-
24th April 2015, 01:39 PM
#451
Junior Member
Platinum Hubber
-
24th April 2015 01:39 PM
# ADS
Circuit advertisement
-
24th April 2015, 01:40 PM
#452
Junior Member
Platinum Hubber
-
24th April 2015, 01:41 PM
#453
Junior Member
Platinum Hubber
-
24th April 2015, 01:42 PM
#454
Junior Member
Platinum Hubber
-
24th April 2015, 01:43 PM
#455
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th April 2015, 03:07 PM
#456
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
makkal thilagam mgr
" குடியிருந்த கோயில் ' காவியத்துக்கான ஒப்பனையில் உள்ள நம் மக்கள் திலகத்துடன் தோற்றமளிப்பது .... இளம் வயது சுப வீர பாண்டியன்.
Courtesy : Facebook
அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்கு நன்றி திரு.செல்வகுமார் சார். சகோதரர் திரு.ரவிச்சந்திரன் கூறியிருப்பது போல, சுப.வீரபாண்டியன் அவர்கள் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்களின் இளைய சகோதரர். திராவிட இயக்க தமிழர் பேரவை என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இவரது தந்தையார் அமரர் காரைக்குடி ராம.சுப்பையா அவர்கள் திராவிட இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th April 2015, 03:19 PM
#457
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
g94127302
திரு கலைவேந்தன் - உங்கள் இந்த பதிவு எல்லா பதிவுகளையும் போல இனிமையாகவும் , அழுத்தமாகவும் இருந்தது . இந்த பதிவை படிக்கும் போது , ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரர்க்குள் நுழைத்து அதன் மூலம் , அத்வைதியத்தை வெளிக்கொண்டுவந்து அதை பரமாத்மாவுடன் இணைத்து , இரண்டும் வேறு அல்ல என்பதை எவ்வளவு ஆழமாக , சுருக்கமாக எடுத்து சொன்னீர்கள் - hats off - உங்கள் இந்த பதிவு ஒரு அலசலுடன் முடிந்து விடக்கூடாது . இன்னும் தொடர வேண்டும் என்பதனால் என்னுடைய கருத்துக்களையும் உங்கள் பதிவுடன் இணைக்க விரும்புகிறேன் - உங்கள் அனுமதியுடன் ..
"நீ உன்னை அறிந்தால் " மிகவும் நெஞ்சை தொடும் பாடல் - இப்படி பட்ட பாடல்களை நாம் சுவைக்கும் போது , அந்த அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து , பிறகு மறந்து விடுகிறோம் - நமக்காக அவர்கள் பாடிய பாடல்கள் - 1000 புத்தகங்கள் சொல்ல முடியாத தத்துவங்களை கண்ணதாசனும் , வாலியும் சில வரிகளில் சுலபமாக சொல்லிவிட்டு சென்று விட்டனர் - ஒரு சின்ன உதாரணம் : " ஒருவரது துடிப்பினில் வருவது கவிதை ; இருவரது துடிப்பினில் வருவது மழலை " இதை விட ஒரு தாம்பத்தியத்தை அழகாக விளக்க முடியுமா அருவருப்பு இல்லாமல் ???
ஆதிசங்கரரை நினைவு கூறும் இந்த நாளில் உங்களுக்கு இன்னுமொரு சம்பவத்தை சொல்ல ( உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ) விரும்புகிறேன் .
ஒருமுறை அவர் , தன்னுடைய சீடர்களுடன் அடுத்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் - இடையே ஒரு காட்டுவாசி , கிழிந்த உடைகளுடன் , சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்பவனாக , தனது நான்கு நாய்களுடன் அவர் நடுக்கும் பாதையில் எதிராக வந்து கொண்டிருந்தான் - இவரின் சீடர்கள் அவனை ஓரம் போக சொன்னார்கள் - ஆதி சங்கரரும் தன் நிலையை மறந்து அவனை சற்று தள்ளி செல்லும்படி சொன்னார் - அந்த காட்டுவாசி வினவினான் " யாரை தள்ளி போக சொல்கிண்டீர்கள் , நானாகிய ஜீவாத்மாவையா அல்லது என்னுள் இரண்டற கலந்துள்ள பரமாத்மாவையா ? " பொறி தட்டியது ஆதிசங்கரருக்கு , ஒன்றும் சொல்லாமல் அவன் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தார் - என்னை மன்னித்து விடு , அறியாமை இன்றுடன் என்னை விட்டு அகன்றது " என்றார் - அந்த காட்டுவாசி சிரித்துவிட்டு மறைந்து விட்டான் - " நீ உன்னை அறிந்தால் " இதில் இந்த கதையும் அடக்கம் !!
இப்படிப்பட்ட பொன்னான வரிகள் நடிகர் திலகம் பாட்டுக்களிலும் உண்டு - " தூங்கும் கண்களில் ஒளி இல்லை ; துள்ளி நடந்தால் வலி இல்லை " ; " உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை மதிக்கும் !. இந்த வரிகளுக்கான ஒரு குட்டி கதை இராமாயணத்தில் இருந்து ( இதுவும் உங்களுக்கு தெரிந்திருக்கும் )
ஒரு முறை மகாவிஷ்ணு வைகுண்டத்தில் தனது பள்ளியறையில் கால்களில் அணித்துள்ள காலணிகளை கழட்டாமல் உறங்க சென்று விட்டார் - இத பார்த்து கொண்டிருந்த சங்கும் , சக்கரமும் , அந்த காலணிகளை பார்த்து கேலி செய்ததாம் " என்ன திமிரு உனக்கு - நீ இருக்க வேண்டிய இடம் அறைக்கு வெளியே - அவர் மறந்து உன்னை கழட்டாமல் வந்து விட்டார் - உனக்கு எங்கே போனது புத்தி - எப்படி எங்களுக்கு சமமாக படுக்கை அறைக்குள் வருவாய் ? " இப்படி மனதை நோக வைக்கும் வார்த்தைகளால் அந்த காலனிகளை வசை மாறி திட்டினவாம் .. காலணிகள் அழுவதை தவிர ஒன்றும் தெரியாமல் முழித்தன . இறைவன் எல்லாம் அறிந்தும் அறியாதவனைப்போல எழுந்தவுடன் , சங்கையும், சக்கரத்தையும் பார்த்து சொன்னான் " நான் இன்னும் சில நாட்களில் இராம அவதாரம் எடுக்க போகிறேன் - நீங்கள் இருவரும் எனக்கு தம்பிகளாக வருவீர்கள் , ஆதிசேஷனும் எனக்கு ஒரு தம்பியாக வருவான் "
இதைக்கேட்டு விட்டு சங்கிர்க்கும் சக்கரத்திற்கும் தலை கால் புரியவில்லை , காலணிகளை இன்னும் எப்படி நோக வைக்கலாம் என்று திட்டம் போட்டன . காலணிகள் இறைவன் பாதத்தை இன்னும் அழுத்தமாக பற்றி கொண்டு அழுதன .. இறைவன் சிரித்தான் --
சங்கு பரதனாகவும் , சக்கரம் சத்ருகரனாகவும் வளர்ந்தன - இராமன் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றான் - பரதன் அங்கு சென்று அவனை மீண்டும் அயோத்திக்கு வரும்படி கெஞ்சினான் - கடைசியில் அண்ணன் தந்த பாதுகைகளை தன் தலையில் சுமந்துகொண்டு அயோத்திக்கு எடுத்து வந்து அவைகளை இராமன் அமரும் சிம்மாசனத்தில் வைத்து 14 வருடங்கள் பூஜித்து வந்தான் . ஒருமுறை காலணிகளை கேவலமாக பேசினதிர்க்காக 14 வருடங்கள் அவைகளை பூஜிக்கும் நிலைக்கு இரண்டு சகோதர்களும் ஆளானார்கள் - இந்த பெரிய தத்துவத்தை ஒரே வரியில் கண்ணதாசன் நடிகர் திலகம் மூலம் சொல்வார் - உயரும் போது பணிவும் வர வேண்டும் என்பதை - இல்லையென்றால் இந்த உலகம் உன்னை திரும்பி கூட பார்க்காது .
இராவணனை பார்க்கும் போது நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் , மாற்றான் மனைவி மீது மோகம் கொண்டவன் என்பதே - அதனால் அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான் என்று சொல்பவர்கள் பலர் -அவன் செய்தது மாபெரும் தவறு தான் - இருந்தாலும் அவனிடம் இருந்த ஒழுக்கங்கள் , பண்புகள் , உண்மையான பக்தி , பிறருக்கும் உதவும் குணம் இவைகள் அவன் உயிரை வேலி போட்டு காத்து நின்றன - கடவுளே , நேரில் மனிதனாக வந்த பின் தான் அவனை கொல்ல முடிந்தது - தூங்கும் அவன் கண்களிலிருந்து ஒளியை எடுத்தவனும் இறைவனே - அந்த ஒளியை முதலில் அவனுக்கு தந்தவனும் அந்த இறைவனே .
ஒவ்வொரு தத்துவ பாடல்களையும் உங்களை போல ஆராய முயன்றால் எவ்வளவு புதைந்து கிடக்கும் உண்மைகள் , பிறருக்கு உதவியாக இருக்கும் தத்துவங்கள் வெளியே கொண்டு வர முடியும் ! - இந்த இரு திலகங்களின் பாடல்கள் மூலமே 100க்கும் மேலாக திரிகளை நாம் வெற்றிகரமாக உருவாக்கலாம் - சாரி சார் - என் பகுதி என்னையும் அறியாமல் சற்றே நீண்டு விட்டது . பொறுமையுடன் படித்த எல்லோருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் .
" Where there is righteousness in the heart , there is beauty in character "
அன்புடன்
ரவி
பாராட்டுக்கு நன்றி திரு.ரவி சார்.
உங்களின் உயர்ந்த கருத்துக்களை அருமையான கதைகள் மூலம் விளக்கியுள்ளீர்கள். நீங்கள் கூறுவது உண்மைதான் சார். பழைய பாடல்களை, அவற்றில் பொதிந்துள்ள கருத்துக்களை ஆராயப் புகுந்தால் 100க்கும் மேற்பட்ட திரிகள் தேவைப்படும். உங்கள் பதிவு நீண்டு விட்டதாக கூறுகிறீர்கள். அதற்குள் முடித்து விட்டீர்களே என்றுதான் தோன்றுகிறது. நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th April 2015, 03:26 PM
#458
Junior Member
Seasoned Hubber
செவாலியே சிவாஜி கணேசன் விருது தொடர்பாக திரு.சைலேஷ் பாசு அவர்களின் கருத்துக்களை ஆதரித்து நமது திரியில் தனது கருத்தை பதிவு செய்துள்ள நண்பர் திரு.ஜோ அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th April 2015, 04:37 PM
#459
Junior Member
Diamond Hubber
-
24th April 2015, 04:38 PM
#460
Junior Member
Diamond Hubber
Bookmarks