Page 257 of 397 FirstFirst ... 157207247255256257258259267307357 ... LastLast
Results 2,561 to 2,570 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2561
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கர்ப்பிணி மனைவியரிடம் கணவர்கள் பாடும் பாடல்.

    பாடல் இரண்டு
    பாணி ஒன்று


    தொடர் 12

    தானே தனக்குள் ரசிக்கின்றாள்
    தலை முழுகாமல் இருக்கின்றாள்

    கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை கண்டு கணவன் சந்தோஷப்படுவதைக் கவனியுங்கள்.

    காலம் வரும்வரை தாயின் வயிற்றிலே
    கால்கள் உரைத்திடும் நாதம்
    ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்
    உதைக்கும் என்பதே வேதம்

    ஆண்பிள்ளை இடது புறமும் பெண் பிள்ளை வலது புறமும் உதிக்கும் என்பது ஆன்றோர் மொழி.

    பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது
    சிறிய பங்குதான் கண்ணே
    பத்தியத்திலும், சத்தியத்திலும்
    தாய்மை காப்பவள் பெண்ணே

    மிக அருமையான ஜேசுதாசின் குரலில் பெண்களைக் கவர்ந்த பாடல். ரொம்ப நாள் எதிர்பார்த்து 'யூ டியூபி'ல் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது. அப்லோட் செய்தவருக்கு மிக்க நன்றி. முத்துராமன் சுஜாதா இணைவில்
    மிக அரிதான அருமையான ஒரு பாடல். 'பேரும் புகழும்' படத்தில்.



    இதோ இந்தக் கணவனும் மனைவியும் தங்களுக்கு நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து இப்போது அந்தப் பாக்கியத்தைப் பெறப் போகிறார்கள். இந்தக் கணவனுக்கும் மனம் முழுக்க சந்தோஷம்.
    அந்தப் பாடலில் அந்த நாயகன் பாடியது போலவே இந்தப் பாடலில் இந்த நாயகனும்

    வலது புறம் தாய் படுத்தால்
    ஆம்பிளப் பிள்ளை
    மாங்காய் தின்னா சாம்பல் தின்னா
    பொம்பளைப் பிள்ளை
    இதில் சந்தேகம் இல்லை

    என்று பாடுகிறார்.

    'தொட்டில் கட்டும் யோகம்
    ஒன்றை தெய்வம் தந்தாச்சு
    இந்த யோகம் நல்ல யோகம்'

    'தியாகி' படத்தில் நடிகர் திலகம் சுஜாதாவிடம் பாடும் பாடல். இதிலும் நாயகி சுஜாதாவே.

    Last edited by vasudevan31355; 10th January 2015 at 10:04 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan, kalnayak, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2562
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கலை சார்,

    நீங்கள் பதிவு செய்து ஆய்வு செய்திருந்த 'கறுப்புப் பண'ப் படப் பாடல் அபூர்வமான ஒரு பாடலே. இப்போது பாடலைப் பதிவிடுகிறேன். நாளை தங்களுக்கு பதில் எழுதுகிறேன். முதலில் அற்புதமான அதுவும் என் பிரிய ராட்சஸி பாடிய அதிகம் எவரும் கேட்டிராத பாடலைப் பற்றி ஞாபகப்படுத்தி பெருமைப் படுத்தியதற்கு மிக்க நன்றி! தங்கள் ரசனைக்கும் என்னுடைய செல்ல ஷொட்டு. திரியின் மேல் தாங்கள் கொண்டிருக்கும் அதீத அக்கறைக்கும் என் தலைவணங்கிய நன்றிகள்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks Russellmai thanked for this post
  6. #2563
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    VASUDEVAN SIR !

    PLEASE WRITE THE SONGS OF CHINNATHAMBI ! WOULD LOVE TO READ YOUR VIEWS...!

    CHINNATHAMBI IS RE-RELEASING SOON !!

    REGARDS
    RKS



    COMING SOON...........

    TRICHY RAMAKRISHNA......
    TIRUNELVELI CENTRAL......

    MADURAI CENTRAL.......... ALL DAILY 4 SHOWS !
    COIMBATORE ROYAL........
    CHENNAI ANNA...............

    ILAYA THILAGAM PRABHU's BLOCKBUSTER
    " CHINNA THAMBI
    "


    DESIGN COURTESY & CONTRIBUTION - OUR HUBBER & THALAIVARIN PILLAI SUNDERRAJAN !



    Any Photos of this film / Release Advertisements of this films / Any Flashback of this Film release may please be shared here..! Thanks !




  7. #2564
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கலை சார்!

    நன்றி!

    நேற்று அவசரமாக 'கறுப்புப் பணம்' பாடல் மட்டும் பதிவிட்டு சென்று விட்டேன். மன்னிக்கவும்.

    மிக அருமையானதொரு பாடலை எடுத்து அலசியுள்ளீர்கள். சுவிஸ் வங்கி இந்தியர்கள் கறுப்புப் பணம் பற்றி தாங்கள் அளித்திருந்த பதிவு திகிலூட்டுகிறது. நீங்கள் கூறியுள்ளபடி எந்த அரசாங்கமாய் இருந்தால்தான் என்ன?... கறுப்புப் பண அரக்கனுக்கு முடிவே கிடையாதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    //அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், நடிகர் திலகம், மக்கள் திலகம், திரு.கருணாநிதி என்று எல்லாரோடும் கவியரசர் முரண்பட்டார். ஆனாலும், அவர் கவியரசர் என்பதில் யார்தான் முரண்பட்டார்?//

    சத்தியமான வார்த்தை. மிக மிக அழகாக சொல்லி விட்டீர்கள். அவர் கவியரசர் என்பதில் முரணுக்கே இடமில்லை.

    நீங்கள் சொல்லியது போல மிக சாமர்த்தியமான காட்சி செருகல்.

    அருமையான பதிவிற்கு நன்றிகள் பல கலை சார்.

    ஈ.வி.கே.சம்பத்தும், அதே கெட் -அப்பில் 'கறுப்புப் பணம்' படத்தில் கவிஞர் கண்ணதாசனும்

    Last edited by vasudevan31355; 11th January 2015 at 04:38 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai liked this post
  9. #2565
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ‘கையிலே பணமிருந்தால்...’பாடலை தரவேற்றியதற்கு நன்றி திரு.வாசு சார்.

    மதுர கானம் திரி மீது எனக்கு அக்கறை உண்டு என்றாலும் சுயநலமும் உண்டு. மக்கள் திலகம் திரியில் அவர் சம்பந்தப்பட்ட படங்கள், பாடல்கள், செய்திகள் போட்டால்தான் பொருத்தமாக இருக்கும். மற்ற பாடல்களை அங்கு போடுவதோ, அதைப் பற்றி எழுதுவதோ பொருத்தமாக இருக்காது. எல்லா நடிகர்களின் திரிகளுக்கும் இது பொருந்தும்.

    எல்லாருக்குமே, அவரவர் அபிமான நடிகர் நடித்த படங்களின் பாடல்கள் இல்லாத (அதையும் எழுதவும் இங்கே இடம் உண்டு)மற்ற பாடல்களையும் ரசித்து எழுத உதவும் இந்த திரி சிறப்பாக இயங்க வேண்டும். அப்போதுதான் நானும் மற்ற பாடல்களை பற்றியும் எழுத முடியும் என்ற சுயநலமும் என் அக்கறைக்கு காரணம். அதற்கு வாய்ப்பு உருவாக்கி கொடுத்து, இசை என்ற மையப் புள்ளியில் எல்லாரையும் இணைத்த உங்களுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    தங்களின் பாராட்டுக்கும் எனக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர்களில் ஒருவரான சொல்லின் செல்வர் திரு.சம்பத் மற்றும் அவரைப் போன்ற கெட் அப்பில் கறுப்புப் பணம் படத்தில் தோற்றமளிக்கும் கவியரசரின் படங்களை பதிவிட்ட உங்களுக்கு சிறப்பு நன்றி வாசு சார்.

    திரு.ஆர்.கே.எஸ்., எங்கே உங்களை அடிக்கடி பார்க்க முடியவில்லை? நீங்கள் இல்லாமல் விறுவிறுப்பாக இல்லை. எப்போது முழு வீச்சில் திரும்புவீர்கள்?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Thanks vasudevan31355 thanked for this post
  11. #2566
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ஏன் 'பக்'குன்னு நிறுத்திட்டேள்? அம்புட்டு பேரும் எங்கே போனாங்க? யாரும் பதியலைன்னா நான் பதிஞ்சிடுவேன். அதுக்குப் பின்னாடி என் மேல கோபப்படக்கூடாது. ஆமாம் முன்னாடியே சொல்லிட்டேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. #2567
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக் சார் பண்ணுங்கோ.. கொஞ்சம் வொர்க் ப்ரஷ்ஷர் அண்ட் ஹெல்த் காம்ப்ளிகேஷன்ஸ்.. டு நைட் ஐ வில் ட்ரை டு கம்ங்க்னா..மீட் யூ டு நைட் இன் தி மூன்லைட்.


  13. Thanks kalnayak, vasudevan31355 thanked for this post
  14. #2568
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கொஞ்சம் வேலை கல்நாயக் சார். நாளை வந்து விடுவேன். நீங்கள் தாராளாமாகப் பதியுங்கள். உங்கள் பதிவுகளுக்கு முதல் ரசிகன் இந்த கடலூர்க்காரன். சிலர் கொஞ்ச நாட்களாக வரவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. புத்தாண்டு, பொங்கல் வேலை நிமித்தமாக இருக்கலாம். பொங்கல் கழித்து நிலைமை சீராகும் என்று நம்புவோம். அதுவரை இப்பாடலைக் கண்டு களித்திருங்கள்.

    'தெய்வீக ராகங்கள்' படத்தில் ஜெயச்சந்திரனும், வாணியும் படிய 'பாவை நீ மல்லிகை' என்ற அருமையான பாடல். ஸ்ரீகாந்த் நாயகன். நாயகி பிரியவதனா. மனதை மயக்கும் பாடல்தான்.

    Last edited by vasudevan31355; 13th January 2015 at 01:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks kalnayak thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #2569
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நானும் ராஜண்ணாவும் பாண்டியனில் விரைந்து கொணடிருந்தோம்.
    ஆமாம். ராஜண்ணாவுடன் ரயில் வண்டி அனுபவங்கள்தான். போடுவோமா முதலில் ஒரு பாட்டு.



    கிளம்பிய சற்று நேரம் கழித்து அண்ணன் சற்றே காலார நடந்து வரச்சென்றார். நான் அருகில் அமர்ந்திருந்த மற்றொருவருடன் பேச ஆரம்பித்தேன்.

    திண்டுக்கல்லில் தனது உறவினர் வீட்டுக்கு போவதாக சொன்னார். நானும், ராஜண்ணாவும் கூட திண்டுக்கல்லில் இறங்குவதாக சொன்னேன். அவர் தனது படுக்கையை தயார் படுத்திக்கொண்டார்.

    ஏறி படுத்தவர் அதற்கு முன்னதாக 'திண்டுக்கல் அடைவதற்கு சற்று முன்னதாக நீங்கள் என்னை எழுப்புகிறீர்களா?' என்று மெல்ல என்னிடம் கேட்டுக் கொண்டார்.



    அப்போது பார்த்து திரும்பிவந்தார் நமது நாயகர். சற்று நேரம் கழித்து மேலே இருந்தவர் உறங்கிவிட்டாரா என்று உறுதி செய்து கொண்டு என்னிடம் "என்ன கேட்டார் இவர்?" என கேட்டார்.

    "திண்டுக்கல்லில் எழுப்பிவிடச் சொன்னார்" என்றேன்.

    "நீ சம்மதித்து விட்டாயா?" என கேட்டார்.

    "ஆமாம். சரி என்று சொல்லிவிட்டேன்."

    "இல்லை. உனக்கு விவரம் தெரியாது. பிரச்னைதான்" என்றார்.

    "இதில் என்ன பிரச்னை? நாமும் அங்கேதானே இறங்குகிறோம். நாம்தான் முன்னதாக எழுந்துவிடுவோமே? " என்றேன்.



    (தொடரும்)
    Last edited by kalnayak; 13th January 2015 at 03:50 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. Likes Russellmai, chinnakkannan liked this post
  18. #2570
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like


    "முன்பு ஒரு முறை நான் சென்னையிலிருந்து பாண்டிக்கு (புதுச்சேரி) இரவு பத்து மணிக்கு மேல் வந்து கொண்டிருந்தேன். எனது இருக்கை முன் வரிசையில் இருந்தது."

    "பேருந்தில்தானே?" என்று கேட்டேன்.

    "ஆமாம். எனக்கு இடது பக்கம் ஒருவர் உட்கார்ந்திருந்தார். வண்டி தாம்பரத்தில் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தது."

    "அருகிலிருந்தவர் எங்கேயாவது எழுப்பிவிடச் சொன்னாரா?" என்றேன்.

    "சற்று அமைதியாக கேளேன். சொல்கிறேன்." என்றவர்

    "ஆமாம் பேருந்து நகர எல்லையை, புறநகர் பகுதிகளை தாண்டி ஓடிக் கொண்டிருந்த போது,

    அருகிலிருந்தவர் என்னைப்பார்த்து
    'களைப்பாக இருக்கிறது. நான் தூங்கிவிட்டால் எழுப்புகிறீர்களா? சூடாக ஒரு டீ சாப்பிட வேண்டும்' என்றார்.

    நானும் 'அதற்கென்ன தாராளமாக எழுப்புகிறேன். டீ கடை கண்ணில் தெனபடட்டும்' என்றேன்." என்றார்.



    நான் அமைதியாக அவர் சொன்னபடியே கேட்டுக்கொண்டிருந்தேன்,

    முகத்தில் 'இதனாலென்ன பிரச்னை உண்டாயிற்று?' முகத்தினால் கேட்டேன்.

    "நானும் உன்னைப்போல், இதனாலென்ன பிரச்னை வந்துவிடபபோகிறது என்றுதான் சம்மதித்திருந்தேன்.

    இடதுபக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என்னைப்பார்த்து முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கோபத்தில் கத்தினார் -

    'யோவ் அறிவிருக்கா உனக்கு. அவர் தூங்குவாராம். இவரு டீக்கடையில் எழுப்புவாராம்.'

    'இதில் என்ன தப்பு?' என்று நான் பதிலுக்கு கத்த. ஒரே சண்டை.

    அப்புறம் அவர் சொன்னதைக் கேட்டுத்தான் என் தப்பை புரிந்து கொண்டேன்' என்றார்"



    "அவர் அப்பிடி என்ன சொன்னார்?" - சஸ்பென்ஸ் தாங்காமல் நான் கேட்டேன்.

    ராஜண்ணா தொடர்ந்தார் - "என்னுடன் சண்டை போட்ட பக்கத்து இருக்கைக்காரர் என்னைப்பார்த்து கேட்டார்.

    'பஸ்ஸை ஓட்டுறவரே தூங்கிட்டாருன்னா, நாம ஊரு போய்ச் சேர மாட்டோம். பரலோகம்தான் போய்ச் சேருவோம்'.

    'இப்பவே வண்டியை நிறுத்தி இறங்கிக்கலாம்'-னார். அப்பதான் என் தப்பை புரிந்து கொண்டேன்" என்றார்.



    (தொடரும்)
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •