-
12th April 2015, 05:56 PM
#981
Junior Member
Veteran Hubber
அன்பு நண்பர் ரவிகிரண்/ஜோ.
நடிகர்திலகம் திரியில் வரலாற்று சிறப்பு மிக்க அவர் புகழ்பாடும் ஆயிரக்கணக்கான பதிவுகளுக்கு நீங்கள் இருவருமே சொந்தக்காரர்கள். எங்களைப் போன்ற
வளர்ந்துவரும் பதிவர்களுக்கு வழிகாட்டிகள்
இந்த விவாதத்தை இப்படியே நிறுத்தி விட்டு சற்று இளைப்பாறி நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் வைரங்களை பதிக்க வரவேண்டுமென்று இறைஞ்சுகிறேன்
செந்தில் , வணக்கங்களுடன்
-
12th April 2015 05:56 PM
# ADS
Circuit advertisement
-
12th April 2015, 06:37 PM
#982
Junior Member
Newbie Hubber
ஜோ வோடு நான் உடன் படுகிறேன். ஹிந்தி தெரிந்தவர்களோடு ஒப்பிடும் போது ,நாங்கள் ஒன்றும் குறைந்து விடவில்லை. எங்களில் யாராவது ஒருவர் மிச்சம் உள்ள வரை ஹிந்தி தமிழகத்தில் நுழைய முடியாது. பெரியார் என்ற ஒருவர் இல்லாவிட்டால் பலர் தலை நிமிர்ந்திருக்க முடியாது.
கலை- பஞ்சத்திற்கு காங்கிரஸ் காரணமல்ல. பல போர்கள், நிறைய இயற்கை பேரிடர். இதனை தி.மு.க நன்கு உபயோகித்து கொண்டது.
ஆனால் பக்தவத்சலத்திடம் ,காமராஜ் ஆட்சியை ஒப்படைத்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவானது.
செல்வகுமார்- உங்கள் பதிவு நன்றாக இருந்தது மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியருக்கணும் நல்ல உதாரணம். இப்போது தாலியறுக்கும் வைபவமாயிற்றே தமிழகம் முழுதும்.
ரவிகிரண் - உங்களுடையது பயங்கர எதிர்ப்பு பார்வை. எனக்கு எந்த கட்சியும் பிடிக்காது . எல்லா கட்சிகளும் பிடிக்கும்.(உங்களுக்கு புரிய முடியாது)
பி.கு- கலை ,கட்சிகளுக்கு மட்டுமே. இது பொருந்தும். private ownership அறவே ஒவ்வாது.
சிவாஜிக்கு அத்தனை கட்சிகளுடன் தொடர்பு உண்டு. அதனால் அரசியல் ஒன்றும் இங்கு தோஷம் இல்லை.
-
12th April 2015, 06:51 PM
#983
Junior Member
Newbie Hubber
கலை,
எலிக்கறி விஷயம்,திராவிட கட்சிகள் சொன்ன படி ,காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளல்ல. ஒரு scientific Report ஒன்று
எலிகறியில் நிறைய சத்து உள்ளது. அபாயமற்றது . மலிவான ஒன்று .என்று சொன்னது. இதைத்தான் உணவு பதிலியாக ,அரசால் சிபாரிசு செய்ய பட்டது. ஆனால் இதை பயங்கர sensation ஆக்கியது திராவிட சாமர்த்திய அரசியல் சாதுர்யம்.
-
12th April 2015, 07:44 PM
#984
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
கவியரசர் கண்ணதாசனை நீங்கள் நம்ப வேண்டாம் திரு.ஆர்.கே.எஸ்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டதும் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னதும் மூதறிஞர் ராஜாஜியே காங்கிரசை ஒழிக்க, திமுகவோடு கூட்டணி அமைத்து உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னதும் வரலாற்று உண்மைகள். இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன் அவர்களே
மூதறிஞர் ராஜாஜி சொன்னால் என்ன ...யார் சொன்னால் என்ன.
முதற்க்கண் நான் காங்கிரஸ் அனுதாபி அல்ல...ஆகையால் அது யார் சொன்னாலும் எனக்கு அக்கறை இல்லை.
காமராஜர் ஆண்ட வருடங்களில் நடந்த தமிழக வளர்ச்சி ....செயல் படுத்தப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் அதன் வளர்ச்சி விகிதம் ..அவர்களது ஆட்சியை குற்றம் சொன்ன வாய்களால் இன்றுவரை கால் வாசி கூட செய்யமுடியவில்லை. செய்து காட்டவில்லை. இது வரலாற்று உண்மை ! அவருடைய அணுகுமுறையும் சரி...அவரது ஆற்றலும் சரி...அதில் எள்ளளவு கூட congressism இருந்தது இல்லை !
ஒரு செயல் வீரன் இருக்கும் இடத்தில் அந்த செயல் வீரரின் மீது கொண்ட பொறாமைகளும் வயிதேரிச்சல்காரர்களுக்கும் பஞ்சம் எள்ளளவும் இருந்ததில்லை என்பதும் வரலாற்று உண்மை !
Rks
-
12th April 2015, 07:48 PM
#985
Junior Member
Veteran Hubber
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்
பகுதி 2 : திருவருட்செல்வர் (கருத்து உபயம் : நண்பர் சின்னக்கண்ணன்....ஜெமினி திரியிலிருந்து...)
திருவருட்செல்வரை விட்டு விட்டீர்களே..கதறக் கதற சுந்தரமூர்த்தி நாயனார் சிவாஜியை ஜெமினி படுத்தும் பாடு..ஜெமினி காரெக்டர் அது தான் என ப் புரிந்து உள்ளாழ்ந்து எதிர்க்கும் சுந்தர ந.தி..கடைசியில் இத்தனையும் உன்பாட்டைக் கேட்கத் தான் வந்தேன் என சிவ ஜெமினி சிரித்துவிட்டுக் கருவறையில் புகுவது.. சி. ஜெ காம்பினேஷனில் கொஞ்சம் ஓஹோ சீன் சி.செ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th April 2015, 07:52 PM
#986
Junior Member
Veteran Hubber
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
பகுதி 3 : வீரபாண்டிய கட்டபொம்மன்
புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் தன்னுடைய திரை ஜோடி பத்மினி ஜெமினியுடன் ஒரு பாடல் காட்சியில் நடிக்கும்போது இறுதியில் ஒரே ஒரு
காட்சியில் தலை காட்டி புரிதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் உதாரணமாக திகழ்ந்திருப்பார் நடிகர்திலகம் அவ்வண்ணமே பாசமலர் திரைப்படத்தில் மயங்குகிறாள் ஒரு மாது பாடல் காட்சியில் வெறுமனே வீணை வாசித்துக்கொண்டு தனது புரிதலை வெளிப்படுத்தியிருப்பார் காதல் மன்னர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th April 2015, 08:12 PM
#987
Junior Member
Veteran Hubber

Originally Posted by
gopal,s.
ஜோ வோடு நான் உடன் படுகிறேன். ஹிந்தி தெரிந்தவர்களோடு ஒப்பிடும் போது ,நாங்கள் ஒன்றும் குறைந்து விடவில்லை. எங்களில் யாராவது ஒருவர் மிச்சம் உள்ள வரை ஹிந்தி தமிழகத்தில் நுழைய முடியாது. பெரியார் என்ற ஒருவர் இல்லாவிட்டால் பலர் தலை நிமிர்ந்திருக்க முடியாது.
ரவிகிரண் - உங்களுடையது பயங்கர எதிர்ப்பு பார்வை. எனக்கு எந்த கட்சியும் பிடிக்காது . எல்லா கட்சிகளும் பிடிக்கும்.(உங்களுக்கு புரிய முடியாது)
பி.கு- கலை ,கட்சிகளுக்கு மட்டுமே. இது பொருந்தும். Private ownership அறவே ஒவ்வாது.
சிவாஜிக்கு அத்தனை கட்சிகளுடன் தொடர்பு உண்டு. அதனால் அரசியல் ஒன்றும் இங்கு தோஷம் இல்லை.
கோபால் சார்
எதற்கு இனியும் இந்த ஏமாற்று சொற்கள் ? வேறு மொழி கற்பதில் தவறு இல்லை என்பதே எனது வாதம் !
உங்களுடைய STATEMENT "பெரியார் இல்லை என்றால் பலர் தலை நிமிர்ந்திருக்க முடியாது"...இது ஒரு மாயை ! அந்த மாயையை நீங்கள் கூறி வேண்டுமானால் த்ருப்திபட்டுகொள்ளுங்கள் !
சிவாஜி அவர்கள் சிவாஜியாக வலம் வரவில்லை என்றாலும் "கட்டபொம்மன்" கணேசனாக நிச்சயம் வலம் வந்திருப்பார் ! ஆகவே இந்த, உங்கள் கற்பனை கதை எல்லாம் எடுபடாது.
என் இறைவனின் நடிப்பு ...உங்களையும் அறியாமல் உங்கள் மனதில் ஊடுருவி உங்கள் மதியை மயக்கியதால் உங்கள் வாயே அவரை "சிவாஜி" என்ற பட்டம் கொடுத்து வாழ்த்தியது...! விஷயம் இவ்வளவுதான் ! ஆனால் வென்றது அங்கும் என் இறைவனே !
மேலும் நீங்களோ மற்றவரோ யார் நுழைய விடுவதற்கும் நுழைய விடாமல் இருப்பதற்கும்...உங்கள் உத்தரவை யார் கேட்டார்கள் சிரிப்பு தான் வருகிறது எனக்கு உங்கள் எழுத்தை படிக்கும்போது.
நீங்கள் கூறுபவை எல்லாம் மக்கள் உருப்படாமல் போகும் வழிகள்....உங்களுக்கு "வாழ்க" போட்டே அடித்தட்டில் இருப்பவன் அடங்கி ஒடுங்கி போகவேண்டும்...அவன் வாழ்வை வளமாக்க ஒரு வழியும் காண வக்கில்லாமல் அவன் வாழ்வாதாரத்தை பல வழிகளில் சுரண்டுவது அதனை இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்திகொண்டிருப்பது பச்சை அயோக்யத்தனம்.
அதை படிக்காதே...இதை படிக்காதே என்று கூற எவனுக்கும் எந்த கட்சிகாரனுக்கும் அருகதையோ உரிமையோ இல்லை ! முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள் !
மத்தியில் கூட்டணி ஆட்சியுடன் முக்கிய பதவி வகித்தவன் என்ன தமிழா அங்கு பேசினான் ? தெரிந்த வரையில் ஹிந்தியோ அல்லது ஆங்கிலமோ தானே ...அப்புறம் என்ன இந்த வீம்பு பேச்சு ஏமாற்று வித்தை ? யாரை ஏமாற்றபார்கிரீர்கள் இனியும்...!
முழு பௌர்ணமி முற்றிலும் முடிந்து தேய்பிறை காலம்....இது போல அனர்த்தங்கள் புரிபவர்களுக்கு ....அமாவாசை வர இன்னும் சிறிது காலம்தான் ! கவலை வேண்டாம் !
நடிகர் திலகம்....அவரை பற்றி பேசவோ ...அந்த பேரை உச்சரிக்கவோ மேற்கூறிய எண்ணம் கொண்ட எவருக்கும் யோக்யதை கிடையாது....!
நடிப்பு தொழிலை செய்பவனை ஏளனமாக கூத்தாடி என்று கூறிய காலம் உண்டு. கூத்தாடி என்று ஏளனம் செய்த அதே வாயால் "சிவாஜி" என்ற பட்டம் கொடுக்க வைத்தவர் எங்கள் இறைவன் !
பலவருடம் சும்மா சினிமாவில் உட்கார்ந்து கதை வசன வாய்ப்புக்காக ஏங்கியவர்கள் மத்தியில் ஒரு படம் ..."பராசக்தி" அதன் பிறகு , எங்கு திரும்பினாலும் எட்டுதிக்கும் சிவாஜி...சிவாஜி என்ற ஒரே பெயர் தான் !
அந்த காழ்புணர்ச்சியில் எங்கே இவன் நம்முடன் இருந்தால் நம்மை விழிங்கிவிடுவானோ என்ற பயத்தில் கோழைத்தனமாக சில வேலைகளை கையாண்டு அதனை அரசியல் சாதுர்யம் என்று தற்பெருமையுடன் மானியம் விட்டுக்கொண்டு....மற்றொரு நடிகர் நிழலில் தஞ்சம் கொண்டு ...தொடர்ந்து நடிகர் திலகத்தை அவர் அடைந்த பல உலக பெருமைகளை ஜீரணிக்க முடியாமல் ...தொடர்ந்து அவரை முதுகில் குத்திக்கொண்டு...தள்ளாத வயதில் அந்த இறைவன் ...இவர்கள் செய்த துரோகத்தையும் மறந்து தனது விஞ்சியுள்ள ஆயுளின் 2 தருகிறேன் வாங்கிகொள்ளுங்கள் என்று கூர ...அந்த வயதிலும் துளி கூட மனசாட்சி இல்லாமல் ...நீ தரவேண்டாம்..நான் தருகிறேன் என்று கூறாமல்...நல்லவேளை நமக்கு இன்னும் ஆயுள் கூடும் என்று நினைப்பில் அதையும் அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ....இப்போது அதற்க்கு பிராயச்சித்தமாக அதுவும் பாண்டியில் ரங்கசாமி முந்திக்கொண்டு செய்துவிட்டார் என்ற ஒரே காரணத்தால் , அரையும் குறையுமாக அரசாங்க formality முற்றிலும் முழுமை செய்யாமல் ...அங்கங்கே ஒரு சிலை திறந்து பிராயச்சித்தம்..! - இது அரசியல் சாதுர்யமா ?
எத்தனை கட்சிகள் வேண்டுமானால் சிவாஜியுடன் பெருமைக்காக தொடர்பு வைத்திருந்திருக்கலாம்....ஆனால் அவரை முதுகில் குத்தியது முதலில் நீங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் ஆட்கள்தான். தமிழனை மண்ணின் மைந்தனை முதுகில் குத்தி வசைபாடியது உங்களுடைய .....வாழ்க தமிழ்...தமிழ் வளர்ப்போம் ...தமிழனை வாழவைப்போம் என்று இன்றளவும் ஏமாற்றுபவர்கள் தான் ! அந்த வழியைத்தான் பின்னாளில் வந்தவர்கள் பின்பற்றினார்கள், VP SINGH தவிர !
நடிகர் திலகம் ஏதோ உங்கள் நல்ல காலம் ...1953 முதல் 1987 வரை பசியின் உச்சத்தில் இருந்ததால் பிழைத்தீர்கள் ! ஆகவே....அதை உங்கள் பாக்கியமாக கருதி .பிழைத்துபோங்கள்...வம்பு பண்ணாதீர்கள் !
Last edited by RavikiranSurya; 12th April 2015 at 08:23 PM.
-
12th April 2015, 08:32 PM
#988
Senior Member
Diamond Hubber
உனக்கு தேவையிண்ணா இந்தி என்ன சீன மொழியே கூட படிச்சுக்கோ ..யாரு கைய பிடிச்சு இழுத்து ..உன் பொருட்டு நாங்க எல்லோரும் கண்டிப்பா படிக்கணும்-ன்னு திணிக்கணும்-ன்னு கேட்டா அதைக் கூட புரிஞ்சுக்க முடியாம என்ன கைய பிடிச்சு இழுத்தியா என்ன மொக்கைத்தனமான வாதம் வைக்கிற எதுவும் புரியும்ணு நான் நினைக்கல்ல .
நான் கேக்குறது ஒண்ணே ஒண்ணு தான் . திராவிட இயக்கம் பற்றி உனக்கு அரித்தல் இருந்தால் போய் சொறிய வேறு இடம் இருக்கிறது .. தொடர்ந்து நடிகர் திலகத்தின் திரியில் உன் சொந்த அரசியல் வாந்தி எடுப்பது தேவையா ? வேறென்ஹ்காவது போய் வாந்தி எடுத்து தொலைக்க வேண்டியட்து தானே என்பது மட்டுமே என் கேள்வி .இதிவும் புரியுமென்ன்று நம்பிக்கை இல்லையென்றாலும் சொல்ல வேண்டியட்து அவசியம் என்பதால் சொல்லி முடிக்கிறேன்.
Last edited by Murali Srinivas; 13th April 2015 at 12:32 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th April 2015, 08:35 PM
#989
Senior Member
Diamond Hubber
இறுதியாக ஒன்று . சிவாஜி என்னும் மகா கலைஞனின் மீது எனக்குள்ள அபிமான்த்தை நிரூபிக்க இது போன்ற சான்றிதழ் தேவையில்லை
Last edited by Murali Srinivas; 13th April 2015 at 12:32 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th April 2015, 08:48 PM
#990
Junior Member
Veteran Hubber

Originally Posted by
joe
இறுதியாக ஒன்று . சிவாஜி என்னும் மகா கலைஞனின் மீது எனக்குள்ள அபிமான்த்தை நிரூபிக்க இது போன்ற மடையர்களின் , தற்குறிகளின் சான்றிதழ் தேவையில்லை
டயமண்டு ஹப்பர் என்னும் ஸ்டேடசில் உள்ள தங்களின் நடிகர்திலகம் அபிமானம் என்றும் போற்றத் தகுந்ததே
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks