Page 255 of 397 FirstFirst ... 155205245253254255256257265305355 ... LastLast
Results 2,541 to 2,550 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2541
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2542
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks vasudevan31355 thanked for this post
  6. #2543
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  8. #2544
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2545
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    HAPPY BIRTHDAY TO THIRU MAHENDRAN SIR


  10. Thanks vasudevan31355 thanked for this post
  11. #2546
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஸாரி வாசு சார்.. கொஞ்சம் நிறைய வேலை, உடல் முடியாமை, திருப்பாவை கமிட்மெண்ட் – முன்பு எழுதிய உரை சாஃப்ட் காப்பி இல்லை என்பதால் டைப்படித்து தினமும் இடுவதால் கொஞ்சம் நேரம் குறைவாகிவிட்டது..இன்னிக்கு வருவேன்..கொஞ்சம் நிறைய..

    ஆரம்பத்துக்கு..
    கவிதையும் பாட்டும்..4
    நேற்று முக நூலில் எழுதியது இது..

    பூத்தூவிப் போன வழி
    ..பொலபொலன்னு மணங்கூட்ட
    நாத்துபோல நெஞ்சத்தில்
    .. நல்லநல்ல நற்கவிதை
    ஊத்தாகப் பெருக்கெடுத்து
    ..உணர்வெல்லாம் நெகிழவைக்க
    பாத்துக்கோ கலைவாணி
    ..பதம்பணிவேன் உன்னிடமே..

    http://www.youtube.com/watch?feature...&v=uaZqO6KC8VA

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  13. #2547
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கவிதையும் பாட்டும்..3

    மென்மைச் சிரிப்பழகாய் மேனியெங்கும் பூப்பூக்கும்
    தன்மையுடன் காற்றும் தயங்காமல் தான்வருடத்
    தூறெனத் தூற்றிடும் தூறலில் வரும்சுகமும்
    வேறெங்கும் உண்டோ விளம்பு

    வான் மேகம் பூப்பூவாய்த் தூறும்..இளம் ரேவதி டபக் டபக்கென துள்ளியாடும் பாடல். இது அந்தக் கால இளைஞர்களுக்கு..



    அதே சாரலில் துள்ளும் நயன்ஸ்.. இந்தக் கால இளைஞர்களுக்கு ஹி ஹி..

    http://www.youtube.com/watch?feature...&v=6C_1sBH75vI

  14. Likes kalnayak, vasudevan31355, Russellmai liked this post
  15. #2548
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கவிதையும் பாட்டும்..5

    காலங் கார்த்தாலே
    கவிச்சாரல் சிதறிவிழ
    வாலக் குமரிதமிழ்
    ..வக்கணையாய்ப் பாட்டுயிட
    சேல படபடத்தால்
    சின்னநெஞ்சு பொங்குதற்போல்
    வாள மீன்போல
    .வருகுதுவே கற்பனையே..

    எத்தரமாய் பாட்டுவரும் ஏக்கமுடன் மேல்நோக்கி
    எட்டியெட்டிக் கற்பனைநூல் தக்கபடி வண்ணமிட்டு
    பத்திரமாய் நெஞ்சுள்ளே பலவாறாய் ஆறவிட்டு
    பக்குவத்தைப் பார்த்துவிட்டு பாங்காகத் தறிபூட்டி
    உத்தேசம் இதுவென்று உணர்வினிலே வரும்விருத்தம்
    ஓங்கித்தான் தாளினிலே அழகாகத் தானெழுதி
    சித்தத்தில் உள்ளவற்றை இறக்கிவிட அஜந்தாவின்
    சித்திரமாய் நின்றிடுமே சிர்மல்கும் பாட்டதுவும்..!

    (இன்று காலை முக நூலில் நண்பருக்குஎசப்பாட்டாய் எழுதிப் பார்த்தது!)

    எப்படிச் சிந்திச்சாலும் பாட்டே வரமாட்டேங்குதுங்க்ணா..! என்ன செய்யலாம்.. எம்.ஜி.ஆரைக் கேட்போம்..!


  16. Likes kalnayak, vasudevan31355 liked this post
  17. #2549
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கவிதையும் பாட்டும்..6
    சோகமோ சந்தோஷமோ ராத்திரி நேரத்தில தனிமையில இருக்கறச்சே இந்த மூன் இருக்கே அதப் பாத்தோம்னாக்க நமக்குன்னு வந்த மாதிரி இருக்குமாக்கும்..

    பாவை அழகினைத்தான் பக்குவமாய் வர்ணிக்க
    தேவையுள வார்த்தைகள் தீர்ந்துவிட அங்கே
    கதியேது மில்லாமல் கற்றவர்கள் சொல்வர்
    மதியை மயக்கும் மதி

    “வானில் நடமிட்டு வட்டமுகம் கோணாமல்
    நாணி நகைபுரியும் நங்கையினைப் போலே
    வரையற்ற வண்ணவொளி வையத்தில் நன்றாய்
    நிறைத்தே அருளும் நிலவு
    *
    ஏக்கம் மிகக்கொண்டு ஏங்கிவரும் காதலரை
    தேக்கி நிறுத்தாமல் தென்றலுடன் கூடக்
    குளிர்வித்துக் காட்டின் மரநிழலில் அழகாய்
    ஒளியும் நிலவின் ஒளி
    *
    மன்னனா மற்றோரா மாயங்கள் செய்கின்ற
    கண்ணனா கள்வனா என்றெல்லாம் வெண்மதியும்
    எண்ணாமல் ஈவாள் ஒளியை அதுவுமவள்
    கொண்டிருக்கப் பெற்ற குணம்


    இங்க பாருங்க மூணு பேர் மூணுமூட் ஒண்ணு அடக்கமான காதல் ரெண்டு துள்ளல் காதல் பின் சோகம…இந்த நிலவை நான் பார்த்தால்…..

    ம்ம் வீட்டில பாட் போட்டுக்கிட்டுக் கேட்டா வந்த கமெண்ட்.. ஏங்க..வெள்ளிக்கிழமையும் அதுவுமா விஜயகுமாரி பாட்டா கேக்கணும்!


    http://www.youtube.com/watch?feature...&v=S1UyEzxDNPY

  18. Likes kalnayak, vasudevan31355 liked this post
  19. #2550
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 22)





    இளையராஜா தொடரில் அடுத்து 'சட்டம் என் கையில்' படத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாம். ஒரு ரஜினி படம் முடித்து விட்டாயிற்று. ஒரு கமல் படம் எடுப்போம். ஆனால் விஸ்தாரமாக இல்லை. பாடல்கள் மட்டுமே ஆய்வு.

    நிழல் நிஜமாகிறது, மதனோல்சவம், மரோசரித்ரா, இளமை ஊஞ்சலாடுகிறது என்று 1978 களில் கமல் தென்னகத் திரையுலகில் ஆழமாகக் கால் பதித்து வெற்றி பவனி வந்து கொண்டிருந்த நேரம். அப்போது அவரை இன்னும் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்திய படம் என்று இதைச் சொல்லலாம். ஆக்ஷனோடு கலந்த காமெடி படங்களை கமல் செய்வதற்கு ஸ்ட்ராங்காக அடித்தளமிட்ட படம். வசூலிலும் 'வார்ரே வா' தான்.

    இப்படம் பிரமாத வெற்றியடைய பல காரணங்கள் உண்டு. கமலின் இருவேட உழைப்பு, இயல்பான நகைச்சுவைக் காட்சிகள், நட்சத்திரப் பெரும் பட்டாளம், இளையராஜாவின் இசைப் பிரம்மாண்டம், நல்ல தெளிவான குழந்தைக்கும் புரியும்படியான திரைக்கதை மற்றும் இயக்கம், அருமையான வண்ணம், சூப்பர் நடனக் காட்சிகள், ஸ்ரீபிரியாவின் இளமை, சுருளியின் கலாட்டா, அசோகன், தேங்காயின் அமர்க்களம்.


    பாலு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேற்குறிப்பிட்ட நடிகர்களுடன் ஸ்ரீகாந்த், வி.கோபாலகிருஷ்ணன், புஷ்பலதா, காந்திமதி, அபர்ணா என்று ஏகத்துக்கும் நட்சத்திரங்கள். பாடல்களை கண்ணதாசனும், கவிஞர் திருப்பத்தூரானும் எழுத, ஒளிப்பதிவு செய்தவர் என்.கே விஸ்வநாதன். படத்தைத் தயாரித்து கதை, வசனம் எழுதி இயக்கித் தரமாகத் தந்தவர் நம் 'அஞ்சல் பெட்டி 520' இயக்குனர் டி.என்.பாலு அவர்கள்.

    சும்மா கலகலவென்று காட்சிகள் நகரும். இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவிற்கு கலகலப்பான ஒரு படம். இன்றும் கூட ரசித்து அனுபவித்துப் பார்க்கலாம். காமெடியில் கமல் கலக்குவார். அதுவும் இரட்டை வேடங்கள். ஒன்று நவநாகரீக இளைஞன். ஒருவன் மெட்ராஸ் பாஷை பேசிக் கலக்கும் லோகல் திருடன். இரு ரோல்களுமே டக்கர்.



    படத்தின் மாபெரும் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் இரு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று கமல். இரண்டாவது இசை. ராஜாவின் உழைப்பை இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.


    இப்படத்தின் பாடல்களைப் பற்றி தொடரில் எழுத இப்படத்தை மீண்டும் பெரிய இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். டைட்டில் இசை கேட்டதும் கடலூர் நியூசினிமாவில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் இப்படத்தை ரசித்துப் பார்த்தது அப்படியே நினைவுக்கு வந்துவிட்டது.

    மிக மிக அருமையான டைட்டில் இசை. இன்றும் அன்று ரசித்தது போலவே ஏன் இன்னும் ஒரு மடங்கு அதிகமாகவே ரசித்து பிரம்மித்தேன். பிய்த்து உதறி விடுவார் ராஜா. டைட்டிலில் இசை இளையராஜா என்று போடும் போது முதல் நிலை நட்சத்திரங்களின் பெயர்கள் போடும் போது கிடைக்கும் கைத்தட்டல்கள் விழும். இந்த சாதனையை நிகழ்த்திய பெருமை ராஜாவையே சாரும். டிரம்பெட், ஷெனாய் இவைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருப்பார் ராஜா. எத்தனை முறை கேட்டாலும் டைட்டில் இசை திகட்டவே திகட்டாது.


    இப்போது படத்தின் முதல் பாடலைப் பார்க்கலாம். .

    எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க
    கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
    கர்மம் தொலையட்டும் கையில எடு
    தர்மம் தழைக்கட்டும் அள்ளியே கொடு



    மெட்ராஸ் கமல் தன் குப்பத்து ஜனங்களுடன் தன் பிறந்த நாளில் ஆடிப்பாடும் சூப்பர் பாடல். லோ கிளாஸ் பாடல் போல இருக்கும். ஆனால் இசைப் பின்னல் பிரமாதம். கமல் வேட்டி சட்டையில் ஆடுவார். மிக எடுப்பான மலேஷியா வாசுதேவனின் கணீர்க் குரல். சீர்காழிக்குப் பிறகு சரியான கணீர்க் குரல் கொண்டவர் இவர். ஆண்மைத்தனம் அப்பட்டமாக குரலில் எதிரொலிக்கும். வார்த்தைகள் தெள்ளத் தெளிவாக காதில் விழும். பாடலில் பல நல்ல கருத்துக்கள் எளிமையாக எதிரொலிக்கும். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் பாணிப் பாடல்.

    ஆடிக்குப் பின்னால்தானே ஆவணி சிட்டு
    இந்தா தாவணி கட்டு
    யாருக்கும் சொந்தம் தானே ஆண்டவன் சொத்து

    பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு
    இது புத்திக்கு வித்து
    நீ பாரதம் காக்க வேணும் பட்டத்தைப் பெத்து

    மிக எளிமையான வரிகளில் ஆழமான கருத்துக்கள். படிப்பின் அருமை பெருமையை ஜோராக உணர்த்தும் வரிகள்.


    பஞ்சமென்று வந்தவர்க்கு சோறு போடு
    பாரில் உள்ள செல்வங்களை கூறு போடு
    நெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு

    நல்ல நல்ல தலைவர்கள் நாட்டில் பிறந்தார்
    ஏழை வீட்டில் பிறந்தார்
    நாட்டினைக் காக்க சிறைக் கூட்டிலிருந்தார்
    கல்லுக்குள் நாருரிக்கும் ஆளுமிருந்தார்
    அவர் வாழ்வும் அடைந்தார்
    காலத்தின் வெள்ளத்திலே ஓடி மறைந்தார்

    ஒத்துமைக்கு என்றும் உண்டு வரலாறு
    அது ஊர் கெடுக்கும் பேர்வழிக்குக் கிடைக்காது

    தத்துவத்தில் என்றும் இல்லை தகராறு


    கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் எவ்வளவு அற்புதமான கருத்துக்கள் அதுவும் ஜனரஞ்சகமாக!

    பெரும் கூட்டத்துக்கிடையே எடுக்கப்பட்ட பாடல் காட்சி. பாடலின் இறுதியில் அவ்ளோவ் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு அசோகன் கமலை கழுத்தில் அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும் ஆச்சரியம். கமல் ரொம்ப ஈஸியாக ஆடி விடுவார்.

    மெட்ராஸ் கமல் குப்பத்தில் ஆடத் துவங்கும் போது ராஜாவின் குப்பத்துகேற்ற குதூகல இசை. அதே சமயம் லண்டன் கமல் பிறந்த நாள் கொண்டாடும் போது மேற்கத்திய இசை அற்புதமாக துள்ளல் போடும். (உத்தமபுத்திரன் படத்தில் வருவது போல)

    ரசகுல்லா பாடல்தான்.


    Last edited by vasudevan31355; 9th January 2015 at 12:04 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Likes Russellmai, kalnayak, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •