-
8th July 2015, 09:26 PM
#271
Junior Member
Seasoned Hubber
-
8th July 2015 09:26 PM
# ADS
Circuit advertisement
-
8th July 2015, 09:29 PM
#272
Junior Member
Seasoned Hubber
-
8th July 2015, 09:30 PM
#273
Junior Member
Seasoned Hubber
-
8th July 2015, 09:32 PM
#274
Junior Member
Seasoned Hubber
-
8th July 2015, 09:33 PM
#275
Junior Member
Seasoned Hubber
-
8th July 2015, 09:33 PM
#276
Junior Member
Seasoned Hubber
-
8th July 2015, 09:34 PM
#277
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th July 2015, 09:35 PM
#278
Junior Member
Seasoned Hubber
-
8th July 2015, 09:41 PM
#279
Junior Member
Seasoned Hubber
Subramanian with Puratchi Thalaivar M.G.R, with Actor-Director K. Bhagyaraj
-
8th July 2015, 09:43 PM
#280
Junior Member
Diamond Hubber
thanks kalaiventhan sir


Originally Posted by
KALAIVENTHAN
சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு,
குமுதம் ரிப்போர்ட்டர் செய்திகளை படித்தீர்களா? சரி... இனி என் விளக்கம்.
பலமான இயக்கமாக விளங்கிய தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசும் அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரசும் முயற்சித்தன என்பதுதான் கலைஞர் கருணாநிதி அவர்களின் குற்றச்சாட்டு. அந்த முயற்சியின் விளைவால் திமுகவை உடைத்தனர் என்றும் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்றபோது பணம் செலவு செய்ததில் அந்நிய செலாவணி விவகாரத்தில் சிக்கிக் கொண்டார் என்றும், அதை காட்டி நெருக்கடி கொடுத்து அவரை திமுகவை உடைக்கச் செய்தனர் என்றும் திமுகவினர் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
இப்போதும் கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நாளிதழுக்கு திரு.கருணாநிதி அவர்கள் அளித்த பேட்டியில்,(அதைத்தான் ட்வீட்டரில் போட்டிருக்கிறார்) திமுகவை பலவீனப்படுத்த இந்திரா காந்தி அம்மையார் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொண்டார் எனவும் அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார் என்றும் கூறியுள்ளார்.
முன்பு இதே குற்றச்சாட்டை பகிரங்கமாக பலமுறை கூறினார். திமுகவினரும் கூறிவந்தனர். இன்னமும் கூறுகின்றனர். சமீபத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் திரு. முரசொலி செல்வம் அவர்களும் (இவர் திரு.கருணாநிதி அவர்களின் மூத்த சகோதரியின் மகன். மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் இளைய சகோதரர்) இதே குற்றச்சாட்டை கூறியுள்ளார். திரு.கருணாநிதி அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களது கட்சி நாளேட்டில் இந்த செய்தி இடம் பெற்றிருக்க முடியாது.
ஆனால், இப்போது திரு.கருணாநிதி அவர்களின் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம். ‘எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்றாரா? அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பு கொடுக்கப்பட்டாரா? என்பதற்கு இன்றுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லையே?’’ என்றும் தான் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
முன்னர், புரட்சித் தலைவர் மத்தியஅரசின் கெடுபிடிக்கு பயந்து திமுகவை உடைத்தார் என்று குற்றம் சாட்டியவர் (திமுகவினர் இன்னமும் அதை கூறினாலும் கூட)இப்போது ‘‘அதற்கு இன்றுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லையே?’ என்று திரு.கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார். அதாவது, தான் முன்பு கூறிய குற்றச்சாட்டு உண்மையா? என்பது தெரியவில்லை என்பது இதன் உள்ளர்த்தம். அவரே உறுதியாக குற்றம் சாட்டாதது ஒருபுறம் இருக்கட்டும்.
திரு.சத்யா அவர்கள் பதிவிட்டுள்ள மேலே குறிப்பிட்டிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியாகியிருக்கும் செய்திகளை படித்தால் உண்மை நிலவரம் புரியும். அதோடு மட்டுமல்ல, நமது திரியில் கடந்த பாகத்தில் (15வது பாகம், 386-வது பக்கம் பதிவு எண்,3855) எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி சட்டத்தை மீறவும் இல்லை, எந்த தவறையும் செய்யவும் இல்லை என்று மாநிலங்கள் அவையில் மத்திய நிதியமைச்சர் சதீஷ் அகர்வால் பதிலளித்திருக்கிறார். அந்த செய்தி வெளியான நாளிதழை பேராசிரியர் திரு.செல்வகுமார் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான கேள்வியைக் கேட்டது திமுக உறுப்பினர்கள் திரு.கமலநாதனும் திரு.ஜி.லட்சுமணனும். அந்நிய செலாவணியை எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மீறியதாக ஏதாவது சொல்லமாட்டார்களா? என்று எதிர்பார்த்து அவர்கள் கேட்ட கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சரே பதிலளித்திருக்கிறார்.
மேலும், குமுதம் ரிப்போர்ட்டரில் திமுகவின் குற்றச்சாட்டுக்கு திரு.ஹண்டே அவர்களும் திரு.பொன்னையன் அவர்களும் பதிலளித்திருக்கும் பதிவை (ஹண்டேயின் பேட்டியில் ஆண்டு தொடர்பாக சில பிழைகள் உள்ளன) திரு.லோகநாதன் அவர்கள் கடந்த திரியில் 388-வது பக்கத்தில் பதிவு எண்.3875 பதிவிட்டுள்ளார். (இவற்றை இதே திரியாக இருந்தால் ரிப்ளை விட் கோட் போட்டு மீள் பதிவு செய்திருப்பேன். இன்னொரு பாகத்தில் இருந்து எப்படி இங்கே கொண்டு வருவது என்று தெரியவில்லை. முடிந்தால் இவற்றை நீங்கள் எடுத்துப் போடுங்களேன். படிக்கும் எல்லாருக்கும் உண்மை புரியும்)
இவற்றை குறிப்பிட்டு, அந்நிய செலாவணி குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அப்படி இருந்தால் மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்து இ.காங்கிரசிலேயே தலைவர் சேர்ந்திருக்கலாமே? எதற்காக தனிக்கட்சி தொடங்க வேண்டும்? திண்டுக்கல் இடைத்தேர்தலில் தலைவரின் ஆதரவை பெற இ.காங்கிரஸ் எவ்வளவோ முயற்சித்தும் கூட (திரு.சி.சுப்பிரமணியம் தூது வந்தார்) இ.காங்கிரசையும் எதிர்த்து தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்றும் தலைவர் புகழைப் பார்த்து பொறாமை கொண்டோர் கிளப்பிய வதந்திகளில் இதுவும் ஒன்று என்றும் கடந்த திரியில் 393-ம் பக்கம் பதிவு எண்.3926-ல் நான் குறிப்பிட்டிருந்தேன்.
எனவே, அந்நிய செலாவணி மோசடி என்பதும் அதனால்தான் மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்து திமுகவை தலைவர் உடைத்தார் என்பதும் வெறும் கட்டுக்கதை என்பது புலனாகும்.
அதோடு மட்டுமல்ல, ஊழல் புகார்கள் காரணமாக புரட்சித் தலைவருக்கு எதிராக மத்திய அரசு சர்க்காரியா கமிஷன் அமைக்கவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தவர் என்று புரட்சித் தலைவரைப் பார்த்து நீதிபதி சர்க்காரியா தனது அறிக்கையில் கூறவில்லை. அதையே மீண்டும் இந்திரா காந்தி அம்மையாரும் தலைவரைப் பார்த்து கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks