-
19th November 2014, 01:39 PM
#1401
Senior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302
கிருஷ்ணாஜி - "காரணம் கேட்டு வாடி " - சுதா ரகுநாதன் சமீபத்தில் ஒரு மேடையில் பாடியது - பாடல் பாகவதர் நடித்த "சிவகவியில் " வந்ததாக ஒரு நினைவு - நீங்கள் கேட்டதுண்டா? - ராகம் பூர்வ கல்யாணி என்று நினைக்கிறன் - இந்த பாடலை பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா ? - நன்றி பல
வச்சாருப்பா எங்க ரவி வேலை. கிருஷ்ணா குட்டி. மாட்டிகினியா கண்ணு. நான் எஸ்கேப்.
-
19th November 2014 01:39 PM
# ADS
Circuit advertisement
-
19th November 2014, 01:41 PM
#1402
Senior Member
Diamond Hubber
-
19th November 2014, 01:44 PM
#1403
Senior Member
Diamond Hubber
ரவி சார்!
கனவுப் பாடல்கள் பற்றிய தங்கள் கருத்து நச். நன்றாக எழுதுகிறீர்கள். எனக்குப் பிடித்த கனவுப் பாடல் பாதுகாப்பு படத்தில்
'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்'.
தலைவர் வித விதமான உடைகளில் பின்னுவார்.
-
19th November 2014, 01:44 PM
#1404
Junior Member
Seasoned Hubber
வாசு - இந்த பாடலை பதிவிட முடியுமா - "ராஜாத்தி பெற்று எடுப்பாள் ஒரு ராஜா குமாரன் "-----
நெஞ்சை சற்றே நெருடும் பாடல் - P .சுஷீலா அம்மாவின் குரலில் இழைந்தோடும் பாடல் - தனக்கு ராஜகுமாரன் போன்று ஒரு மகன் பிறப்பான் என்று ஒரு அன்னை தொடர்ந்து பல பெண் பிள்ளைகளை பெற்று எடுத்தபின் தனது மன ஏக்கத்தை பாடலாக வெளிபடுத்துவார் - KR Vijaya , GG நடித்த படம் - பாடல்களை போல படம் அதிகமாக பேச படவில்லை .
நன்றி பல
-
19th November 2014, 01:52 PM
#1405
Senior Member
Diamond Hubber
'மாணிக்கத் தொட்டில்' படத்திலிருந்து பி.சுசீலா பாடிய பாடல்.
விரும்பிக் கேட்ட நேயர்கள் ஹைதராபாத் ரவி, வாசுதேவன், கிருஷ்ணா, சின்னக் கண்ணன் மற்றும் பலர்.
இந்தியா, இலங்கை, வியட்நாம் முதலிய நாடுகளில் புகழ் பெற்றது 'கோபால்' பல்பொடி
முத்துப் போல் பற்களை பிரகாசிக்க வைப்பது 'கோபால்' பல்பொடி
கேட்டு வாங்குங்கள் 'கோபால்' பல்பொடி
டிங் டாங் டாங்
செம பாட்டு. நல்ல டேஸ்ட்டு.
Last edited by vasudevan31355; 19th November 2014 at 01:58 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th November 2014, 02:22 PM
#1406
Junior Member
Seasoned Hubber
கேட்டதும் கொடுப்பவனே வாசு வாசு - கீதா வின் ( சாரி கீதை யின் ) நாயகனே வாசு வாசு -------
சாற்றிய பதிவுகளிலே , வாசு வாசு - நல்ல பதிவுகளை தேடுகின்றோம்:
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th November 2014, 02:24 PM
#1407
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th November 2014, 02:28 PM
#1408

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா!
அபூர்வ ஸ்டில். இது உங்களுக்காக மட்டும். நீங்க ரொம்ப சந்தோஷப் படுவீங்க.
'சாது மிரண்டால்' படத்துல நம்ம சின்னப் பையன் எஸ்.என் .சுரேந்தர் பேரும், அவுங்க அண்ணன் சுந்தர் பேரும் இருக்கிறத ஆனந்தமாப் பாருங்க.

still இல் இருக்கும் அந்த லலிதா சுந்தர் மற்றும் சுரேந்தர் களின் அம்மா தானே வாசு
-
19th November 2014, 02:30 PM
#1409
Junior Member
Seasoned Hubber
வாசு - இந்த பாடலில் வரும் இரண்டு வரிகள் , இந்த பாடலை மிகவும் புகழடைய வைத்தது
" எல்லோருக்கும் கல்வி தந்தான் சிவகாமியின் செல்வனடி - என்னவனும் அவன் போலே வளர்ந்து வரும் தலைவனடி "
-
19th November 2014, 02:34 PM
#1410
Junior Member
Seasoned Hubber
தங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி திரு. வாசு சார்.
இந்த திரியில் எல்லாருமே எழுத்தாற்றல் மிக்கவர்கள். கடலூர் எம்.பி. வீட்டில் மரியாதைக்குரிய திரு.சிவாஜி கணேசன் அவர்கள் எம்.பி.யை கலாட்டா செய்து கொண்டே சாப்பிட்டாரே. அவர் வெளியில் வந்தபோது நீங்கள் கூட மாலைக்கு பதிலாக துண்டு அணிவித்தீர்களே. அன்று நானும் ஒரு மூலையில் நின்று கொண்டு அந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அதிர்ச்சி அடையாதீர்கள். அந்த காட்சிகளை நான் பார்த்தது உங்கள் எழுத்துக்கள் மூலமாக. அந்த அளவுக்கு நிகழ்ச்சிகளை விஷுவலைஸ் செய்யும் ஆற்றல் உங்கள் எழுத்துக்கு உள்ளது.
தலைவரின்.... ம்...ம் நானும் தலைவர் என்று கூறி, நீங்களும் தலைவர் என்றால் குழப்பம் வருமே. சரி. தெளிவாக சொல்கிறேன். புரட்சித் தலைவரின் தேடிவந்த மாப்பிள்ளை படத்தில் தொட்டுக் காட்டவா பாடலுக்கு தங்கள் விமர்சனம் அருமை.
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே,
அறிந்ததுதான் என்றாலும் எத்துணை அழகம்மா?
என அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப அந்தப் பாடலும் காட்சியும் எல்லாரும் அறிந்ததுதான் என்றாலும் நீங்கள் விவரித்த விதம், கவித... கவித... அதை மக்கள் திலகம் திரியில் பதிவிட்டிருந்தால் எங்கள் சகோதரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். தங்கள் அன்பான அழைப்புக்கு மீண்டும் நன்றி.
மதிப்புக்குரிய பண்பாளர் திரு. ராகவேந்திரா சார் அவர்களின் எழுத்தில் அனுபவ தெளிவும் ஆழ்ந்த பொருளும் இருக்கும். சமீபத்தில் அவர் எழுதிய ‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு’ கட்டுரையை படித்து, ரசித்து, பொருள் உணர்ந்து சிரித்துக் கொண்டேன்.
கண்ணியத்தின் காவலர் அன்புமிக்க திரு. ஜி.கிருஷ்ணா சார் அவர்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. அவள் அப்படித்தான் படத்தை பார்த்து விட்டு ‘பேஸ்து அடித்து வந்தேன்’ என்று அவர் கூறியிருப்பது.... மூன்றே வார்த்தைகளில் வந்த ஒரு படத்தின் விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
திரு.ஜி.கிருஷ்ணா சாரிடம் சந்தேகம் கேட்க இங்கு வந்தேன். திரு. ரவி அவர்கள் உட்பட தங்கள் அனைவரின் அன்பான ஆதரவுக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி. இதுபோன்ற ஆற்றலாளர்கள் உள்ள களத்தில் நானும் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியே. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக இங்கு வந்து அந்த மகிழ்ச்சியைப் பெறுவேன். மீண்டும் நன்றி.
ஆங்... முக்கியமான விஷயம். நண்பர் கோபாலை பற்றியும் அவரது எழுத்தாற்றல் பற்றியும் நான் ஒன்றும் சொல்லவில்லையே என்று யாரும் கருத வேண்டாம். அவரது எழுத்தாற்றல் அனைவரும் அறிந்ததே. ‘‘இவர்தான் கலைஞர் திரு.மு.கருணாநிதி’’ என்று நீதிபதி சர்க்காரியாவிடம் அறிமுகம் செய்து வைப்பது போன்ற அசட்டுத்தனத்தை செய்ய நான் தயாரில்லை. அவரது எழுத்தாற்றலையும் தாண்டி அவரிடம் என்னைக் கவர்ந்த அம்சம்.... செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத அவரது குழந்தை உள்ளம்.
சரி கோபால்... இனிமேல் ஜெய்சங்கர் பாட்டு போடுகிறேன். பட்டணத்தில் பூதம் படத்தில் ‘எதிர்பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தாள் என்று நினைத்தாயோ?’ இசையரசியின் குரலில் அருமையான மெலடி. ஜெய்சங்கருக்கு மயக்க மருந்து கொடுத்து கே.ஆர்.விஜயா தூங்க வைப்பது போன்று காட்சியமைப்பு. அதற்கேற்ப பாடலும் தாலாட்டாக இருக்கும். நண்பர்கள் தரவேற்றினால் நன்று. திருப்தியா கோபால்? போயிட்டு...... வருவேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks