-
27th June 2015, 08:46 AM
#3631
Junior Member
Seasoned Hubber
தமிழ் திரை உலகில் மறக்க முடியாத தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று சென்னையில் நடை பெற உள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து 16 படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டவர் . தேவரின் எம்ஜிஆர் படங்கள் அனைத்திற்கும் கே வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்துள்ளார் .
தேவர் படங்கள் - ஒரு கண்ணோட்டம் .
கண்டிப்புக்கு பெயர் போனவர் தேவர் .தான் தயாரித்த 16 மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டு , மிக குறுகிய காலத்தில் தயாரித்து , வெளியிட்டு மாபெரும் வெற்றிகளை கண்டவர் .
தாய்க்கு பின் தாரம் - 1956 - மாபெரும் வெற்றி படம் .
தாய் சொல்லை தட்டாதே - 1961ல் வசூலில் கலக்கிய காவியம் .
தாயை காத்த தனயன் - 1962- மெகா ஹிட் .
குடும்ப தலைவன் - வெற்றி படம் .
தர்மம் தலைகாக்கும் - 1963- வெற்றி படம் .
நீதிக்கு பின் பாசம் - 1963 - வெற்றி படம் .
வேட்டைக்காரன் - 1964- தமிழ் திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்த காவியம் .
தொழிலாளி - 1964- வெற்றி படம் .
கன்னித்தாய் -1965- சுமாரான வெற்றி
முகராசி - 1966 - 100 நாட்கள் ஓடிய காவியம் .
தனிப்பிறவி - 1966 - வெற்றி
தாய்க்கு தலைமகன் -1967 வெற்றி படம் .
விவசாயி - 1967 - வெற்றி படம்
தேர்த்திருவிழா - 1968 - சுமாரான வெற்றி
காதல் வாகனம் - 1968 தேவரின் படங்களில் சுமாராக ஓடிய படம் .
நல்ல நேரம் -1972ல் பல சாதனைகள் புரிந்த மெகா ஹிட் காவியம்
-
27th June 2015 08:46 AM
# ADS
Circuit advertisement
-
27th June 2015, 02:38 PM
#3632
Junior Member
Diamond Hubber
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
-
27th June 2015, 02:50 PM
#3633
Junior Member
Diamond Hubber
ஒருமுறை அண்ணா அவர்கள் காரில் திமுக கொடியுடன் வெளியூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தார்.
வழியிலே ஒரு பாட்டி இளநீர் விற்றுகொண்டிருந்தார்!
அண்ணா கார்டிரைவரிம் இளநீர் வாங்கி வர சொல்லி குடித்தபின் டிரைவர் பாட்டியிடம் நூறு ரூபாய் குடுத்து மிச்சம் சில்லரை கேட்டார்.
பாட்டியிடம் சில்லரை இல்லை
டிரைவர் அண்ணாவிடம் தகவல் சொல்ல அண்ணா மீதி பணத்தையும் பாட்டியையே வைத்துகொள்ள சொல்லி விட்டார்
இதை பாட்டியிடம் டிரைவர் கூறியபோது பாட்டி டிரைவரிடம்
"காருக்குள்ளே இருப்பது எம்ஜிஆரா? என கேட்டார்"
இதுதான் தலைவரின் சிறப்பு!
-
27th June 2015, 03:35 PM
#3634
Junior Member
Diamond Hubber

"சினிமாவில் டூயட் பாடுவது கேலிக்குரியது..”
– இப்படிச் சொன்னவர் ..நூற்றுக்கணக்கான டூயட்களை தனது படங்களில் பாடி நடித்த எம்.ஜி.ஆர்...!
இதை தனது பேட்டியில் வெளிச்சம் போட்டு வெளிப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன்..
மகேந்திரன் சொல்கிறார்..:
“ தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலையில், "தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது” என்று கடுமையாகப் பேசினேன்..”
பின்னர் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தபோது , இது பற்றி மகேந்திரன் இப்படிக் கேட்டாராம்...
"எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய்தேனே... உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?"
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னாராம் :
"நீங்கள் அன்று என் முன்னால், 'சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார்கள். அது அபத்தம்' என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகிறோம்..”
அப்புறம் நடந்தது ..அதை மகேந்திரனே தொடர்கிறார் :
# "நெஞ்சத்தைக் கிள்ளாதே” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கே சென்று . எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்தேன்...
"காரைக்குடியில் இருந்த நான், டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்..." என்றேன்...
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமையால் வந்தது. ஆனால் ஒன்று நிச்சயம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமாவும் உங்களால் நிறைவேறி வருகிறது. இதற்கு மேலும் நீங்கள் சினிமாவில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் " என்று ஆசீர்வதித்தார்.
# எம்.ஜி.ஆர் .என்னவோ தன் ஆசியையும் , ஆசையையும் சொல்லி விட்டுப் போய் விட்டார்....
ஆனாலும் இன்றும் கூட ... மகேந்திரன் பார்முலாவை விட , எம்.ஜி.ஆரின் பார்முலாவைப் பின்பற்ற ஆசைப்படும் நடிகர்களும் , இயக்குனர்களும்தான் அதிகம்...!
# சரி..எம்.ஜி.ஆர். முன்னிலையிலேயே , அவரைக் கடுமையாக விமரிசித்தும் , எம்.ஜி.ஆர். ஏன் மகேந்திரன் மீது கோபம் கொள்ளவில்லை...?
# இதற்கு எம்.ஜி.ஆரின் “ நம் நாடு ” பாடல் நல்ல பதில் தருகிறது...
“மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்..”
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th June 2015, 05:16 PM
#3635
Junior Member
Diamond Hubber
ப்ளாஷ்பேக்: ஜவான்களின் ஹீரோவான மக்கள் திலகம் எம்ஜிஆர்!
1966-ம் ஆண்டு முதல் முதலாக ஏவிஎம் நிறுவனத்தில் படம் நடித்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர். அந்த பேனரில் அவர் நடித்தது ஒரே படம்தான். அந்தப் படமும் ப்ளாக்பஸ்டர். வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடியது. இந்தப் படத்துக்காக 5 நாட்கள் மட்டும் சிம்லாவில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தது. போரில் காயம் பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இந்திய ஜவான்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் போயிருந்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரைப் பார்த்ததுமே அங்கிருந்த தென்னக வீரர்கள் அடையாளம் கண்டு, நெகிழ்ந்து போனார்கள். நமது ராணுவ வீரர்களுக்காக அப்போது சிம்லாவில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசியிருக்கிறார்கள் எம்ஜிஆரும் சரோஜாதேவியும். அப்போது எம்ஜிஆர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்: "நண்பர்களே, இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நீங்கள் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ, அதற்குச் சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட நிதியாகத் தர விரும்புகிறேன்," என்றார்.
இப்படி ஒரு அறிவிப்பை யாருமே அங்கு எதிர்ப்பார்க்காததால் திகைத்துப் போய்விட்டார்கள். கைத்தட்டல்களால் அந்தப் பகுதி அதிர்ந்தது.
அன்றே, அங்கு திரண்ட நிதி எவ்வளவு என்று கேட்டுத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர், தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அங்கேயே பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று நிதிக்குக் கொடுத்துவிட்டார்.
அந்த ஒரே இரவில், வட இந்தியா முழுவதும் எம்ஜிஆரின் வள்ளல்தன்மை பரவி பெரிய செய்தியாகிவிட்டது. மக்களின் ஹீரோவாகிவிட்டார் மக்கள் திலகம். அதற்கடுத்த தினங்களில் சிம்லா பகுதியில் எம்ஜிஆர் எங்கே போனாலும் மக்கள் வெள்ளம்.. அந்த வெள்ளம் அவர் விமானமேறும் வரை தொடர்ந்து கொண்டே இருந்ததாம்!
Source : http://tamil.oneindia.com/…/mgr-beco...flashba…
-
27th June 2015, 06:21 PM
#3636
Junior Member
Diamond Hubber
சிவாஜியை வைத்து ஒரு படம் கூட ஏன் தயாரிக்கவில்லை?
எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த அளப்பரிய பாசம்தான் காரணம். `துணைவன்’ படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, என் தம்பி சிவாஜிக்குப் பொருத்தமான கதை அவரை வைத்து இந்தப் படத்தை எடுங்கள் என்றார். எம்.ஜி.ஆர்., ஆனால் தேவர் அதற்கு மறுத்துவிட்டார். இத்தனைக்கும் தேவரின் மகளை எனக்குப் பேசி மணம் முடித்து வைத்தவர் நடிகர் திலகம் அவர்கள்.
அவர்மீது அபரிமிதமான அன்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் நட்புக்கு மரியாதை கொடுத்து கடைசிவரை எம்.ஜி.ஆரின் உடன்பிறவா அண்ணனாகவும் அவரது முதலாளியாகவும் முருக பக்தராகவும் வாழ்ந்து மறைந்தார்.
courtesy the hindu tamil interview given by R.Thiyagarajan devar son in law
-
27th June 2015, 08:09 PM
#3637
Junior Member
Devoted Hubber
-
27th June 2015, 09:11 PM
#3638
Junior Member
Diamond Hubber
-
27th June 2015, 10:12 PM
#3639
Junior Member
Diamond Hubber
-
27th June 2015, 10:38 PM
#3640
Junior Member
Seasoned Hubber
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் என்று ஆசை துடிக்கிறது !!!
Bookmarks