-
18th December 2014, 04:57 PM
#2231
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
கடலம்மா காப்பாத்து

கடலூரப்பா காப்பாத்து
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th December 2014 04:57 PM
# ADS
Circuit advertisement
-
18th December 2014, 07:37 PM
#2232
Junior Member
Seasoned Hubber
எல்லாருக்கும் வணக்கம்,
திரு. சின்னக் கண்ணன் சார், ‘நானன்றி யார் வருவார்..’ பாடலை தரவேற்றியதற்கும் கண்ணே... கண்ணா....வில் உள்ள இழுவையை சுட்டிக் காட்டி ரசித்ததற்கும் மிக்க நன்றி.
திரு.வாசு சார், தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. பட்டிக்காட்டு பொன்னையா பாடலுக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தை ரசித்து படித்தேன். பாடலை பார்க்கும்போது எழுந்த சிரிப்பை விட உங்கள் விளக்கம் அதிகமாக சிரிக்க வைத்தது.
மனம் விட்டு சொல்கிறேன் சார். மக்கள் திலகம் திரியில் எனக்கு பிடிக்காதது என்ன இருக்கப் போகிறது? அதை தவிர்த்து விட்டு பார்த்தால், இன்று என்ன தாக்குதல் இருக்குமோ? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றல் இருக்குமோ? அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டியிருக்குமோ?நீங்கள், திரு. ராகவேந்திரா சார் போன்றவர்கள் எல்லாம் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? என்றெல்லாம் டென்ஷன் இல்லாமல், நான் மகிழ்ச்சியோடு பார்த்து பங்கேற்கும் திரி இது. உங்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். எதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பட்டிக்காட்டு பொன்னையா பாடல் விளக்கத்தை விட நான் அதிகமாக சிரித்தது உங்களின் ‘உ.பி.சகோதரி’ பதிலுக்கு. நன்றி சார்.
தங்களின் பாராட்டுக்கு நன்றிகள் திரு.ராகவேந்திரா சார். தாங்கள் கோரியபடி நான் ரசித்த பழைய பாடல்களை நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்.
திரு.கோபால், பாடல் ஆபோகி ராகம் என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் சங்கீதம் கற்றவனல்ல. மற்ற பாடல்களோடு ஒப்பீடு செய்து பார்த்துதான் இந்த ராகமாக இருக்கலாம் என்று தெரிந்து கொள்கிறேன். அதனால்தான் சந்தேகம். மீண்டும் நன்றி.
நீங்கள் கூறியிருப்பது போல, திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் திமுகவில் முக்கியஸ்தராக இருந்தார் என்று எனக்குத் தெரியாது. சொல்லப் போனால், திரு.மகாலிங்கம் அவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மாலையிட்ட மங்கை படம் தயாரித்தபோது கவியரசர் திமுகவில் இருந்தார். எனவே, திரு.மகாலிங்கத்தை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று திமுகவைச் சேர்ந்த சிலர் (பேரறிஞர், புரட்சித் தலைவர் அல்ல) கவிஞருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால்தான், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே, கலை வாழும் தென்னாடே’ பாடலை எழுதி திரு.மகாலிங்கத்தை பாட வைத்தார் என்று படித்திருக்கிறேன்.
அன்றைய சூழலில் திரு.மகாலிங்கம் மற்றும் திமுகவின் பின்னணியை வைத்து பார்த்தால், கட்சியில் அவர் முக்கியஸ்தராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். அப்படி நான் படித்ததும் இல்லை. தங்களுக்கு தகவல் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டுகிறேன்.
மக்கள் திலகம் திரியில் எனது வேண்டுகோளை பார்த்தீர்களா என்று தெரியவில்லை. இசையால் இணைக்கும் இந்த திரியிலாவது நீங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
18th December 2014, 09:25 PM
#2233
Senior Member
Diamond Hubber
RajRaj sir,
Another beautiful Qawwali song 'Nigah -E- Naz Ke' from 'barsaat ki raat'. Beauty Shyma is one of my favourite.
Last edited by vasudevan31355; 18th December 2014 at 09:32 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th December 2014, 09:38 PM
#2234
Senior Member
Diamond Hubber
என்ன ஆயிற்று? கண்களில் ரத்தம் வடிய ஆரம்பித்திருக்கிறது.
சென்னையில் உள்ள சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வருடங்கள் பழமையான திரையரங்கமான அது முதல் ஏசி திரையரங்கு என்ற பெருமையுடையது. தற்போது அந்த திரையரங்கு விரைவில் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Last edited by vasudevan31355; 18th December 2014 at 09:41 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th December 2014, 09:45 PM
#2235
Senior Member
Diamond Hubber
-
18th December 2014, 09:46 PM
#2236
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th December 2014, 09:47 PM
#2237
Senior Member
Diamond Hubber
-
18th December 2014, 09:48 PM
#2238
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th December 2014, 10:01 PM
#2239
Junior Member
Seasoned Hubber
எங்கே போய் கொண்டு இருக்கிறோம் ?
2014 ஆம் ஆண்டு இனிதாகவே செல்லும் என்று நம்பிய பல கோடி மக்களில் நானும் ஒருவன் - ஒரு மனிதாபிமானமே இல்லாத ஆண்டாக அல்லவா முடிவடைகின்றது ? பயங்கரவாதிகளின் பசிக்கு 132க்கும் மேற்பட்ட உயிர்களை தானமாக வழங்கிவிட்டதே - அதுவும் இன்னும் அரும்பாத மொட்டுக்கள் , நாளையை தீர்மானிக்க வேண்டிய தலைவர்கள் - எவ்வளவு கனவுகள் , எவ்வளவு ஆசைகள் , எத்தனை மகிழ்ச்சியான பருவம் ? பெற்றவர்கள் என்னவெல்லாம் கனவு கண்டிருப்பார்கள் - எல்லாம் ஒரே நொடியில் தரை மட்டமாகிவிட்டது - பள்ளிக்கு போயிருக்கும் தன் மகன் இனி திரும்பி வரவே மாட்டான் என்று ஆகும் போது அந்த தாயின் புலம்பலை ஒரு இடியின் ஓசைதான் வெல்ல முடியுமா , ஒரு சுனாமிதான் தடுத்து நிறுத்த முடியுமா ? குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று பாடுகிறோம் - ஆனால் இந்த பயங்கர வாதிகள் தங்கள் துப்பாக்கிகளை மட்டுமே நம்புகிறார்கள் - அவைகள் வணங்கும் ஒரே தெய்வம் வன்முறைதான் - காட்டுமிராண்டி தனம் தான் அந்த வன்முறை தெய்வத்திற்கு அவர்கள் செய்யும் பூஜை --- இவர்களின் ஒரே மதம் - தீவிரவாதம் மட்டுமே - நாம் முன்னோக்கி -செல்லவில்லை - வெகுவாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் - மனித உருவில் திரியும் இந்த மிருகங்களை என்று ஒட்டு மொத்தமாக அழிக்கின்றோமோ அன்றுதான் நமக்கெல்லாம் புதிய வருடம் --
சற்றே கண்களை மூடி நாமெல்லாம் அந்த ஒன்றுமே அறியாத , எதற்க்காக கொல்லபடுகின்றோம் என்பதை கூட உணர்ந்துகொள்ள முடியாமல் , உரு இழந்து இந்த நாட்டில் பிறந்தோமே இதை தவிர என்ன பாவம் செய்தோம் என்றே எண்ணி உயிரைவிட்ட அந்த குழந்தைகளுக்காக , அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டி ப்ராத்தனை செய்வோம் - அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு இந்த பாடல்கள் சமர்ப்பணம் ..
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
18th December 2014, 10:01 PM
#2240
Senior Member
Senior Hubber
qawali song in tamil for rajraj sir and vasu sir..
http://www.youtube.com/watch?feature...&v=XNAo4huwzMM
pOttach pOttachchaa..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks