-
23rd May 2015, 06:48 PM
#111
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 11
அன்னை என்பவள் நீ தானா ?
ஒரு சிறுவன் அவனுடைய தாயை தனக்கு ஒன்றுமே வாங்கித்தருவதில்லை என்று திட்டிக்கொண்டிருந்தான் - அவன் தாயும் உனக்கு 18 வயது முடிவடையட்டும் - கண்டிப்பாக உனக்கு ஒரு பரிசை தருகிறேன் - நீ அதை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது - மகன் 17 வருடங்களை கடந்தான் - 18இல் கால் எடுத்து வைக்கும் நேரம் - அவனுக்கு திடீரென்று இதய வலி வந்து விட்டது - அவனைப்பார்த்த மருத்துவர்கள் அனைவரும் - அவன் பிழைப்பது கடினம் - இதய மாற்று சிகிச்சை செய்தால் பிழைக்க சிறு வாய்ப்பு உள்ளது என்று ஒரு மனதாக சொல்லிவிட்டனர் -- வலிக்கும் வலியிலும் , அந்த மகன் தாயிடம் கேட்க்கின்றான் - " அம்மா இப்பொழுது 18. என்னுடைய பரிசு எங்கே - இப்பொழுதும் நீ எனக்கு அதை கொடுக்காவிட்டால் இனி எப்பொழுதுமே எனக்கு அதை தர முடியாது " - " தருகிறேன் மகனே என்று அழுத வண்ணம் அவன் இருந்த அறையை விட்டு மருத்துவரை காண விரைந்து சென்றாள் .
மகனுக்கு வெற்றிகரமாக இதய மாற்றம் நடந்தது - கண் விழித்தவன் தன் உண்மையான கண்களை தேடினான் - மெதுவாக அவனிடம் ஒரு மடல் தரப்படுக்கின்றது - தாயின் கடைசி பரிசு அது " மகனே உன்னை என் இதயமாக வளர்த்தேன் -- நீ சிரிக்கும் ஒலி தான் இன் இதயத்தின் ஓட்டம் . இன்று உன் சிரிப்பைத் தொலைத்து விட்டேன் - என் இதயமும் நின்று விட்டது - நின்ற என் இதயத்தை மீண்டும் ஓடவிட்டு உன்னுள் என்னை ஒன்றாக்கிக் கொண்டேன் - நீ வாழவேண்டும் - நான் என்றும் உன்னுள் இருப்பதால் நீ நன்றாகவே இன்னும் 100 ஆண்டுகள் வாழ்வாய் - உனக்கு என் ஆசிகள்" -- உன் அம்மா . 18இல் அவனுக்கு கிடைக்காத ஒரு பொக்கிஷம் கிடைத்துவிட்டது ......
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd May 2015 06:48 PM
# ADS
Circuit advertisement
-
23rd May 2015, 07:00 PM
#112
Junior Member
Seasoned Hubber
திரு ஆதிராம் - மிக்க நன்றி - கவனிக்கவே இல்லை - நீங்கள் சொல்லும் வரையில் - நம்பர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை - போடும் பதிவுகளில் புதிய கருத்துக்கள் இருக்க வேண்டும் - மற்றவர்களை புண் படுத்தும் வகையில் கண்டிப்பாக என் பதிவுகள் இருக்கவே கூடாது என்பதில் தான் மிகவும் கவனம் செலுத்துகின்றேன் - உங்களைப்போல பல நல்ல உள்ளங்களின் நடப்பு கிடைப்பதால் அதுவே என் பதிவுகளின் பெரிய வெற்றி என்று நினைக்கிறேன் . பல சாதனையாளர்கள் நிறைந்த இந்த திரியில் நான் சாதித்தது கடுகை விட மிகவும் சிறியது . மீண்டும் என் மனமார்ந்த நன்றி சார் ...
-
23rd May 2015, 07:20 PM
#113
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
மதுர கானங்கள் பாகம் நான்கு
கண்ணா! மனம் நிறைந்த வாழ்த்துகள்!
கல்நாயக்! பாராட்டுகள்
ராஜேஷ்! வாழ்த்துகள்!
ரவி! பாராட்டுக்கள்
கிருஷ்ணாஜி! வருக! வருக!
ராகவேந்தர் சார்! nuances அடங்கிய திலக சங்கமத்திற்கு பாராட்டுக்கள்!
இவர்களுக்கெல்லாம் மய்யப் புள்ளியாக விளங்கும் வாசுவிற்கு மனம் நிறைந்த நன்றிகள்!
அன்புடன்
நன்றி முரளி - உங்கள் பாராட்டுக்கள் ஒரு புதிய உற்ச்சாகத்தை கொடுக்கின்றன
-
23rd May 2015, 08:21 PM
#114
Senior Member
Senior Hubber
ரவி ஈஈஈ..
எண்களில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ உங்களது உழைப்பும் தமிழில் முன்னேற்றமும் உங்க்ள் பதிவுகளில் தெரிவது உள்ளங்கை நெல்லிக்கனி, அதற்குப் பாராட்ட இந்த ஆயிரம் ஒருசாக்கு அவ்வளவே.. நன்றாக எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். தொடருங்கள்..
என்ன அன்னை பற்றி சரம் சரமாய்ப் பதிவுகள் போட்டு கதி கலஙக் வைத்துவிட்டீர்கள்..மிக அழகாக, பெருமையாக இருக்கிறது..
கருவின்கரு என்ற போதே நான் ஊகித்து விட்டேன்..ஆனால் சொல்லவில்லை.. குட். என் ஊகம் சரியானதில் எனக்கொரு (அல்ப) சந்தோஷம்..
ஆனந்த் ராகவ் என்றொரு எழுத்தாள நண்பர், நாடகாசிரியர் அவர் எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது..வெகு வயதான ஒரு அன்னையை கும்ப மேளாவில் குடும்பமே சென்று அவரை ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு பின் சென்றுவிடுவதாக. அந்த அம்மா வராத குடும்பத்திற்காகக் காத்திருப்பாளாம்..கண்களில் நீர் மல்க வைக்கும் கதை.பெயர் நினைவிலில்லை..
என் அன்னையின் இறுதி முகம் காண எனக்குக் கொடுத்துவைக்கவில்லை..( யார் யாருக்குஎன்ன வாய்க்கிறதோ அது தான் வாய்க்கும் என்பதை உணர்த்திய விஷயம் அது) இன்றுவரை வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ம்ம் தொடர்ந்து எழுதுங்கள்..
-
23rd May 2015, 08:21 PM
#115
Senior Member
Seasoned Hubber
ரவி
ஆயிரம் பதிவுகள் ... அதிலும் பல்வேறு ஆய்வுகளை உள்ளடக்கிய தலைப்புகளும் அதற்குரிய கருத்துரைகளும் பாடல்களும் தங்களுடைய தனிச் சிறப்பாக மிளிர்வது பாராட்டுக்குரியது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அதிலும் கருவின் கரு என்கின்ற தற்போதைய தலைப்பு நெஞ்சுருக வைக்கும் நெகிழ வைக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
மென்மேலும் தங்களுடைய ஆய்வுகளின் மூலம் ஆயிரக்கணக்கான பதிவுகளில் விஷய தானம் செய்ய வேண்டி, வாழ்த்துகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd May 2015, 08:29 PM
#116
Senior Member
Senior Hubber
ஆதிராம்,
தமிழுக்கு நான் உபயோகப் படுத்துவது NHMwriter . கூகுள் செய்து அந்த Nhmwriter ai download செய்யுங்கள். அதை இன்ஸ்டால் செய்யும் போது எந்த மொழி எனக் கேட்கும். தமிழ் என்று போட்டு விட்டு செய்யுங்கள். பின் அந்த என்ஹெச் எம் ஐகானின் மீது டபுள் க்ளிக் செய்தீர்கள் என்றால் ஒரு பெல் (மணி) ஐகான் கம்ப்யூட்டரின் வலது பக்க மூலையில் தோன்றும்.
அதைக் க்ளிக் செய்தீர்கள் என்றால் மூன்றாவது ஆப்ஷன் Alt+2 Tamil Phonetic Unicode என்று வரும். அதில் க்ளிக் செய்துவிட்டு டபக் டபக் என அடிக்க வேண்டியது தான்.. அதாவது ஆங்கிலத்தில் (dabak dabak ena adikka veendiyathu thaan ) அடித்தால் தமிழில் வரும்.
சந்தேகம் ஏதாவது வந்தாள் கேளுங்கள்.
-
23rd May 2015, 08:39 PM
#117
Junior Member
Seasoned Hubber
CK - ஏழாயிரம் - வெறும் ஆயிரத்தை வாழ்த்தும்போழுது - ஏழு மடங்கு சந்தோஷம் பிறக்கின்றது . நீங்கள் சொல்வது உண்மை - காசியில் இதைவிட மோசமான , மனித நேயத்திர்க்கே கொல்லி வைக்கின்ற சில காட்ச்சிக்களை பார்த்தேன் - கண்களில் கண்ணீர் நின்று , இதயம் வழியாக இரத்தம் கசிந்தது - என் பதிவுகளில் இத்தகைய சம்பவங்கள் இடம் பெரும் . ... நீங்கள் உங்கள் தாயின் முகத்தை அந்திம நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று குறுப்பிட்டு இருந்தீர்கள் - கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கின்றது . என் நிலைமை சற்றே வேறு மாதிரி - என் தாயின் அருகில் இருந்தேன் - என் கைகளை வருடிக்கொண்டிருந்த அவள் என்னை பார்க்க முடியாமல் பார்வை ( extreme stage of Glaucoma) இழந்த கண்களை கடைசியாக இழுத்து மூடிக்கொண்டாள்.
-
23rd May 2015, 08:41 PM
#118
Senior Member
Senior Hubber
வாசு..ங்க்ணா.
ரொம்ப நாள் கழிச்சு மறுபடி தொடர்.. சண்டைக் காட்சிகள். ந,தி இழையில்... ரசித்துப் படித்தேன்.. இன்றைய காலகட்ட்த்தில் கிராஃபிக்ஸ் மற்றும் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்தாலும் கூட அந்தக்காலத்தில் எதற்கெடுத்தாலும் சற்றே மெனக்கெடத் தான் வேண்டும்.. அது போல ந.தி யின் உழைப்பு நீங்கள் காண்பித்த காட்சியில் தெரிகிறது..
நன்றி.ங்கோவ்.. புதையல் பார்க்கவேண்டும் ..இதுவரை பார்த்திராத படம்..(அந்த இழையில் போடாததற்குக் காரணம் கோபால், சி.செ, ராகவேந்தர் முரளி போன்றோர்களின் பதிவுகளைப் படித்து மட்டும் நிறுத்திக் கொண்டதால்..அவங்க கோச்சுண்ட்டுட்டாங்கன்னா. .. கஷ்டம் தான்.. எனில் இங்கு)
-
23rd May 2015, 08:42 PM
#119
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ரவி
ஆயிரம் பதிவுகள் ... அதிலும் பல்வேறு ஆய்வுகளை உள்ளடக்கிய தலைப்புகளும் அதற்குரிய கருத்துரைகளும் பாடல்களும் தங்களுடைய தனிச் சிறப்பாக மிளிர்வது பாராட்டுக்குரியது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அதிலும் கருவின் கரு என்கின்ற தற்போதைய தலைப்பு நெஞ்சுருக வைக்கும் நெகிழ வைக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
மென்மேலும் தங்களுடைய ஆய்வுகளின் மூலம் ஆயிரக்கணக்கான பதிவுகளில் விஷய தானம் செய்ய வேண்டி, வாழ்த்துகிறேன்.
மிகவும் நன்றி சார் - உங்கள் ஆசியுடன் தான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன் - இனியும் அதன் துணையுடன் பல மையில்கள் கடப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது .
-
23rd May 2015, 09:14 PM
#120
Junior Member
Newbie Hubber
ரவி,
அருமையான பங்களிப்பில் ஆயிரம் கண்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கருவின் கரு ,சுவாரஸ்யம்.
Bookmarks