-
4th May 2015, 03:31 PM
#1071
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
திரு.ஏ.சி. திருலோகச்சந்தர் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து தலைவரின் அரிய புகைப்படங்களை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
4th May 2015 03:31 PM
# ADS
Circuit advertisement
-
4th May 2015, 03:36 PM
#1072
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
ஸ்டைல் சக்கரவர்த்தியின் அட்டகாச அழகு படத்தை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
4th May 2015, 03:42 PM
#1073
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
ஆன்மிகத்திற்கும் , மக்கள் திலகத்திற்கும் அதிகமாக சம்பந்தம் இல்லை என்று சொல்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு இது . அவர் மனதில் ஓடிய ஆன்மிகம் மிகவும் ஆழமானது , அழகானது - சில சமயங்களில் அவரிடமிருந்து வெளிப்படும் போது அது அழுத்தமாகவும் இருக்கும் .
மாலிக்கபூரின் மதுரை மீனாட்சி கோவில் படையெடுப்பு! மதுரைக்கு வந்து கொண்டிருந்தான் கொடுங்கோலன் மாலிக்கபூர். அவன் வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல்.நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் விக்கிரக மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் நம் மக்கள்.
இப்படியாக துவங்கியது தான் படையெடுப்பு.* இவன் மதுரை நோக்கி படையெடுத்து வருவதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும் வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.*
சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன் மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறிய படியே கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப் போலவே நகை, விளக்கு,மாலை, எல்லாம் ஏற்பாடுசெய்தார்கள்.* மதுரை வந்தான் மாலிக்கபூர்.ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். போலி விக்ரகத்தை உண்மையென்று நினைத்து இடித்தான்.செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு போனான்.* அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை.
தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.* அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் மறுசீரமைப்பு செய்தார்கள். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.*
அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்கிரகமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள்! இதோ இடித்து விட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்கிரகமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும் வரை எப்படியாவது நான் இதை சொல்லி விட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று மகிழ்ச்சியுடனும் அழுதுகொண்டே சொன்னார்.உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.......--- உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்ப்பகிரகத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!! * 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும் போது இருந்த படியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புதுபொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.*
இன்றும் மதுரை மீனாட்சி கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விவரம் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மதுரை கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதி போடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.* ॐ ஓம் நம: சிவாய ॐ
நன்றி திரு.ரவி சார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்திகளை சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள். இந்த வரலாறு அருங்காட்சியகத்தில் இருந்தால் வெறும் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும் என்று கருதி விவரங்களை கோயிலுக்கு வருவோரின் பார்வையில் படும்படி எழுதி வைக்கச் சொன்ன புரட்சித் தலைவரின் மதியூகம் வியக்க வைக்கிறது. மிக்க நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
4th May 2015, 03:47 PM
#1074
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
புகழ்ச்சியை விரும்பாத, பாராட்டுக்கு மயங்காத பொன்மனச் செம்மலின் உரையை, அற்புதமான ஆவணத்தை பதிவிட்ட திரு.குமார் சார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
4th May 2015, 06:04 PM
#1075
Junior Member
Diamond Hubber
FANS WRITING IN FACEBOOK THALAIVAR MOVIES DIALOGUES I POSTED SOME OF THE DAIALOGUES
MGR's mom: "உன் அழகுக்கும் அறிவுக்கும் நீ எப்படி எல்லாம் வாழ வேண்டியவன்.. என் வயத்துல பிறந்து இப்படி பாடு படுறியே பா."
MGR: "அப்படி எல்லாம் சொல்லாதிங்க மா. எல்லா வசதியும் இருந்தும், தாய் அன்பு இல்லாம தவிக்கிற பெரிய லட்சாதிபதியை விட, தன்னை பெத்த தாய் உயிரோட இருந்து, ஒவ்வொரு நாளும் அவங்கள கும்பிட்டு கூலி வேலை செய்யற என்ன மாதிரி ஏழை தொழிலாளிங்க எவ்வளவோ உயர்ந்தவங்க மா."
படம்: தொழிலாளி
-
4th May 2015, 06:04 PM
#1076
Junior Member
Diamond Hubber
பாவிகளுக்கு துணை போறதுல பெருமை இல்ல.
தியாகிகளோட வழி படி நடக்குறதுல தான் பெருமை எல்லாம் இருக்கு.
படம்: நம் நாடு
"இருட்டுக்குள்ளாரையே இருந்து மற்றவங்களை திட்டுவதை விட,
அந்த இருளை போக்குவதற்க்கு தீபத்தை ஏற்றி வைக்கறாங்களே,
அவங்கதாண்ணே நாட்டுக்கு தேவையானவங்க".
'நேர்மையான பிச்சைக்காரனுக்கு
தலைவணங்குவேனே தவிர
அநியாயமான பணக்காரனுக்கு
தலைவணங்கவே மாட்டேன்'
என்ற வரிகள் கொண்ட உரையாடல் (நம்நாடு) மறக்க முடியாதது.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
-
4th May 2015, 06:07 PM
#1077
Junior Member
Diamond Hubber

இந்த புகைபடத்தினை நீங்கள் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.... தலைவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன் தேசிய மகளிர் தடகள போட்டியினை துவக்கி வைக்க கோவை நேரு விளையாட்டு அரங்கம் வந்திருந்தார். விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை எற்றுகொண்டபோது எடுத்த படம்.
படம் எடுத்தவர் கண்ணன் ஸ்டுடியோ மறைந்த குணசேகரன் அவர்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th May 2015, 06:57 PM
#1078
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Yukesh Babu
இந்த புகைபடத்தினை நீங்கள் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.... தலைவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன் தேசிய மகளிர் தடகள போட்டியினை துவக்கி வைக்க கோவை நேரு விளையாட்டு அரங்கம் வந்திருந்தார். விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை எற்றுகொண்டபோது எடுத்த படம்.
படம் எடுத்தவர் கண்ணன் ஸ்டுடியோ மறைந்த குணசேகரன் அவர்கள்.
நன்றி திரு.யுகேஷ் பாபு,
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, நின்று கொண்டு (உடல் நிலை காரணமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்?) அவர்களுக்கு சல்யூட் செய்யும் தலைவரின் பண்பும், உடல் நிலையை மீறிய மன உறுதியும் நாம் போற்றி பின்பற்றத்தக்கது.
தலைவரின் அரிய படத்தை பதிவிட்டு உங்களுக்கு.....
படமே பதில்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
4th May 2015, 07:09 PM
#1079
Junior Member
Seasoned Hubber

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு.முத்தையன் அம்மு. தலைவரின் ஆசியால் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளும் உடல் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
4th May 2015, 07:28 PM
#1080
Junior Member
Diamond Hubber

Kumudham - weekly
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks