-
17th July 2015, 04:05 PM
#881
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
அல் அமீன்
நம்பிக்கைக்குரியவர்
கி.பி.570
அரபு தேசத்தில் மக்கா நகரில் அப்துல்லாஹ், ஆமினா தம்பதிக்கு முஹம்மது நபி (ஸல்) (அண்ணலாரின் திருப்பெயர் சொல்லப்படும்போதெல்லாம் ஸலவாத் என்னும் புகழ் மொழியை அவர்கள் மீது கூறுவது கடமை) பிறந்தார். குறைஷி கோத்திரத்தில், இவர் பிறந்த ஹாஷிம் குடும்பம் அரபுலகத்தில் பிரபலம்.
ஹிரா குகையில் தியானம் செய்தவருக்கு வானவர் மூலம் இறைவசனங்களான அல்குர்ஆன் இறங்குகிறது. 40வயதில் முஹம்மது நபியவர்கள் (ஸல்) நபித்துவம் அடைந்தார்கள். 300க்கும் மேற்பட்ட சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஓரிறைக் கொள்கையையும் வாழ்க்கை நெறிகளையும் போதித்தார்கள்.
உலகம் நல்லவர்களை உடனே ஏற்பதில்லையே. மூடநம்பிக்கையாளர்களால் விரட்டப்பட்டார். நன்மையை காக்க போரில் ஈடுபட்டு ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டினார். எதிர்த்தவர்களே ஏற்றுக் கொண்டனர். 23 ஆண்டுகளில் (அண்ணலார் (ஸல்) 63 வயது வரை வாழ்ந்தார். நபித்துவம் அடைந்த 40 வயதில் இருந்து இறுதி வரை வாழ்ந்த ஆண்டுகள்) இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.
இதில் ஒரு வியப்பு என்ன தெரியுமா? அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று நபிகளாரை (ஸல்) பின்பற்றுவோர் மட்டுமல்ல, அவரது எதிரிகளும் கூட ஒப்புக் கொண்டனர். நபிகளாரின் (ஸல்) ஏகத்துவப் பிரசாரத்தை நம்பாத, அவருக்கு எதிரான குறைஷிகள் கூட தங்கள் பொருட்களை அவரிடம் அடைக்கலமாக கொடுத்து வைத்திருந்தனர். அந்தக் குறைஷிகளே அண்ணலாரை (ஸல்) கொல்ல முயன்ற வேளையிலே கூட, மெக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் கூட, அவர்களுக்கு உரிய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க ஆவன செய்து விட்டுத்தான் வெளியேறினார். அதனால்தான் அவர் அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்.
நபிகளாரின் (ஸல்) போதனைகளில் முக்கியமானது மது அருந்தாமை மற்றும் ஈகைப் பண்பு. அதனால்தான் ரமலான் திருநாள் ஈகைப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது.
நபிகளாரின் (ஸல்) அடியொற்றியே புரட்சித் தலைவரின் வாழ்வும் அமைந்திருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய தலைவர், தனது உழைப்பால் உயர்ந்து சமுதாயத்தில் உயர்ந்தார். திரைப்படத்துறையில் அவரை வைத்து படம் எடுத்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அரசியல் துறையிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலத்தையே மூன்று முறை ஆட்சி செய்தார்.
மக்கள் மீது தலைவர் கொண்டிருந்த நம்பிக்கையும், தலைவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பரஸ்பரத்தன்மை கொண்டது. நாடோடி மன்னன் திரைப்படத்தில் தலைவர் கூறுவார், ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை’ என்பார்.
நபிகளார் (ஸல்) வலியுறுத்திய ஈகைப் பண்பும் விருந்தோம்பல் பண்பும் புரட்சித் தலைவரோடு உடன் பிறந்தது. தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, ஆட்சியில் இருந்தபோதும் கூட ஒரு ஆட்சியாளராக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்த கருணை உள்ளம் கொண்டவர் தலைவர்.
ஒருமுறை சென்னையில் நடந்த சிறுபான்மையினர் மாநாட்டில் புரட்சித் தலைவர் கலந்து கொண்டு பேசும்போது கூறினார்:
‘நான் ஒரு லுங்கி அணியாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்துவன்’
..... இப்படிச் சொன்னவரின் பெயர், இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ராமச்சந்திர மூர்த்தியின் பெயர். பரந்த நோக்கத்தோடு மத ஒற்றுமைக்கு வழிகாட்டியாகவும் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் சர்வ சமுதாய காவலராகவும் திகழ்ந்தவர் தலைவர்.
ஆனால், இன்று பாசிச மதவெறி தலைவிரித்தாடுகிறது. சமஸ்கிருதத்தை திணிக்கப் பார்க்கிறது. கிறிஸ்துமசுக்கு விடுமுறை உண்டா? இல்லையா? என்று சர்ச்சை. அம்பேத்கர் - பெரியார் என்று பெயர் இருந்ததாலேயே ஐஐடியில் வாசிப்பு வட்டத்துக்கு தடை.
தலைவர் நடித்த, இஸ்லாமிய கதையமைப்பைக் கொண்ட சூப்பர் ஹிட் படமான குலேபகாவலியில் எல்லாப் பாடல்களுமே மனதை மயக்கும். அதில் எஸ்.சி.கிருஷ்ணனும் நாகூர் ஹனிபாவும் இணைந்து பாடிய டைட்டில் பாடல் மனதை உருக்கும். அதில் எனக்கு பிடித்த வரிகள்.
‘‘இணையிலாத எங்கள் பாதுஷா
தந்த நெறியின் படியே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே, நபி நாயகமே, நலமே அருள் நபி நாயகமே’’
தலைவர் நமக்கு காட்டிய வழியில்,
மதவெறி மாய... மனித நேயம் மலர.... உறுதியேற்போம்.
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! (அல்குர்ஆன் 10:86)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
17th July 2015 04:05 PM
# ADS
Circuit advertisement
-
17th July 2015, 04:14 PM
#882
Junior Member
Diamond Hubber
-
17th July 2015, 05:34 PM
#883
Junior Member
Diamond Hubber
1946 -கோவை ராமநாதபுரம்....
தேகப்பயிற்சி சாலையில் வியர்வையில் மின்னும் கருந்தேக்கு உடம்பில், ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்கிறார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாதச் சம்பளத்தில் நடித்து வந்த ஒரு நடிகர் அதை வேடிக்கை பார்க்கிறார்.
இருவரும் நண்பராகிவிடுகிறார்கள்.
படத்தில் தன்னோடு சண்டைக் காட்சியில் நடிக்க, கருந்தேக்கு உடம்புக்காரருக்கு இவர் சிபாரிசு
செய்கிறார். ஒரு நாள் நடிகர் குடியிருந்த வாடகை வீட்டு வழியே, கருந்தேக்கு வர- 'எங்கப்பா காலையில போன ஒன் சிநேகிதனை இன்னும் காணோம். மத்தியான சமையலுக்கு, அவன் சம்பளம்
வந்தாத்தான் மார்க்கட்டுக்குப் போய் அரிசி பருப்பு வாங்கியாரணும்' - என்றார் நடிகரின் தாயார்.
'இதோ வந்திட்டேம்மா'- என்று சொல்லி விட்டு, பக்கத்து தெருவில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்குள் போய் - 'பேச்சீம்மா, ஒரு கிளாஸ் தாளிச்ச மோர் கொண்டா'- என்றார்.
மோர் வருவதற்குள் -மலபார் ரிசர்வ் போலீஸ் போடுகிற மாதிரியான அரை டிராயர் பாக்கட்டில்-அந்த வீட்டு மூட்டையிலிருந்து எடுத்து ஒரு பக்கம் ஒரு லிட்டர் அரிசி, மறுபக்கம் பருப்பு நிரப்பிக்கொண்டு, தாளித்த மோரில், தாக சாந்தி செய்துவிட்டு, நடிகரின் தாயாரிடம் அதைச் சேர்த்தார்.
அம்மா சமையலுக்கு என்ன செய்திருப்பார்களோ என்று தவித்தவாறு வீடு வந்த நடிகருக்கு 'கம கம' என்று சமையல் வாசனை ! 'எப்படிம்மா சமையல்? ' - என்று நடிகர் கேட்க , 'உன் பயில்வான் சிநேகிதன் வாங்கியாந்தான்' - என்றார் அம்மா.
அவில் கொடுத்த குசேலனை
குபேரனாக்கினார் கிருஷ்ண பரமாத்மா !
அரிசி கொடுத்த நண்பனை
கோடீஸ்வரனாக்கினார் நடிகர் !!
கருந்தேக்கு உடம்புக்காரர்
அண்ணன் சாண்டோ சின்னப்பா தேவர்.
அன்னையார் சத்யபாமா. நடிகர் - யார் என்று சொல்லவேண்டியதில்லை- நாடாண்ட முதல் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
படம் : ஜூபிடரின்-'ராஜகுமாரி.'
நன்றி:திரையுலக மார்கண்டேயர் சிவக்குமார் அவர்கள் !
-
17th July 2015, 05:44 PM
#884
Junior Member
Diamond Hubber
கலைமாமணி சி.டி. ராஜகாந்தம்: திரை வரலாற்றின் ஒரு பகுதி
எம்.ஜி.ஆரால் ‘ஆண்டவனே’ என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை யார் என்று தெரியுமா? அந்த நடிகை கையால் தயாரிக்கப்பட்ட வறுத்த உப்புக்கண்டம் வாங்கிச் சாப்பிட தியாகராஜ பாகவதர் மரணப் படுக்கையில்கூட ஆசைப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘தில்லானா மோகனாம் பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் பயன்படுத்திய 5 கிலோ எடையுள்ள வெள்ளி வெற்றிலைப் பெட்டி யாருக்குச் சொந்தமானது தெரியுமா? பழம்பெரும் நகைச்சுவை நடிகை சி.டி. ராஜகாந்தம்தான் இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர்.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான ‘சபாபதி’ (1941) படத்தில் காளி என். ரத்தினத்தின் ஜோடியாக வேலைக்காரியாக நடித்ததன் மூலம் திரைப்பட ரசிகர்களின் நினைவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர் இவர்.
கோயம்புத்தூர் வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்டாலினுக்கு 1997-ல் அவர் அளித்த பேட்டியின் எழுத்துவடிவமாக இப்புத்தகம் வெளியாகி யிருக்கிறது. வெறும் 55 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில், அறியப்படாத பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அந்தக் கால நாடக சபாக்களிலும், திரைப்பட ஸ்டுடியோக்களிலும் இருந்த திண்ணைத் தூண்களை ஓடிப்பிடித்து விளையாடும் உணர்வு ஏற்படும்.
ஒரு ரூபாய் சம்பளம்
கோவையில் பிறந்த ராஜகாந்தம், அந்தக் காலத்திலேயே 8-ம் வகுப்பு வரை படித்தவர். பள்ளி மாணவியாக இருந்தபோதே அவருக்குத் திருமணமாகி விட்டது. 3 மாத சிசுவை வயிற்றில் சுமந்தபோது, அவரது கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவரையும், அவரது குழந்தையையும் காப்பாற்றியது இசைதான். பள்ளியில் கற்றுக்கொண்ட இசைப் பாடலைப் பக்கத்து வீட்டுக்காரரின் ஆர்மோனியப் பெட்டியை வைத்து நாடக சபா தொடர்புள்ள ஒருவரிடம் பாடிக்காட்டினார் ராஜகாந்தம். அதைத் தொடர்ந்து கள்ளிக்கோட்டையில் உள்ள எஸ்.ஆர். ஜானகியம்மா நாடக சபாவில் இடம் கிடைத்தது. வாரம் 3 நாடகங்களில் பாடி நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அப்போது ஒவ்வொரு நாடகத்துக்கும் அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு ரூபாய்தான்.
அதே ராஜகாந்தம் பின்னாளில் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்தச் சமயம் எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் இருவரையும் குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வந்து காலை முதல் இரவு வரை உணவளித்து உபசரித்தவர் ராஜகாந்தம். இந்தத் தகவலை ஆனந்த விகடனில் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
தெரு முழுக்கப் பந்தல் போட்டு தனது மகள் ராஜலட்சுமிக்கு பாடகர் திருச்சி லோகநாதனைத் திருமணம் செய்து வைத்தது, ஏழிசை மன்னர் தியாக ராஜ பாகவதர் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் தடபுடல் விருந்துடன் அந்தத் திருமணம் 5 நாட்கள் நடந்தது, அதில் கே.பி. சுந்தராம்பாள், எம்.எல். வசந்தகுமாரி, தண்ட பாணி தேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் என புகழின் உச்சத்திலிருந்த திரைக் கலைஞர்களெல்லாம் பங்கேற்றது என்று பல தகவல்களை இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராஜகாந்தம்.
எம்.ஜி.ஆருக்குக் கடிகாரம்
எம்.ஜி.ஆரின் கல்லறைக்குள்ளிருந்து அவர் கட்டியிருக்கும் கடிகாரத்தின் ஒலி கேட்பதாகக் கல்லறை மீது காதுவைத்து கேட்பவர்கள் இன்றும் உண்டு. என்றும் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் எனும் காலத்தின் குறியீடாகவே மாறிவிட்ட எம்.ஜி.ஆர். தனது வாழ்நாளில் முதலில் கட்டியது ராஜகாந்தம் பரிசளித்த கைக்கடிகாரத்தைத்தான். ஒரு முறை கல்கத்தாவில் படப்பிடிப்பில் ராஜகாந்தம் இருந்தபோது, சென்னையில் இருந்த எம்.ஜி.ஆர். தனது பொருளதார நிலைகுறித்துக் குறிப்பிட்டு, ‘கல்கத்தாவிலிருந்து திரும்பி வரும்போது எனக்கும் அண்ணன் சக்ரபாணிக்கும் இரண்டு நல்ல கைக்கடிகாரங்கள் வாங்கி வாருங்கள்’ என்று கடிதம் எழுதியிருந்தாராம். அவர்கள் இருவருக்கும் அழகான கைக்கடிகாரங்களை வாங்கிப் பரிசளித்தாராம் ராஜ காந்தம். இந்தத் தகவல்களைத் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டி.எல். மகாராஜன். ராஜகாந்தத்தின் மகள் வயிற்றுப் பேரன்கள்தான் இவரும் தீபன் சக்கர வர்த்தியும்.
புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஸ்டாலின், ஏற்கெனவே திரை இசைவானில் என பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரை வானொலிக்காகப் பேட்டி கண்டதைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது அப்புத்தகம். அதைத் தொடர்ந்தே தற்போது இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஆவணப் படுத்துவதற்குக் கடலளவு இருந்தாலும் ஆவணப் படுத்தப்பட்டிருப்பது தினையளவே. அந்த வகையில் இதுபோன்ற ஆவணங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அந்த நாள் ஞாபகம்: கலைமாமணி சி.டி. ராஜகாந்தம்
பக்கங்கள்: 55, விலை: ரூ. 100
-
17th July 2015, 07:17 PM
#885
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
அல் அமீன்
நம்பிக்கைக்குரியவர்
கி.பி.570
அரபு தேசத்தில் மக்கா நகரில் அப்துல்லாஹ், ஆமினா தம்பதிக்கு முஹம்மது நபி (ஸல்) (அண்ணலாரின் திருப்பெயர் சொல்லப்படும்போதெல்லாம் ஸலவாத் என்னும் புகழ் மொழியை அவர்கள் மீது கூறுவது கடமை) பிறந்தார். குறைஷி கோத்திரத்தில், இவர் பிறந்த ஹாஷிம் குடும்பம் அரபுலகத்தில் பிரபலம்.
ஹிரா குகையில் தியானம் செய்தவருக்கு வானவர் மூலம் இறைவசனங்களான அல்குர்ஆன் இறங்குகிறது. 40வயதில் முஹம்மது நபியவர்கள் (ஸல்) நபித்துவம் அடைந்தார்கள். 300க்கும் மேற்பட்ட சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஓரிறைக் கொள்கையையும் வாழ்க்கை நெறிகளையும் போதித்தார்கள்.
உலகம் நல்லவர்களை உடனே ஏற்பதில்லையே. மூடநம்பிக்கையாளர்களால் விரட்டப்பட்டார். நன்மையை காக்க போரில் ஈடுபட்டு ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டினார். எதிர்த்தவர்களே ஏற்றுக் கொண்டனர். 23 ஆண்டுகளில் (அண்ணலார் (ஸல்) 63 வயது வரை வாழ்ந்தார். நபித்துவம் அடைந்த 40 வயதில் இருந்து இறுதி வரை வாழ்ந்த ஆண்டுகள்) இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.
இதில் ஒரு வியப்பு என்ன தெரியுமா? அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று நபிகளாரை (ஸல்) பின்பற்றுவோர் மட்டுமல்ல, அவரது எதிரிகளும் கூட ஒப்புக் கொண்டனர். நபிகளாரின் (ஸல்) ஏகத்துவப் பிரசாரத்தை நம்பாத, அவருக்கு எதிரான குறைஷிகள் கூட தங்கள் பொருட்களை அவரிடம் அடைக்கலமாக கொடுத்து வைத்திருந்தனர். அந்தக் குறைஷிகளே அண்ணலாரை (ஸல்) கொல்ல முயன்ற வேளையிலே கூட, மெக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் கூட, அவர்களுக்கு உரிய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க ஆவன செய்து விட்டுத்தான் வெளியேறினார். அதனால்தான் அவர் அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்.
நபிகளாரின் (ஸல்) போதனைகளில் முக்கியமானது மது அருந்தாமை மற்றும் ஈகைப் பண்பு. அதனால்தான் ரமலான் திருநாள் ஈகைப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது.
நபிகளாரின் (ஸல்) அடியொற்றியே புரட்சித் தலைவரின் வாழ்வும் அமைந்திருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய தலைவர், தனது உழைப்பால் உயர்ந்து சமுதாயத்தில் உயர்ந்தார். திரைப்படத்துறையில் அவரை வைத்து படம் எடுத்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அரசியல் துறையிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலத்தையே மூன்று முறை ஆட்சி செய்தார்.
மக்கள் மீது தலைவர் கொண்டிருந்த நம்பிக்கையும், தலைவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பரஸ்பரத்தன்மை கொண்டது. நாடோடி மன்னன் திரைப்படத்தில் தலைவர் கூறுவார், ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை’ என்பார்.
நபிகளார் (ஸல்) வலியுறுத்திய ஈகைப் பண்பும் விருந்தோம்பல் பண்பும் புரட்சித் தலைவரோடு உடன் பிறந்தது. தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, ஆட்சியில் இருந்தபோதும் கூட ஒரு ஆட்சியாளராக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்த கருணை உள்ளம் கொண்டவர் தலைவர்.
ஒருமுறை சென்னையில் நடந்த சிறுபான்மையினர் மாநாட்டில் புரட்சித் தலைவர் கலந்து கொண்டு பேசும்போது கூறினார்:
‘நான் ஒரு லுங்கி அணியாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்துவன்’
..... இப்படிச் சொன்னவரின் பெயர், இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ராமச்சந்திர மூர்த்தியின் பெயர். பரந்த நோக்கத்தோடு மத ஒற்றுமைக்கு வழிகாட்டியாகவும் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் சர்வ சமுதாய காவலராகவும் திகழ்ந்தவர் தலைவர்.
ஆனால், இன்று பாசிச மதவெறி தலைவிரித்தாடுகிறது. சமஸ்கிருதத்தை திணிக்கப் பார்க்கிறது. கிறிஸ்துமசுக்கு விடுமுறை உண்டா? இல்லையா? என்று சர்ச்சை. அம்பேத்கர் - பெரியார் என்று பெயர் இருந்ததாலேயே ஐஐடியில் வாசிப்பு வட்டத்துக்கு தடை.
தலைவர் நடித்த, இஸ்லாமிய கதையமைப்பைக் கொண்ட சூப்பர் ஹிட் படமான குலேபகாவலியில் எல்லாப் பாடல்களுமே மனதை மயக்கும். அதில் எஸ்.சி.கிருஷ்ணனும் நாகூர் ஹனிபாவும் இணைந்து பாடிய டைட்டில் பாடல் மனதை உருக்கும். அதில் எனக்கு பிடித்த வரிகள்.
‘‘இணையிலாத எங்கள் பாதுஷா
தந்த நெறியின் படியே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே, நபி நாயகமே, நலமே அருள் நபி நாயகமே’’
தலைவர் நமக்கு காட்டிய வழியில்,
மதவெறி மாய... மனித நேயம் மலர.... உறுதியேற்போம்.
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! (அல்குர்ஆன் 10:86)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
17th July 2015, 07:22 PM
#886
Junior Member
Diamond Hubber
-
17th July 2015, 09:52 PM
#887
Junior Member
Veteran Hubber
My Dear Brother M.G.C.B. PRADEEP,
WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R. I WISH YOU FOR A HEALTHY & WEALTHY LIFE, ALONG WITH YOUR FAMILY MEMBERS, ON THE HAPPY OCCASION OF YOUR BIRTH DAY (being Today)
-
17th July 2015, 09:52 PM
#888
Junior Member
Platinum Hubber
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, சென்னை சரவணாவில் இன்று (17/07/2015) முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வழங்கும் "அலிபாபாவும் 40 திருடர்களும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : ஓட்டேரி பாண்டியன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th July 2015, 10:04 PM
#889
Junior Member
Seasoned Hubber
-
17th July 2015, 10:05 PM
#890
Junior Member
Seasoned Hubber
Bookmarks