-
24th November 2014, 07:02 PM
#3021
நமது NT FAnS அமைப்பின் சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற நவராத்திரி திரையிடலுக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வருகை புரிந்தார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் வருகை புரிந்தனர். காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் மறைந்த திரு W R சுப்பாராவ் அவர்களின் புதல்வர்களும் புதல்வியரும் வருகை தந்து சிறப்பு செய்தனர்.
வந்தவர்களில் மூத்தவர் திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி. அவர்தான் அன்று பேசினார். எவரும் எதிர்பார்க்காத வகையில் மிக மிக அழகாக, தெளிவாக அவர் பேசியது அனைவர் கருத்தையும் கவர்ந்தது,
இந்தப் படம் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு மாணவியாக இருந்தது பற்றி குறிப்பிட்ட அவர் படப்பிடிப்பு காண சென்றதை விவரித்தார். அவரின் தந்தையார் சாதாரணமாக படப்பிடிப்புத் தளங்களுக்கு அழைத்து செல்ல மாட்டார் என்றும் அன்றைய தினம் அபூர்வமாகவே தன்னையும் தன மூத்த சகோதரியையும் அழைத்து சென்றதை பற்றி குறிப்பிட்ட அவர் தன தந்தையார் தங்கள் இருவரையும் நடிகர் திலகத்திடம் அறிமுகப்படுத்தி வைத்ததையும் தன் மூத்த சகோதரியை நடிகர் திலகம் கிண்டல் செய்ததையும் பிறகு அவரே மிகுந்த அன்புடன் பேசியதையும் நினைவு கூர்ந்த திருமதி ரேவதி அன்றைய தினம்தான் நடிகர் திலகம் Dr கருணாகரன் வேடத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன என்ற தகவலையும் சொன்னவர் அதன் பிறகு மற்றொரு விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
தங்களோடு வெகு ஜாலியாக பேசிவிட்டு சென்றவர் கேமரா ஓட ஆரம்பித்தவுடன் அப்படியே மாறிப் போனதை ஒரு மாஜிக் போல உணர்ந்தோம் என்றார். குரலில் நடையில் உடல் மொழியில் அவர் கொண்டு வந்த மாற்றம் அப்படியே கண் முன்னரே நிகழ்ந்ததை இன்று விவரிக்கும்போதும் அன்று இருந்த அதே மாஜிக் இப்போதும் மனதை விட்டு நீங்கவில்லை என்றார்.
படம் வெளிவந்தவுடன் தன் கூட படித்தவர்கள் இறுதிக் காட்சியில் எப்படி ஒரு ஷாட்டில் 4 சிவாஜியையும் அடுத்த ஷாட்டில் 3 சிவாஜியையும் உங்கள் அப்பா காட்டினார் என்று கேட்க கேட்டுச் சொல்கிறேன் என்று வீட்டில் வந்து தந்தையிடம் கேட்டதையும் அவர் மாஸ்க் ஷாட் மூலமாக என்று விளக்கியது அன்றைய வயதில் டெக்னிகலாக புரியாவிட்டாலும் கூட மறுநாள் பள்ளி தோழியரிடம் அது மாஸ்க் ஷாட்டில் எடுத்தார்களாம் என்று பெருமையாக சொல்லிக் கொண்டதை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார் திருமதி ரேவதி.
இந்தப் படம் வெளிவந்த பிறகு ஒரு பத்திரிக்கை நிருபர் தன் தந்தையாரை பேட்டி எடுக்க வந்தபோது இந்த மாஸ்க் ஷாட்டை குறிப்பிட்டு நன்றாக செய்திருப்பதாக பாராட்ட அதற்கு தன் தந்தையார் அந்த மாஸ்க் ஷாட் இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு நடிகர் திலகம்தான் காரணம் என்றாராம். போலீஸ் ஆபீசர் ரோலில் இருக்கும் சிவாஜியை பார்த்து நாடக நடிகன் சிங்காரம் வணக்கம் சொல்ல அதை முதல் முறை கவனிக்காமல் இரண்டாம் முறை மீண்டும் சிங்காரம் கை கூப்பும்போது கவனித்து தலையை மட்டும் லேசாக அசைத்து அதை acknowledge செய்யும் போலீஸ் ஆபீசர் அந்த டைமிங்கை பாருங்கள். அதுதான் சிவாஜியின் திறமை என்று தன் தந்தை சொன்னதை திருமதி ரேவதி நினைவு கூர்ந்தபோது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.
தமிழ் சினிமாவில் சில முக்கிய மைல்கல்கள் என்று சொல்லபப்டுகின்ற முதல் கேவா கலர் படம் [அலிபாபா] முதல் டெக்னிக் கலர் படம் கட்டபொம்மன் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் ஆகிய அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் பாக்கியம் பெற்றவர் தங்கள் தந்தையார் என்று சொல்லி மகிழ்ந்த திருமதி ரேவதி இந்த நேரத்தில் தன் தந்தைக்கு ஒளிப்பதிவு தொழிலில் உதவியாளராக இருந்து பணியாற்றிய கர்ணன் அவர்களையும் நினைவு கூர்ந்தார்.
தங்கள் தந்தையார் தங்களை படப்பிடிப்புதளத்திற்கு அழைத்து செல்ல மாட்டார் என்பதனால் படத்தின் இயக்குனர் அருட்செல்வர் ஏ பி நாகராஜன் அவர்களிடம் அனுமதி பெற்று ஷூட்டிங் பார்த்ததையும் நன்றியோடு நினவு கூர்ந்தார்.
படத்தின் ஒளிப்பதிவாளரின் மகள், மகன் என்ற முறையில் படம் பார்க்க வரவில்லையென்றும் சிவாஜி ரசிகர்களாக இந்த படத்தை பார்க்க தங்கள் குடும்பத்தினர் வந்திருப்பதை பெருமையுடன் குறிப்பிட்ட திருமதி ரேவதி தங்களை அழைத்ததற்கும் நினவு பரிசு வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.
அனைவரையும் அற்புதப்படுத்திய அவரின் சரளமான உரைக்கு நன்றி தெரிவித்து படத்தை திரையிட்டோம்.


வெளிச்சம் சரியாக இல்லாதிருந்த காரணத்தினால் புகைப்படங்கள் சற்றே மங்கலாக தெரிகின்றது
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
24th November 2014 07:02 PM
# ADS
Circuit advertisement
-
24th November 2014, 08:17 PM
#3022
Junior Member
Veteran Hubber
அலைகள் தலை விரித்தாடிய கலைப்பயணத்தில் எந்த வலையிலும் சிக்காமல் நடிகர்திலகத்தின் விலைமதிப்பற்ற குரலாகவே மாறி நம்மை வாயடைத்த சிலைகளாக்கி மலைக்கவைத்த பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!
திலக குரல்1. இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமனார்
நடிகர்திலகத்தின் முதல் பாடல் குரல் ! அந்தக் கடினமான தடிமனான வெற்றிலை குதப்பிய 'குதம்பாய்' குரலுக்கும் ஏற்றபடி தனது முகபாவங்களையும் உதட்டசைவுகளையும் மாற்றிப் பிரமிக்க வைத்த நடிப்புச்சித்தரின் பெருமைக்கு வித்திட்டவருக்கு எங்கள் முதல் வணக்கம். பராசக்தி பாடல் காட்சிகளில் இன்றும் நம் பிரமிப்பு அலைகள் ஓயவில்லையே !
மீன்கள் கடலிலே துள்ளிப் பார்த்திருக்கிறோம் கடற்கரையிலே துள்ளும் காதல் மீன்களையும் பார்த்து ரசிப்போமே ! விண்ணோடும் மண்ணோடும் கலந்துவிட்ட கலைப்புதையல் நடிகர்திலகம் !!
கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி மானே .... மறக்க முடியாத தங்கப்பதுமை !
அன்பாலே தேடிய அறிவுச்செல்வமே தெய்வப்பிறவி சிவாஜி கணேசன் !
NT returns to thank and honor his alter ego tone TMS!!
Last edited by sivajisenthil; 24th November 2014 at 10:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th November 2014, 08:50 PM
#3023
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Yukesh Babu
Every after thirty years one star coming from NT's family
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th November 2014, 08:14 AM
#3024
Senior Member
Seasoned Hubber
நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு நடிகரின் நூறாவது படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றால் அந்தப் பெருமை இருவருக்கு மட்டுமே சாரும். நடிகர் திலகத்தின் நவராத்திரியின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை குமுதம் பத்திரிகை இருட்டடிப்பு செய்துள்ளது வியப்பாக உள்ளது.
நவராத்திரி திரைக்காவியம் சென்னையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளது.


...
தனது நூறாவது திரைப்படத்தை பிரம்மாண்டமான வெற்றிப் படமாகப் பெற்ற இன்னோர் நடிகர் விஜயகாந்த் அவர்கள்.
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் வெற்றி அனைவரும் அறிந்ததே..
குமுதம் பத்திரிகைக்கு யாராவது தமிழ்த் திரைப்படத்தின் வரலாற்றைப் புரிய வைத்தால் நல்லது.
... நவராத்திரி நூறாவது நாள் வெற்றி நிழற்படங்களுக்கு நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்..
நிழற்படங்களின் அருமையைப் புரிய வைத்த பம்மலாரின் பங்களிப்பு நடிகர் திலகம் திரிக்கு உயிர் நாடி என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளப்படும் என நம்புகிறேன். நம்முடைய திரியில் பதியப்படும் நிழற்படங்கள் பக்கங்களை நிரப்புவதற்காக அல்ல என்பதையும் அவை ஒவ்வொன்றும் கூறும் அர்த்தங்கள் ஆயிரம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய நமது திரி நண்பர்கள் இனியாவது புரிந்து கொள்வர் என நம்புகிறேன்.
Last edited by RAGHAVENDRA; 25th November 2014 at 08:18 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 3 Likes
-
25th November 2014, 11:12 AM
#3025
Junior Member
Seasoned Hubber
Dear Raghavendera sir,
I too pointed out the mistake and mentioned it in Facebook of Vijaykanth group , it is really sad that a reputed weekly magazine has forgot to include the records of a doyen nadigar thilagam
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th November 2014, 11:46 AM
#3026
Junior Member
Junior Hubber
பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!
அருமை..!
Last edited by AREGU; 25th November 2014 at 11:49 AM.
எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th November 2014, 12:54 PM
#3027
குமுதம் பத்திரிகை அந்தக் காலத்திலிருந்தே தப்பும் தவறுமாக செய்திகளைத் தருவதில் பிரசித்தி பெற்றது.
அத்துடன் அங்கு பணிபுரியும் சுனில் ஒரு அரைவேக்காடு.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th November 2014, 01:33 PM
#3028
Junior Member
Regular Hubber
"Mr.Mahendra" | Full Tamil Movie | Jaya Pradha | …:
மிஸ்டர் மகேந்திரா
தெலுங்கு டப்பிங் படம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th November 2014, 08:45 PM
#3029
Junior Member
Veteran Hubber
அலைகள் தலை விரித்தாடிய கலைப்பயணத்தில் எந்த வலையிலும் சிக்காமல் நடிகர்திலகத்தின் விலைமதிப்பற்ற குரலாகவே மாறி நம்மை வாயடைத்த சிலைகளாக்கி மலைக்கவைத்த பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!
திலக குரல் 2 தெய்வத்திருமிகு T.M. சௌந்திரராஜன்
M.K. தியாகராஜ பாகவதரின் எதிரொலியாக ஆரம்பித்த இசைப்பயணம் நடிகர்திலகத்தின் பின்னணி குரலொலியாக நிலைபெற்றது.
நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும். நடிகர்திலகம் என்னும் கவின்மிகு மழைமேகம் சுமந்து பொழிந்திட்ட தூய்மையான மழைநீரே TMS ! நடிகர்திலகத்தின் குரலாக வாழ்ந்தவர். மழைநீர் தனது தன்மையை நீரின் நிலப்பரப்பு மற்றும் நிலத்தடி ஓட்டங்களில் மண்ணின் தன்மைக்கேற்ப சுவை மாற்றுவது போல பிற நடிகர்களுக்கும் ஏற்ற மாதிரி ஆற்று நீராகவும் ஊற்று நீராகவும் கிணற்று நீராகவும் கடல் நீராகாவும் குரலை மாற்றி பன்முக குரல் மன்னனாக வளர்ந்தவர். நடிகர்திலகத்தின் மறுபக்கமாகவே அவரது நடிப்புச்சூழல், முகபாவனைகளின் எற்ற இறக்கங்கள், உடல் மொழிக்குத் தகுந்தபடி ஒரு திறமையான சர்க்கஸ் சாகசக்காரரைப் போல நடிகர்திலகத்தின் பிரதிபலிப்பாக நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடகத் திலகத்திற்கு எமது நெஞ்சம் நிறைந்த நினைவாஞ்சலிகள்!
கலகல குளுகுளு சுறுசுறு மொறுமொறு படபட குடுகுடு சலசல விறுவிறு ......இரட்டைக்கிளவி போல நடிகர்திலகமும் பாடகர்திலகமும்!!
My personal Choice of Top 10 TMS voiced NT songs!
1.நடிகர்திலகத்தின் பாடல் குரலாக தூக்கோதூக்கென்று தூக்கி வைத்த தூக்குத்தூக்கி !
2.இப்புவி சுழலும் வரை நடிகர்திலகத்தின் அடையாள பாடல் the Signature song of NT ! : புதிய பறவை
3. தமிழ் திரையுலகைப் பொறுத்த மட்டில் எம் நடிக வேந்தரின் திருவிளையாடல் நீக்கமற நிறைந்த பாட்டும் நீங்களே பாவமும் நீங்களே
4.பாடல்களில் மாணிக்கக்கல் நீங்களே ஆலயமணியின் ஒப்புதல் ஓசை எம் நடிப்புக் கடவுளின் அசத்தல் வாயசைப்பில் !
5. வாழ்க்கை என்பது ஊதி ஊதி பெரிதாக்கப்பட்ட பலூன் அல்லது பஞ்சுமிட்டாய் விருந்தே என்பதை உரைக்கும் உன்னத தத்துவ மருந்து : பாலும் பழமும்
6. ஆற்றொணாத் துயர் வரினும் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளையும் ஆறு !
7. நடிகர்திலகத்தின் படப்பாடல்களின் கெளரவம் உங்களாலேயே
8. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No peace of Mind ! ஞான ஒளி படுமா?
9. மரணம் என்னும் தூது மங்கையின் வடிவில்தானா வரவேண்டும் வசந்த மாளிகை வாயிலாய் !
10. நடிகர்திலகத்தின் குரலாய் எவர் வரினும் நீங்களே உங்களுக்கு நிகரானவர் TMS ஐயா !!
நடிகர்திலகத்திற்காக TMS பாடிய எல்லாப் பாடல்களுமே எப்பக்கமும் இனிக்கும் வெல்லக்கட்டிகளே ! எதைத்தான் விடுவது.....நேரம் கருதி....
NT returns on his duty to acknowledge the contributions of Bala Murali Krishna, TR Mahalingam , Seergaali Govindharaajan, PBS, SPB, Jesudas ....Mothi, VN Sundaram.... and Tiruchi Loganathan in gracing his movies!
Last edited by sivajisenthil; 25th November 2014 at 10:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th November 2014, 11:12 PM
#3030
சிவாஜி படம் பார்த்தால் நூறு வயது வாழலாம்
பிரபல இதய மருத்துவர் திரு சொக்கலிங்கம் அவர்களின் வீடியோ .. முகநூலில் (facebook ???) கிடைத்தது ...
உங்கள் பார்வைக்கு...
Dr. Chockalingam had retired from service as a cardiologist, Professor& Head of the department of cardiology in the Government General Hospital, Chennai. Chockalingam got the first rank in MBBS graduating from Madras University. When he was doing his MD, he was chosen for government scholarship. He is a many-time gold medalist. Right from the beginning.In an occasion He states some thing Interesting about Nadigar thilagam.....Pl watch Dont Ignore...special share on this great day....
https://www.facebook.com/video.php?v...ages_video_set
Last edited by sss; 25th November 2014 at 11:14 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
Bookmarks