Page 344 of 397 FirstFirst ... 244294334342343344345346354394 ... LastLast
Results 3,431 to 3,440 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3431
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஆனால்... உண்மையில் அந்த முக்கியமான ஃப்ளாஸ்க் நிரம்பிய பிறகு தான் எல்லோரும் காபி குடித்த பிறகுதான் அந்த பார்ட்டி முழுமையடைகிறது.

    ஸ்....ஹப்பாடா... ஒரு vaccum சொல்லி விட்டு எவ்வளோ பெரிய சமாதானம் சொல்ல வேண்டியிருக்கு...

    சி.க. சார்... உங்க கூட சேர்ந்து நானும் எழுத்தாளனாயிட்டேனாக்கும்... // ராகவேந்தர் சார் இதானே வேண்டாங்கறது.. மெய்யாலுமே பார்ட்டியைப் பத்திச் சொல்றீங்கன்னு அளவுக்கு என்னை நினைக்க வச்சது உங்களோட எழுத்து வன்மை..

    இன்ஃபேக்ட் ஒங்களுக்காகவே - ஒருவேளை நாம எழுதறது வியாழக்கிழமையும் அதுவுமா ராகவேந்திரருக்குப் பிடிக்கலையோன்னு (கண்ணா நீ எங்கேயோ போயிண்டிருக்கடா சிலேடைல) மாஞ்சு மாஞ்சு ஒண்ணு எழுதியிருக்கேன்.. அது அடுத்த போஸ்ட்ல நன்றிங்கோ..(இருந்தாலும் புரிஞ்சா மாதிரியும் இருக்கு..ஆனா புரியலை)

  2. Likes kalnayak, vasudevan31355, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3432
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பருவமே.. பழைய பாடல் பாடு – 4

    கண்ணை மூடினால் உறக்கம் வரமாட்டேன் என்கிறது. மூடினால் அவள் முகம்..திறந்தாலும் தான்..

    ஆஹா..எவ்வளவு இனிய முகம்..எவ்வளவு அழகிய குரல் அவளும் நளினம்..அவளது உடலும் நளினம்..

    போகத் தான் வேண்டும்.. இப்போது போகக் கூடாதாம்..தாயாரின் சிரார்த்தமா.. என்னடா இது மங்கள் தாஸ்.. நீ இந்த ஊரின் பெரிய வணிகர் ரகுநாதரின் ஒரே மகன்..பார்க்குமிடமெல்லாம் இந்த ஊரில் உன் அப்பாவின் வீடுகள், நிலங்கள், கடைகள்.. ஏன் நான் செலவு செய்தாலென்ன..

    செய்வது யாருக்கு..என் சிந்த்த்தூவிற்குத் தானே..சுருக்கமாகச் சொன்னால் அவள் முகம் சுருங்கத் தான் செய்யும்..சிந்தாமணி என்றால் முகமலரும்..அப்படியே உன் பாட்டியைப் போல நீட்டி முழக்கிக் கூப்பிடுகிறேனா என்றால்வெட்கச் சிரிப்புசிரிப்பாள்..

    அதுவும் அடடா அவள் செய்யும் வெல்லப் பணியாரம்..அவள் கைப்பக்குவத்திலோ என்னவோ உடலெங்கிலும் தித்திப்புப் பரவும் பின் ஆவலாய் பச்சை வெற்றிலையை க் காம்பைக் கிள்ளும்போது அவள் புறங்கையில் தெரியும் பச்சை நரம்புகள் அதுவும் அவளது அழகிய பால்வண்ணமா..கொஞ்சம் மஞ்சள் பொடி சிறிதளவே தூவிய பால்வண்ணமா ஆம் அது தான் சரி.. அந்தக் கையில் எவ்வளவு அழகாய் இருந்து உளத்துக்குள்ளே உலையைப் பற்றவைத்தது..

    ஆஹா இந்தச் சிந்தாமணியின் பெயரைச் சொர்க்கமென்று வைத்திருக்கலாம்..பிரம்மன் ஏகப்பட்ட அலுவல்கள் இருக்கிறதென்று விஷ்ணுவிடம் ஒப்புதல் வாங்கி விடுமுறையில் ஏகாந்தத்தில் இருக்கும்போது இவளை வடித்திருப்பான் போல..
    கண்ணிமையும் அழகு; கண்களும் அழகு
    புருவமும் அழகு; பருவமும் அழகு
    முறுவலும் அழகு முறுவும் இதழும் அழகு
    நாசியென்றால் எள்ளுப் பூவாமாமே.. ம்ம்ஹூம் இல்லவே இல்லை இவளுடையது தான்..அதில் செல்லமாய்க் குத்தப்பட்டு சிரிக்கும் வைரமூக்குத்தி
    கன்னமும் அழகு..காதுமடல் அழகு..
    ம்ம்கொஞ்சம் கீழிறங்கி யோசித்தால்..வேண்டாம் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொள்வோம்!

    மொட்டை மாடி அழகிய நிலா சிரித்தபடி மேகங்களுடன் நடை பழகிக் கொண்டிருக்கிறது..இப்படி நடக்கின்ற நடையில் படக்கென இளைத்து இளைத்து தேய்ந்து விடும்.. பின் மறையும் பின் எழும்.. ஆனால் எனது அக்னி..சிந்தாமணியின் சிந்தனையில் ஏற்படும் உடலக்னி என்னசெய்வது..
    முடியவில்லையே..மங்கள் தாஸா சீக்கிரம் ஒரு முடிவெடு..

    மங்கள் தாஸ் ஒரு முடிவெடுத்தான்..
    உடன் கீழிறங்கி பின்பக்கம் கொல்லைப்புறச்சுவரைத் தாண்டிய போது தான் அதை உணர்ந்தான்..எங்கிருந்தோ மேகங்கள் சூழ்ந்து கொண்டதை..காற்றில் குளிரும் ஈரப்பதமும் கலந்திருப்பதை..என்ன இது என் சிந்த்தூவைப் பார்க்கப் போகவேண்டுமே..மழை வரும்போலிருக்கிறதே..

    வருமென்ன..வந்தேவிட்டது

    சுற்றிச் சுழன்றடிக்கும் காற்று..காற்றில் படபடக்கும் மரங்களின் இலைகள் இவையெல்லாவற்றுக்கும் கவலைப் படாமல். இப்படி எங்கேடா போகிறாய் மங்களா எனத் தடுப்பது போலவே உரக்க இடிக்குரலில் மின்னல்விளக்கில் மழை ஹோ ஹோ ஹோ வெனப் பெய்ய ஆரம்பித்தது.

    ம்ஹூம் .. உள்ளக்கனல் தகிக்க சிந்தாமணியை அவள் நினைவே ஒன்றாகி சடக் சடக்கென வேகவேகமாக ஆற்றங்கரைப் பக்கம் சென்றால்.. இது என்ன ஆற்றில் வெள்ளம்..ஆற்றின் அக்கரையில் அவள் வீடு.. எப்படிச் செல்வேன்..அடடா அடடா அடடா அவள் ஏதோ செய்கிறாள் எனை..அட இது என்ன..

    ஆஹா இருட்டிலும் இறைவன் நமக்குக் கருணைவைத்திருக்கிறான்..இந்த வான நிலா மேகத்தில் புகுந்துகொண்டால் என்ன.. என் இதய நிலா தான் இந்தக் கட்டையை எனக்குக் கொடுத்திருக்கிறாள் இறைவனிடம் சொல்லி..

    நினைத்துத் தாவி அங்கே ஆற்றின் போக்கோடு எதிர்க்கரைப்பக்கம் சென்றுகொண்டிருந்த கட்டை மேல் மங்கள் தாஸ் ஏற அதுவும் அந்தப்புறம் அடித்துக் சென்றது அவனை..ஆனால் அவனறியாதது அவன் ஏறிய கட்டை நிஜமான கட்டையில்லை..பொய்யுடம்பு.. உயிரில்லாதது..ம்ஹூம் அதன் நாற்றத்தையும அவன் உணரவில்லை.. இருளில் ஆற்றின் கரை அருகில்வரக்கட்டையை விட்டுமறுபடி நீந்தி ஏறி வேகவேகமாய் (ஏன் இந்த மழை நிற்க மாட்டேன் என்கிறது) வேக வேகமாய் அவளுடைய வீடு இருக்கும் தெருவிற்குச் செல்ல விளக்குகள் எல்லாம் இல்லை..தெருவும் இருளோ என இருந்தது அவன் மனத்தைப் போல.

    வீடும் இருளில்.. இருந்தாலென்ன.. அதோ முதல் மாடியில் அந்த நிலவு எனக்காக நின்றிருக்கும்..

    மங்கள் தாஸின்கைகள் மாடியில் ஏறுவதற்காக அந்தப்பக்கமிருந்த மரத்தின் கிளையைப் பிடிக்கலாமெனத் தேட அகப்பட்டது ஒரு கயிறு அதைத் தொற்றி அங்கிட்டிருந்து சொய்ங்க்க் என மாடிக் கைப்பிடிச் சுவரைப் பற்றி – அவ்வாறு பற்றுகையில் கைகளில் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு வழுக்க்கினாலும் மறுபடி தொற்றி உள்ளே குதிக்க சத்தம் கேட்டு சிந்தாமணி மாடியறையை விட்டு வெளியே வர…ப்பளீர்….

    வானத்தில் ஒரு மின்வெட்டு..மின்னற்குழந்தை கடகடவெனச் சிரிக்க..அந்தவெளிச்சத்தில் அந்த்ப் பதினைந்திலிருந்து பதினெட்டு வயதிற்குள் இருந்த மடந்தை (ஹப்பாடி விஷய்த்துக்கு வந்தாச்சு) சிந்தாமணி அவளும் பளீரென ஒரு மின்னல் போலத் தான் தோன்றினாள் மங்கள் தாஸிற்கு..

    ஹச்சோ.. நீங்கள் நீங்கள் எப்படி இங்கே..உங்கள் தாயாரின் சிரார்த்தமென்று சொன்னார்களே உள்ளே வாருங்கள்..

    குரலில் பதற்றம் உடலில் பதற்றம் கண்களில் பதற்றம் மட்டுமின்றி நாசியிலும் பதற்றம்..ஏதோ தேவையில்லாத நாற்றம்..

    காட்டிக்கொள்ளாமல் உள் சென்று எரிந்துகொண்டிருந்த எண்ணெய் விளக்கில் மங்கள் தாஸைப் பார்த்தவள் அதிர்ந்தாள்..

    கண்களில் காமத்தீ…உடலிலோ ரத்தம் வரும் சிராய்ப்புக்கள்..அதோ ஓரம் கயிறாய் ஊர்வது என்ன. ஓ...ஹ்.. பாம்பா..இதைப்பற்றியா ஏறி வந்தான்.. ஆற்றை எப்படிக் கடந்திருப்பான்

    சிந்த்த்ட்தூஊஉ..

    நாக்குழற அருகில் வர மங்கள் முயற்சிக்க எப்படி ஆற்றைக்கடந்தீர்கள்..

    ஒரு கட்டை கிடந்தது அதைப்பற்றி வந்தேன் – எனக் கைபற்ற முற்பட அவன்கைகளில் சில அழுக்குக்கள்..அந்தக் கட்டையுடையவை..

    பார்த்தாள் சிந்தாமணி.. நள்ளிரவு..மழை..வெள்ளம் எல்லாம் கடந்து என்னை என்னிருப்பிடத்தை என்னுள்ளத்தை..இல்லை இல்லை என்னுடலைத் தேடி இவன் வந்திருக்கிறான்..இது சரியா சரியில்லையே.. என்ன செய்யலாம்..

    மங்கள்..அங்கு குளியலறையில் மாலையில் போட்டுவைத்திருந்த வென்னீர் இருக்கிறது போய்க் குளித்து விட்டு வாருங்கள்..

    சிந்த்தூ.. ஒரே ஒரு சின்ன அணைப்புக் கொடேன்.. ஓ உன்னுடையும் நனைந்து அழுக்காகுமோ எனப் பயப்படுகிறாயா..

    இல்லைபடவா..உன் உள்ள அழுக்கை எடுக்கப் பார்க்கிறேன்.. முகம் கல்லாகி.. மங்கள் போய்க் குளித்துவாருங்கள்..

    அந்த எண்ணெய் தீபத்தைப் போல அவள் குரலும் படபடக்க அவன்போய்க் குளித்து உடைமாற்றி வரும்போது அவள் கட்டிலில் திரும்பி அமர்ந்திருந்தாள்..

    சிந்தூ..

    திரும்பினாள்..
    என் சிந்துவா இவள்.. சீற்றமிக்க கடலலைகள் இவள் கண்களுள் ஏன் பொங்கு கின்றன.. கண்களும் சிவந்திருக்கின்றன..முத்தாட அழைக்கும் உதடுகள் ஏன் இயல்பு மாறித் துடிக்கின்றன..

    என்னாயிற்று..

    நீங்கள் எப்படி வந்தீர்கள் தெரியுமா

    தெரியும் மழை, கட்டை, கயிறு நீ.. இதற்காகவா கோபம்..

    இல்லை மங்கள்.. நீங்கள் கட்டையாய்ப் பிடித்தது பிணம்.. கயிறாய்ப்பிடித்ததுபாம்பு.. இங்கு வந்திருப்பது என்றாவது ஒரு நாள் அழகெலாம் இழந்து ரத்தம் சுண்டி கட்டையாக ஜீவன் விடப்போகிற இந்த அற்ப மடந்தைக்காக (ஹை..ரெண்டாவது தடவையும் சொல்லியாச்சு)

    சிந்தூ என்ன சொல்கிறாய் நீ..

    தலையூசி ஒன்றை எடுத்தாள் நறுக்கென தனது சுண்டுவிரலில் குத்தினாள்.. ரத்தம் அவள் இதழ் நிறத்தைப் போலத் துளிர்க்க “பாருங்கள் மங்கள்.. ரத்தமும் சதையும் கொண்ட சாதாரணப் பெண் நான்..எனக்காகவா இவ்வளவு பாடு உங்களுக்கு..இதில் கொஞ்சமே கொஞ்சம்பிற்காலத்தில் வரப்போகும் கணக்கான ஒரே ஒருசதவிகிதம் இறைவன் பால்காட்டினீர்கள் என்றால்.. அந்தக் கிருஷ்ணன் மீது ப்ரேமித்திருந்தீர்களென்றால் எங்கேயோ சென்றிருப்பீர்கள்..

    என்ன சொல்கிறாய் நீ

    என் மீதுள்ள ப்ரேமையை விடுங்கள் என்கிறேன்.. கொஞ்சம் ஆண்டவனை நினையுங்கள் என்கிறேன்..

    நீ சொல்வதானால் எதையும் செய்வேன் சிந்தூ இதையும் செய்கிறேன்” என்ற மங்கள் அன்றிலிருந்து பகவான் கிருஷ்ணனின்பக்தனானான்.. பிற்காலத்தில் லீலா சுகர் என்று அறியப்பட்டார்..க்ருஷ்ணாம்ருதமென்ற காவியத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார்..

    *
    மடந்தைப் பருவம் 15 இலிருந்து 18 வயதிற்குள்ளாமாம் பெண்களுக்கு..
    அதைத் தேடப்போய் பில்வ மங்கள் பற்றிய குறிப்புக் கிடைக்க அதற்குக் கொஞ்சம் ஜிகினா வேலை செய்து எழுதிப்பார்த்தேன்.. (கவிதையைத்தவிர்த்ததற்குக் காரணம் – கலை இது தான் என் ரூட் என்றுவிடுவார் என்ற பயம்)

    இந்தப் பில்வ மங்களின் கதை ஒரு படமாகவும் வந்ததாக்கும்..எப்போது 1937 இல் ..எம்.கே.தியாகராஜ பாகவதரின் இரண்டாவது படம்.. சிந்தாமணி என்ற பெயர்.. எடுத்தது மதுரை ராயல் டாக்க்கீஸ் என்ற கம்பெனி.. ஒருவருடத்திற்கும் மேலாக எல்லாஇடங்களிலும் ஓடி – மதுரை நியூ சினிமாவிலுமாம்- அதில் வசூலித்த பணத்தை வைத்து அந்த தயாரிப்பாளர்கள் மதுரையில் ஒரு தியேட்டர் வாங்கினார்களாம்..அதற்கும். சிந்தாமணி என்றே பெயர் வைத்தார்களாம்….சிந்தாமணி தியேட்டரில் பல படங்கள் பார்த்திருக்கிறேன்(இப்போதும் இருக்கா என்ன) இந்த விஷயம் எனக்குத் தெரியாத ஒன்று (உண்மையா முரளி)

    மறுபடியும் மடந்தைக்கு வந்தால்:

    பெரிய திருமொழியில்:

    திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
    தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
    அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
    அமர்ந்து ஏத்த இருந்த இடம்” என்று திருமங்கையாழ்வார் ஸ்ரீதேவி பூதேவிப்பிராட்டிகளை இளைய பருவம்கொண்ட நங்கையர்கள் எனச் சொல்கிறார்.

    கோவலனும்பாருங்க.. விஷமக்காரன் மட்டுமல்ல விஷயக்காரன் தான்..
    “மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
    பால்வாய்க் குழவி பயந்தனள் “ என சிலப்பதிகாரத்தில் வருகிறது.. கண்ணகிக்கு என்னவாக்கும் வயசு..பாவம் அவள் இன்னும் சின்னப் பொண்ணாம்..பன்னிரண்டு வயது மங்கைப்பருவம் என்கிறது சிலப்பதிகாரம்..
    *
    எனில் மடந்தைக்கு என்னப் பாட் போடலாம்..என யோசித்தால் முதலில் சிந்தாமணியில் வரும் ராதே எனக்குக் கோபம் ஆகாதடி..



    பதினாறுக்கு நிறைய பாட்டுக்கள் இருக்கு..வாசு வந்ததுனால போட்டாச் சொல்ல வைக்கலாம்..

    என்றும்பதினாறு .. வயது பதினாறு
    மனதும் பதினாறு..அருகில் வா வா விளையாடு..

    **

    எண்ணிரண்டு பதினாறு வயது
    அவள் கண்ணிரண்டில் காணுதம்மா காதல் கொண்ட மனது

    *

    அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை…தப்புங்க்ணா.. பருவ மடந்தைன்னு வந்துருக்கணும்..

    ம்ம் திடீர்னு யூட்யூப் லிங்க் கனெக்ட் பண்ண டயமாகுதா.. சரி..ஒருபாட்டோட நிறுத்திக்கலாம்..லாமா..

    அடுத்த பருவத்தில் சந்திக்கலாம்..

    வாரேன்..
    Last edited by chinnakkannan; 1st May 2015 at 02:25 AM.

  5. #3433
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பில்வ மங்களா..
    போனான் பங்களா...
    அவள் கேட்டாள் நீங்களா...

    [யாரோ ஓடி வரும் சத்தம் கேட்குதே.. வுடு ஜூட்....]
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes kalnayak, chinnakkannan liked this post
  7. #3434
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பதினாறு வயதினிலே... 17 பிள்ளையம்மா..

    [ஏதோ ஒரு டெலிவரியில் ட்வின்ஸாக இருந்திருக்கும்....]
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes rajeshkrv, chinnakkannan liked this post
  9. #3435
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    [ஏதோ ஒரு டெலிவரியில் ட்வின்ஸாக இருந்திருக்கும்....] ராகவேந்திரர்

    சரி இந்த அத்தியாயம் ஷார்ட்டா போட்டுக்கலாம்

    **


    பருவமே பழைய பாடல் பாடு – 5

    அடுத்து வரும் பெண்களின் பருவங்கள்..
    அரிவை – 19 முதல் 24 வயது வரை..
    தெரிவை 25 முதல் 29 வயது வரை..
    பேரிளம் பெண் 30 வயது முதல்..

    இது தான் பருவங்கள் என எழுதியிருந்தாலும் அதற்கான விளக்கங்கள் கிடைக்கவில்லை..ம்ம் கல்யாண வயது என்பது 21 லிருந்து 24 வயது வரை இருக்கலாம் என ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. அது தான் குடும்ப வாழ்க்கையைப் பற்றி அறியும் பருவம் என்பதால் அரிவை என்றிருக்கலாமோ..
    பாவம் இந்தப் பெண்.. தன்மனதுக்குகந்த காதலனிடம் ஒரு வார்த்தை பேச ஒருவருடம் காத்திருந்திருக்கிறாள்..ம்ம்



    தெரிவை – கல்யாணமாகி குழந்தைகள் பிறந்து கஷ்ட நஷ்டம் தெரிகின்ற பருவம் என்பதால் இருக்கலாமோ..இந்தப் பாட்டில் வரும் சுஹாசினி தெரிவை வயதிருக்கும் என நினைக்கிறேன்



    பேரிளம்பெண்.. என்றால் முப்பது வயதிற்கு மேல்..- தெரிவையில் பத்து வருடங்க்ள் சேர்த்து நாற்பது வயதில் இப்படிச் சொல்லியிருக்கலாம்…ம்ம்
    இருந்தாலும் இவர் வயதானாலும் அழகு தான்.. பாட்டி பப்பிம்மா.. பூவே பூச்சூட வா..



    ஆக பெண்களின் பருவம் முடிந்து விட..அடுத்த போஸ்டில் ஆண்களின் பருவங்கள்..

    வரட்டா..

  10. #3436
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார்,

    தங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி! தங்களுடன் உரையாடி எவ்வளவு நாட்களாகி விட்டது! நீங்கள் இல்லாமல் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. மதுரகானத்தில் தங்களைக் காண மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. தங்களின் அருமையான சுவையான சுருக்கமான நச்சென்ற பதிவுகளுக்கு முதல் ரசிகன் நான்தான். தங்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks adiram thanked for this post
    Likes kalnayak liked this post
  12. #3437
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!

    மிக்க நன்றி! தங்களின் அபூர்வமான பாடல்களின் தொகுப்புக்காக காத்திருக்கிறேன். நடிகர் திலகம் திரியில் தங்களின் 'திலக சங்கமம்' கலக்கல். ஒரு சிறு வேண்டுகோள். அதை மதுர கானங்கள் திரியில் பதிந்தால் மிக பொருத்தமாய் இருக்குமே. இசை சம்பந்தப்பட்ட பதிவு அல்லவா?
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes kalnayak liked this post
  14. #3438
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆகட்டும் வாசு சார்
    அடுத்த திலக சங்கமம் பதிவு தொடங்கி இரண்டிலுமே இடம் பெறும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks kalnayak thanked for this post
  16. #3439
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் ஆல் குட்மார்ங்க்..

    மொதல்ல பார்த்தீங்கன்னா,

    மரம் அது மரத்தில் ஏறி, மரம் அதைத் தோளில் வைத்து,
    மரம் அது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி
    மரம் அது வழியே சென்று, வளமனைக்கு ஏகும்போது
    மரம் அது கண்ட மாதர் மரமுடன் மரம் எடுத்தார்

    ஹலோஓஒவ்..சிக… மஸ்கட்ல வெயில் ஜாஸ்தியாஆ என அலறும் குரல் கேட்கிறது.. ஆண்பருவங்கள் பற்றி எழுதலாம் என்றால் அவ்வளவாக கொஞ்சம் மனம் செல்லவில்லை.. இப்படி பருவம் முடிந்தபையன் பருவம் பருவம் என்று சொல்கிறானே எனமற்றவர்கள் சொல்லிவிடும் அபாயம் இருப்பதால் என்ன எழுதலாம் என்று மோ.வ. பார்க்காமல் யோசித்ததில் பல நாட்கள்முன்பு தேர்ந்தெடுத்த பாடல் எனது சிந்தைக்கு எட்டி இங்கே இட்டுவிட்டேனா..(ஹப்பா மூச்சு விட்டுக்கறேன்)

    அதாவது மேற்கண்ட மரப் பாடலை எழுதியவர் ஒரு புலவர் (ஹை என்ன கண்டுபிடுப்பு) ஷங்க காலம் தான்
    ..
    மரமாகப் போச்சுதய்யா மூளை
    உரமாகத் தமிழினிலே வேலை
    சரம்சரமாய் மரங்கள்வர
    சங்கதமிழ் பாபடித்தால்
    சிரமெங்கும் சுற்றிநிற்கும் வேளை

    என இந்தப் பாட்டைப் படித்த போது எனக்கு ஏற்பட்டதென்னவோ வாஸ்தவம்..

    ஆனாக்க இதை எழுதின புலவர் இருக்காரே..ஒவ்வொரு மரம் என்கிற வார்த்தைக்கும் ஒவ்வொரு மரம் என இருக்க வேண்டுமாம் இல்லை வேறு பொருள் இருக்க எழுதியிருக்கிறார் (கன்ஃபீஷன்?!)
    பாட்டின் பொருள்.. ஒரு கிங்க் காட்டிற்குள் போய் வேங்கைப் புலியைக் கொன்று தன் அரண்மனைக்குத் திரும்புகையில் அங்கு சில பெண்கள் அவனை வரவேற்கிறார்கள்.. அம்புட்டு தேன் சிம்ம்பிள்..பின் எப்படிய்யா இப்படி வரும் என்று கேட்டால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்..

    மரம் அது மரத்தில் ஏறி = அரசன் ஒருவன் மாவில் (குதிரையின்மீது) ஏறுகிறான்

    மரம் அதைத் தோளில் வைத்து = வேலைத் தோளில் வைக்கிறான்

    மரம் அது மரத்தைக் கண்டு = அரசன் ஒரு வேங்கைப் புலியைப் பார்க்கிறான்

    மரத்தினால் மரத்தைக் குத்தி = வேலினால் வேங்கையைக் குத்துகிறான்

    மரம் அது வழியே சென்று = அரசன் வந்த வழியிலேயே திரும்புகிறான்

    வளமனைக்கு ஏகும்போது = வளங்கள் நிறைந்த தன்னுடைய மாளிகைக்குச் செல்கிறான்

    மரம் அது கண்ட மாதர் = அரசனைச் சில பெண்கள் காண்கிறார்கள்

    மரமுடன் மரம் எடுத்தார் = ஆலத்தி (ஆல் + அத்தி) எடுத்து வரவேற்றார்கள்

    ஆக, ராஜா ஒருவன் வேட்டைக்குப் போய் வேங்கையைக் கொன்று திரும்புகிறான், பெண்கள் அவனை வரவேற்கிறார்கள், அவ்வளவுதான் விஷயம், இதைச் சொல்வதற்கு அரச மரம், மா மரம், வேல மரம், வேங்கை மரம், ஆல மரம், அத்தி மரம் என்று ஒரு காட்டையே பாட்டுக்குள் நுழைத்துவிட்டார் புலவர்!
    (நன்றி பாட்டும் பாட்டின் விளக்க வுரையும்என். சொக்கனின் தினம் ஒரு பாவிலிருந்து)

    ஸோ…வாசு முறைப்பது தெரிகிறது..மரப்பாட்டுத் தானே போடுங்களேன் என..



    பனை மரம் தென்னை மரம் வாழை மரம் பாட்டுத் தான்போடலாம்னு தேடினேன்..தேடினேனா.. கிடைக்கலையா..அதான் ஆடிவெள்ளி..அண்ட் ஸ்ரீதேவி..ஓ..பேக் க்ரெளண்டல் ஆல மரம் இருக்கே. ஹி ஹி..:

  17. Likes kalnayak liked this post
  18. #3440
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹச்சோ..வாசு வந்திருக்காஹ.. அவருக்கு எதுவும் கிஃப்ட் கொடுக்கலையே..

    இந்தப் படமும் மதுரை ஸ்ரீதேவி தான்..டபிள் ஆக்ட் ந.தி என்பது மட்டும் நினைவில்.கடவுளை பூஜை செய்யும் ஒரு ந.தி, இன்னொரு ந.தி நம்பிக்கை இல்லாதவர் ( வி.கே.ஆரோ எம்.ஆர்.ஆர். வாசுவிடமோ. பரங்கிக்காய் என ப்ளாக்மெய்ல் மட்டும்செய்வார்..அதுமட்டும் நினைவில்)

    கடைசியில் என்னையும் மீறிய சக்தி தான் அந்தக் கோவில் கலசத்தைச் சுற்றவைத்தது என்பது போல் க்ளைமாக்ஸில் சொல்வார்.. சின்ன ந.தி இளமையாய் இருப்பார்..

    இடைப்பட்ட கதை நடிகையரெல்லாம்மறந்து போச்சு..இப்பத் தானிந்தப் பாட்டைப் பார்த்து கொஞ்சூண்டு நினைவு வந்தது..
    பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்
    கனவும் நினைவும் மனதில் மலரும்..

    மார்கழி மாதத்துப் பனியும் இந்த மங்கையைக் கண்டதும் பணியும் (உஷா நந்தினிக்குக் கொஞ்சம் ஓவர் தான்..வாணிஸ்ரீயோட கால்ஷீட் வாங்கியிருக்கலாம்ம்ம்)

    அலை தனில் வரும் அழகுப்படகு
    இவள் உடல் என அணைத்துப் பழகு..ம்ம்

    கொஞ்சம் ஃபாஸ்ட் அண்ட் மெலோடியஸ் சாங்க்காக்கும்..



    வாசு சார் ஹாப்பி?
    (படம் மனிதனும் தெய்வமாகலாம்)

  19. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •