-
4th June 2015, 08:30 PM
#641
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி
பாலா பாடல்களின் தொடர் அருமை. குறிப்பாக மாலதி.. அருமையான பாடல்கள்
செல்ல நாயகி செல்லப்பாடகி தூள் காம்பினேஷன்.. வயது ஒன்றும் முதிர்ந்துவிடவில்லை. இன்று முதிர்ந்ததெல்லாம் இளசு என்று மார்தட்டிக்கொண்டு வருகின்றன .. நீங்க வேற.. சரி சரி சூடு தனியத்தான் நுங்கு கொடுத்துவிட்டீரே பின்னே என் காதிலிருந்து புகை வராது வராது...
ரவி, சி.க மற்றும் கிருஷ்ண விஜ்யம் மீண்டும் என தூள் கிளப்புகிறது திரி.
ராகவ் ஜியின் திலக சங்கமம் அபாரம்.
இந்த குசும்பு கோபாலைத்தான் காணவில்லை
-
4th June 2015 08:30 PM
# ADS
Circuit advertisement
-
4th June 2015, 08:44 PM
#642
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
இந்த குசும்பு கோபாலைத்தான் காணவில்லை

உமக்கு நேரம் சரியில்லையோ?
-
4th June 2015, 08:45 PM
#643
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
வாசு ஜி
பாலா பாடல்களின் தொடர் அருமை. குறிப்பாக மாலதி.. அருமையான பாடல்கள்
செல்ல நாயகி செல்லப்பாடகி தூள் காம்பினேஷன்.. வயது ஒன்றும் முதிர்ந்துவிடவில்லை. இன்று முதிர்ந்ததெல்லாம் இளசு என்று மார்தட்டிக்கொண்டு வருகின்றன .. நீங்க வேற.. சரி சரி சூடு தனியத்தான் நுங்கு கொடுத்துவிட்டீரே பின்னே என் காதிலிருந்து புகை வராது வராது...
ரவி, சி.க மற்றும் கிருஷ்ண விஜ்யம் மீண்டும் என தூள் கிளப்புகிறது திரி.
ராகவ் ஜியின் திலக சங்கமம் அபாரம்.
நன்றி ஜி!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 08:53 PM
#644
Senior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302
இன்று திரியின் சுவை எல்லோருடைய sugar அளவையும் தாண்டியிருக்கும் . ஒருவருக்குமே மற்றவர்களின் பதிவுகளை படிக்க கண்டிப்பாக இன்று நேரம் இருந்திருக்க முடியாது ( என்னையும் சேர்த்துதான் ) - அடேயப்பா வாசுவின் " (நான்)பாலா பிரளயத்தையே உண்டு பண்ணுகின்றது - நொங்குவின் சுவையுடன் .. கல்நாயக் அவர்களின் பூவின் பாடல்கள் நறுமணத்தை இந்த திரியில் அள்ளி வீசியவண்ணம் உள்ளது - என்னமோ போங்க ! எதை சொல்வது எதை எழுதுவது என்றே புரியவில்லை - சற்றே காற்று அடித்து ஓயிந்து விட்டது என்று நினைக்கும் போது , ராஜேஷின் அருமை பதிவுகள் , கிருஷ்னாஜியின் பிரவேசம் , ராகவேந்தரின் குங்கும திலக சங்கமம் - கலையின் நன்றி பதிவு , CK வின் பதிவுகள் ------- திருஷ்ட்டி சுத்தி போடுங்கள் வாசு , இந்த திரிக்கு .
உண்மைதான் ரவி சர். இன்று எல்லோருமே அசத்தோ அசத்து என்று அசத்தி விட்டார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரித்தான சிறப்பு முத்திரைகளோடு. முழுக்க படிக்க நேரம் பிடிக்கும். நம் திரி சரித்திரம் படைக்கும்.
உங்களுடையது மட்டும் என்ன? குறைந்ததா? உங்கள் உழைப்பு எல்லோரையும் விட இன்னும் அதிகமாயிற்றே. அதுவும் ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு விஷயத்தை போதனையை அருமையான பாடல்களோடு தருகின்றனவே. அதுவும் வேற்று மொழிப் பாடல்கள் அட்டகாசம். கருவிற்கு மொழி ஏது? இப்படி எழுத ரவிக்கு இணை ஏது?
உங்களிடம் எனக்குப் பிடித்ததே இந்த அபார உழைப்பும், உற்சாகமும்தான். எழுத்தில் மேன்மை கூடி ஜொலிக்கிறது. பெரிய பதிவுகள் நிரம்ப நேரம் பிடிக்கும். ஆனால் எவ்வளவு அருமையான விஷயங்கள் சிறு சிறு கதைகளுடன் பொருத்தமாக தங்கள் தொடரில் பாடல்களுடன் போதனையுடன் கிடைக்கின்றன!
நிஜமாகவே அனுபவித்துப் படிக்கிறேன் ரவி. தொடருங்கள் இது போலவே.
-
4th June 2015, 08:55 PM
#645
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
ஏன் இல்லை . நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறதே.. ஹி ஹி

பால் பொங்கும் பருவம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 08:59 PM
#646
Senior Member
Diamond Hubber
கலை சார்,
நம்ம வாத்தியார் தகவல்களுக்கு நன்றி! பாராட்டுக்களுக்கும்தான்.
-
4th June 2015, 09:04 PM
#647
Senior Member
Seasoned Hubber
-
4th June 2015, 09:31 PM
#648
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 09:38 PM
#649
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
என்ன ஜி
நலம்தானே
nalameji! bakthi thodar attakaasam. theriyaatha paadalkalum venume!
-
4th June 2015, 09:48 PM
#650
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
//நல்ல பாட்டு. ஆனா கரும்பு கருப்பால்ல இருக்கும்.. ச.ஜோ கருப்ப்ங்கறாரா ரவிச்சந்திரன்//
சின்னா!
பதிவை ஒழுங்கா படித்தீரா இல்லையா?
"ச.ஜோ கருப்ப்ங்கறாரா ரவிச்சந்திரன்" அப்படின்னு போட்டிருக்கிறீரே! சின்னப் புள்ளைக்கும் புரியற மாதிரி ஜெமினி பாடலின் நாயகன் அப்படின்னு எழுதியிருக்கேனே! எப்படி திடீர்னு ரவிச்சந்திரன் முளைத்தார்?
இப்போ புரியுதா ஏன் மார்க் கம்மியா வாங்குகிறீர்கள் என்று?

ஒழுங்கா படிக்கணும். தெரியுதா?

இல்லீங்ணா அது டைப்போ.. ஜெ க்குப் பதிலா ரவின்னு எழுதிட்டேன்..ஷமிக்கணும்..சந்துலசிந்துபாடறச்சே இப்படி மிஸ்டேக் வரும்..வீடுன்னா - ராஜ ராஜ சோழனோட காலத்து நீதிபதி மாதிரி இரண்டு பேர் கூற்றையும் பல படி கேட்டு முடிவெடுப்பது போல- எழுதுவதை மறுபடி செக் பண்ணி போஸ்ட் பண்ணதுக்கப்புறமுமொரு முறை செக் பண்ணுவேன் - சொல் குற்றம் பொருள் குற்றம் இருக்கிறதா என ..அப்புறம் வாசகங்கள் தேன்சிந்துதே வானம் ஜெய்சித்ரா சிவகுமார் மாதிரி நெருக்க்கமாக இருப்பதாக ப் பட்டால்.. கொஞ்சம் தொப் தொப் நு எண்டர் பட்டனைத் தட்டி ஸ்பேஸ் விடுவேன்..
இதை அடித்த போது திரும்பிப் படிக்கக் கூட ச் சந்தர்ப்பம் கிடைகக்வில்லை..அதான்..
அப்புறம்
வாவ் நுங்கு எவ்ளோ காலம் ஆயிடுச்சு தெரியுமா வாசு சார்..மிக்க நன்றி..! இந்த த் தடவை கிடைக்குதா பாக்கணும்..
*
அதாகப் பட்டது மதுரை மேலூர் சாலையில் கொஞ்சம் உள்வாங்கி (ஒத்தக்கடையோ ஒத்தக்கடை தாண்டியோ என நினைக்கிறேன்) ஒரு சாலை போகும்..அந்த சாலையில் ஓரிரு கிலோமீட்டர்கள் நடந்தால் திருமோகூர் வரும் என நினைவு..
பற்பலவருடஙக்ளுக்கு முன்னால் என்ன ஆச்சுன்னாக்க
ஒரு யுவன் யுவதி அப்புறம் கூட யுவனின் அக்கா அத்திம் பேர் அப்புறம் அவர்களது பெண் குழந்தை..யுவதியுடன் ( நல்லவேளை) யாரும் கூட வரவில்லை.. பஸ்ஸுக்கு டைமாகும் என ஒத்தக்கடையிலிருந்து (அல்லதுவேறு ஊரா நினைவில்லை)கொஞ்சம் பொடி நடையாக அ ந்தக் காலைவேளையில் அவ்வளவாக வெயில் இல்லாததால் நடக்க ஆரம்பித்தோம்.. இரண்டு பக்கமும் தென்னை மரங்களாயிருந்த நினைவு..இப்பவும் இருக்கிறதா எனத்தெரியாது..
அ,அ, கு மூவரும் கொஞ்சம் முன்னால் போக பின்னால் கலருடன்(மதுரை பாஷை) அடியேன்..(அப்போதெல்லாம் கடல வழக்கில் இல்லை) அந்த யுவதி அத்திம்பேரின் தூரத்துச் சொந்தம் என நினைக்கிறேன்..வீடு அனேகமாய் தவிட்டுச் சந்தை என நினைவு( மீனாட்சி தியேட்டருக்கு அடுத்த ஸ்டாப் இப்பவும் இருக்கிறதா தெரியாது)
என்ன பேசினோம் எனக் கேட்டால் ஒன்றும் சுவாரஸ்யமில்லை..அந்தப் பெண் செய்ண்ட் ஜோசப் 10வதா ப்ளஸ் ஒண்ணா நினைவில்லை.. நான் கல்லூரி இரண்டாம் வருடம் என நினைவு.. வழக்கம் போல காலேஜ் , அவள் அவளுடைய ஸ்கூல் - அரட்டை வம்பு எனப் பேசியதாய் நினைவு.. சப்பென்று இருக்கில்லை..இல்லை இல்லை
டபக்கென்று அவள் தடுக்கிவிழ நான் தாங்கிக் கொள்ளலாம் என யோசிப்பதற்குள் அவளே சமாளித்து நின்று விட்டாள் (இடியட்- அதாவது நான்) என்ன ஆச்சும்மா ( ஒண்ணும் ஜாஸ்தில்லாம் பதட்டப் படலைகேட்டேளா) ஸ் ஆ என்றாள் ..கண்ணில் கொஞ்சம் நீர்..காரணம் கால் கட்டை விரல்.. கல்.. அவள் அதன் மேல் மோதியதால் என்னவோ சற்றுத் தொலைவில் சிரித்தபடி விழுந்திருக்க அவளுக்கு வலி அண்ட் கா க விரலில் கொஞ்சம் ரத்தம் சின்ன மனோரஞ்சிதப் பூ கணக்காக பூத்திருந்ததா..
கொண்டுவந்திருந்த கூடையை இறக்கி வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் என் கர்ச்சீப்பை நனைத்து ( அக்கா அத்திம் கொஞ்சம் தள்ளியே போயிருந்தார்கள்..குழந்தை எதற்காகவோ அழுததால் ஜோ ஜோ என்றவண்ணம்) கட்டச் சொல்லி பாவம் அந்த பாவாடை சட்டை தாவணிப் பெண் சற்றே விந்தி விந்தி நடக்க என் மனமும் விந்தியது..
என்ன செய்யலாம் என்னும்பொழுது கண்களில் தட்டுப் பட்டான் அவன்..
எங்கிருந்தோ வந்தான் ரங்கா ரங்கா என்பது போல சைக்கிள் பின் கட்டப்பட்ட கீற்றுக்களில் கர்வமாய் அமர்ந்திருக்கும் நுங்குகள்..
அய்யா உங்களுக்கும் தரச் சொன்னாருங்க..
தொலைவில் ஒரு நிழலில் நின்றோ அமர்ந்தோ இருந்த அத்திம்பேரைக் கைகாட்ட சரி என்றேன்/றோம்
சும்மா சொல்லக் கூடாதுங்க்.. நாங்க ரெண்டு இளசுகளும் இளசு இளசா நுங்கை வெட்டி வெட்டி அவன் கொடுக்க டபக் டபக்கென (அவள் செப்பு வாய் நான் என் அவதார வாய்..! முழுங்கினோம்..எவ்ளோ நல்லா இருந்தது தெரியுமா..
அதன் பின் ஒரு நாலைந்து தடவை தான் சாப்பிட்டிருப்பேன் நுங்கு.. அவ்ளோ டேஸ்ட் வந்ததில்லை..
அப்புறம் கோவில் போய் பெருமாள் சேவித்து கட்டிக்கொண்டிருந்த புளியோதரை தயிர்சாதம் சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்டுத் திரும்பினோம்..
அந்த யுவதியை அப்புறம் ஓரிரு முறை பார்த்திருப்பேன் அக்கா வீட்டில். அம்புட்டு தான்.. ஒரு மெல்லிய புன்சிரிப்பு கொஞ்சம் ஹாய் ..அப்புறம் ஒரு வருடத்தில் சென்னைக்கு அவள் அப்பாவிற்கு மாற்றல் என க் கேள்வி.. நோ மீட்டிங் ஆஃப்டர் வேர்ட்ஸ்.. கொஞ்சம் தகவல் மட்டும் கிடைத்தது.. பிஎஸ்ஸி படித்து சமர்த்தாய்க்கல்யாணம் கட்டிக்கிட்டு பம்பாயோ டெல்லியோபோனதாக..
முகம் கூட மறந்துவிட்டது.. கூட நடந்தபோது தாவணியில் கிளம்பிய சுகந்தம் மட்டும் நினைவில்.
இப்படியா க் கிளறி விடறது.. கண்ணா பாவம்.. 
*
Last edited by chinnakkannan; 4th June 2015 at 10:08 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks