-
9th May 2015, 08:36 AM
#11
Junior Member
Junior Hubber
எத்தனை பேர் எப்படி வேஷம் கட்டினால்தான் என்ன. ராஜா வேஷம் முதல் கோமாளி வேஷம் வரை சிவாஜி என்ற ஒரே ஒரு முகத்துக்குத்தான் பொருந்தும் என்று இப்போதாவது புரிந்து கொண்டால் சரி!
மகாகவி காளிதாசை இப்போது பாருங்கள். இன்னும் அருமையாக உணரலாம்.
எந்த வகையிலும் யாரும் சிவாஜிக்கு இணையே இல்லை. புதையல் கூத்தும், நவராத்திரி கூத்தும், தெனாலிராமன் விதூஷகனும், ராஜபார்ட்டின் ரசமான நாடகங்களும், என் தம்பி,கள்வனின் காதலி தெற்கத்திக் கள்ளன் ஆட்டமும் எப்போதோ சிவாஜி ப்பூ என்று ஊதித் தள்ளியவை. நடிப்பு கிடக்கட்டும். முதலில் வேஷப் பொருத்தத்தை எட்ட வேண்டுமே! வேஷப் பொருத்தம் கிடக்கட்டும் அதற்கு முன்னால் அதற்கேற்ற முகம் வேண்டுமே.
நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்றால்?!
முதல் படத்தின் முதல் காட்சியிலேயே மொத்தமும் முடித்து விட்டார் அந்த மாநடிகர்.
சூரியன்கள் கூட பல உண்டு. நடிப்பின் சூத்திரதாரி ஒருவர் மட்டுமே உண்டு. அதுதான் சிவாஜி. ஒரு சிவாஜி. ஒரே ஒரு சிவாஜி. சிவாஜி என்ற வி.சி.கணேசன்.
அந்த நடிப்பு மாயாவியின் அடிமுடியை தொட்டவர் எவரும் இல்லை. தொடப் போகிறவரும் இல்லை.
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
-
9th May 2015 08:36 AM
# ADS
Circuit advertisement
Bookmarks