-
5th July 2015, 08:49 PM
#10
Senior Member
Diamond Hubber
நானும் என் மனைவியும் ஏற்கனவே திருஷ்யம் பார்த்திருக்கிறோம் .. எனவே பாபநாசம் போகலாமா என கேட்ட போது ஏற்கனவே மலையாளத்தில் பார்த்துவிட்டேனே என என் மனைவி ஆர்வம் காட்டவில்லை . எனவே எனக்கும் என் மகனுக்கும் நான் டிக்கட் வாங்கியிருந்தேன் ..பின்னர் என் மனைவியும் வருகிறேன் என சொல்ல இன்னொரு டிக்கெட் வாங்கும் போது முன்வரிசையிலே கிடைத்தது .. எனவே நான் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தேன்.
எனது பக்கத்தில் ஒரு பெண்மணி தன் மகனோடு உட்கார்ந்திருந்தார் ..இரண்டாம் பாகத்தில் நிமிடத்துக்கொரு தடவை 'ஐயையோ' என சொல்லிக்கொண்டிருந்தார் .. மகனுக்கு ஒண்ணுக்கு போக சென்று ஓடோடி வந்து "சார் ..என்ன நடந்தது" என கேட்டார் ..நான் "அந்த காரை தண்ணீருக்குள் ..." என சொல்ல ,, மறுபடியும் நிமிடத்தத்துக்கொரு தடவை ஐயையோ தொடர்ந்தார் . எனக்கு என்ன நடக்கப் போகிறது என்பது ஏற்கனவே தெரியுமென்பதால் அந்த பதட்டம் இல்லை ..என் கவனமெல்லாம் வழக்கம் போல தல படத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதிலேயே இருந்தது 
தமிழ்நாட்டைப் போல சிங்கப்பூரில் அதுவும் மல்டிப்லக்ஸ்சில் கைதட்டல் கேட்பது அபூர்வம் .. ஆனால் இங்கேயும் படம் முடிந்ததும் கைதட்டல் எழுந்தது . வெளியே வரும் போது மக்கள் முகங்களில் திருப்தியும் மலர்ச்சியும் ..ஒரு பெண்மணி தன் கணவரிடம் சொன்னார் "ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறோம்" ..பின்னர் வந்து சேர்ந்த என் மனைவியும் என்னிடம் அதையே சொன்னார் .
கமல் ரசிகன் என்ற பெருமிதத்தை காட்ட மனமிருந்தாலும் சுயம்புலிங்கம் போல அடக்கியே வாசித்தேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks