-
26th June 2015, 08:47 AM
#1421
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
26th June 2015 08:47 AM
# ADS
Circuit advertisement
-
26th June 2015, 08:51 AM
#1422
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th June 2015, 08:57 AM
#1423
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
26th June 2015, 09:02 AM
#1424
Senior Member
Diamond Hubber
ஆதிராம் சார்!
தங்கள் தந்தையார் பற்றி தாங்கள் மனம் நெகிழ இங்கே அளித்திருந்த பதிவு நான் உட்பட எல்லோரயும் பாதித்து விட்டது என்று இங்கு வந்த பதில் பதிவுகளிலிருந்தே உணரமுடிகிறது. கண்ணீர் வரச் செய்யும் பதிவு. தங்கள் தாயார் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
-
26th June 2015, 09:04 AM
#1425
Senior Member
Diamond Hubber
வாருங்கள் கடலூர் நண்பர் கல்நாயக் அவர்களே! தங்கள் பூப்பதிவுகளை தொடர்ந்து தருக. இனி இடைவெளி விட்டால் உரிமையுடன் கோபித்துக் கொள்வேன். சரியா?
-
26th June 2015, 09:07 AM
#1426
Senior Member
Diamond Hubber
ஜி! எங்கே போனீர்கள்? சொல்லிவிட்டுப் போகக் கூடாதா? எங்கே எங்கே நிறையக் கேள்விகள் போங்கள்.. வந்து பாலை வார்த்தீர்களே!
-
26th June 2015, 09:15 AM
#1427
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
கவலையே வேண்டாம். எங்கள் ரசிக வேந்தர் கவலைப்படலாமா?
இதோ! உங்கள் நெடுநாள் ஆசையைக் கொஞ்சம் தணித்துக் கொள்ளுங்கள். இப்போது பாருங்கள். வித்தியாசமான மல்லிகா,(கொஞ்சம் கிறீச்) தனசேகரன் குரல்களில் 'தந்தைக்கு ஒரு பிறவி...தாயாருக்கோ மறுபிறவி,. இனிமையான வித்தியாசம்.
கையகலக் கண்ணாடி அணிந்து வித்தியாச தோற்றத்தில் ஒரு அருமையான தந்தையாய் மகனுக்கு நற்கருத்துக்கள் கூறும் விஜயகுமார்.
உடன் பாந்தமாய் விதுபாலா. குழந்தையாய் பேபி இந்திரா.
அருமையான பாடல். நினைவூட்டலுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.
Last edited by vasudevan31355; 26th June 2015 at 09:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th June 2015, 09:47 AM
#1428
Senior Member
Diamond Hubber
'வானத்தில் பறந்து வல்லரசு நாடு கண்டு வருவாய் நியூட்டனைப் போல்
என்றும் வாழ்வில் நீ உயர்ந்து'
என்று அன்றைய தகப்பன் மகனுக்கு நல்வாழ்த்து சொன்னான்.
அதற்கப்புறம் வந்தவன்
'அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான் அடியேனும் அந்நாளில் செய்தேனப்பா'
என்று பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்தான்.
இப்போதோ அப்பனும் பிள்ளையும் ஒன்றாக சேர்ந்து தண்ணியடிக்கிறான்.
தண்ணி இல்லாத தமிழ்ப்படமே இல்லை.
'பார்' காட்டாத படமே இல்லை.
பீர் இல்லாமல் பிக்சரே இல்லை.
நடப்பது கலிகாலம்தானே!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th June 2015, 09:49 AM
#1429
Senior Member
Senior Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு கல் நாயக்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் விரிவான பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி .நம் இருவருக்கும் என்றுமே கருத்து மோதல் வந்ததில்லையே . திரு குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது . சென்னயில் இருக்கும் நீங்கள் ஒரு முறைசென்னயில் வசிக்கும் திரு குமாரை நேரில் சந்தித்து விட்டால் எல்லோருடைய குழப்பங்களும் தீர்ந்து விடும் .செய்வீர்களா கல்நாயக் ?
எஸ்வி,
தங்கள் பதிலுக்கு நன்றி. இங்கு எழுதுபவர்கள் எல்லோரும் தாங்கள் உண்மையிலேயே இருப்பவர்கள்தான் என்று ஒன்று கூடி நிருபித்து விட்டு எழுதிக் கொண்டிருந்தால், அதை நான் மட்டும் செய்யாது இருந்தால், நீங்கள் என்னை அண்ணன் வரதக்குமார் அவர்களை சந்திக்கச் சொல்லி கேட்பதில் நியாயம் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் இவ்வாறு நீங்கள் கேட்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. சந்தித்தால் குழப்பம் தீர்ந்துவிடும் என்கிறீர்கள். சந்திக்காவிட்டால்...? நகைச்சுவை பதிவு என்று உங்கள் நகைச்சுவையும் சூப்பர்!!! இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு வேண்டியவர்கள் என்னை நம்புகிறார்கள் அது போதும். வேறு யாருக்கும் நான் எந்த ஒன்றையும் நிரூபிக்க வேண்டியதில்லை.
Last edited by kalnayak; 26th June 2015 at 09:57 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
26th June 2015, 09:52 AM
#1430
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
எஸ்வி,
எங்கள் திரியில் எல்லோருமே கௌரவமான நபர்கள். அவர்கள் தங்கள் இருப்பை நிரூபிக்கும் அவசியம் வேண்டாதவர்கள். ஒருவர் என்ன பொய் சொன்னாலும் தாய் இல்லை என்று பொய் சொல்ல மாட்டார்கள். இனியாவது ,எங்கள் திரி சார்ந்தவர்களை அனாவசியமாக காய படுத்தாதீர்கள்.
அப்படி நிரூபணம் அவசியமானால், நான் ஒரு இடத்தில் ரிஜிஸ்தர் வைக்கிறேன். போட்டோ ஐடீ காண்பித்து ,உங்கள் திரியை சார்ந்த எல்லோரும் கையெழுத்து போட்டு விட்டு போன பிறகு(கலைவேந்தன்,ராஜா,மசானம், உட்பட) ,ஆதிராம், கல்நாயக் போன்றோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்ற ஏற்பாடு செய்கிறேன்.
நன்றி கோபால், இதற்கு நான்முழு ஒத்துழைப்பு தர தயார்.
Last edited by kalnayak; 26th June 2015 at 09:55 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks