    1950ம் ஆண்டு சுசீலா சென்னை வானொலியில் நிலைய பாடகியாக சேர்ந்தார். பாப்பாமலர் என்ற நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த அவருக்கு பெற்றதாய் என்ற படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தவர் director கே.எஸ்.பிரகாஷ்ராவ். இசை அமைப்பாளர் நாகேஸ்வரரவ் 1953ம் ஆண்டு பெற்றதாய் படத்தில் எதற்கு அழைத்தாய் என்ற பாடலை அவர் ஏ.எம். ராஜாவுடன் சேர்ந்து பாடினார்.

    மாலையில் மல்லிகை.. அந்தியில் பஞ்சனை.. ஊரெல்லாம் பார்க்குதே... உன்னிடம் கேட்கிறேன்... என்று சரணத்தில் ஆரம்பிக்கும் சுசீலா ஒரு மந்திரம் போட்டது போல பாட்டிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். எஸ்.பி.பி யை பற்றியும் சொல்லவேண்டிய தேவை இல்லை. ஒரு காதல் பாடலுக்கு எங்கு குழைய வேண்டுமோ அங்கு குழைந்து சிணுங்கி எல்லாம் செய்வார் எஸ்.பி.பி. இப்பாடலிலும்...

    Last edited by gkrishna; 13th November 2014 at 10:30 AM.
    gkrishna

  8. Likes kalnayak, Russellmai liked this post
  9. #1165
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இது தான் என் நிறைய நண்பர்கள் மொபைலோட காலர் டுயூன். இந்த பாட்டை கேட்பதற்காகவே நிறைய போன் வரும் அப்படின்னு சொல்வாங்க ஏன் கேட்டா பாட்டு நல்லா இருக்காம். பாட்டோட ஆரம்பித்தில பேசக்கூடாதுன்னு எஸ்.பி.பி ஆரம்பிச்சதும் படத்தில் சிலுக்கு ரஜினியை விட்டு சினுங்கிகிட்டே மான் போல துள்ளி ஓடுவாங்க. அப்பப்பா... இதிலும் எஸ்.பி.பி யின் ரகளை அதிகம். அந்த ரகளையை ஓரம் கட்டும் அருமையான பி. சுசீலாவின் காதல் ததும்பும் குரல்

    gkrishna

  10. Likes kalnayak, Russellmai, chinnakkannan liked this post
  11. #1166
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    காத்தோடு பூ உரச... பூவ வண்டுரச...அன்புக்கு நான் அடிமை

    இது ராஜாவின் மணிமகுட பாட்டு. பல்லவி ஆரம்பிக்கும் முன் ஒரு காற்றில் இலை பறந்து கீழே எப்படி விழுமோ அதுபோல ஒரு வேணுகானம் கிளம்பும் பாருங்கள். கொஞ்சம் கேளுங்களேன். அதற்க்கப்புறம் சுசீலாம்மா ஆரம்பிப்பாங்க. தூள். "உன்னோடு நான்.. என்னோடு நீ.. பூவா காத்தா உரச..." டாப்.

    gkrishna

  12. Likes kalnayak, Russellmai, chinnakkannan liked this post
  13. #1167
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி வருக

    கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்குனர். பெற்றதாய்க்கு இசை பெண்டியாலா நாகேஸ்வரரவ்

  14. #1168
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு ஜி ,ராஜேஷ் ஜி

    காலை வணக்கம் . சுசீலா அம்மாவின் 80வது பிறந்த நாள் இனிய வாழ்த்துகள் .
    gkrishna

  15. #1169
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    இது தான் என் நிறைய நண்பர்கள் மொபைலோட காலர் டுயூன். இந்த பாட்டை கேட்பதற்காகவே நிறைய போன் வரும் அப்படின்னு சொல்வாங்க ஏன் கேட்டா பாட்டு நல்லா இருக்காம். பாட்டோட ஆரம்பித்தில பேசக்கூடாதுன்னு எஸ்.பி.பி ஆரம்பிச்சதும் படத்தில் சிலுக்கு ரஜினியை விட்டு சினுங்கிகிட்டே மான் போல துள்ளி ஓடுவாங்க. அப்பப்பா... இதிலும் எஸ்.பி.பி யின் ரகளை அதிகம். அந்த ரகளையை ஓரம் கட்டும் அருமையான பி. சுசீலாவின் காதல் ததும்பும் குரல்

    இன்று காரில் இந்த பாடலை கேட்ட என் மனைவி ஓ இது பி.எஸ்ஸா .. என்று கேட்க நாம் ஆமாம் என்று கூற
    அதான் ஹை பிட்ச்சில் கூட தெளிவா கேட்குது கீச்சுன்னு இல்லை என்று சொன்னாள் .. அப்படி ஒரு குரல்.

  16. Likes gkrishna liked this post
  17. #1170
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks raajesh sir

    corrected

    Rgds

    Gk
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •