-
26th December 2014, 12:28 PM
#2401
இரண்டு தினங்களாக நிறைய தொலைகாட்சிகளில் பாலச்சந்தர்க்கு இரங்கல் தெரிவித்து பாடல்கள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள். ஆனால் ஒருவராவது கலாகேந்திரா கோவிந்தராஜன்,துரையையும், அருள் பிலிம்ஸ் ராம அரங்கன்னெல் பற்றியும் ,பிரேமாலயா வெங்கட்ராமனை பற்றியும் ஏதாவது தகவல் சொன்னார்களா ? என்று பார்த்தால்

-
26th December 2014 12:28 PM
# ADS
Circuit advertisement
-
26th December 2014, 02:19 PM
#2402
கிருஷ்ணாஜி,
கேபி- வைரமுத்து- இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படங்களே மொத்தம் இரண்டுதான். அவை சிந்து பைரவி மற்றும் புன்னகை மன்னன். அவை முறையே 1985 தீபாவளி மற்றும் 1986 தீபாவளிக்கு வெளிவந்தன. அதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் வைரமுத்து பாலசந்தர் படத்தில் முதன் முதலாக எழுதிய பாடல் தண்ணீர் தண்ணீர் படத்தில் இடம் பெற்ற எம்எஸ்வி இசையில் இசையரசியின் கண்ணான பூமகனே1 கண்ணுறங்கு சூரியனே! பாடல்தான். அதில் சரணத்தில் வரும் ஒரு வரியை ( என் இடுப்பில் வந்த நந்தவனமே) கேபி வெகு நேரம் சிலாகித்து பாராட்டியதாக வைரமுத்து எழுதியிருந்தார்.
நிழல்கள் மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு ஒரே நாளில் [1980 தீபாவளி] ரிலீஸ். அதன் பிறகு 1981-ல் எங்க ஊர் கண்ணகி, 47 நாட்கள் மற்றும் தண்ணீர் தண்ணீர் ஆகிய படங்களை கேபி இயக்கினார். இதில் தண்ணீர் தண்ணீர் படத்தில் வைரமுத்து இடம் பெற்றார். 1982-ல் அக்னி சாட்சி. 1983-ல் பொய்க்கால் குதிரை -இவை இரண்டும் வாலி. 1984-ல் அச்சமில்லை அச்சமில்லை வந்தது. அதில் விஎஸ்.நரசிம்மன்- வைரமுத்து கூட்டணி. அது 1985 ஏப்ரலில் வெளிவந்த கல்யாண அகதிகள் படத்திலும் தொடர்ந்தது. பிறகுதான் நான் முதலில் குறிப்பிட்ட சிந்து பைரவி மற்றும் புன்னகை மன்னன்.
1987 ஜனவரியில் வெளியான காதல் பரிசுதான் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் இடம் பெற்ற கடைசி படம். 1987 தீபாவளிக்கு கேபியின் மனதில் உறுதி வேண்டும் வெளியானது. 1988 ஆகஸ்ட் உன்னால் முடியும் தம்பி ரிலீஸ் பிறகு 1989 தீபாவளிக்கு புது புதுப் அர்த்தங்கள் வெளியானது. இவை அனைத்தும் இளையராஜா வாலி.
1990-ல் ஒரு வீடு இரு வாசல் படத்தி கேபி இயக்கினார். அதற்கு இளையராஜா இல்லை. ஆனால் வைரமுத்துவும் இல்லை என்றுதான் நினைவு. பின் கேபி வைரமுத்து இணைந்தது டூயட் படத்தில்.
அன்புடன்
-
26th December 2014, 02:52 PM
#2403
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
1990-ல் ஒரு வீடு இரு வாசல் படத்தி கேபி இயக்கினார். அதற்கு இளையராஜா இல்லை. ஆனால் வைரமுத்துவும் இல்லை என்றுதான் நினைவு. பின் கேபி வைரமுத்து இணைந்தது டூயட் படத்தில்.
முரளி சார்,
நல்ல புள்ளி விவரங்கள். நன்றி!
'ஒரு வீடு இரு வாசல்' படத்திற்கும் வி.எஸ்.நரசிம்மன்தான் இசை. ஆனால் பாடல் ஆசிரியர் பெயர் போட மாட்டார்கள் என்று நினைவு. டைட்டில் மிகச் சுருக்காக முடிந்து விடும்.
-
26th December 2014, 02:56 PM
#2404
நல்லதொரு நீண்ட விளக்கத்திற்கு நன்றி முரளி சார், நீங்கள் சொல்வது அனைத்தும் சரியான தகவல். நேற்று நடந்த நண்பர்கள் ஜாலியான விவாதத்தின் முழு விவரங்களையும் நான் பதிவு இடவில்லை. பாலு வைரமுத்து இளையராஜா (1984-1990) என்று பதிவிட்டதால் வந்த வருட பிழை. புது புது அர்த்தங்கள்(1989),உன்னை சொல்லி குற்றமில்லை (1990) படங்களுடன் பாலு இளையராஜா கூட்டணி முடிவிற்கு வந்ததை குறிப்பிடுவதற்காக எழுதியது. மேலும் நீங்கள் கூறியது போல் பாலு வாலி இளையராஜா , பாலு வைரமுத்து நரசிம்ஹன் விவாதத்தில் இடம் பெற்றன. வானமே எல்லை 1992 பாலு வைரமுத்து,மரகதமணி பாடல் என்று நினைவு .ஒரு வீடு இரு வாசல் நரசிம்ஹன் இசை . பாடல்கள் எதுவும் இல்லை என்று நினைவு . அந்த படத்தில் உள்ள சார்லி பேசும் வசனம் ஒன்றை என் நண்பர் நினைவு கூர்ந்தார் . 'துணை நடிகை நடிகர்களை எக்ஸ்ட்ராஸ் என்று சொல்லாதே .கோ ஆர்டிஸ்ட் என்று சொல்லு '
ஸ்பெஷல் தேங்க்ஸ் முரளி சார் நிறைய விஷயங்களை அசை போட வைத்ததற்கு
பாலச்சந்தரின் படங்கள் பற்றி பாமரன் எழுதிய கடிதம் ஒன்று 90 களில் குமுதம் இதழில் பிரபலம் . பாலச்சந்தர் பற்றி நிறைய விவாதிக்கணும் முரளி சார்
-
26th December 2014, 03:00 PM
#2405

Originally Posted by
vasudevan31355
முரளி சார்,
நல்ல புள்ளி விவரங்கள். நன்றி!
'ஒரு வீடு இரு வாசல்' படத்திற்கும் வி.எஸ்.நரசிம்மன்தான் இசை. ஆனால் பாடல் ஆசிரியர் பெயர் போட மாட்டார்கள் என்று நினைவு. டைட்டில் மிகச் சுருக்காக முடிந்து விடும்.
ஒரு வீடு இரு வாசல் மொத்தமே 4 அல்லது 5 டைட்டில் கார்ட் தான் வாசு சார்
-
26th December 2014, 03:08 PM
#2406
Senior Member
Diamond Hubber
முரளி சார்,
அதே 1984 ல் வெளியான பாலச்சந்தர் தயாரித்த, ஆனால் அவர் இயக்காமல் அமீர்ஜான் இயக்கிய, முரளி, அனிதா நடித்த கலாகேந்திராவின் 'புதியவன்' படத்தில் வி.எஸ்.நரசிம்மன், வைரமுத்து கூட்டணியே தொடர்ந்து இடம் பெற்றது.
-
26th December 2014, 04:31 PM
#2407
நன்றி கிருஷ்ணாஜி & வாசு.
வாசு, கவிதாலயா பானரில் அமீர்ஜான் இயக்கத்தில் 1984 மார்ச்சில் வெளியான பூவிலங்கு [முரளியின் அறிமுக படம்] படத்திலும் இளையராஜா வைரமுத்து கூட்டணிதான்.
கிருஷ்ணாஜி,
வானமே எல்லை வைரமுத்துதான். யோசித்தபோது மற்றொர்ன்று நினைவிற்கு வந்தது அழகன் மட்டுமல்ல உன்னால் முடியும் தம்பியும் புலமைபித்தன்தான்.
அன்புடன்
-
26th December 2014, 05:35 PM
#2408

Originally Posted by
Murali Srinivas
கவிதாலயா பானரில் அமீர்ஜான் இயக்கத்தில் 1984 மார்ச்சில் வெளியான பூவிலங்கு [முரளியின் அறிமுக படம்] படத்திலும் இளையராஜா வைரமுத்து கூட்டணிதான்.
வானமே எல்லை வைரமுத்துதான். யோசித்தபோது மற்றொர்ன்று நினைவிற்கு வந்தது அழகன் மட்டுமல்ல உன்னால் முடியும் தம்பியும் புலமைபித்தன்தான்.
அன்புடன்
அருமை முரளி சார்
சூப்பர் தகவல்
1993 ஜாதிமல்லி பாலு வைரமுத்து மரகதமணி
1996 தீபாவளி ரிலீஸ் கல்கி
பாலு தேவா இளந்தேவன் (இவர் பின்னாளில் அம்மாவுக்கு ஆஸ்தான அறிக்கை தயாரிப்பாளர் இப்போது வாசனின் த மா க ) கூட்டணியில் வந்தது .
1996 தேவாவிற்கு மறக்க முடியாத தீபாவளி
கோகுலத்தில் சீதை,பாஞ்சலகுரிச்சி,கல்கி,அவ்வை ஷண்முகி ,சேனாதிபதி
thanks murali
-
26th December 2014, 08:17 PM
#2409
Senior Member
Veteran Hubber
Vanakam to all
Thank you for such details, it sure is amazing how you can transport one to the time period. Deepest sympathies to families who have lost their loved ones.
-
27th December 2014, 10:47 AM
#2410
Senior Member
Senior Hubber
நிறைய எழுத வேண்டியிருக்கிறது..பட் கொஞ்சம் கொஞ்சம் நிறைய வேலை.. ம்ம்
நேற்று எதேச்சையாக கிடைத்த கேப்பில் பார்த்த பாடல் இது..கேட்கமட்டும் செய்திருக்கிறேன் முதல் முறை பார்த்தேன்.. கேட்கும் போது கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் என்றுஆரம்பிக்கும்..வீடியோவில் சிங்காரச் சோலையே உல்லாச வேளையே என இருக்கிறது..துள்ளல் பாட்டு..அந்தக்காலத்திலும் கொஞ்சம் குத்துப்பாட்டு ஸ்டெப்ஸ் இருந்திருக்கிறது
அப்புறம் வர்றேன்..
http://www.youtube.com/watch?feature...&v=JAb6EUr1zYs
Bookmarks