Page 115 of 402 FirstFirst ... 1565105113114115116117125165215 ... LastLast
Results 1,141 to 1,150 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #1141
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜியிடம் எம்.ஜி.ஆர்.சொல்ல விரும்பியது என்ன?
    பழைய நினைவுகள் சுகமாக இருக்கும்...அடடா இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என வியக்க வைக்கும்.சில வருந்த வைக்கும் !
    ''சே,நாமா இப்படி செய்தோம் '' என நம் மீதே கோபம் வரும்!
    ஆனால் ......?
    நடக்காமல் போய் விட்ட சில நிகழ்வுகள் மனதை அரிக்கும்.!
    ஏன் சொன்னார்,எதை நினைத்து சொல்லி இருப்பார்,அதன் பொருள் என்ன என புரியாது நமது மூளையை குழப்புவோம்!
    அந்த வகையை சேர்ந்ததுதான் இப்போது சொல்லப் போவது...!
    அமரர் எம்.ஜி.ஆர்.உடல் நலம் ஓரளவு சரியாகி அமெரிக்காவிலிருந்து திரும்பி இருந்தார்.
    அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வந்தார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக !
    அமரர் சிவாஜியும் ஆர்.வெங்கட்ராமனும் நல்ல நண்பர்கள்.
    அந்த விழாவுக்கு சிவாஜியும் வந்திருந்தார்.
    முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.தனது தம்பியாக கருதிய சிவாஜியை தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.
    சிவாஜிக்கு சற்று சங்கடமாக இருந்தது.
    கடும் குளிர்!
    போலீஸ் அதிகாரி ஒருவர் சால்வையை எடுத்துக் கொண்டு வந்தார் .
    அதை வாங்க மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.
    ஆனால் அந்த சால்வையை சிவாஜி வாங்கி எம்.ஜி.ஆருக்கு போர்த்தி விட்டார்.
    அப்போது தான் சிவாஜியிடம் ஒரு தகவலை சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!
    ''பிரசிடென்ட் இன்னும் பத்து நாளில் ஹாஸ்பிடல் திறப்பதற்காக சென்னை வரப் போகிறார்.அவர் போனதும் நீ வா!உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் '' என்று சொன்னாராம்.
    விழா முடிந்து வீட்டுக்கு சென்றதும் கமலா அம்மையாரிடம் அண்ணன் எம்.ஜி.ஆர் .தன்னிடம் இப்படி கூறினார் என்பதை சொல்லி இருக்கிறார்.
    இருவரும் சேர்ந்து ராமாவரம் தோட்டத்துக்கு போவதாக முடிவு செய்தனர்.
    ஆனால் ...?
    விதி வேறு விதமாக விளையாடிவிட்டது!
    மருத்துவமனை திறப்பு விழாவுக்கு முன்னதாகவே புரட்சி தலைவர் அமரர் ஆகி விட்டார்.
    குடும்ப துக்கம் விசாரிப்பதற்காக இரண்டு நாட்கள் கழித்து ஜானகி அம்மையாரை பார்க்க சென்ற போது அவர் ''தம்பி கணேசன் வரப்போறான் அவனிடம் முக்கியமான விஷயம் பேசப் போறேன்.அவனுக்கு பிடித்த ஆப்பமும் ,கருவாட்டுக் குழம்பும் பண்ணி வை என்று சொன்னவர் உங்களிடம் எதுவும் சொல்லாமல் போய்விட்டாரே'' என்று அழுதிருக்கிறார் ஜானகி அம்மையார்.
    இந்த நிகழ்வை அவ்வப் போது சொல்வார் சிவாஜி.
    ''அண்ணன் மனசில் என்ன இருந்ததோ தெரியலியே''என்று புலம்பியது எனக்கு
    இன்னும் நினைவில் இருக்கிறது.

    அமரர் எம்.ஜி.ஆர். என்ன சொல்ல எண்ணி இருப்பார் என்பது ஊகிக்க முடியாத கேள்வியாகவே இருக்கிறது!

    Courtesy : http://devimanian.blogspot.in/

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1142
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1143
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தூரத்தில் இருப்பவர்கள் துரோகம் செய்வதில்லை...!
    பக்கத்தில் இருப்பவர்களே அதை பக்குவமாகச் செய்கிறார்கள்..!!

    எம்.ஜி.ஆர்.. - ஆர்.எம் வீரப்பன் ..இருவரையும் பற்றி சற்றுமுன் ஒரு கட்டுரையை வாசித்தேன்... அது கட்டுரை அல்ல... “திட்டுரை” என்றுதான் சொல்ல வேண்டும்...

    எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட துரோகங்கள் செய்துதான் ஆர்.எம்.வீ. வாழ்வில் வளங்கள் பெற்று வளர்ந்தாராம்...
    நான் இதை நம்பவில்லை...

    ஆனால்...2010 - ல் ஆர்.எம்.வீரப்பன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட கருணாநிதி , அந்த மேடையில் சொன்னதாக நான் படித்த இந்த தகவல்தான் இங்கே கொஞ்சம் இடிக்கிறது...

    இதோ..கருணாநிதியின் குரல் :
    “மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. ... அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் , என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்சினைகள் தோன்றும்போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்”

    # கருணாநிதியின் இந்த பேச்சைப் படித்தபோது , எனக்கு ஏனோ... கொஞ்சம் இடறியது...
    எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலேயே ..அவரது முன்னிலையிலேயே ஆர்.எம்.வீ. போட்டது இரட்டை வேடமா..? அப்படி ஒரு கபட நாடகம் நடந்திருந்தால்...அதை எப்படி கண்டு கொள்ளாமல் விட்டார் எம்.ஜி.ஆர்...?

    என்னைப் பொறுத்தவரை ..எம்.ஜி.ஆருக்கு , துரோகங்களை சந்திப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல..!
    ஆனாலும் ஆர்.எம்.வீரப்பன் இப்படிச் செய்திருப்பார் என்று இன்னும் நான் நம்பவில்லை..!

    ஆனாலும்...நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு ஏற்படும் துரோகங்களை எப்படிச் சந்திப்பது..? எப்படி சமாளிப்பது ..?

    ஆனந்தவிகடனில் வந்த சுமதிராம் கவிதையின் சில வரிகளை வாசிக்கும்போது , துரோக சுமைகள் கொஞ்சம் தூர விலகித்தான் போகிறது...!

    “சற்றும் எதிர்பாராத நேரத்தில்
    வந்து நிற்கும்
    அழையா விருந்தாளிபோல
    துரோகம் ஒன்று
    முன்னே வந்து நிற்கலாம் ...

    அதிக கடினம்
    என்றாலும் பெருங்கருணை கொண்டு
    மன்னித்து விடுங்கள்
    அடுத்த நிமிடமே அது இறந்துவிடும்..”

    - சுமதிராம்

  5. #1144
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1145
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1146
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like



  8. #1147
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1148
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    It was 77,000+ some one week after this programme was available in Youtube and then made "not available". Now in the last 3 to 4 days days it has reached : 80,886. Further, It was mentioned over here with persons in India cannot see this programme in you tube, i.e. viewers are all from overseas!
    Last edited by saileshbasu; 25th July 2015 at 12:33 AM.

  10. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  11. #1149
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    endrumae thalaivar mannathi mannan than ella thuraigalilum

  12. #1150
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •