-
16th June 2015, 08:05 PM
#3131
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th June 2015 08:05 PM
# ADS
Circuit advertisement
-
16th June 2015, 08:06 PM
#3132
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th June 2015, 11:18 PM
#3133
Junior Member
Diamond Hubber
தானும் நடிப்பும் ஒன்றெனுக்கண்டு தன்னையே தமிழ் திரையுகிற்கு தந்த சிவாஜிக்கு இந்த நாடு என்ன கெளரவம் செய்தது?
கெய்ரோவிற்கு சென்றார்.வெற்றிக்கனியை பறித்து வந்தார்.நாட்டின் புகழ் காத்தார்.
புகழ் மட்டும் வேண்டும்.புகழ்தந்தவனுக்கு விருதுகள் மட்டும் கிடையாதாம்.
என்னடா முடியும் உன்னால் என்று எதிரிகள் கொக்கரித்த காலமது!
அப்போது இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்றஎதிர்த்தோரும் மதிமயங்கும்படி சரித்திர பதிவுகளை தந்தாரே.
கர்ணனா?கப்பலோட்டிய தமிழனா?அவையெல்லாம்
மேடைப்பேச்சு உதாரணங்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகளுக்கு..
அரசியல் சுயநலங்களால் அவமதித்தீர்களே.அதையும் மறந்து தேசசேவை செய்வதில் சிகரமாய் நின்றாரே.
அரசியல் அவலங்கள் தெரியாதவரா?
அவர்களின் வித்தைகள் புரியாதவரா?
அதையும் சீர் செய்வோம் என்று ஒரு வாய்ப்பு கேட்டாரே! கரையான் புற்றுகள் கருநாகங்களுக்கே சொந்தம் என்று அதையும் புறந்தள்ளியதை மறக்க முடியுமா?
ஏதோ எம்.பி.பதவி.ஏற்றிய கொடி கம்பங்களுக்கா? ஊர் ஊராக சென்று ஊட்டி வளர்த்ததற்கா?திரையிலும் நிஜத்திலும் வேறுபாடு இல்லாமல் உண்மைபேசி வாக்கு வங்கியாக
மாற்றியதற்கா?
சிம்மக்குரலில் கொட்டிய முரசும்.,ரசிகர்களின் படையும் கொண்டு திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்து
நடிப்பாற்றலில் உச்சம் தொட்டவருக்கு நாடு செய்த பயன் என்ன?
சிலைகளுக்கும் பங்கம், மணிமண்டபத்திற்கும் தடைகள்.
இதுதான் முடிவென்றால் இல்லையெனும் முடிவென்றால்
அவர் கொடுத்தபெருமைகள் மட்டும் வேண்டுமோ?
Last edited by senthilvel; 17th June 2015 at 01:32 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
16th June 2015, 11:42 PM
#3134
ரவி,
மன்னிக்கவும். திரியில் கொட்டிய பதிவுகளின் நடுவில் நீங்கள் கேட்ட கேள்வியை இப்போதுதான் பார்த்தேன்.
கட்டபொம்மனைப் பொறுத்தவரை உங்கள் கேள்வி நியாயமானதே.காரணம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் ஏன் வெளியீடு தாமதமாகிறது என்ற அர்த்தத்தில் கேட்டிருக்கிறீர்கள். படத்தை தமிழகமெங்கும் வெளியிட உரிமம் பெற்றிருக்கும் சாய் கணேஷ் பிலிம்ஸ் பங்குதாரர்களிடம் பேசியபோது பின் வரும் காரணங்கள் புலப்பட்டன.
படத்தை பார்த்தவர்கள் டிஜிட்டல் restoration வேலைகளை இன்னும் சற்றே மெருகேற்றினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்க ஒரு சில காட்சிகளை மீண்டும் சரி செய்திருக்கிறார்கள்.
இரண்டாவது காரணம் ஒரிஜினல் படத்தின் நீளம் சற்று குறைக்கப்பட்டிருப்பதால் சுருக்கப்பட்ட பிரதியை தணிக்கை குழுவினரிடம் திரையிட்டு காட்டி மறு சான்றிதழ் பெற வேண்டும். அண்மையில் தணிக்கை குழுவில் அரசியல் சார்புடைய ஆட்கள் உள்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றசாட்டு எழுந்து அதன் காரணம் படங்களின் தணிக்கை வேலைகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் கட்டபொம்மனும் ஒன்று.
மூன்றாவது காரணம் படத்திற்கு வரிவிலக்கு கோரியிருக்கிறார்கள். படங்களைப் பார்த்து வரிவிலக்கு கொடுக்க பரிந்துரை செய்யும் ழுழு ஒன்று இருக்கிறது. அந்தக் குழு படம் பார்த்துவிட்டு வரிவிலக்கு கொடுக்க பரிந்துரை செய்திருக்கிறது. அந்த பரிந்துரை நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் வணிகவரித்துறை அமைச்சர் கோப்பில் கையெழுத்திட வேண்டும். இன்றைய சூழலில் அமைச்சர் கோட்டையில் இருப்பாரா அல்லது எங்கே மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பார் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்.
நான்காவது காரணம் மதுரை ஏரியா தவிர மற்ற அனைத்து ஏரியாக்களிலும் சாய் கணேஷ் பிலிம்ஸ் ஒவ்வொரு ஏரியாவிலும் இருக்கக்கூடிய விநியோகஸ்தர்கள் மூலமாக படத்தை வெளியிடுகிறார்கள். லோக்கல் விநியோகஸ்தர்கள் அவரவர் ஏரியாவில் நல்ல திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். மேற்சொன்ன காரணங்களினால் சரியான ரிலீஸ் தேதியை குறிப்பிட முடியவில்லை என்பதனால் அரங்குகள் ஒப்பந்தம் செய்வதும் தாமதமாகின்றது.
வரும் ஜூலை மாதத்தில் படம் எப்படியும் திரைக்கு வந்து விடும் என்று நம்பிக்கையாய் சொல்கின்றனர் சாய் கணேஷ் பங்குதார்கள்.
நல்லதை நினைப்போம்! நல்லதே நடக்கும்!
அன்புடன்
-
Post Thanks / Like - 5 Thanks, 2 Likes
-
16th June 2015, 11:53 PM
#3135
Gopal,
Let us not bother about what is being written elsewhere. We all know that it is being published in a newspaper and the same is reproduced here. People know how authentic the paper is. More than anybody else you should be able to see through the newspaper's games. Because you know that Ellorum Nallavare from Gemini Studios came out in April 1975 and Sirithu Vaazha Vendum in November 1974. And Balan being offered directorial chance is absolute bluff.
So this is the newspaper's so called authenticity and this implies how "authentic" the other news regarding NT films would be. So let us not waste time by talking about these things and as I said in the morning let us concentrate on NT and his films.
Thanks for your understanding
Regards
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th June 2015, 06:51 AM
#3136
Junior Member
Newbie Hubber
முரளியும் ,வாசுவும் போட்டு வாங்கு வாங்கு என்று என்னை வாங்கி விட்டனர். நீ பாட்டுக்கும் இசை,உலக படம்,நடிப்பிலக்கணம், ஆய்வு இதையெல்லாம் எழுதி விட்டு ஒதுங்கி கிடப்பதுதானே? இல்லையென்றால் உன் ப்ளாக் துவங்குவதாக சொன்னாயே?அதை செய்து தொலைக்க வேண்டியதுதானே?அதை விட்டு.... என்று .நண்பர்களுக்காக அடக்கி வாசிக்க போகிறேன்.
முரளி சொன்னார்.... நடிகர்திலகத்தின் புகழை குறைக்கும் அல்லது மாசு படுத்தும் முயற்சி வந்தால் நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீ ஒதுங்கி இரு என்று. இவர்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதால் , ஏற்கிறேன். அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
-
17th June 2015, 07:42 AM
#3137
Senior Member
Seasoned Hubber
ஜேசுபாதம் அவர்களின் நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி நூலைப் பற்றி இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விமர்சனத்தின் நிழற்படம். நன்றி தினத்தந்தி ஈபேப்பர்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
17th June 2015, 01:04 PM
#3138
Junior Member
Seasoned Hubber
லாரி டிரைவர் ராஜாகண்ணு வர்த்தக ரீதியில் ஒரு மாபெரும் வசூல் சாதனை செய்த படம். இந்த மூடர்களுக்கு இது எங்கே தெரிய போகிறது.
-
17th June 2015, 01:41 PM
#3139
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
Gopal,
Let us not bother about what is being written elsewhere. We all know that it is being published in a newspaper and the same is reproduced here. People know how authentic the paper is. More than anybody else you should be able to see through the newspaper's games. Because you know that Ellorum Nallavare from Gemini Studios came out in April 1975 and Sirithu Vaazha Vendum in November 1974. And Balan being offered directorial chance is absolute bluff.
So this is the newspaper's so called authenticity and this implies how "authentic" the other news regarding NT films would be. So let us not waste time by talking about these things and as I said in the morning let us concentrate on NT and his films.
Thanks for your understanding
Regards
முரளி சார் எழுதியிருப்பதற்கு தமிழாக்கம்
கோபால் அவர்களே...எங்கோ என்னமோ எழுதியிருப்பதை பற்றி நாம் வாட்டிகொள்ளவேண்டாம்.
நமக்கு தெரியும் அது பத்திரிகையில் வந்த தொடரில் இங்கு எடுத்து மறுபதிப்பு செய்தது என்று.
மக்களுக்கு தெரியும் அது எந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்த பேப்பர் என்று. பத்திரிகைகளின் இதுபோன்ற விளையாட்டுக்கள் மற்ற அனைவரைகாட்டிலும் உங்களுக்கு நன்றாக தெரியும்.
மேலும் ஜெமினி நிறுவனத்தின் "எல்லோரும் நல்லவரே" என்ற திரைப்படம் ஏப்ரல் மாதம் 1975இல் வெளிவந்தது ஆனால் "சிரித்து வாழ வேண்டும்" திரைப்படம் நவம்பர் 1974 இல் வெளிவந்ததும் உங்களுக்கு தெரியும். திரு பாலன் அவர்களுக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் சுத்த புளுகல்.
ஆக, இதுபோல செய்திதாள்களின் நம்பகத்தன்மை என்பது இவ்வளவுதான் !
மேலும் இதிலிருந்தே நடிகர் திலகம் பற்றிய இவர்களின் செய்திகள் எந்தளவிற்கு உண்மை அல்லது நம்பகத்தன்மை கொண்டது என்பது தெரிந்துகொள்ளுங்கள் !
ஆகையால் இவைகளுக்கு வீணாக நமது நேரத்தை விரயம் செய்வதை விட்டு நடிகர் திலகம் பற்றி அவர்களது படங்கள் பற்றி நாம் பேசுவோம்.
புரிதலுக்கு நன்றி
-
17th June 2015, 01:47 PM
#3140
Junior Member
Veteran Hubber

Originally Posted by
s.vasudevan
லாரி டிரைவர் ராஜாகண்ணு வர்த்தக ரீதியில் ஒரு மாபெரும் வசூல் சாதனை செய்த படம். இந்த மூடர்களுக்கு இது எங்கே தெரிய போகிறது.
வாசுதேவன் சார்
அதை எழுதிய அந்த பத்திரிகையாளர் அவர்கள்தான் திரு. Avm rajan மற்றும் திருமதி. Pushpalatha அவர்கள் தொடங்கிய கம்பனியின் ஆடிட்டர் .
இவர்தான் lorry driver rajakannu ...oorum uravum ....nenjangal ஆகிய ப்ராஜெக்ட்களை வரவு செலவு பார்த்து லாப நஷ்ட விவரத்தை balancesheet இல் ஆடிட் செய்து சாப்பா அடித்தார் ...!
அது தெரியாத உங்களுக்கு ....சரியாபோச்சு போங்கள் !
Rks
Bookmarks