-
22nd May 2015, 02:09 PM
#21
Senior Member
Diamond Hubber
கல்நாயக்,
வருக! தருக! மூன்றின் நாயகர் அல்லவோ தாங்கள். வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd May 2015 02:09 PM
# ADS
Circuit advertisement
-
22nd May 2015, 02:25 PM
#22
Junior Member
Seasoned Hubber
இங்கு நல்லாயிருக்கணும் எல்லாரும்
நலம் எல்லாம் விளையணும் எந்நாளும்
மதுரகானம் திரியின் 4-வது பாகத்தை துவக்கியிருக்கும் நண்பர் சின்னக்கண்ணனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நீங்கள் துவங்கியிருக்கும் இந்த திரி அபூர்வ பாடல்களாலும் அரிய தகவல்களாலும் நிரம்ப வாழ்த்துக்கள்.
நீங்கள் குறிப்பிட்டது போல கடந்த பாகத்தில் திரியை வெற்றிகரமாக கொண்டு சென்றதில் கல்நாயக்கின் பங்கு மகத்தானது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
சின்னக்கண்ணன் தொடங்கியிருக்கும் இந்த திரியில் பங்கு கொள்வோர், படித்து ரசிப்போர் மட்டுமின்றி எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி இந்த பாடலை தரவேற்ற வேண்டுகிறேன்.
ஒருதாய் மக்கள் படத்தில் இடம் பெற்ற திரு.வாலி அவர்களின் பாடல்.
இங்கு நல்லாயிருக்கணும் எல்லாரும்
நலம் எல்லாம் விளையணும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரணும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்
... எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்.
பாடலில் மக்கள் திலகம், சில்க் ஜிப்பா, தார் பாய்ச்சி கட்டிய ஜரிகை வேட்டியுடன் மிக அழகாக இருப்பார். போடும் ஸ்டெப்ஸ் அமர்க்களம். ஓரிடத்தில் 4 பேர் குந்தியபடி உட்கார்ந்திருக்க எந்த பிடிமானமும் இல்லாமல் அடுத்தடுத்து பச்சைக்குதிரை மாதிரி அவர் தாண்டிச் செல்வது வியப்பு.
உச்சி வெயில் சூடுபட்டு உடம்பு கருத்தது
இந்த ஊருக்காக உழைச்சு உழைச்சு கண்கள் சிவந்தது
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியப்பாரு (அப்போது மக்கள் திலகம் திமுகவில் இருந்தார்)
நம்ம காலம் இப்போ நடக்குதுன்னு கூறடி கூறு (நாளை முதல்வராக பதவியேற்க உள்ள செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு பொருத்தமான வரிகள். ஆளுநரை சந்தித்து அமைச்சர் பட்டியல் கொடுத்தாச்சு)
ஊரும் உறவும் சேர்ந்திருந்தா உசந்து வாழலாம்
எதையும் உனக்கு மட்டும் சேத்து வச்சா உலகம் ஏசலாம்
காத்தும் மழையும் யாருக்கும்தான் பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடமை கருத்து இருக்குது
........என்ன அழகான, கருத்துள்ள வரிகள்.
இன்றுபோல் என்றும் வாழ்க பாடலை தரவேற்றியதற்காக நன்றி சின்னக்கண்ணன். அதற்காக உங்களுக்கு இதயத்தில் இருந்து இதழ்கள் வழியே நன்றி கூறுகிறேன். இதைப் பார்த்ததும் எனக்கு நினைவு வந்தது.
இன்றுபோல் என்றும் வாழ்க படத்தின் 100வது நாள் விழா, சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது. அப்போதைய ஆளுநர் திரு.பிரபுதாஸ் பட்வாரி விழாவில் கலந்து கொண்டு புரட்சித் தலைவர் உட்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். மக்கள் திலகத்தின் அழகையும் இளமையையும் வியந்து பாராட்டினார்.
அந்த விழாவில் திரு.வாலியும் கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் திரு. தமிழ்வாணனும் கலந்து கொண்டனர். தமிழ்வாணன் அவர்கள் திரு.வாலியை தாக்கியும் கவியரசர் கண்ணதாசனை தூக்கியும் எழுதுவார். ஒருமுறை கல்கண்டு பத்திரிகையில் கேள்வி பதிலில் இருவரையும் ஒப்பீடு செய்து கண்ணதாசன் யானை, வாலி ஒரு கொசு என்று குறிப்பிட்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டபோது, திரு. வாலியிடம் திரு.தமிழ்வாணன் சகஜமாக பேசிக் கொண்டிருந்துவிட்டு, பின்னர், உங்களை நான் கொசு என்று குறிப்பிட்டது பற்றி வருத்தப்பட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு வாலி அளித்த பதில்...
வருத்தப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். கொசு கடித்தால் யானைக்கால் வரும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
22nd May 2015, 03:06 PM
#23
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd May 2015, 04:55 PM
#24
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd May 2015, 05:18 PM
#25
Junior Member
Seasoned Hubber
(சின்னக்) கண்ணனுக்கும் கிருஷ்ணா(சாரு)க்கும் வாழ்த்துரைப்போம் பாடி
சின்னக்கண்ணன், பாடலை எனக்காக தேடியதற்கு நன்றி. கிடைக்காவிட்டால் பரவாயில்லை. இருந்தாலும் புதிய திரியின் முதல் நாளில் நான் சொன்ன பாடலை தரவேற்ற முடியவில்லை என்ற குறை வேண்டாம். இந்தப் பாடல் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அருமையான பாடல். வாசு சார் விட்டிருக்க மாட்டார்.
திருமால் பெருமை படத்தில், ‘கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி...’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். திருமங்கை ஆழ்வாராக நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் சிறப்பாக நடித்திருப்பார்.
அந்தக் கண்ணனும் சரி, நீங்களும் சரி திருடர்கள் என்பதில் பேதமில்லைதான். ஆனால், அவன் திருடியது வெண்ணையை. நீங்கள் திருடுவது உள்ளங்களை. அன்பால் உள்ளங்களை திருடுவதும் நல்லதுதான். அதனால், புதிய திரியை துவங்கியுள்ள உங்களுக்காக....
‘நல்லதற்கு திருடுவதும் நாணயம்தான் தோழி
அதை நாட்டி வைத்த (சின்னக்) கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் பாடி’
கிருஷ்ணா சார், எவ்வளவு நாளாகி விட்டது உங்களை சந்தித்து. மிக்க மகிழ்ச்சி.
கண்ணனும் கிருஷ்ணனும் ஒன்றுதானே. வருகை தந்துள்ள கிருஷ்ணா (சாருக்கும்) வாழ்த்துரைப்போம் பாடி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd May 2015, 05:28 PM
#26

Originally Posted by
KALAIVENTHAN
(சின்னக்) கண்ணனுக்கும் கிருஷ்ணா(சாரு)க்கும் வாழ்த்துரைப்போம் பாடி
கிருஷ்ணா சார், எவ்வளவு நாளாகி விட்டது உங்களை சந்தித்து. மிக்க மகிழ்ச்சி.
கண்ணனும் கிருஷ்ணனும் ஒன்றுதானே. வருகை தந்துள்ள கிருஷ்ணா (சாருக்கும்) வாழ்த்துரைப்போம் பாடி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வாழ்த்திற்கு மிக்க நன்றி கலை சார். என்றும் தொடர வேண்டும் நமது நட்பு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd May 2015, 06:19 PM
#27
Junior Member
Seasoned Hubber
திரு கிருஷ்ணாஜி , நல் வரவு . உங்களை இங்கு மீண்டும் அழைத்து வந்த வாசுவிற்க்கும் , அவரை மீண்டும் இங்கு அழைத்து வந்த பாகம் , அந்த மூன்றை திறந்து , நெய்வேலியை உடைத்து , அதை பொது உடமையாக்கிய ராஜேஷ் அவர்களுக்கும் உங்கள் வரவு மூலம் மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டுருக்கிறோம் .
நான்காம் பாகம் கலை ( அவர்களின் அருமையான பதிவுகள் மூலமும் ) கட்ட ஆரம்பித்து விட்டது - ஒரு பக்கம் நிலவின் அரசாட்சி , பூக்களின் புன்சிரிப்பு , மறு பக்கம் 7000 த்தை எட்டி பிடித்தவரின் பேனாவின் ( சாரி மௌஸ் இன் ) விளையாட்டு , -" பாலாவின் " பூகம்ப பதிவுகள் , திலகங்களின் சங்கமம் --- இதன் நடுவில் எந்த பக்கமும் வழித்தெரியாமல் தவிக்கும் நான் போடும் பதிவுகள் - இவைகளை ஒன்றாக இணைய வைக்கும் திறமை உங்கள் புல்லாங்குழலில் தான் உள்ளது ..
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd May 2015, 06:21 PM
#28
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd May 2015, 06:42 PM
#29
Senior Member
Seasoned Hubber
சி.க. சார்
பாகம் நான்கினை வெற்றிகரமாகத் துவக்கி கிருஷ்ணாவையும் வரவைத்து விட்டீர்கள். கண்ணனை நினைத்தால் சொன்னது நடக்கும் என்ற பாட்டு உண்மையாகி விட்டது பார்த்தீர்களா.
தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
பாகம் மூன்றினை மிகச் சிறப்பாக நடத்திச்சென்றதற்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். நடுவில் கணினியின் கோளாறால் பல நாட்கள் பங்கேற்க முடியவில்லை என்றாலும் மிகவும் விறுவிறுவென பாகம் மூன்று பறந்து விட்டது. இதற்கு பெரிதும் துணை நின்றவர் பெயரில் மட்டும் கல்லை வைத்துக்கொண்டு உள்ளத்தில் மென்மையை வைத்திருக்கும் கல் நாயக் அவர்களே. அவருக்கே பெரும் பங்கு பாராட்டு சேரும். நிலாத் தொடரைத் தொடர்ந்து மலரைத் துவக்கி, மதுர கானம் திரி நிலவும் மலரும் பாட, நினைவில் தென்றலை வீச வைத்தார்.
முதலில் அவருக்குப் பாராட்டாக ஒரு பூப் பாடல்..
இந்தப் பூவின் மனசில் என்னவோ குழப்பம். அதை அவன் அறிவானா தெரியவில்லை. அவனே கேட்கிறான், பூவே என்ன போராட்டம்...நாமும் அறிந்து கொள்ள முயல்வோமே..
குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் புதல்வர்கள் சம்பத் மற்றும் செல்வன் இருவரும் இணைந்து இசையமைத்து, மறைந்த இயக்குநர் அமீர்ஜான் இயக்கிய ஓடங்கள் படத்திலிருந்து இனிமையான பாடல்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd May 2015, 06:44 PM
#30
Senior Member
Seasoned Hubber
கிருஷ்ணா ஜீ,
வாருங்கள்.. தாங்கள் இல்லாமல் அந்தக் குசும்பு இல்லாமல்.. திரி மூன்று சற்றே தொய்வில் இருந்தது. இருந்தாலும் சி.க. கல்நாயக் இருவரும் அவர்களுடைய பாணியில் தூள் கிளப்பி விட்டார்கள்.
இனி என்ன... தொடருங்கள்...
ஆவலுடன் காத்திருக்கிறேன்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
Bookmarks