Page 73 of 400 FirstFirst ... 2363717273747583123173 ... LastLast
Results 721 to 730 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #721
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இறைவன் குடிசை எரித்து கப்பலில் வந்தவனை காப்பாற்றிய கதை அருமை. நம்பிக்கையே மனிதனது சாதனம். அதை தங்களது குட்டிக்கதை அருமையாக உணர்த்துகிறது.

    பாலமுரளி கிருஷ்ணாவின் உன்னதக் குரல் 'அருள்வாயே' பாடலை எங்கோ உயரத் தூக்கிச் செல்கிறது.

    நல்ல பாடலுக்கு நன்றி ரவி.
    Last edited by vasudevan31355; 7th June 2015 at 07:39 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #722
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  4. #723
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 52

    ஜனணியின் தொடர்ச்சி :

    உண்மை சம்பவம் -7

    அம்மாவின் " அயிகிரி நந்தினி " குரல் வந்தால் , கடிகாரத்தை சரியாக காலை 5மணிக்கு திருத்திக்கொள்ளலாம் . விடிந்தும் விடியாத அந்த காலைபொழுதில் அந்த மதுர கானம் அந்த தெருவையே தூங்கினது போதும் , எழுந்திரு , உனக்கு நன்றாக வாழ இன்னும் ஒரு நாள் வாயிப்பை இறைவன் கொடுத்திருக்கிறான் என்று சொல்வது போல இருக்கும் - அந்த தெருவில் அம்மாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது . அவளின் ஞாபக சக்தி , 10 தெருவைத் தாண்டி கௌரி என்னும் பசுவிற்கு சீமந்தம் செய்யும் நாள் முதல் கன்றை ஈன்றும் நாள் வரை , என் மகள் அணுவின் ஸ்கூல் பீஸ் கட்டும் கடைசி நாள் வரை எல்லாமே அம்மாவிற்கு அத்துப்படி -- காண்டக்ட் நம்பரை எல்லாம் மொபைலில் ஸ்டோர் செய்யும் அவசியமே அம்மாவிடம் கிடையாது - என்றோ பஸ்சில் சந்தித்த நபர் கொடுத்த நம்பரைக்கூட சாதரணமாக அயிகிரி நந்தினி சொல்வதுபோல சொல்லுவாள் . படிக்காதவள் - ஆனால் படித்த எவருக்கும் ஒரு சவாலாக இருப்பவள் . இப்படிப்பட்ட அம்மா எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமை படாத நாளே கிடையாது .

    அன்று இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த விதி சற்றே என்னைப்பார்த்து சிரிக்க ஆரம்பித்தது . அம்மா என்னிடம்
    " கோபி , மறந்து விடுகிறதடா - நீயும் சொல்லேன் மகிஷாசுர மர்த்தினியை " - சிரித்தேன் - அம்மா அம்பிகைக்கு வேண்டுமானாலும் மறந்து போகலாம் - நீ மறப்பது என்பது நடக்காத ஒன்று --- அம்மாவிற்கு யாரவது புகழ்ந்தால் கூட பிடிக்காது -- "போதும் கோபி - மேலே சொல்லு ---"

    அம்மாவின் போக்கில் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன - ஒரு நாள் அணு எந்த கிளாஸ் இல் படிக்கிறாள் என்று கேட்டதும் சற்றே விழித்துக்கொண்டேன் .மது , என் மனைவி கண்டிப்பாக அம்மாவை டாக்டர் கிட்ட கூட்டிண்டு போக வேண்டும் என்று அடம் பிடித்தாள் .

    "Alzheimer's disease (AD), also known as Alzheimer disease, or just Alzheimer's, accounts for 60% to 70% of cases of dementia. It is a chronic neurodegenerative disease that usually starts slowly and gets worse over time. The most common early symptom is difficulty in remembering recent events (short-term memory loss). As the disease advances, symptoms can include: problems with language, disorientation (including easily getting lost), mood swings, loss of motivation, not managing self care, and behavioural issues. As a person's condition declines, she or he often withdraws from family and society. Gradually, bodily functions are lost, ultimately leading to death. Although the speed of progression can vary, the average life expectancy following diagnosis is three to nine years." டாக்டர் பெரிய சொற்பொழிவையே நிகழ்த்தினார் - தலையே எனக்கு சுற்றியது .

    "Mr கோபால கிருஷ்ணன் - கவலைப்படாதீர்கள் - உங்கள் அம்மா stage 1 . மிகவும் அன்புடனும், பொறுமையுடனும் அவளிடம் நடந்துகொள்ளுங்கள் - ---

    அம்மா என்னையும் நீ மறந்து விடுவாயா ??? எண்ணங்களை சுமந்துகொண்டு வீடு வந்தடைந்தேன் - அம்மா சிரித்தாள் --- கோபி யாரை யாரால் மறக்க முடியும் - இந்த வியாதிகள் எல்லாம் நம்மிடம் இருந்து பணம் பிடுங்கவே வருகின்றன - இதையெல்லாம் தாண்டி , யாருமே பிடிக்க முடியாத இடத்தில் இருப்பதுதான் ஒரு தாயின் உள்ளம் , அவளின் அன்பு - இதற்க்கு ஒரு பெயர் கிடையாது - காலம் காலமாக உலகம் சுழல்கின்றது இந்த ஒரு சக்தியினால் தான் . போய் படு ---

    அம்மாவை தினமும் குளிப்பாட்டும் ஒரு பாக்கியத்தைப்பெற்றேன் . அம்மாவுடன் தினமும் அமர்ந்து அவள் மறந்துபோகும் அயிகிரி நந்தினியை சொன்னேன் .

    பொறுமை கிலோவிற்கு என்ன விலை என்று கேட்டவன் , பொறுமையின் அவதாரம் என்ற பெயரைப்பெற்றேன் . அந்த சில மாதங்கள் , கங்கையில் குளித்த புண்ணியம் , 1000 கோயில்களை கட்டிய சந்தோஷம் எனக்கு கிடைத்தது .

    மதுவிடம் சொன்னேன் - அம்மாவை Alzheimer அழைத்துக்கொண்டு போய் விட்டது - இல்லை இல்லை அம்மாவை மறந்தவர்கள் தான் இந்த வியாதிக்கு அடிமையாகுகிறார்கள் - அம்மாவின் புகைப்படம் ஒரு மகிஷாசுர மர்த்தினியாக என்னைப்பார்த்து " உண்மைதான் " என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது ------



  5. Likes Russellmai liked this post
  6. #724
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 53

    கண்ணே கண்ணுருங்கு


  7. #725
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 54

    "மலர்ந்தும் மலராத "- கண்ணீர் முட்டுகின்றதே !!!


  8. Likes Russellmai liked this post
  9. #726
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 55

    காலமிது காலமிது ------


  10. Likes Russellmai liked this post
  11. #727
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனனியின் அடுத்த பருவம் நாளை

  12. #728
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ரவி சார்,

    விளம்பர தண்டிப்பு பற்றிய உங்கள் பதிவு மிகவும் அருமை. அனைவர் மனத்திலும் உள்ளதை கொட்டிவிட்டீர்கள்.
    தரக்கட்டுப்பாட்டு வாரியம்,
    அனுமதித்த அரசுத்துறை,
    சர்ச்சைக்குரிய பொருட்களை தயாரித்தவர்கள்,
    மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த ஊடகங்கள்
    அனைவரும் தண்டனைக்குரியவர்களே.

    நட்சத்திரங்களுக்கும் இதுபோன்ற குட்டுக்கள் தேவையே.

    இந்த விஷயத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் பாராட்டுக்குரியவர். விளம்பரத்துக்காக அவரை அணுகியபோது, "நான் உபயோகிக்காத எந்த பொருளையும் நான் விளம்பரப படுத்த மாட்டேன்" என்று மறுத்து விடுவாராம். எப்படியும் காசு பார்க்கவேண்டும் எனும் திரையுலகத்தில் இப்படியும் ஒரு அபூர்வ மனிதர். பாராட்டுக்குரியவர்.

  13. #729
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. தங்களின் "பழைய பாலா" தொகுப்பு மிக மிக இனிமை மட்டுமல்ல அபூர்வமும் கூட. ஒவ்வொரு பாடலும் மனதை கொள்ளை கொள்கிறது. என்னவொரு இனிமை, இந்தப்பதிவை எழுதும்போது நான் கேட்டுக்கொண்டிருப்பது "தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே". இந்தப்பாடலை ஐந்து நிமிடங்களில் எழுதிக் கொடுத்தாராம் கண்ணதாசன். அப்போது ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்த இளையராஜா சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியின்போது சொன்ன தகவல்.

    அந்தப்பாடல் முடிந்து அடுத்த பாடல் துவங்கிவிட்டது. "கீதா... ஒருநாள் பழகும் உறவல்ல".

  14. #730
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங் ஆல்

    கடுமையான ஜலதோஷம் ஜூரம் என டேப்லட் போட்டு ஞாயிறு வீக் ஆரம்பத்திற்கு வேலை பார்க்க வந்தாயிற்று.. ஆதிராம் நீங்க்ள் இருப்ப்து ஜித்தாவா ரியாத்தா.. இங்கு தண்ணீர் கஷ்டம் ஆரம்பித்தாகி விட்டது ..கடந்த இரண்டு தினங்களாக தண்ணீர் வராமல் கொஞ்சம்ப்ளாட் காம்பெளண்டில் இருக்கும் கிணற்றுத்தண்ணீர் மோட்டாரில் எடுக்கப் பட்டு பின் பக்கெட்டால் வீட்டிற்குக் கொண்டு வருகிறோம் (எந்த நேரத்தில் வாசு சாரைக் கிண்டல் பண்ணினேனோ.. )

    மற்ற படி.. தண்ணீர் கண்ட பின்பு மாறும் எங்கள் கண்ணீர்..

    பின்ன வாரேன்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •