-
15th June 2015, 03:49 PM
#761
Junior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
செந்தில் சார்,
என்ன ஒற்றுமை! கடந்த இரண்டு மணி நேரமாக 'ஆசையினாலே மனம்' பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன். முடித்து விட்டு சப்மிட் கொடுத்துப் பார்த்தால் அதே பாடல் தங்கள் பதிவாக வந்திருக்கிறது. உள்ளங்கள் ஒன்று பட்டால் ரசனையும் ஒன்று படுவது இயற்கைதான் என்றாலும் இன்னும் மீள முடியாத ஆச்சர்யமே!
வாசு சார்
என் பதிவில் நான் சரோவை (சி.க!) முன்னிலைப்படுத்துவற்தகாகவே டக்கென்று என் மனதில் தோன்றிய அந்த பாடலை இணைத்தேன்!
ஆனால் உங்களது வண்ணத்தோகை விரித்தாடும் மயில் பதிவு அந்தப் பாடல் காட்சிக்கே புது அர்த்தங்களையும் அழகையும் தந்து விட்டதே !!
வாசு என்னும் பரத நாட்டிய தாரகை மோகனாம்பாளின் முன் நான் ஒரு தில்லாலங்கடி டப்பாங்குத்து ஆட்டமாடும் ஜில்ஜில் ரமாமணியாகவே உணர்கிறேன் !!
உங்கள் வார்த்தை சுரங்கள் நீங்கள் வார்த்தை சுந்தரர் என்பதை எப்போதும்போல நிரூபிக்கின்றன!!
இனி கோபால் வேறு சிக்கலாராக மாறி அவர் கோணத்தில் இதே பாடல் காட்சியமைப்பை உங்களுக்கு போட்டியாக வாசித்தால் நலந்தானே!!!
இந்த இடத்தை அடைய நீங்களிருவரும் எத்தனை படிகள் ஏறி சென்றிருக்கிறீர்கள் என்று அண்ணாந்து பார்த்து வியப்பில் வாயடைக்க வைக்கிறீர்கள்
பெருமைக்குரிய நண்பர்களே !!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th June 2015 03:49 PM
# ADS
Circuit advertisement
-
15th June 2015, 04:02 PM
#762
Senior Member
Senior Hubber
எல்லாரும் இங்கிட்டு வந்தாக்க நான் எங்கிட்டு ப் போறது..அதான் வந்துட்டோம்ல
அதுல பாருங்கோ ஆணுக்கும் இடை இருக்கு பொண்ணுக்கும் இருக்கு
ஆணோட வெய்ஸ்ட அவனே கண்டுக்காம தொப்பை போட்டுருவான்..ஆனா பொண்ணுங்களுக்கு மட்டும் அந்த இடைப் பிரதேசம் ஒல்லியா இருக்கணுமாம்.
அதே மாதிரிப் பாத்தீங்கன்னாக்க அந்தக்காலத்துல அழகான் ராட்சஸிகள்ளாம் தனது காதலனையோ கணவனையோ மயக்குதற்கு அணியும் அணிகலன் மேகலை எனப்படும் ஒட்டியாணம்..
வேகமாய் ஒடியாமல் வெட்கமுடன் நிற்கத்தான்
மேகலை சாதிக்கு மே..
இடையழகைக் கூட்ட இடையிலே இஃதே
தடையை மெலச்சொலும் தான்..
அப்படியா..
ராகவேந்தர் ஜி..கைராசில அன்புள்ள அத்தான்ல இப்படித் தான் சர்ரூ..
இவ்வளவு சொல்லியும் நான் வராவிட்டால்ங்கறா மாதிரி ஜெ சொல்ல
பொன்மணி மேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனை விட்டு ஓடும்
கைவளை சோர்ந்துவிழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிசொல்ல நேரும்
அதாவது ஜெமினி இல்லாமல் சர்ரூ இளைச்சுடுவாங்களாம் (கற்பனைதான்.. நிஜத்துல நடக்கிற காரியமா என்ன)
அவர் நினைப்பினிலேயே மோட்டு வளையைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு சிறுமூச்சு விட்டு
பால் பழம் பணியாரம்னு எதுவுமே சாப்பிடாம சீ போன்னு இருந்தா என்ன ஆகுமாம்
இடையும் மெலிஞ்சு மேகலை கீழே விழுந்துடுமாம்
மெல்லிசா இளம் வாழைத் தண்டாட்டம் வெளிர் மஞ்சள் நிறத்துல கண்ணைக் கொத்தும் இளங்கன்னியின் கால்களாகப்பட்டது
இன்னும் இளைத்து க் குச்சியா இளைக்க சிலம்பு கழண்டு ஓஓஒடுமாம்
கைவளையும் சோர்ந்துவிடும் .. கண்ணுக்குக் கீழ ஹாய் அப்படின்னு கவலை வந்து கண்மை மாதிரி கருவளையம் போட்டுடுமாம்..
ஏண்டாப்பா ஜெமினி..இப்படி சர்ரூவப் பண்ணிட்டியேடான்னு பார்க்கறவால்லாம் பாட்டி மாதிரி ஜெமினிகிட்டயே குசலம் விசாரிப்பாங்களாம்.. நான் சொல்லலை சர்ரூ சொல்றாங்க 
அன்புள்ள அத்தான் வணக்கம்
சர்ரூவோட நர்ஸ் டிரஸ்ஸப் பத்தி சொல்லவே இல்லையே ராகவேந்த்ராசார்
Last edited by chinnakkannan; 15th June 2015 at 04:11 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
15th June 2015, 04:10 PM
#763
Senior Member
Senior Hubber
எல்லாப் படங்களிலும் கிளாமர் தவிர்த்து நெஞ்சங்களை வசீகரிக்கும் குடும்பப் பாங்கான நடிப்பில் மிளிர்ந்தவர் !!//ஏதாவது படத்துல கிளாமரா நடிச்சுருக்காரா என்ன..
//இப்போது ஒப்பிடமுடியாத தரத்தில் நீங்கள் இருவரும் வந்த பிறகு இந்தத் திரி இனி தொய்வடையாது என்ற நம்பிக்கை வித்தை ஊன்றியமைக்கு இருவருக்கும் நானும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!! // அடப்பாவி சி.செ..இப்படியா சொல்றது..ம்ம் அடுத்த பாகத்தை ஆரம்பிக்க என்னைக் கூப்பிடுவீர்னு நெனச்சேன்.. சரி சரி .. நான் மம கா போறேன்..
-
15th June 2015, 04:10 PM
#764
Junior Member
Veteran Hubber
ராகவேந்திரா சார்
இன்றும் நேற்றும் ஒரே ஆனந்த அதிர்ச்சியலைகள் ஜெமினி திரியில்!!
உங்கள் அதிரடி வரவுப்பதிவுகள் காதல் மன்னரின் புகழ் மகுடத்தில் நடிகர்திலகம் பதித்திட்ட வைர கற்களே!!
களை மண்டிவிடுமோ என்று அஞ்சிய திரியில் களை கட்டிவிட்டதே !! நன்றிகள்!!
அன்புடன் மகிழ்வுடன் செந்தில்
-
15th June 2015, 04:14 PM
#765
Senior Member
Senior Hubber
அடுத்து பார்த்தால் பார்க்கும் சிரித்தால் சிரிக்கும் பாட திரு வாசுவை அழைக்கிறேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th June 2015, 04:20 PM
#766
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
எல்லாப் படங்களிலும் கிளாமர் தவிர்த்து நெஞ்சங்களை வசீகரிக்கும் குடும்பப் பாங்கான நடிப்பில் மிளிர்ந்தவர் !!//ஏதாவது படத்துல கிளாமரா நடிச்சுருக்காரா என்ன..
//இப்போது ஒப்பிடமுடியாத தரத்தில் நீங்கள் இருவரும் வந்த பிறகு இந்தத் திரி இனி தொய்வடையாது என்ற நம்பிக்கை வித்தை ஊன்றியமைக்கு இருவருக்கும் நானும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!! // அடப்பாவி சி.செ..இப்படியா சொல்றது..ம்ம் அடுத்த பாகத்தை ஆரம்பிக்க என்னைக் கூப்பிடுவீர்னு நெனச்சேன்.. சரி சரி .. நான் மம கா போறேன்..

சின்னக் கண்ணன் சார் !!
உங்கள் ராக் அண்டு ரோல் இல்லாமல் இந்தத் திரி உருளுமா ?!
மகிழ்விக்க எல்லா ஜாம்பவான்களும் கூடி விட்டீர்கள் ! இனி (ர)களைதான்!!
Last edited by sivajisenthil; 16th June 2015 at 12:46 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th June 2015, 04:32 PM
#767
Senior Member
Seasoned Hubber
சி.க. சார்
சரோ - நர்ஸ் ... இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்தவை .. பாலும் பழமும், கை ராசி - இரண்டுமே மறக்க முடியாதவை.. பாத்திரம் ஒன்றானாலும் பண்டம் வேறாயிற்றே...சரோவைப் பொறுத்த மட்டில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாலும் பழமும் படத்தில் முந்துகிறார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th June 2015, 04:33 PM
#768
Senior Member
Seasoned Hubber
சி.செ. சார்
ராமு படத்தைப் பற்றிய கோபாலின் பதிவே இந்த வேகத்திற்குக் காரணம் என்றாலும் ராஜேஷும் ஒரு காரணம்.. ஜெமினிக்கு சிறந்த ஜோடியான சரோவை ... சினிமாவில் தான்... பற்றி துவக்கி விட்டாரே..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th June 2015, 04:37 PM
#769
Senior Member
Seasoned Hubber
எங்கள் ஆஸ்தான கதாநாயகி தேவிகா வுடன் எங்கள் தலைவர் நடித்திருக்க வேண்டும் என நான் விரும்பிய சில பாடல்கள், ஜெமினிக்கு சென்று விட்டன. அதில் குறிப்பிடத்தக்கது வாழ்க்கைப் படகு. தலைவர் நடித்திருந்தால் அதன் பரிமாணமே முற்றிலும் வேறு மாதிரியிருந்திருக்கும். சிலர் கூறலாம், ஜெமினிக்கு சிறந்த வகையில் பேர் தந்தது என்று.. இல்லையென சொல்ல வில்லை. இருந்தாலும் வாழ்க்கைப் படகு படம் நடிகர் திலகம் நடித்திருந்தால் இன்னும் நம் நெஞ்சில் ஆழமாக ஊடுருவியிருக்கும்.
இதே போல் நான் மிகவும் விரும்பிய இன்னோர் பாடல் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாடல்.. இந்தப் பாடல் நம் ஆஸ்தான ஜோடிக்கு கிடைக்கவில்லையே என பல முறை வருந்தியிருக்கிறேன்.
இப்பாடல் வரிகள் சாகாவரம் பெற்றவை. காதலின் மகிமையை உணர்த்திய மிகச் சிறந்த பாடல்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
15th June 2015, 07:09 PM
#770
டியர் சின்னக்கண்ணன் சார்.
அத்தி பூத்தாற்போல எப்போதாவது தனித்து இசையமைக்கக் கூடிய ஆர்.கோவர்த்தனம் அவர்களின் கைவண்ணத்தில் உருவான "அன்புள்ள்ள அத்தான் வணக்கம்" பாடல் வரிகளைத்தந்து பரவசத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.
ராமச்சந்திர பத்தரின் திருமணப் பந்தலில்தான் இப்பாடலை முதன்முதல் கேட்டேன் கேட்டதும் (தேங்காய் சீனிவாசன் பாணியில்) 'பச்ச்ச்சக்'கென்று மனதில் ஒட்டிக்கொண்டது. இசைத்தட்டின் மறுபக்கம் 'காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே' திருத்துறை பூண்டி பஸ் ஸ்டாண்டில் டீக்கடையில் கேட்டது. 'காத்திருந்தேன் காத்திருந்தேன்' பாடல் நண்பர்களோடு ஆற்றில் குளிக்கப் போகும்போது யார் வீட்டு ஜன்னல் வழியாகவோ வானொலியில் கசிந்தது. ஜெமினி - சரோ நல்ல ஜோடிதான்.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
Bookmarks