-
9th April 2015, 10:44 AM
#3291
Senior Member
Senior Hubber
குட் மார்னிங் எவ்ரிபடி,
சி.க,
இப்பிடி பண்ணிட்டீங்களே!!! வானில் முழு மதியை கண்டேன் பாடலை எழுதனும், எழுதனும்-னு இருந்தேன். திடீர்னு பார்த்தால் நீங்க எழுதிட்டீங்க.சரி. சரி. நீங்க எழுதினா என்ன. நான் எழுதினா என்ன. ச்சே. ச்சே. நீங்க எழுதினா நெறைய அந்த பாடலை பற்றி எழுதிவீங்க. இங்கேயும் கவிஞர் பத்தி நெறைய எழுதி இருக்கீங்களே. நான் ஜஸ்ட் பேரை மட்டும்தான் குறிப்பிடுவேன். நன்று
கவி கா.மு ஷெரிஃப் அவர்களின் திரைப் பாடல் வரிசை பிரமிக்க வைக்கிறது. அவ்வளவும் அற்புதமான பாடல்கள். மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.
அற்றைத் திங்கள் பாட்டிற்கு உங்கள் பதிலாக வந்த பாட்டு "சித்திரையில் என்ன வரும்" அருமை. "யுகபாரதி"-க்கு நன்றி.
Last edited by kalnayak; 9th April 2015 at 10:58 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th April 2015 10:44 AM
# ADS
Circuit advertisement
-
9th April 2015, 10:47 AM
#3292
Senior Member
Seasoned Hubber
kalnayak
venmukile konja neram , aagaya veethiyil idhellam pottengala(enakku paartha gnyabakam illai)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th April 2015, 11:11 AM
#3293
Senior Member
Senior Hubber
வாங்க யுகேஷ்பாபு,
மிக அழகான பாட்டோட மதுர கானம் திரிக்கு வந்திருக்கீங்க. தமிழ் எழுத்துக்களில் வலிமையாய் சொல்லுவதகென்றே வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன. கவிஞர்கள் வித்தியாசமாக வலிமையுடன் ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் இந்த வல்லின எழுத்துக்களை பெரும்பான்மையாய் பயன்படுத்தும் பாடல்களை எழுதுவார்கள்.
தமிழ் இலக்கியத்தில் கலிங்கத்துப்பரணி-க்கு தனிப் பெரும் இடம் உண்டு. அது குலோத்துங்க சோழன் கலிங்கத்தை தன் தளபதி கருணாகரத் தொண்டைமான் பல்லவன் உதவியுடன் பெரும் போர் நடத்தி வெற்றி கொண்டதை ஜெயங்கொண்டார் பாடியுள்ளார். பரணி என்ற வகை ஆயிரம் யானைகளை கொன்று போரில் வெற்றி கொண்ட மன்னர்களை பாடும் ஒரு பாடல் வகை. இது எல்லாம் இங்கு பலருக்கு தெரிந்திருக்கும். அந்த கலிங்கத்துப் பரணியில் போரின் துவக்கத்தை இவ்வாறு வலிமையான வார்த்தைகளால் பாடுகிறார் "எடும் எடும் என எடுத்ததோர், இகலொலி கடலொலி இகக்கவே" என்று. அந்த பாடல் முழுவதும் க, ச, ட, த, ப என்று வல்லின எழுத்துக்களை அழுத்தமாக பயன்படுத்தி எழுதி இருப்பார் பாருங்கள். அவ்வளவு அழகாக இருக்கும். பின்னாளில் தமிழ் புலவர்கள் கவிஞர்கள் யாவரும் இவ்வாறே அழுத்தமாக ஒன்றை சொல்ல வேண்டுமானால் வல்லின எழுத்துக்களை பயன் படுத்தினார்கள்.
பின்னாளில் கவிஞர் வைரமுத்து ஜென்டில்மேன் படத்தில் 'ஒட்டகத்தை கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ' என்று எழுதியது கூட இதைப் பார்த்துதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். கவியரசர் கவியரசர் கண்ணதாசனின் வல்லின பயன்பாட்டிற்கு இது ஒரு உதாரணப் பாடல். நீங்கள் சொன்னதுபோல் கவியரசர் தனது பாணியில் கருத்துக்களை அருமையாக சொல்லி இருக்கிறார். கேட்கவும் மிக இனிமை. குங்குமப்பூ சிரிப்பு பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது. சி.க.வும் மகிழ்ந்து பாராட்டி விட்டார். அப்புறம் என்ன. அவர் கேட்ட சந்தேகம் யாராவது தீர்க்க வேண்டும். என்னுடைய சந்தேகங்களை அவர்தான் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார். நான் எங்கே அவர் சந்தேகத்தை தீர்ப்பது?
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
9th April 2015, 11:22 AM
#3294
Senior Member
Senior Hubber
மிகப் பெரிய எழுத்தாளர் ஜெயகாந்தன், கணீர்க்குரலுக்குச் சொந்தக்காரர் நாகூர் ஹனீபாவின் மறைவுச் செய்தியுடன் இன்றைய பொழுது விடிந்திருக்கிறது.. மிகவும் சோகமாக இருக்கிறது..
ஜெயகாந்தன் கவிஞரும் கூட. பாதை தெரியுது பார் படத்திற்காக அவர் எழுதிய பாடல்..
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது
ம்ஹ்ம் சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது
நீலமேகம் ஏழு வண்ண
ஆடையோடுலாவுது
வானை பூமி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது
நாகூர் ஹனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
-
9th April 2015, 11:25 AM
#3295
Senior Member
Senior Hubber
கல் நாயக் வாங்க.. நன்றி..
ஜெயகாந்தனைப் பற்றி நிறைய எழுதவேண்டும்.. நேரம் தான் இப்போது இல்லை..
சில நேரங்களில் சில மனிதர்கள்..வேறு இடம் தேடிப்போவாளோ மறக்க முடியுமா..
வேறு இடம் தேடித் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள்
விதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்
பருவ மழை பொழிய பொழிய பயிர் எல்லாம் செழிக்காதோ
இவள் பருவ மழையாலே வாழ்கை பாலைவனமாகியதே
தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ
இவள் தரவில்லை பெறவில்லை தனி மரமாய் ஆனாளே
சிறு வயதில் செய்த பிழை சிலுவயென சுமக்கின்றாள்
இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ, மலரெனவே முகிழ்ப்பாளோ
ரொம்பப் பிடித்த பாட்டு..ரொம்பப் பிடித்த நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள்..அதைவிட அவர் நாவலுக்கு முன்
எழுதிய அக்கினிப் பிரவேசம் சிறுகதை ரொம்ப்பப் பிடிக்கும்..(அது தான் சி நே சி ம நாவலாக எழுதினார்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th April 2015, 11:32 AM
#3296
Senior Member
Senior Hubber
ஹாய் ராஜேஷ்,
"வெண்முகிலே கொஞ்ச நேரம்" போடவில்லை. நீங்கள் போட்டு விட்டீர்கள். நல்ல பாடல் இசையரசியின் குரலில். நன்றி.*இதிலே நிலா வருகிறதா. மறுபடி கேட்டு உறுதி செய்து கொள்கிறேன்.
"ஆகாய வீதியில்" சீக்கிரம் போடுகிறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
9th April 2015, 12:31 PM
#3297
Senior Member
Senior Hubber
நாகூர் ஹனீஃபா அவர்களின் மறைவிற்கும், தமிழ் இலக்கிய உலகின் புரட்சியாளர் ஜெயகாந்தன் அவர்களின் மறைவிற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
Last edited by kalnayak; 9th April 2015 at 12:47 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
9th April 2015, 01:52 PM
#3298
Senior Member
Senior Hubber
ஓகே. நிலா பாட்டு கொடுங்க கல் நாயக்.. சூரியனை வேணும்னா இப்ப நான்கூப்பிடறேன் 
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று ஏறெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் சிவந்ததடி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th April 2015, 06:57 PM
#3299
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 62: "வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா"
-----------------------------------------------------------------------------------------------
மிகவும் பிரபலமான ஒரு பாடல். கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் எல்லா வரிகளும் லா-வில் முடிகின்றன. அற்புதமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல். இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனை எப்படி பாராட்டுவது? நடிகர் சிவச்சந்திரன் பாடுவது போல பாடல் வருகிறது திரையில். நாயகியின் பெயர் தெரியவில்லை.
பாட்டு வரிகள் இதோ:
--------------------------------
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)
தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!
காணொளி இதோ:
-----------------------------
பட்டினப் பிரவேசம் பண்ணியவுக எல்லாம் இப்படி பாடினால் எம்மாங்கவிதை கெடைக்கும்? இந்த படத்தை பத்தி சி.க. கொஞ்சம் சொல்லுங்களேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th April 2015, 08:51 PM
#3300
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ஓகே. நிலா பாட்டு கொடுங்க கல் நாயக்.. சூரியனை வேணும்னா இப்ப நான்கூப்பிடறேன்
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று ஏறெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் சிவந்ததடி
idho original video
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks