Results 1 to 4 of 4

Thread: அவள் அப்படித்தான் !

Threaded View

  1. #2
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணன் சொன்னது கீதையில்
    குணத்ரய விபாக யோகத்தில்
    குணங்கள் மூன்று மாந்தரில்
    குன்றியோ கூடியோ இருக்குமாம்

    சத்வம் ரஜஸ் தமஸ் என்று
    சாகச கண்ணன் சாதித்தது
    சத்வ குணம் அதிலே சிறந்தது
    சாத்வீகம் சத்தாயதில் பொதிந்தது

    சத்துவ குணம் முனிவர் குணம்
    சமச்சீர் நோக்கும் தெளிவும் உண்டாம்
    சரி ! ராஜச குணம் ? அது ராட்சச குணம்
    சினம் அவா அகங்காரம் அதில் உண்டாம்

    தாமச குணமோ சோம்பியின் இனம்
    தயக்கம் மயக்கம் அதில் இருக்கும்
    தவிக்கும் குணம் அதுவே அஞ்ஞானம்
    தள்ளும் கீழே எந்நாளும்

    ***
    Bhagvat Gita : குணத்ரய விபாக யோகம் :

    தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம் |
    ஸுகஸங்கேந பத்⁴நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக⁴ || 14- 6||
    Meaning :அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.

    ரஜோ ராகாத்மகம் வித்தி⁴ த்ருஷ்ணாஸங்கஸமுத்ப⁴வம் |
    தந்நிபத்⁴நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம் || 14- 7||
    Meaning :ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

    தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி⁴ மோஹநம் ஸர்வதேஹிநாம் |
    ப்ரமாதாலஸ்யநித்ராபி⁴ஸ்தந்நிபத்⁴நாதி பா⁴ரத || 14- 8||
    Meaning : தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!"

    Last edited by Muralidharan S; 11th July 2015 at 09:59 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •