-
23rd June 2015, 02:55 PM
#1331
டியர் வாசு சார்,
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' பாடலை மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள். அதிசயமில்லை, அது உங்களுக்கு கைவந்த கலை.
பாலாவின் அந்த நாளைய குரலில் பாடல்களைக் கேட்பது தனிச்சுவை. (இப்போது எஸ்.பி.பி.சரண் அந்த்பாடல்களைப் பாடும்போது பாலாவின் அன்றைய குரல் எட்டிப் பார்க்கிறது).
தேடிவந்த மாப்பிள்ளையின் பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாக மனத்தைக் கவர்பவை. 'மாணிக்கத்தேரில்' ஒன்றுதான் சற்று வழக்கமான ஒன்று. அந்தப்பாடலுக்காக சாத்தனூர் அணை பூங்கா முழுவதும் சீரியல் செட் அலங்காரம் செய்யப்பட்டு இரவுக்காட்சியாக படமாக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பு முடிந்தபின்னும் இரண்டு நாட்கள் அந்த அலங்காரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெற்றி மீது பாடலை மெல்லிசை மன்னர், பாலா இவர்களோடு சேர்ந்து எம்.ஜி.ஆரும் அதிகப்படியான சுறுசுறுப்பால் களைகட்டச்செய்வார். அதனால் அந்தப்படத்திலேயே அதிக ஹிட் ஆன பாடலாக இது அமைந்துவிட்டது.
பாடல் ஆய்வின் இடையே நடிகர்திலகத்தின் கர்ணனை செருகியதன்மூலம் உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் நடிகர்திலகம் ஆக்கிரமித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
இன்னொரு திரியில் உங்கள் 'என்னதான் முடிவு' அலசல் அருமை.
அடுத்த பாடல் என்ன?. "பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா'" தானே?.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd June 2015 02:55 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2015, 04:39 PM
#1332
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
Cries and Whispers - Ingmar Bergman - Sweden - 1972
நாம் சாவு,நோய் ,இதையெல்லாம் வெறுக்க கற்று, பிரிக்க முடியாத அவைகளுடன் ரகசிய சிநேகம் கொள்ள மறுக்கிறோம். பெர்க்மன் படங்கள் நம்பிக்கை,ஏமாற்றம்,சூன்யம்,மன பிறழ்வுகள்,நோய்,சாவு இவற்றை ஒரு அதீத மனித உணர்ச்சி குவியலுடன் ,ஒரு புதிர் தன்மையோடு ,அழகான கலையுனர்ச்சியோடு ,மனதுக்கு அருகில் சேர்த்தவை. .
மிகவும் அழகாக வர்ணித்துள்ளீர்கள் - வாழ்க்கையின் எதார்த்தங்களை அப்படியே எடுத்துக்கொள்ள இன்னும் நம்மில் பலருக்கு பக்குவம் வருவதில்லை - இப்பொழுது படங்கள் எப்படி வந்தாலும் , கிராபிக்ஸ் என்று தெரிந்தும் கைத்தட்டுகிறோம் - அவர் படங்கள் வந்த ஒரு காலக்கட்டத்தில் அந்த நம் பக்குவம் ஒரு போதுமான முதிர்ச்சியை அடையாமல் இருந்தது வருந்ததக்கதே !
-
23rd June 2015, 05:10 PM
#1333
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
திரு ரவி
மாதா , பிதா , குரு , தெய்வம் வரிசையில் மாதாவின் மகிமைகள் எல்லாம் அருமை .
பிதாவின் மகிமைகளை மிக மகிழ்வுடன் ரசித்து படித்து கொண்டு வருகிறேன் .வாழ்த்துக்கள் .
மிகவும் நன்றி திரு குமார் - முதலில் நீங்கள் இங்கு வந்து பதிவுகள் இடுவதற்கு - பக்கத்து வீடுதான் என்றாலும் நீங்கள் இங்கு வருவதற்கு பல யுகங்கள் ஆகி உள்ளன --- ம .தி யின் படங்கள் மட்டும் அல்லாமல் உங்களுக்கு மிகவும் பிடித்த ந .தி யின் படங்களின் பாடல்களையும் , மற்ற விருப்பமான நடிகர்களின் பாடல்களையும் உங்கள் பாணியில் நீங்கள் சொல்லப்போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம் ....
-
23rd June 2015, 05:20 PM
#1334
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
adiram
டியர் ரவி சார்,
இலக்கியங்களிலும் திரைப்பாடல்களிலும், மேடைப்பேச்சுக்களிலும், பட்டிமன்றங்களிலும் அதிகம் பேசப்படாத, பல நேரங்களில் அறவே பேசப்படாத பரிதாபத்துக்குரிய தந்தைக்குலம் பற்றி தாங்கள் தொடர் துவங்கியிருப்பது மனதுக்கு இதமளிக்கிறது.
ஈன்று புறந்தருதல் தாயின் கடனாயினும் அவனை சான்றோனாக்குதல் தந்தையின் கடன் என்று புற்னானூறு பேசியதை மறந்து இன்று தந்தையர்கள் அறவே போற்றப்படுவதில்லை. பட்டிமன்றப் பேச்சாளிகளின் பார்வையில் தந்தை என்றாலே அவனை டாஸ்மாக் கடை வாசலில் நிற்கும் சில ஆண்களைக்கொண்டு மதிப்பிடும் அவல நிலைதான் உள்ளது. பெரும்பாலான தந்தையரின் தியாக வாழ்க்கை போற்றப்படுவதில்லை.
இந்நிலையில் நீங்கள் துவங்கியிருக்கும் தொடர் மகத்தான ஒன்று என்பதில் ஐயமில்லை.
தந்தையரின் புகழ் பாடும் தொடர் பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
திரு ஆதிராம் எங்கே உங்களை தொலைத்து விட்டோமோ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் ஒரு புது பொலிவுடன் வந்ததற்கு நன்றி . உங்கள் பாராட்டுக்கள் மேலும் என்னை மிகுந்த பொறுப்புணர்ச்சி உடையவனாக ஆக்குகிறது . ஒரு சின்ன வேண்டுகோள் -- ஏதாவது நகைச்சுவையுடன் நான் பதிவுகள் போட்டால் அதை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் பாருங்கள் - ஒரு பிரச்சனையும் வராது ..... மீண்டும் என் நன்றி ! பதிவுகளை விடாமல் படிப்பதற்காக ......
-
23rd June 2015, 08:20 PM
#1335
Senior Member
Diamond Hubber
இதோ ராட்சஸியின் வெளியே தெரியாத இந்தப் பாடலைக் கேளுங்கள்.

சாதாரண வார்த்தைகள் இந்த அபூர்வ பெண்மணியால் எப்படி அழுத்தமாக உச்சரிக்கப்பட்டு நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது என்று. பாடலின் டியூன் சுமார்தான். ஆனால் இந்த அரக்கியின் குரல் அம்சமாய் இதயத்தில் பதிகிறது. பாடலில் பாடி நடிக்கும் இந்த நடிகையின் பெயர் மீராதேவி என்று நினைவு. ராகவேந்திரன் சார் உதவி செய்வார் என்று நினைக்கிறேன். 'தங்க வளையல்' என்ற படத்தில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்க கேட்க சுகமாக இருக்கிறது. குறிப்பாக பாடல் முழுக்க வரும் கிடாரின் ஓசை நம்மை சுண்டி இழுக்கிறது.
மிக மிக மிகத் தெளிவான பாடல்.
சொல்லத் தெரியவில்லை
சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை
சொல்லித் தெரியவில்லை
சொல்லித் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்
சொல்லித் தெரியவில்லை
கட்டிலுக்கு வாய் இருந்தால்
என்ன சொல்லும்
கட்டினவன் மேனிதனை
கட்டச் சொல்லும்
சொல்லத் தெரியவில்லை
சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை
சொல்லித் தெரிவதில்லை
மெட்டியிலே சத்தம் வந்தால்
என்ன சொல்லும்
மெல்ல மெல்ல பாடமெல்லாம்
சொல்ல சொல்லும்
சொல்லித் தெரிவதில்லை
தங்கவளை கைகளிலே
என்ன சொல்லும்
தங்கிவிட கைக்குள் வளை
என்று சொல்லும்
இரவும் விடிந்து விட்டால்
என்ன செய்வாய்
வரவுக்கும் செலவுக்கும்
வாழ்த்துச் சொல்வேன்
சொல்லத் தெரியவில்லை
சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை
சொல்லித் தெரிவதில்லை
Last edited by vasudevan31355; 23rd June 2015 at 08:24 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd June 2015, 08:55 PM
#1336
Junior Member
Seasoned Hubber
Breaking News - CNN-IBN , NDTV , JAYA TV , SUN TV , VENDAR TV , DISCOVERY Channel ---------
நெய்வேலியில் இப்பொழுது தோண்டும் இடமல்லாம் நிலக்கரி கிடைப்பதில்லை - திடுக்கிடும் உண்மை
சில மாதங்களாக நெய்வேலியில் நிலக்கரி தோண்டும் போது கிடைப்பதில்லை என்ற உண்மை இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது - இதனால் நிலக்கரி தட்டுப்பாட்டு ஏற்பட்டு மின்சாரம் உற்பத்தியாவது முழுவதும் நின்று போகலாம் என்ற அச்சமும் மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது - நமது நிருபர் தேவன் வாசு என்ன சொல்லுகிறார் என்று கேட்ப்போம் ...
தேவன் வாசு : சில மாதங்களாக பாலா என்னும் (மர்ம )மனிதர் சுரங்கத்தில் பல ஆயிரம் அடிகளில் பல சிறந்த பாடல்கள் கிடைப்பதாகவும் அதை அவர் புதுப்பித்து உயிர் கொடுத்து வெளி கொண்டு வருவதாகவும் அவர் அதிகம் தோண்டினதால் நிலக்கரி கிடைப்பது நின்றுபோய் வெறும் பழைய பாடல்கள் தான் கிடைப்பதாகவும் கூறியது நினைவு இருக்கலாம் - இன்று நிலக்கரி சுரங்கத்தின் பொறுப்பாளர்கள் இதுதான் உண்மை என்று பகிங்கரமாக ஒத்துக்கொண்டுள்ளனர் - அவர்கள் இனி நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்தின் பெயரை மாற்றி L .R .E பாலா என்று வைக்கப்போவதாகவும் கூறினர் - அவர் அலசல்களை மக்கள் மகிழ்ந்து கேட்பதால் நெய்வேலிக்கும் , ஏன் இந்தியாவிற்க்குமே மின்சாரம் இனி தேவை இல்லை என்றும் உற்சாகத்துடன் கூறினர் - இப்படி எமது நிருபர் தேவன் வாசு கூறினார் ------
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
23rd June 2015, 10:15 PM
#1337
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
பிடியுங்கள் வாழ்த்துக்களை.. அட்டகாசமான பாடலைத் தந்து மகிழ்ச்சிக்கடலில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளீ்ர்கள்.
ஈஸ்வரியால் மட்டுமே பாட முடிந்த இது போன்ற பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
இதோ இந்த வரிசையில் இன்னோர் முத்து. ரவியின் பாஷையில் சொல்வதானால் உண்மையிலேயே சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இதுவரை யாரும் அதிகம் கேட்டிராத பாடல்.
கலைநிலவு ரவி, ஷீலா இணையில் மஞ்சள் குங்குமம் படத்திற்குப் பிறகு வந்த அம்மா அப்பா படத்திலிருந்து மாப்பிள்ளை நீயல்லவோ என்ற சூப்பர் பாடல். குரலில் இது போன்ற வித்தைகளை வேறு யாரால் செய்ய முடியும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd June 2015, 10:34 PM
#1338
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
ஒரு அபூர்வமான எஸ்.பி.பி.யின் பாடல். குரலை இழைந்து இழைந்து பாடியுள்ள இப்பாடலை முதன் முறையாகக் கேட்போரும் சொக்கி விடுவர். இப்பாடல் வரிசையில் வரும் போது இதைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதுங்கள். அது வரை நாங்கள் பார்த்தும் கேட்டும் ரசிக்கிறோம். தாங்கள் எழுதியபிறகு அதை உணர்ந்து அனுபவிப்போம்.
ராசி நல்ல ராசி படத்திலிருந்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம்...
Last edited by RAGHAVENDRA; 23rd June 2015 at 10:38 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd June 2015, 10:50 PM
#1339
Senior Member
Seasoned Hubber
இந்தப் பாட்டைச் சொன்னால் தான் அம்மா அப்பா படம் உடனே ஞாபகத்திற்கு வரும். எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குழந்தை குரலில் கொஞ்சும் பாடல். உருகவும வைக்கும். தன் தந்தையையும் தாயையும் தேடும் ஒரு குழந்தையின் கீதம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd June 2015, 10:58 PM
#1340
Senior Member
Seasoned Hubber
கே.ஜே.ஜேசுதாஸின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல்
ஒரு குடும்பத்தின் கதை படத்திலிருந்து...
மலைச்சாரலில் ஒரு பூங்குயில்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks