-
4th July 2015, 09:38 PM
#11
Junior Member
Devoted Hubber
நமது இந்திய திருநாடு சுதந்திரம் அடையும் முன்பு தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் திரு MKT (மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்). அவருடன் நமது மக்கள் திலகம் நடித்த திரை படங்கள் அசோக் குமார், ராஜ முக்தி. இதில் அசோக் குமார் (1941இல் திரைக்கு வந்த படம்) அத்திரைபடத்தில் MKT அவர்கள் பாடும் பாடலை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அனைவரும் கேளுங்கள். அந்த பாடலில் அன்றே நமது மக்கள் திலகத்தின் புகழ் குறித்து கணிப்பு செய்து விட்டார் ஏழிசை மன்னர் MKT அவர்கள். அவர் பாடும் இந்த பாடல் சத்யாவின் புதல்வன், சமநீதி வேந்தன், சத்துணவு தந்த சாதனையாளன், மக்களின் திலகம், ஏழையின் இறைவன் எங்க வீட்டு பிள்ளை இவர் என்றே. அந்த பாடலின் கருத்தை நன்கு கேளுங்கள், அந்த பாடலின் வரிகள் நம் தலைவருக்கு, அவரின் புகழுக்கு மிக நன்று பொருத்தமாய் அமைந்து உள்ளது. அந்த பாடலின் உட்கருத்தை மையமாக கொண்டு, இன்றைய தினம், எழுபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜ பட்டர் என்ற (தெனாலி ராஜன்) எண்ணத்தில் / கைவண்ணத்தில் மலர்ந்த பாடல் வரிகளை மக்கள் திலகம் பக்தர்கள் அனைவரின் பார்வைக்கும் உரித்தாகி, நம் தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாத கமலத்தில் சமர்ப்பணம் செய்து வணங்குகிறேன்.
ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன் சரணமிருக்க
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஸத்வ குண போதன்
கல்லினுள் தேரைக்கும்...ஆ...ஆ...
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்
ஸத்வ குண போதன்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்
ஸத்வ குண போதன்
கண்ணிழந்தாலென்ன...ஆ...ஆ...ஆ...ஆ...
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்
ஸத்வ குண போதன்
கண்ணில்லையோ

சத்ய வேத பாலன்
சத்ய வேத பாலன்
சத்ய வேத பாலன்
சமநீதி வேந்தன்
சத்ய வேத பாலன்
சமநீதி வேந்தன்
சத்துணவே தந்த
சாதனை சீலன்
சத்ய வேத பாலன்
கல்வியின் மேன்மை .........ஆ ஆ ஆ ஆ
கல்வியின் மேன்மை
கண்களாய் போற்றி
கல்வியின் மேன்மை
கண்களாய் போற்றி
கருத்தினை வைத்து
சத்துணவு தந்தான்
பொன்மன செல்வன்
சத்யவேத பாலன்
சத்யவேத பாலன்
கல்வியின் இல்லம்
கடவுளின் உள்ளம்
கல்வியின் இல்லம்
கடவுளின் உள்ளம்
கருணையின் வடிவாய்
கண்டியில் பிறந்தான்
சத்ய வேத பாலன்
சமநீதி வேந்தன்
சத்ய வேத பாலன்
சமநீதி வேந்தன்
மக்களின் ஆட்சி
மகத்துவம் செய்த
மக்களின் ஆட்சி
மகத்துவம் செய்த
மக்களின் திலகம்
மன்னாதி மன்னன்
மாதவ ராமன்
சத்ய வேத பாலன்
சமநீதி வேந்தன்
மக்களே தெய்வம்
மனதினில் ஏற்றி
முதல்வனாய் வந்தான்
மூன்றெழுத்து தெய்வம்-நம்
பாட்டுடை தலைவன்-இப்
புவி ஆண்ட மன்னன்
சத்ய வேத பாலன்
உயர் சத்ய வேத பாலன்
பாடல் ஊக்கம் : மக்கள் திலகம்
பாடல் வரிகள் : தெனாலி ராஜன்
பாடல் ஆக்கம்: தெனாலி ராஜன்
பாடல் இயக்கம் :தெனாலி ராஜன்
Last edited by Tenali Rajan; 5th July 2015 at 09:43 AM.
-
4th July 2015 09:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks