-
13th June 2015, 06:11 AM
#951
Junior Member
Seasoned Hubber
Good morning
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th June 2015 06:11 AM
# ADS
Circuit advertisement
-
13th June 2015, 06:17 AM
#952
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 77
நவரத்தன மாலை 3 - முத்து
A pearl is a hard object produced within the soft tissue (specifically the mantle) of a living shelled mollusk. Just like the shell of a clam, a pearl is composed of calcium carbonate in minute crystalline form, which has been deposited in concentric layers. The ideal pearl is perfectly round and smooth, but many other shapes (baroque pearls) occur. The finest quality natural pearls have been highly valued as gemstones and objects of beauty for many centuries. Because of this, pearl has become a metaphor for something rare, fine, admirable and valuable.
The most valuable pearls occur spontaneously in the wild, but are extremely rare. These wild pearls are referred to as natural pearls.Cultured or farmed pearls from pearl oysters and freshwater mussels make up the majority of those currently sold. Imitation pearlsare also widely sold in inexpensive jewelry, but the quality of their iridescence is usually very poor and is easily distinguished from that of genuine pearls. Pearls have been harvested and cultivated primarily for use in jewelry, but in the past were also used to adorn clothing. They have also been crushed and used in cosmetics, medicines and paint formulations.



நவரத்தன மாலை 3 - முத்து
அகஸ்தியரின் நவரத்தின மாலை 3
" முத்தே வரும் முற்தொழிலாற்றிடவே
முன் நின்றருளும் முதல்வீ சரணம் ------"
மூன்று தொழில்களான படைத்தல் , காப்பாற்றுதல் , அழித்தல் இவைகள் சரியாக நடந்திட நீ தான் முன்னின்று அருள்கிறாய் - முதல்மையான உனக்கு எங்கள் சரணம் ......
நம் எண்ணங்கள் :
அந்த அம்பிகை மூன்று தொழில்கள் மட்டுமே செய்கிறாள் - ஆனால் நம் தாயோ நம்மை வளர்க்க செய்யாத வேலை இல்லை - , பண்ணாத தியாகங்கள் இல்லை .... அம்பிகை பண்ணுவதால் போல யாரையும் அழிப்பதில்லை - அழிக்க நினைத்தவர்களுக்கும் ஆசிர்வாதங்கள் தருபவள் நம் அன்னை - முத்தை விட மிகவும் உயர்தவள் - மிகவும் ஆழமாக சென்றாலும் அவளின் அன்பை அளந்துவிட முடியாது ....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
13th June 2015, 06:20 AM
#953
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 78
நவரத்தன மாலை 3 - முத்து
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th June 2015, 06:20 AM
#954
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 79
நவரத்தன மாலை 3 - முத்து
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th June 2015, 06:22 AM
#955
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 80

நவரத்தன மாலை 3 - முத்து
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th June 2015, 06:27 AM
#956
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 81
நவரத்தன மாலை 3 - முத்து
இந்த முத்தான பாடலுக்கு இணை உண்டா ??
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே !
.
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே
.
முத்துக்க*ள் சிரிக்கும் நில*த்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்க*ள் சிரிக்கும் நில*த்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்க்க*த்தின் வ*ன*ப்பை ரசிக்கும்
சித்த*த்தில் ம*ய*க்கும் வ*ள*ர்க்கும்
யோக*மே நீ வா
வைர*மோ என் வ*ச*ம்
வாழ்விலே ப*ர*வ*ச*ம்
வீதியில் ஊர்வ*ல*ம்
விழியெல்லாம் ந*வ*ர*ஸ*ம்
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
.
செல்வ*த்தின் அணைப்பின் கிட*ப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் ந*ட*ப்பேன்
செல்வ*த்தின் அணைப்பின் கிட*ப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் ந*ட*ப்பேன்
ராஜ*னாக* !
இன்ப*த்தில் ம*ன*த்தில் குளிப்பேன்
என்றென்றும் சுக*த்தில் மித*ப்பேன்
வீர*னாக* !
திரும*க*ள் ச*ம்ம*த*ம் த*ருகிறாள் என்னிட*ம்
ம*ன*திலே நிம்ம*தி
ம*ல*ர்வ*தோ புன்ன*கை
.
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே......
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*...
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
13th June 2015, 09:00 AM
#957
Senior Member
Diamond Hubber
ரவி சார்,
கரு முத்து பவளம் என்று ஜொலிக்கிறதே அதே வரி பாடலுடன். நடிகர் திலகத்தின் அருமையான பாடல்களுக்கு நன்றி! மாலைக் கோர்புகளை ரசித்தேன்.
-
13th June 2015, 09:05 AM
#958
Senior Member
Diamond Hubber
'வாடா மச்சான் வாடா'
'அன்று கண்ட முகம்' படத்தில் வரும் செம ஜாலி கலாய்ப்பு பாடல். 1968-ல் வந்த இந்தப் படம் நன்றாகவே இருந்தது.
/Art-350.jpg)
ரவி, நாகேஷ் இருவரும் சேர்ந்தால் கேக்கணுமா?
வில்லனின் அடியாட்களை அறிந்து கொண்டு, அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களிடம் சவால் விட்டு, புத்திமதி தந்து, கலாட்டா செய்து ரவியும், நாகேஷும் பாடி ஆடும் பாடல்.
சிறுவயது முதற்கொண்டே எனக்கு மனதில் ஊறி நிரம்பப் பிடித்துப் போன பாடல் அது.
ரவிக்கு இந்த மாதிரிப் பாடல்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி. கிண்டல் கேலிப் பாடல்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் அவர். அவருடன் சேர்ந்த இன்னொரு குத்தகைக்காரர் நாகேஷ்.
'வாடா மச்சான்' என்று ரவி ஒரு நீளக் குரல் கொடுத்தவுடன் சஸ்பென்சும், திகிலுமாய் ஒலிக்கும் மாமாவின் இசை. குறிப்பாக கிடார் பேஸ். அடுத்து ஒலிக்கும் அருமையான இசைக்கு ரவி கால்களை மாற்றி மாற்றி வைத்து நடனமாட செம ரகளையாய் ஆரம்பிக்கும் பாடல்.
ரவி ரகளை பண்ண ஆரம்பிக்க, நாகேஷ் பந்து போலத் துள்ளி வந்து ஜாயின் செய்து கொள்ளுவார்.
நக்கல்களும், நையாண்டிகளும் தொடரும்.
ரவிக்கு 'பாடகர் திலகம்' வாய்ஸும், நாகேஷுக்கு அவருக்கென்றே பிறந்த பாடகர் ஏ.எல்.ராகவன் வாய்ஸும். நானா நீயா என்று இருவரும் போட்டா போட்டி போடுவார்கள். கிண்டல் பாடல் என்பதால் எக்ஸ்ட்ரா கூக்குரல்கள் எல்லாம் கொடுத்து ராகவன் ஓட்டத்தில் முந்தி விடுவார்.
இந்த எக்ஸ்ட்ரா பிட்கள் கொடுப்பதில் சதனும், ராகவனும் சக்கரவர்த்திகள். சதன் பலகுரல். ராகவன் ஒரே குரல் ஆனால் பலவிதம்.
('நான் யார் தெரியுமா?' என்ற ஜெய்சங்கர் படத்தில் 'பார்த்ததும்... காதலை... தருவது அழகிய பெண்களே' என்றொரு பாடலில் இதே பாடகர் திலகத்துடன் சேர்ந்து எவருமே செய்ய முடியாத தர முடியாத 'எக்கோ' வாய்ஸை எதிரொலிக்கச் செய்து நான் யார் தெரியுமா என்று மார் தட்டியவர் ராகவன்).
'ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா'
என்று முடித்துவிட்டு சௌந்தர்ராஜன் ஆஅ ஆஅ ஓஒ... என்று இழுப்பது ரகளை என்றால்
'மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா'
என்று நாகேஷ் குப்பைத்தொட்டியில் வில்லன் ஆள் ஒருவரை அமர வைத்து கேலி செய்வது ஜோர்.
'வெறும் காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா'
என்று சௌந்தர் முடித்தவுடன்,
ராகவன் 'ஹெஹெஹ்ஹெஹே' என்று கொக்கரிப்பது அட்டகாசம்.
பின் இருவரும் மாறி மாறி
'ஏன்டா டேய்
ஏன்டா டேய்
ஏன்டா டேய்
டேய்! டேய்'
என்று எதிரிகளை அலட்சியமாய் எகத்தாளம் செய்வது கலக்கல்.
பாடலாசிரியர் வார்த்தைகளை அதிகமாக போட்டாலும் மாமா சாமர்த்தியமாக ராகவனை வேகமாக பாட வைத்து டியூனுக்குள் அடக்கி விடுவது செம விசேஷம். பாருங்கள்
'தண்டனைக்குத் தப்பிய திருடன் தரணியில் உண்டோடா'
இந்த 5 வார்த்தைகளையும் ராகவன் ரொம்ப அருமையாக, விரைவாக ஒரே வரியில் கொண்டு வந்து வருவார். அது மட்டுமல்ல. கூட 'அடா அடா அடா' வேறு சேர்த்து இன்னும் பரிமளிப்பார். பாட்டின் ராகத்தோடு சேர்ந்து இந்த 'அடா புடாக்கள்' எல்லாம் அற்புதமாக மேட்ச் ஆகும்.
'அண்டப் புழுகன் கொள்ளையன் கூட
அகப்பட்டுக் கொண்டான்டா'
என்று நாகேஷ் பாடியதும்,
'அவனே அப்படி ஆனா நீ என்ன
அப்பன் மகனோடா'
என்று ரவி தொடர,
உடனே நாகேஷ்
'போடா' என்று அலட்சியமாக சொல்லி விட்டுப் போவாரே! சூப்பரப்பா.
அடுத்து பல்லவி வரி பாடகர் திலகத்தின் குரலில் 'வாடா மச்சான் வாடா' வந்தவுடன் எக்ஸ்ட்ராவாக ராகவன்
'பயப்படாமே வாடா'
என்று அற்புதமாக இணைவார் பாருங்கள். அருமையோ அருமை. என்ஜாய் பண்ணலாம்.
'அம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று'
என்று அன்பைக் குழைத்து சௌந்தாரராஜன் அந்த வரிகளில் எங்கோ போய் கொடி நாட்டுவார். திரும்பவும்
'உங்க' என்பதையும் சேர்த்து
'உங்கம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று'
என்று பாடுவது அற்புதத்திலும் அற்புதம்.
முழுக்க முழுக்க மலைப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட பாடல்.ஸ்டூடியோ ஷாட்களே இருக்காது. முழுதும் அவுட்டோரிலே படமாக்கப் பட்டது இன்னொரு சிறப்பு.
சவால் பாடல். சவால் பாடல்களுக்கு சவால் விடும் பாடல் கூட.
மனதில் துணிவையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் பாடல்.
'எதிரிகளைக் கண்டு அஞ்சாதே... துச்சமாக நினை....எவனாயிருந்தாலும் துணிவுடன் எதிர்த்து நில்லு...அடுத்துக் கெடுக்கும் ஆதிக்கக்காரகளை அடக்கு...வேஷதாரிகளின் வேடத்தைக் கலைத்து வெட்ட வெளிச்சமாக்கு...'
என்ற உற்சாக சக்தி தரும் டானிக் பாடல்.
'ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா'
எனக்கு இப்போது மட்டுமல்ல...எப்போதும் பிடித்த வரிகள்.
வாடா மச்சான்
வாடா மச்சான் வாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா
ஆஆ ஆஆ ஒ.....ஒ
மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா
அஹா அஹா அஹா ஓஓ....ஓ
ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா
மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா
காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா
வெறும் காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா
ஹெஹெஹ்ஹெஹே
கைக்குக் கையா சண்டை போட
தைரியம் உண்டோடா
ஏன்டா டோய்
ஏன்டா டோய்
ஏன்டா டேய்
டேய்! டேய்
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
தண்டனைக்குத் தப்பிய திருடன்
தரணியில் உண்டோடா அடா அடா அடா
தப்பிப் போன திருடனைக் கூட
தர்மம் விடுமாடா..டாய்..
தண்டனைக்குத் தப்பிய திருடன்
தரணியில் உண்டோடா
ஆ டஹா ஆ டஹா ஆ டஹா
தப்பிப் போன திருடனைக் கூட
தர்மம் விடுமாடா
அண்டப் புழுகன் கொள்ளையன் கூட
அகப்பட்டுக் கொண்டான்டா அடா அடா அடா
அவனே அப்படி ஆனா நீ என்ன
அப்பன் மகனோடா
போடா (நாகேஷ் ஜோர்)
வாடா மச்சான் வாடா
பயப்படாமே வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
சொந்தப் புத்தி இருந்தா
நல்ல சோத்துக்கு வழி உண்டு ஓ ஓ ஓ
இந்தப் புத்தி இருந்தா
அங்கே கம்பிக் கதவுண்டு
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓ ஓ ஓ
சொந்தப் புத்தி இருந்தா
நல்ல சோத்துக்கு வழி உண்டு
இந்தப் புத்தி இருந்தா
அங்கே கம்பிக் கதவுண்டு
அம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று
உங்கம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று
ஹெஹெஹே
அடுத்தவன் சொல்லைக்
கேட்டுக் கெட்டவன்
ஆயிரம் பேருண்டு
ஏன்டா டோய்
ஏன்டா டோய்
ஏன்டா டேய்
டேய் டேய்
வாடா மச்சான் வாடா
பயப்ப்படாமே வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
Last edited by vasudevan31355; 13th June 2015 at 09:55 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
13th June 2015, 10:26 AM
#959
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
பணி நிமித்தமாகத் தொலைதூரப் பிரதேசங்களுக்கு இடம்பெயரும் மனிதர்கள், சொந்த ஊர் நினைவுகளை ஜியாமெட்ரி பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட பொன்வண்டைப் போல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இளம் பிராயத்து நினைவெனும் வானத்தில் அந்த வண்டு பறந்து செல்லும்போது, அதைப் பிணைத்திருக்கும் நூலைப் பற்றிக்கொண்டு கூடவே பறந்து செல்வதும், வலிநிறைந்த நினைவுகளுடன் அதைப் பார்த்துக்கொண்டே நிற்பதும் அவரவரின் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது. பழுப்பேறிய பசுமை நிறத்தில் உறைந்திருக்கும் அவ்வாறான நினைவுகளை மீட்டுத் தரும் பாடல் ‘அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா’. பாடல் இடம்பெற்ற திரைப்படம் 1981-ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நண்டு’.
சிவசங்கரி எழுதிய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ‘உதிரிப் பூக்கள்’ அஸ்வினி, சுரேஷ் (அறிமுக நடிகர்) ஆகியோருடன் செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு என்று சிறந்த நடிகர்கள் நடித்திருந்தனர்.
வட நாட்டு இளைஞனான நாயகன், பெரும் பணக்காரரான தன் தந்தையின் பிற்போக்குத்தனத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியவன். தமிழகத்தில் வெள்ளந்தி மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பில் ஒரு அறையில் தங்கியிருப்பான். அந்த மனிதர்களுக்கும் அவனுக்கும் இடையில் மலரும் உறவு, காதல் என்று நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை.
அள்ளித் தந்த ராஜா
பிறந்து வளர்ந்த ஊரின் வீடுகள், தெருக்கள், குளங்களை வெவ்வேறு வடிவங்களில் கனவுகளில் காண்பவர்கள் எங்கும் நிறைந்திருக்கி றார்கள். அந்தக் கனவுகளைப் பதிவு செய்த பாடல் ‘அள்ளித் தந்த பூமி’. பூர்வீக வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு மனதுக்குப் பழக்கமான தெருக்களை, வீடுகளைப் பார்த்தபடி பழைய நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் அனுபவத்தை இந்தப் பாடல் தரும். நினைவின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் இசையிழைகளை நெய்திருப்பார் இளையராஜா.
அலைபாயும் பல்வேறு எண்ணங்கள் ஓரிடத்தில் கலந்து பிரிவதைப் பாடலின் நிரவல் இசைக்கோவைகள் உணர்த்திவிடும். நிரவல் இசையில் முதல் சரணத்துக்கு முன்னதாக இளம் வயதின் பசுமையான நினைவுகளை அசைபோட்டபடி எலெக்ட்ரிக் கிட்டார் ஒலிக்க, அந்நினைவை வருடிச் செல்வதுபோல், ஒரு வயலின் கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.
‘இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்’போன்ற ஆத்மார்த்தமான வரிகளை எழுதியவர் மதுக்கூர் கண்ணன். கடந்து சென்ற வாழ்வின் மகிழ்ச்சியான கணங்களையும், துயர நினைவுகளையும் தனது குளிர்ந்த, தணிந்த குரலில் பதிவுசெய்திருப்பார் மலேசியா வாசுதேவன். காலத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் கோட்டைகள் நிறைந்த நகரின் பின்னணியில் அசோக்குமாரின் ஒளிப்பதிவு, படம் வெளியான சமகாலத்திலேயே அப்பாடலுக்குக் காவியத் தன்மையைத் தந்துவிட்டது.
ஈரம் படிந்த இசை
தன் குழந்தையின் அழகை வர்ணித்துத் தாய் பாடும் ‘மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே’ பாடல், இளையராஜா தந்த தாலாட்டுகளில் ஒன்று. வீணை மற்றும் கிட்டாரின் மெல்லிய உரையாடலுடன் தொடங்கும் அந்தப் பாடல் முழுவதும், வாழ்க்கையின் சுகந்தங்களையும் சிடுக்குகளையும் சித்தரிக்கும் இசையைத் தந்திருப்பார். நாயகனுக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஒலிக்கும் பாடல் இது.
சற்று முன்னர் பெய்த மழையின் ஈரம் படிந்த தெருக்களின் வழியே நடந்து செல்லும் நாயகன் ஒருபுறம், குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் அவனது குடும்பம் மறுபுறம் என்று இருவேறு மனநிலைகளை இசையாக்கியிருப்பார் இளையராஜா. உமா ரமணனின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது.
முதல் நாள் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, மறுநாள் காலையில் எந்த வித அலுப்பும் இல்லாமல் புத்துணர்வுடன் இந்தப் பாடலை ‘கம்போஸ்’ செய்திருந்தார் இளையராஜா என்று, ஒலிப்பதிவுக் கூடத்துக்கு உமா ரமணனுடன் சென்றிருந்த அவருடைய கணவர் ஏ.வி. ரமணன் குறிப்பிட்டிருக்கிறார். பாடலில் தோன்றும் குழந்தையை ‘நடிக்க’ விடாமல் அதன் போக்கில் இருக்கவைத்து, யதார்த்தமாகப் படமாக்கியிருப்பார் மகேந்திரன்.
நாயகன் வட நாட்டுக்காரன் என்பதால், முழுக்க முழுக்க இந்தியிலேயே எழுதப்பட்ட பாடலும் படத்தில் உண்டு. ‘கேஸே கஹூ(ம்)… குச் கே(ஹ்) ந சகூ(ம்)’ (‘எப்படிச் சொல்வேன், எதையும் சொல்ல முடியவில்லையே’) என்று தொடங்கும் இந்தப் பாடலை எஸ். ஜானகியுடன் கஜல் பாடகர் புபேந்தர் சிங் பாடியிருப்பார்.
நெகிழ்வூட்டும் இசைக் கூறுகள் நிறைந்த பாடல் இது. பி.பி.ஸ்ரீநிவாசும் தீபன் சக்கரவர்த்தியும் சரி விகிதத்தில் கலந்த குரல் புபேந்தருடையது. பல மொழிகள் அறிந்த பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் எழுதிய பாடல் இது. ‘பாடுதம்மா காற்றின் அலைகள்’ எனும் டைட்டில் பாடலைத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பாடியிருப்பார் புபேந்தர் சிங்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th June 2015, 10:28 AM
#960
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
ழல் ஒன்று பார்வை இரண்டு: என்னை மறந்ததேன் தென்றலே?
ஒன்றாய் இருக்கும்பொழுது உற்சாகமாகப் பாடும் திரைக் காதலர்கள், பிரிந்திருக்கும்போது பாடும் சோக கீதங்களும் பொருள் செறிந்தவை. இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இப்படிப்பட்ட சூழலுக்கான பாடல்கள் உள்ளன. காதலர்களுக்குப் பொதுவான இந்தச் சூழ்நிலையை வெவ்வேறு விதமாகக் கையாளும் கவித்துவமான பாடல்கள் இந்தியிலும் தமிழிலும் உள்ளன.
‘என்னை விட்டுத் தொலைவில் உள்ள காதலனுக்கு, என் நினைவு கட்டாயம் வரத்தான் செய்யும், நீ போய் என் நிலையைச் சொல்’என்று வண்ணத்துப் பூச்சியைத் தூது விடும் இந்திப் படக் காதலியையும் என்னை ஏன் அவர் மறந்து விட்டார் எனத் தென்றலையும் கற்சிலைகளையும் கடல் அலைகளையும் பார்த்துப் பாடி, அவற்றைத் தூது அனுப்பும் தமிழ்க் காதலியையும் பார்க்கலாம்.
இந்திப் பாடல்:
படம்: பதங்க் (பட்டம்).
பாடலாசிரியர்: ராஜேந்திர கிஷன்.
பாடியவர்: லதா மங்கேஷ்கர்.
இசை: சித்ரகுப்த்
பாடல்:
ரங்க் தில் கி தட்கன் பீ லாத்தி தோ ஹோகி
யாத் மேரி உன்கோ பீ ஆத்தி தோ ஹோகி
ஓ பியார் கீ குஷ்பு கஹான் ஆத்தி தோ கலியான் ஸே
ஹோ கே ஆயீ ஹை ஹவா பீ உன்கீ ஃகலியான் ஸே
சூகே உன் கே தாமன் கோ ஆத்தி தோ ஹோகி
ரங்க் தில் கி …
பொருள்:
இதயத்தின் துடிப்பை இவ்வண்ணங்களும் எடுத்தே காட்டும்
என் நினவு அவனுக்கும்
வரத்தான் செய்யும்
ஏ காதல் என்ற நறுமணமே,
நீ உள்ள பூங்காவனத்தில் வீசும்
இனிய காற்றும் அவன் மேலாடையை
முத்தமிட்டே வந்திருக்கும் (இதயத்தின் துடிப்பை)
இந்த வசந்தம் இந்த வனம் எல்லாம் அவன் வசம்
இருப்பது அவன் கொள்ளும் சிறு தயக்கம் என்னிடம் மட்டும்
இதனால் அவனது இதயம் கொஞ்சம் பதறவே செய்யும் (இதயத்தின் துடிப்பை)
செல் என் செல்ல
வண்ணத்துப் பூச்சியே
நன்கு நீ அறிந்த அவன் நகரத்துக்கு
மெல்ல உன் செய்திகளை அவனிடம் அளித்துவிட்டு வா
எப்படியும் அங்கு நீ போகத்தானே செய்கிறாய்
இதயத்தின் துடிப்பை இவ்வண்ணங்களும் எடுத்தே காட்டும்
என் நினைவு அவனுக்கும் வரத்தான் செய்யும்.
இந்த மெல்லிய ஏக்க உணர்வைச் சற்று ஆற்றாமையுடன் வெளிப்படுத்தும் தமிழ்ப் பாடலைப் பாருங்கள்:
படம்: கலங்கரை விளக்கம் பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசீலா இசை: எம்.எஸ் விஸ்வநாதன்
என்னை மறந்ததேன் தென்றலே?
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கவியாக மாறாதோ? (என்னை மறந்ததேன்…)
கலையாத காதல் நிலையாகவென்று
அழியாத சிலைகள் செய்தாயோ? ஒன்றும்
அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத்
திறவாமல் எங்கே சென்றாயோ?
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்
நீ ஆடும் நாளும் வருமோ? இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ?
கண்டாலும் போதும் கண்கள்
என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
மலராக மாறாதோ? (என்னை மறந்ததேன்)
தொடராமல் தொடரும் சுவையான உறவில்
வளராமல் வளர்ந்து நின்றாலும்
இன்று முடியாமல் முடியும் பனிபோன்ற கனவில்
எனை வாழ வைத்துச் சென்றாயே
வந்தோடும் அலைகள் என்றும்
என் காதல் பாடும் இல்லையோ?
எந்நாளும் எனது நெஞ்சம்
உனைத் தேடி வாராதோ? (என்னை மறந்ததேன்)
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks