Page 307 of 400 FirstFirst ... 207257297305306307308309317357 ... LastLast
Results 3,061 to 3,070 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #3061
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    http://dinaethal.epapr.in/466410/Din...2015#page/13/1

    For saving/records purposes only, do not read small letters

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3062
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3063
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் "வியர்வை முத்துக்கள்"என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.
    "வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.
    என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.
    தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
    இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
    உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
    உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
    நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
    உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
    ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
    உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
    எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
    நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
    ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
    ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
    உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான "காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்" தான்.
    உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
    "உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
    ஒரே ஒரு சந்திரன் தான் ;
    ஒரே ஒரு சூரியன் தான் ;
    ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் !
    - கவிஞர் வைரமுத்து .

  5. #3064
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில் „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ .
    நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
    „பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'

    „எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
    இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.

    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.

    மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
    பாடல் காட்சியில் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.

    பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.

    டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார் (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.

    விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.
    Courtesy - thiru ayya pillai - net

    இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டதை மேற்கோள் காட்டி பதிவு செய்த வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !

    அந்த இணைய தள செய்தியில் சொல்ல மறந்தது :

    நம் மக்கள் திலகம் அவர்களது காவியங்களில், பெரும்பாலும் கதாநாயகிதான் கனவு காண்பாள் என்ற ஒரு எதிர்மறையான விமர்சனத்தை தகர்த்தெறிந்து, நாயகன் கனவு காணும் வித்தியாசமான காட்சி



    இந்த " பணம் படைத்தவன் " காவியத்தில் "பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.." என்ற பாடலில் இடம் பெற்றது.

    நம் பொன்மனச்செம்மல் அவர்கள் கதா நாயகனாக நடித்த "விவசாயி" காவியத்தில், அவர் கனவு காணும் மற்றொரு பாடல் காட்சிதான் "என்னம்மா, சிங்கார கண்ணம்மா".
    Last edited by makkal thilagam mgr; 26th March 2015 at 03:19 PM.

  6. Likes ainefal liked this post
  7. #3065
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் "வியர்வை முத்துக்கள்"என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.
    "வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.
    என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.
    தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
    இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
    உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
    உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
    நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
    உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
    ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
    உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
    எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
    நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
    ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
    ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
    உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான "காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்" தான்.
    உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
    "உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
    ஒரே ஒரு சந்திரன் தான் ;
    ஒரே ஒரு சூரியன் தான் ;
    ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் !
    - கவிஞர் வைரமுத்து .
    நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் பெருந்தன்மையை பறை சாற்றும் இது போன்ற செய்திகள், நிகழ்வுகள் ஏராளம்.

    "குறள் நெறி கண்ட குணாளராம்" நம் பொன்மனசெம்மலை அதனால்தான் "பெருந்தன்மையின் சிகரம்" என இன்றும் அழைக்கின்றனர்.

  8. Thanks ainefal thanked for this post
    Likes ainefal liked this post
  9. #3066
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் பெருந்தன்மையை பறை சாற்றும் இது போன்ற செய்திகள், நிகழ்வுகள் ஏராளம்.

    "குறள் நெறி கண்ட குணாளராம்" நம் பொன்மனசெம்மலை அதனால்தான் "பெருந்தன்மையின் சிகரம்" என இன்றும் அழைக்கின்றனர்.
    "அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து.
    அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர்.
    வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.


    இந்த கருத்தை 8th மார்ச் 2015 அன்று என்னுடைய 397வது பதிவின் வழியாக தெரிவித்து இருந்தேன். இன்று மீண்டும் இங்கே அதனை பதிவு செய்கிறேன்.
    Last edited by Tenali Rajan; 26th March 2015 at 08:22 PM.

  10. Likes ainefal liked this post
  11. #3067
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

    சரோஜாதேவி
    தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
    ஜெயலலிதா
    புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
    தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது

    வெண்ணிற ஆடை நிர்மலா
    என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
    நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
    மஞ்சுளா
    அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடில்லை என்று
    ஓடும் வெட்கத்திலே
    லதா
    மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
    அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
    ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
    பத்மினி
    நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
    அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
    எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

    ராஜ சுலோச்சனா
    அன்புத் திருமுகம் காணாமல் -
    நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
    காலப் புயலில் அணையாமல் -
    நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
    உதய சூரியன் எதிரில் இருக்கையில்
    உள்ளத்தாமரை மலராதோ ?
    அஞ்சலி தேவி
    அன்பு மிகுந்திடும் பேரரசே
    ஆசை அமுதே என் மதனா
    ராஜஸ்ரீ
    இளமை பொங்கும் உடலும் மனமும்
    என்றும் எனதாக
    உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
    சாவித்திரி
    அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
    தோள்களில் எத்தனை கிளிகளோ
    அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
    பார்வையில் எத்தனை பாவமோ
    பானுமதி
    சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
    திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
    சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
    கே.ஆர். விஜயா
    நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
    லக்ஷ்மி
    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
    அழகில் நீயொரு புதிய கலை
    உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
    வாணிஸ்ரீ
    அடிமை இந்த சுந்தரி
    என்னை வென்றவன் ராஜ தந்திரி

    சௌகார் ஜானகி
    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
    என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
    உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
    ரத்னா
    அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
    கன்னி மயிலாடும் மார்பழகன்

    எல் .விஜயலட்சுமி
    உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
    உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
    நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
    நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

    தேவிகா
    இணையத் தெரிந்த தலைவா
    உனக்கு என்னைப் புரியாதா
    தலைவா என்னைப் புரியாதா
    பத்மப்ரியா
    அமுத தமிழில் எழுதும் கவிதை
    புதுமை புலவன் நீ
    புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
    புரட்சி தலைவன் நீ
    ராதா சலுஜா
    இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
    உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
    உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
    காஞ்சனா
    இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
    புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை

    அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்கள் அறிவது :

    இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.

    அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற வரிகளும், கவனத்தில் கொள்ளத்தக்கது.



    Last edited by makkal thilagam mgr; 26th March 2015 at 07:54 PM.

  12. Likes ainefal liked this post
  13. #3068
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  14. #3069
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    FROM 27.03.2015 AT SHANMUGHA THEATRE, COIMBATORE

  15. #3070
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    ENGA VEETU PILLAI - 50 YEARS - NAKEERAN SPECIAL VIDEO


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •