-
18th December 2014, 07:37 AM
#2211
Senior Member
Seasoned Hubber
டி.ஆர். மகாலிங்கம் பாடிய பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ஆட வந்த தெய்வம் படத்திலிருந்து
கோடி கோடி இன்பம் பெறவே தேடி வந்த செல்வம்..
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காமல் புதியதாகத் தோன்றும் அருமையான பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
18th December 2014 07:37 AM
# ADS
Circuit advertisement
-
18th December 2014, 07:40 AM
#2212
Senior Member
Seasoned Hubber
கோபால்
தொடரும் கொண்டாட்ட தோல்விகளின் தொடரும் தொடரட்டும்...நிற்க வேண்டாம். தங்களுக்கே உரிய கோணத்தில் பல இசை மேதைகளி்ன் பங்களிப்பு, அவர்களுடைய சிறப்பு இவற்றை அலசுகிறீர்கள்.
ஜி. ராமனாதன் தோல்வி அடையவில்லையே... அவருடைய படைப்புகள் இன்றளவும் முன்னணியில் தானே உள்ளன. விஸ்வநாதன் ராமமூர்த்தி வருகைக்குப் பின்னர் அவருடைய பாணியை மக்கள் சற்றே நிராகரித்து வேறு பக்கம் பயணிக்கத் தொடங்கினர். இது ஒரு டிரெண்ட் அவ்வளவு தானே தவிர அவருக்குத் தோல்வியெனக் கூற முடியாது. ஏனென்றால் தெய்வத்தின் தெய்வம் வணிக ரீதியிலும் கையைக் கடிக்காமல் வெற்றி கண்ட படம். அருணகிரிநாதர் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம்.
எனக்குத் தெரிந்து தோல்விப் பட்டியலில் ஜிஆர் இடம் பெறமாட்டார் என்பதே என் கருத்து.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
18th December 2014, 08:21 AM
#2213
Senior Member
Veteran Hubber
T.R.Mahalingam in 1947
Good to see T.R.Mahalingam songs here!
Here is a song from Naam Iruvar (1947) popular in my elementary/middle school years(1940s):
kOdaiyile iLaippaatrikoLLum vagai kidaitha kuLir tharuve..........
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
18th December 2014, 09:17 AM
#2214
Junior Member
Newbie Hubber
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.
நமது நாட்டில் வதந்தி போல பிம்பங்களை உருவாக்குவது சுலபம்.(சிறிய வயதில் ஜம்புலிங்கம் என்ற திருநெல்வேலி சேர்ந்த கொள்ளைக் காரனை பற்றி ராபின்ஹூட் ரேஞ்சில் படிக்காத முன்னோர்கள் பேசி கேட்டிருக்கிறேன்)இங்கு ஊர் பார்த்த உண்மைகள் என்று பரப்ப படுபவை பெரும்பாலும் வதந்திகளே. புறம் பேசியும்,ஊர் வதந்தி பேசியுமே வாழ்ந்த முன்னோர்களை கொண்ட ,பகுத்தறிவில்லா இனங்களை, அதே word of others ' mouth ,மற்றவர்கள் கேள்வி பட்டதில் இருந்து கேள்விபட்டதில் இருந்து சில சுயத்தை இணைத்து மற்றோர் காதுக்கு செய்தியாக்குவது.இதற்கு நாம் செய்ய வேண்டியது சொல்லளவில் இனிமை.(செயல் எப்படி இருப்பினும்).சில விளம்பரங்கள் தரும் நிலையிலுள்ள பத்திரிகையாளர் ,பொது வாழ்விலுள்ளோர்,எல்லோர் கண் படும் படி சில சாதா மனிதர்கள் இப்படி சிலருக்கு சராசரி உதவிகள் முதலீடு போல செய்து,அவர்கள் மூலம் ஊதி , சுய பிம்பத்தை பெரிதாக்கி, வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற புலிகேசி பாணி செயல் பாடு. ஒரு மூடநம்பிக்கையான கடவுளை தகர்த்து,அதற்கு பிரதியாக வசதியான தலைவர்களின் பதிலீடு. இங்கு மக்களுக்கு உணர்த்த வேண்டிய பத்திரிகையார்கள் ,சிறிய சலுகைகளுக்கு வாலாட்டி,அல்லது ஓஹோவென நரஸ்துதி செய்யும் அர்ச்சசையாளர்களாக மாற்ற பட்ட விந்தை.தனி பட்ட விபத்துகளை ,தேச பிரச்சினை போல ஊதி மக்களிடையே கொண்டு சென்று ஒரு இனைத்தையே மூளை சலவை செய்தது.நல்லவேளை செத்தவர்களுக்கும் வேட்பாளர்களாகும் உரிமை இருந்திருந்தால் நம் கதி???(நல்ல வேளை அம்பேத்கர் காப்பாற்றினார்)
இப்போது சொல்லுங்கள்,இங்கு பறிக்க படும் வெற்றி கனிகள் பாராட்ட தக்கதா?
தொடருவோம் கொண்டாட்ட தோல்விகளை.
டி.ஜி.லிங்கப்பா.
திருச்சியை சேர்ந்த கோவிந்த ராஜுலு லிங்கப்பா ,குடும்ப வழியில் சங்கீதம் பெற்ற மேதை. எல்லா இசையமைப்பாளர்களையும் மேதைகள் என்று புகழ்வதில்லை.(புகழ் பெற்று உச்சம் தொட்டவர்களை விட்டு விடுங்கள்).தக்ஷினாமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா போன்ற ஒரு சிலருக்கே அந்த புகழ் உண்டு. சி.ஆர் .சுப்பரமனுக்கு உதவி கொண்டிருந்த (ராமமூர்த்தி ,லிங்கப்பா இசை உதவி.ஆபிஸ் துடைக்கெவென்று சிலர்)லிங்கப்பாவுக்கு முதல் வாய்ப்பு டி.ஆர்.மகாலிங்கத்தின் சுகுமார் கம்பெனி மூலம்.வந்தது. டி.ஆர் மகாலிங்கத்தின் தயாரிப்பில் உதவியாக இருந்து பிற்கால பிரபலம் பந்துலுவுடன் தொடர்பு. அவர் தயாரிப்பாளரானதும்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியில் இருந்து பத்மினி பிக்சர்ஸ் படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளர்.
ஹிந்துஸ்தானி இசை,கர்நாடக இசை,மேற்கத்திய இசை குத்து பாடல்கள்,கிராமிய பாடல்கள், என்று இவர் தொட்டு வெற்றியடையாத சங்கதிகளே இல்லை .கமாஸ் என்ற ராகத்தை இவர் சித்திரம் பேசுதடி ஆக்கிய விந்தை இன்றளவும் பேச படுகிறது.54 முதல் 60 வரை வருடம் ஒரு படம்,இரு படம் என்று பண்ணி கொண்டிருந்தவர் ,இங்கு விலை போகாமல்,கன்னடம் தாவி 1988 வரை தொடர்ந்தார். நடிகர்திலகத்திற்கு கிட்டத்தட்ட 6 படங்கள் பண்ணியுள்ளார்.நடிகர்திலகம்-பந்துலு இணைவின் கடைசி படமான முரடன் முத்துவுக்கும் இசை இவர்தான்.பிறகு 70 களில் கடவுள் மாமா என்ற பந்துலு படத்தில் பங்கேற்றார்.
குறிப்பிட தக்க பாடல்கள் (பெரும்பாலும் நடிகர்திலகம்)வெண்ணிலாவும் வானும்,கவியின் கனவில்,அதிமதுரா அனுராதா,காதல் உள்ளம்,ஒண்ணிலே இருந்து,தென்றலே வாராயோ,அமுதை பொழியும்,இகலோகமே,ராதா மாதவா,என்னருமை காதலிக்கு,சித்திரம் பேசுதடி,காணா இன்பம்,ஆசையில் ஊஞ்சலில்,கோட்டையிலே ,கல்யாண ஊர்வலம் பாரு,தாமரை பூ கொளத்திலே ,பொன்னாசை கொண்டோருக்கு,சந்திரபாபுவின் சில ஆங்கில மேற்கத்திய சாயல் பாடல்கள்.(ஒன்று நடிகர்திலகத்துக்கு)
இவர் யாருக்கு பாட முதல் வாய்ப்பு கொடுத்தாரோ ,அதே சந்திர பாபுவால் மோசடி செய்ய பட்டு ,இவர் இசையமைத்த குங்கும பூவே எஸ்.எம்.எஸ் பெயரில் வந்து பிரபலம் கண்டது. ரீதி கவுளையில் இவர் செய்த அற்புத பாடல் புத்தம் புது மேனி கே.வீ.எம் பெயரில் வந்து பெயர் பெற்றது.
இவரை ஒரு ,இரண்டாம் நிலை இசையமைப்பாளராக கூட அங்கீகரித்து பயன் படுத்தி கொள்ளாத குற்றத்தை தமிழ் பட உலகம் செய்தது. இவரும்,பந்துலுவும் ,கன்னடமும் போதும் என்று இருந்து விட்டார்.
இன்றும் நம் நெஞ்சில் மறையாமல். மோகனமாய் ,நிலவாய் அமுதை பொழிந்து நம்மை குளிர்வித்து கொண்டிருக்கும் தோல்வி.
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th December 2014, 09:54 AM
#2215
Junior Member
Newbie Hubber
Originally Posted by
RAGHAVENDRA
கோபால்
தொடரும் கொண்டாட்ட தோல்விகளின் தொடரும் தொடரட்டும்...நிற்க வேண்டாம். தங்களுக்கே உரிய கோணத்தில் பல இசை மேதைகளி்ன் பங்களிப்பு, அவர்களுடைய சிறப்பு இவற்றை அலசுகிறீர்கள்.
ஜி. ராமனாதன் தோல்வி அடையவில்லையே... அவருடைய படைப்புகள் இன்றளவும் முன்னணியில் தானே உள்ளன. விஸ்வநாதன் ராமமூர்த்தி வருகைக்குப் பின்னர் அவருடைய பாணியை மக்கள் சற்றே நிராகரித்து வேறு பக்கம் பயணிக்கத் தொடங்கினர். இது ஒரு டிரெண்ட் அவ்வளவு தானே தவிர அவருக்குத் தோல்வியெனக் கூற முடியாது. ஏனென்றால் தெய்வத்தின் தெய்வம் வணிக ரீதியிலும் கையைக் கடிக்காமல் வெற்றி கண்ட படம். அருணகிரிநாதர் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம்.
எனக்குத் தெரிந்து தோல்விப் பட்டியலில் ஜிஆர் இடம் பெறமாட்டார் என்பதே என் கருத்து.
நான் தோல்வி என்று குறிப்பது அவர்களின் நன்-முயற்சிகளையோ அல்லது அவர்களின் பங்களிப்பின் தரத்தையோ பற்றி அல்ல.
விரும்பி ஓய்வு நாடுவது ஒரு வகை கலைஞர்களின் இயல்பு.
அதை செய்ய அவர்கள் விரும்பும் வரை உச்சத்தில் இருக்க வேண்டும்.நடிகர்திலகம் போல.
ஆனால் விருப்பத்துக்கு விரோதமாக ,துறையில் இருந்து திறமையாளர்கள் ஒதுக்க படுவதை ,தோல்வி என்று குறிப்பது அவர்களின் தோல்வியாக அல்ல. நம் போன்ற தேர்ந்த ரசிகர்களின் தோல்வி. புதியன புகுந்தால்,அனைத்து பழையனவும் கழிக்க பட வேண்டாமே?
தானே out -date ஆகி, ஆனால் பழைய நினைப்பிலேயே மிதப்பது வேறு வகை.(Death of a Salesman novel படித்தவர்களுக்கு புரியும்.பூரணம் இதை தழுவி நாடகம் போட்டார்)
Last edited by Gopal.s; 18th December 2014 at 10:12 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th December 2014, 11:15 AM
#2216
Senior Member
Senior Hubber
//ஆனால் விருப்பத்துக்கு விரோதமாக ,துறையில் இருந்து திறமையாளர்கள் ஒதுக்க படுவதை ,தோல்வி என்று குறிப்பது அவர்களின் தோல்வியாக அல்ல. நம் போன்ற தேர்ந்த ரசிகர்களின் தோல்வி. புதியன புகுந்தால்,அனைத்து பழையனவும் கழிக்க பட வேண்டாமே?// மாற்றங்கள் தானே வழக்கமாக நிகழ்ந்து வருகின்றன.. புதியன புகுந்தால் பழையன செல்ல த் தானே செய்யும். மீன்ஸ் எனக்குப் பிடித்த அந்தக்காலப் பாடலை நான் என் உயிர் உள்ளவரைக் கேட்டுக் கொண்டிருப்பேன்..கேட்டு வளர்ந்தது நான். என் மகள் அவள் இளம் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பழைய பாடலை கடைசிவரை கேட்பார்.. ஜெனரேஷன் மாற மாற ரசனை யும் மாறி க் கொண்டு தானே இருக்கும்..அதெப்படி ஜெனரேஷனின் மாற்றத்தை நம் போன்ற ரசிகர்களின் தோல்வி எனச் சொல்ல முடியும்..
//இது ஒரு டிரெண்ட் // மிகச் சரி.. நிறைய எழுதலாம் கடமை அழைக்கிறது அப்புறம்வருகிறேன்
கோபால் தொடர் நன்றாக இருக்கிறது இன்னும் இன்னும் எழுதுங்கள்.. ஓபன்ஸ் வேரியஸ் தாட்ஸ்..டெத் ஆஃப் அ சேல்ஸ் மேன் மாறு தல் வரும் நாடகம் தானே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th December 2014, 12:16 PM
#2217
Senior Member
Senior Hubber
கோபால்,
தொடரும் கொண்டாட்ட தோல்விகள் தொடர் சிறப்பாக இருக்கிறது. எனக்கு பல பாடல்கள் கேட்டிருந்தாலும், பாடியவர் யார், இசையமைத்தவர் யார் என்று நினைக்க நேரமிருந்ததில்லை. அந்த விதத்தில் உங்கள் தொடர் எனக்கு நல்ல அறிமுகம். நன்றி.
தமிழ் திரையுலகம் தோல்வியடையச் செய்த திறமைசாலிகளை வரிசைப்படுத்துகிறீர். அதே தமிழ் திரையுலகம் திறமையற்ற சிலரையோ பலரையோ அத்துடன் நன்றென சொல்லமுடியாத திரைப்படங்களையோ வெற்றி பெறச் செய்திருக்கலாம். அதை வரிசைப்படுத்தும் அசாத்திய தைரியத்தையும் உங்களிடம் காணுகின்றேன். இருந்தாலும் அதைச் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.
Last edited by kalnayak; 18th December 2014 at 12:20 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th December 2014, 01:11 PM
#2218
Senior Member
Senior Hubber
பொய்க் கோபம்...
கலை, வாசு கிளப்பி விட்டீர்கள்..
மூட மறுக்கும் முழுத்தணலாய்ச் சுட்டுவிடும்
ஊடலைக் கொண்ட உளம்
போடா எனச்சொல்லி போகாமல் நின்றவளும்
ஆடாமல் ஆடுவாள் ஆம்..
பனிபடர் மெல்லிதழ் பாய்ந்துதான் ஏசும்
கனிவிலா வார்த்தையைக் காண்.
இப்போதைக்கு அம்புட்டு தான்..
**
வாணியின் கோபம் முத்துவின் தாபம்
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதை எங்கே
இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு..
ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு
மறுபக்கம் பார்த்தால் கொதிப்பு
இது பிள்ளை குணமா இல்லை கள்ளத் தனமா
நடை பின்னலிடும் காரணம் என்னம்மா
காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா
உதட்டினில் வருவது சிரிப்பு
உள்ளத்தில் எரிவது நெருப்பு
இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா
உங்கள் கண்கள் செய்யும் சாகசம்கொஞ்சமா
அவன்.. சாகசம் பெண்களுக்குத் தான்சொந்தமா
அவள்.. உள்ளத்தைக் கொடுத்தேன் உனக்கு இதில்
உனக்கேன் வேறொரு கணக்கு
இன்று உண்மை சொல்லுங்கள்
பின்பு என்னைத் தொடுங்கள்
உங்கள் உள்ளத்துக்கு நான் மட்டும் சொந்தமா?
வானத்தில் வெண்மதி ஒன்றேயம்மா என்
வாழ்க்கைத் துணையும் நீயேயம்மா
**
இது தானா வாசு சார்.. நீங்கள் சொல்லப் போகும் பாடல்...எஸ்.பி.பி, சுசீலா..
Last edited by chinnakkannan; 18th December 2014 at 01:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th December 2014, 01:19 PM
#2219
Senior Member
Senior Hubber
சி.க.
ராஜண்ணாவின் கட்டை வண்டி அனுபவங்கள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. இருந்தாலும் பாடல்கள் இதோ:
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
18th December 2014, 02:43 PM
#2220
Junior Member
Platinum Hubber
பொய் கோபம் .....
இனிய நண்பர் திரு கலைவேந்தனின் மகாலிங்கம் அவர்களின் பாடலை தொடர்ந்து இனிய நண்பர் திரு வாசு அவர்களின் பட்டிக்காட்டு பொன்னையா படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜெயா
நடித்த பாடல் காட்சி - பொய் கோபத்தை பற்றி விரிவாக அலசிய விதம் மிகவும் அருமை .
எனக்கு பிடித்த பொய் கோப பாடல் இதோ ...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks