-
25th April 2015, 12:07 PM
#531
Junior Member
Seasoned Hubber

மலர்ந்தும் மலராத அந்த காலைப்பொழுதில் பத்திரிகை படிப்பதில் சற்றே கவனம் செலுத்தினேன் - மேலே உள்ள படம் என் மனதை கசக்கி பிழிந்தன - அடிக்கடி நடக்கும் விஷயங்கள் என்றாலும் - படிக்கும் போது வரும் கண்ணீரை தடுத்துக்கொள்ள முடியவில்லை . விவசாயத்தை பற்றியும் விவசாய்களின் முக்கியத்துவத்தை பற்றியும் எவ்வளவு பாடல்கள் – மக்கள் திலகத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஏழை விவசாயியை எழுப்பி நிறுத்தின - தன்னம்பிக்கையை ஊட்டின - பாடல்களை கேட்ட விவசாயி ஏரையும் , கலப்பையையும் உறுதியாக நம்ப ஆரம்பித்தான் - வாழ்வின் வளத்தை பெருக்கினான் - வாழ்வை முடித்துக்கொள்ள மரங்களை தேட வில்லை - கிருஷ்ணாயில் வீட்டில் இருந்தது அவன் உடம்பில் அல்ல ; தீக்குச்சிகள் அவன் வீட்டில் விளக்கேற்றி வெளிச்சத்தை தந்தன - அவன் உடலை ருசிக்க விரும்பவில்லை ... அன்று மரணம் அவன் அறியாத ஒன்று - தற்கொலைகளை அவன் விற்க விரும்பவில்லை - தன்மானத்தை பெருக்கிகொண்டான்
இந்த பாடல்களை கேட்டும் பொழுது - திருவள்ளவர் என் வீட்டில் நின்று "post " என்று கூறுவது காதில் விழுந்தது - அவர் போட்ட போஸ்டை பார்த்தேன் - எழுதின திருக்குறள் என்னை பார்த்து சிரித்து " துப்பார்க்கு துப்பாய ------ தூவும் மழை " - இந்த மழைக்கு ஏன் இன்னும் புரியவில்லை - அறுவடை சமயத்தில் வந்தால் , பலரின் வாழ்வுகள் துப்ப படும் என்று !! துப்பப்பட்ட உடல்களின் மீது மலர்கள் மலர முடியாமல் தவித்தன --- ஒரு விவசாயின் தற்கொலையில் பல அரசியல் வாதிகள் சிரிப்பதை கண்டேன் - அவன் சிரித்த பொது தெரிந்த தெய்வம் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது .
விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றால் அது விவசாயி பிரச்சனை :
ஆனால்
அடுத்த தலைமுறைக்கு விவசாயியே இல்லை என்றால் அது யார் பிரச்சனை ?
பழைய கஞ்சியை உண்டு பிரியாணி அரிசியை அறுவடை செய்கிறான் விவசாயி
அவனை அறுவடை செய்கின்ற காலம் மாறவேண்டும் - மாற்றுவோம் , மாறும் காலம் !!
மன வேதனையுடன்
ரவி
-
25th April 2015 12:07 PM
# ADS
Circuit advertisement
-
25th April 2015, 02:02 PM
#532
Junior Member
Diamond Hubber
-
25th April 2015, 02:14 PM
#533
Junior Member
Diamond Hubber
-
25th April 2015, 03:25 PM
#534
Junior Member
Platinum Hubber
-
25th April 2015, 03:26 PM
#535
Junior Member
Platinum Hubber
-
25th April 2015, 03:47 PM
#536
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள Prof .திரு செல்வகுமார் அவர்களுக்கு - என்னுடன் நேரம் ஒதுக்கி பேசினதற்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை - ஒரு 1000 பக்கங்கள் உள்ள புத்தகத்தை 10 நிமிடங்களில் படித்து முடித்து விட்டால் , எப்படி மூச்சு வாங்குமோ அப்படி பட்ட நிலைமையில் இருக்கிறேன் - உங்கள் சாதனகளை கேட்டபின் உங்களை பற்றி அலசவே 100 திரிகள் வேண்டும் போல இருக்கின்றது - திரு கலைவேந்தன் சொன்னது நினைவிற்கு வருகின்றது - உங்கள் பெயரின் பக்கத்தில் A B C D யில் உள்ள 26 letter யை சேர்த்து போட்டாலும் நீங்கள் வாங்கியுள்ள படிப்பு அத்தாட்சிகளுக்கு போதாது என்று நினைக்கிறேன் - உங்களிடம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் மிகவும் அதிகம் - உங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டுதான் நன்றி மீண்டும் சொல்கிறேன் . இரண்டு திரிகளும் மனதளவிலும் , செயல் அளவிலும் இணைய வேண்டும் என்பதே என் அவா - இதில் உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை , முக்கியம் .
அன்புடன்
ரவி
-
25th April 2015, 04:21 PM
#537
Junior Member
Platinum Hubber
நண்பர் திரு. முத்தையன் அவர்களின் விவசாயி, திருடாதே, பட்டிக்காட்டு பொன்னையா படப் பதிவுகள் அற்புதம்.
நண்பர் திரு. சி.எஸ்.குமார் அவர்களின் வல்லமை பதிவுகள், மலரும் நினைவுகள்,
(காஞ்சிபுரம்), மற்றும் முக நூல் பதிவுகள் அத்தனையும் அருமை.
நண்பர் திரு. ரவி. (ஹைதராபாத் ) அவர்கள் 800 பதிவுகள் முடித்து விரைவில் 1000 பதிவுகள் எனும் சிகரத்தை தொடுவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
தங்களின் கண்ணன் என் காதலன் திரைப்படம் பற்றிய விமர்சனம் , பாடல்கள் , மக்கள் திலகத்தின் நடிப்பு இசை, நடன அசைவுகள் பற்றிய கருத்துக்கள் ஆகிய
அனைத்தும் என்னைக் கவர்ந்தது.
மேலும் பல படங்களின் விமர்சனங்கள் தங்களின் பார்வையில் பட்டு , இத்திரியில் விரைவில் பதிவாகும் என்று நம்புகிறேன்.
நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் அரிய புகைப்பட பதிவுகள் கண்களுக்கு விருந்து.
நண்பர் திரு. சிவாஜி செந்தில் அவர்களின் மூவேந்தர் பட பாடல்களின் பதிவுகள்
வித்தியாசமானவை. ரசிக்கும்படி உள்ளன.
கொங்கு மண்டலத்தில், வெளியாகும் புரட்சி தலைவரின் படங்களை அவ்வப்போது
திரியில் பதிவிட்டு வரும் (தனிப்பிறவி - கோவை சண்முகா, நினைத்ததை முடிப்பவன் - கோவை டிலைட் ) நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நட்புடன்
ஆர். லோகநாதன்.
-
25th April 2015, 04:59 PM
#538
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
நண்பர் திரு. ரவி. (ஹைதராபாத் ) அவர்கள் 800 பதிவுகள் முடித்து விரைவில் 1000 பதிவுகள் எனும் சிகரத்தை தொடுவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
தங்களின் கண்ணன் என் காதலன் திரைப்படம் பற்றிய விமர்சனம் , பாடல்கள் , மக்கள் திலகத்தின் நடிப்பு இசை, நடன அசைவுகள் பற்றிய கருத்துக்கள் ஆகிய
அனைத்தும் என்னைக் கவர்ந்தது.
மேலும் பல படங்களின் விமர்சனங்கள் தங்களின் பார்வையில் பட்டு , இத்திரியில் விரைவில் பதிவாகும் என்று நம்புகிறேன்.
நட்புடன்
ஆர். லோகநாதன்.
மிகவும் நன்றி திரு லோகநாதன் - மக்கள் திலகத்தின் பல படங்கள் மனதில் அவ்வபொழுது முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கிறது - எடுத்தோம் , கவுத்தோம் என்று போட முடியாத படங்கள் - மனம் இருக்கின்றது , நேரம் தான் கிடைப்பதில்லை - கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன் -- நீங்களும் அந்த பக்கம் வந்து சற்றே இளைப்பாரலாமே !
அன்புடன்
ரவி
-
25th April 2015, 05:58 PM
#539
Junior Member
Platinum Hubber
-
25th April 2015, 05:59 PM
#540
Junior Member
Platinum Hubber
Bookmarks