-
27th July 2015, 07:01 PM
#2161
Senior Member
Diamond Hubber
செந்திவேல் சார்,
சிறப்பான பாடல் ஆய்வு. அப்போதிலிருந்தே உங்கள் முகநூல் மூலமாக தங்களின் நடிகர் திலகத்தின் பக்தி அறிந்தவன் நான். இப்போது பட, பாடல் ஆய்வுகளிலும் கலக்குகிறீர்கள். 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடலில் வெளியே சொல்ல முடியாமல் தன் காதலை அப்படியே மென்று விழுங்கி உள்நெஞ்சத்தில் சோகத்தோடு சோகமாய் வைத்துப் புதைப்பது போல 'அவன்தான் மனிதன்' படத்திலும் ஜெயலலிதாவுடனான காதலை உள்ளுக்குள் மறைத்து விடுவார். அதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரியும். நல்ல பாடலை எடுத்து எழுதியமைக்கு நன்றி. ஒரு சமயம் இந்தப் பாடலைப் பற்றி தங்களைப் போலவே ராகவேந்திரன் சாரும் வரிக்கு வரி அற்புதமாக எழுதியிருந்தார். நடிகர் திலகத்தின் இருநூறு படங்களுக்கு மேல் உள்ள பாடல்களையும் தங்களைப் போன்ற இளைஞர்கள் இது போல ஆய்வு செய்து எழுத முன்வரவேண்டும். நிறைய இருக்கின்றன. தெரிந்ததையே கொடுத்துக் கொண்டிருக்காமல் இன்னும் வெளியே அதிகம் தெரியாத அருமையான பாடல்கள் அவர் படங்களில் கொட்டிக் கிடக்கின்றன.... அந்தப் பாடல்களைக் கொடுக்க வேண்டும்.
(உதாரணமாக என் உள்ளம் என்கின்ற வானத்திலே, மான் குட்டி இப்போது என் கையிலே, மோக வீணை ஒரு ராகம் பாடக் கேட்டேன், தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி, ஆசை தீரப் பேச வேண்டும் உன்னிடத்தில், ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை, கண்ணிரெண்டில் மையெழுதி, வேண்டும் வேண்டும் உந்தன் உறவு, ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ என்று நிறைய) அவையெல்லாம் இது போல வெளியே வரவேண்டும். அதுதான் என் விருப்பம்.
தங்களின் 'தெய்வ மகன்' பதிவை நமது திரியில் ரசித்துப் படித்தேன். உங்கள் உழைப்பிற்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும்.
இதோ 'கல்யாணமாம்...கச்சேரியாம்'
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
27th July 2015 07:01 PM
# ADS
Circuit advertisement
-
27th July 2015, 07:51 PM
#2162
Junior Member
Veteran Hubber
தமிழ்த் திரை நகைச்சுவை ஷாம்பெயின் கலக்கல் மது(ர)(ம்) கானங்கள் !
பகுதி 1 : கே ஏ தங்கவேலு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!!
நகைச்சுவை நடிகர்கள் நிரம்பி வழிவது உலகின் வேறெந்த மொழிப் படங்களையும் விட தமிழ்ப் படங்களில்தான்!! கலைவாணர், சாரங்கபாணி, பாலையா,ராதா, சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், சோ, சுருளி, தேங்காய்....கவுண்டமணி-செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம்.....நீளம் அதிகமே!
பாடல் நடன திறமை காரணமாக சந்திரபாபுவின் தனிப்பட்ட காமெடி தத்துவ ஆடல் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. அதற்கப்புறம் நாகேஷின நடனத் திறமை சோகரசம் பரிமாறப் பட்ட பாடல் காட்சிகள் ...இருப்பினும் தனித்துவம் வாய்ந்த சிரஞ்சீவித்துவம் மிக்க துளியும் ஆபாசமற்ற பசுமையான நகைச்சுவை நினைவலைகளுக்கு சொந்தக்காரர் டணால் தங்கவேலு அவர்களே ! அவருடைய கல்யாண பரிசு மன்னார் கம்பனி காமடி இன்றுவரை நம்பர் ஒன்தான்!! பெரிய நடனத் திறமைகள் இல்லாவிட்டாலும் அவரும் பல ரசிக்கத்தக்க குத்தாட்ட அசைவுகள் மிக்க ஷாம்பெய்ன் கலக்கலான பாடல் காட்சியமைப்புக்களை தந்திருக்கிறார்!
இக்கானங்களும் பார்வைக்கும் செவிக்கும் மதுரமே!!
நகைச்சுவை நடிகர் விவேக் 70 சதவீதம் தங்கவேலு 25 சதவீதம் எம் ஆர் ராதாவே!
தங்கவேலுவின் அசத்தலான 'சோனா' ஆட்டம் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில்!!
ராகினியுடன் கலக்கலாட்டம் உத்தமபுத்திரனில் !
அமைதியாக வசீகரிக்கும் தங்கவேலு !!
இரு 'நகைச்சுவை' வல்லவர்களின் காதல் டப்பாங்குத்து!
Last edited by sivajisenthil; 27th July 2015 at 08:19 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
27th July 2015, 08:30 PM
#2163
Junior Member
Veteran Hubber
Cloud O'Nine songs of NT Vs Passing Cloud Songs of NT!
ஒன்பதாம் அடுக்கு மேகங்கள் Vs கடந்து செல்லும் மேகங்கள்
ஒன்பதாம் மேக அடுக்கு என்பது சொர்க்கத்தின் நுழைவாயிலைத் தாங்கி நிற்கும் திரண்ட மேகக்கூட்டத்தைக் குறிப்பதே! அதை வைத்தே சந்தோஷத்தின் உச்சத்தை feeling as if we are on a Cloud 9 என்று சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும்!
கடந்து செல்லும் Passing Clouds மேகங்களோ சிலசமயம் குளிர்ச்சியாகவும் சிலசமயம் வெறுமையாகவும் நம்மை மேனியைத் தழுவிச் செல்லும் போது ஒரு சிலிர்ப்பை மட்டுமே உண்டாக்கும் !
நடிகர்திலகத்தின் மகத்தான படங்களிலும் இசைக்கோர்வையும் பாடல்களும் உள்ளத்தை அள்ளினாலும் பலபாடல்கள் நம்மை ஒன்பதாம் மேக அடுக்கின் உச்சிக்கு கொண்டு சென்று ஆனந்த அதிர்வுகளை உண்டாக்கின! சில பாடல்கள் படத்தில் பார்க்கும்போது மட்டுமே சிலிர்ப்பை உண்டுபண்ணி கடந்து செல்லும் மேகங்களாக முடிந்து விட்டன !!
நேற்று சன்லைப் சானலில் உத்தமபுத்திரன் திரைக்காவியத்தை ஈடுபாட்டுடன் ரசித்த போது சில பாடல்கள் இந்த எண்ணத்தை தூண்டி விட்டன !
பகுதி 2 : உத்தமபுத்திரன் (1958) : என் கண்ணோட்டத்தில்.....
Cloud O'9 songs : உள்ளம் சொர்க்கவாசலுக்கே சென்றுவிட்ட உணர்வினைத் தந்தவை!
படம் பார்க்கும்போது மட்டும் நினைவில் நிற்பவை!!Passing Clouds!
mannulakellam ponnulakaka maaridium vaelai! song with Padmini and Ragini introduction!
Last edited by sivajisenthil; 27th July 2015 at 08:35 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2015, 08:54 PM
#2164
Junior Member
Veteran Hubber
அக்கினிச் சிறகுகள் தந்தவர்!! மக்களின் ஜனாதிபதியாக ஒளிர்ந்தவர்!! இளைஞர்களின் கனவாற்றலை தூண்டியவர்!!
பாரத ரத்னா ஏவுகணை விஞ்ஞான வழிகாட்டி apj அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது!!
நடிகர்திலகம் / மதுர கானங்கள் / ஜெமினி திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி
-
27th July 2015, 09:19 PM
#2165
Senior Member
Diamond Hubber
இருந்த ஒரே எதிர்காலக் கனவு நம்பிக்கையும் தகர்ந்தது.
அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு எங்கள் கண்ணீரில் அஞ்சலி.
-
27th July 2015, 09:42 PM
#2166
Senior Member
Senior Hubber
அதிர்ச்சியான செய்தி..
அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி..
-
27th July 2015, 10:02 PM
#2167
Junior Member
Seasoned Hubber

If a country is to be corruption free and become a nation of beautiful minds, I strongly feel there are three key societal members who can make a difference. They are the father, the mother and the teacher.
English is necessary as at present original works of science are in English. I believe that in two decades times original works of science will start coming out in our languages. Then we can move over like the Japanese.
You have to dream before your dreams can come true.
--- abdul kalam
மிகவும் துயரமான செய்தி - இந்தியா மிசைல் மனிதர் இன்று நம்மிடையே இல்லை . இந்தியா ஒரு நல்ல தேசியவாதியை இழந்துவிட்டது . ஹைதராபாத்தில் அவரை சந்தித்து 15 நிமிடங்கள் உரையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது - அவருக்கு இருந்த energy level என்னை மலைக்க வைத்தது - venture capital யை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் --- முடிவில் அவர் சொன்ன ஒரு quote என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விட்டது .
" Don't read success stories
you will get only message
Read failure stories
you will get ideas to
get success "
-
27th July 2015, 10:12 PM
#2168
Senior Member
Veteran Hubber

Originally Posted by
sivajisenthil
அக்கினிச் சிறகுகள் தந்தவர்!! மக்களின் ஜனாதிபதியாக ஒளிர்ந்தவர்!! இளைஞர்களின் கனவாற்றலை தூண்டியவர்!!
பாரத ரத்னா ஏவுகணை விஞ்ஞான வழிகாட்டி apj அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது!!
நடிகர்திலகம் / மதுர கானங்கள் / ஜெமினி திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி
May his soul rest in peace .
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
27th July 2015, 11:42 PM
#2169
Senior Member
Senior Hubber
அப்துல் கலாம் மறைவு சோகம் என்றால் என்னுள்ளும் ஒரு சோகம்..அதன் விளைவு இந்தப் பாக்கள்.. கொஞ்சம் மனதைத் தொடும் என நினைக்கிறேன்..
(அந்த மாரி எழுதவே வரமாட்டேங்குதுங்க்ணா)
*
வேடிக்கை நான்கொண்டேன் வெஞ்சினம் கொள்ளாமல்
கூடிக் களிக்கவே ஓடியிங்கே –பாடி
மகிழவந்தேன் மன்னுதமிழ் மாண்பின் கவிதைகளால்
நெகிழவந்தேன் என்னாளு மே
எந்நாளும் உள்ளத்தின் ஏக்கங்கள் தீராமல்
வண்ணக் கவிதைகளை வாகாகப் பாடியவன்
சின்னவனாய்ப் பாவலர்முன் சீருடனே நின்றவந்தான்
வெண்ணுள்ளம் கொண்டவந்தான் நான்
நானாய் இருந்தகாலம் நல்லவழி சொல்லாமல்
தேனாய் தித்தித்துத் தீய்ந்துபோய் – வேண்டுமென
தெய்வத்தின் தாள்பற்றித் தேடித்தான் பார்த்தபடி
உய்ய உழல்கிறே னோ
உழல்வது என்பதெலாம் ஓடித்தான் சென்றே
சுழலெனச் சுற்றுகின்ற வாழ்வில் – கழலைப்
பிடிக்கின்றேன் கண்ணனவன் பேரழகுக் காலை
விடியுமா எப்போ தெனக்கு.
எனக்காய் இருக்கையிலே ஏற்றங் கொளவும்
கணக்காக வந்தநண்பர் கூட்டம் – கனவில்லை
நன்றையே எண்ணியவென் நல்நெஞ்சை மேலெடுத்துத்
திண்ணமாய்த் தீட்டினார் தாம்..
தாமாக முன்னே தயங்காமல் பாராட்டித்
தானாக ஏசுகின்றார் தாளாமல் – பாமாலை
சூட்ட நினைத்திங்கு சொக்கித்தான் போகின்றேன்
ஊட்டம் வரவேண்டு மே..
வரவேண்டும் என்றெல்லாம் வாய்மொழிந்தே பின்பே
வதங்கி முகம்வைத்து வாகாய் – மரமென்றே
எள்ளிச் சிரித்திங்கே ஏகடியம் செய்பவரை
தள்ள இயலவில்லை தான்..
தானாடும் இல்லை தசையாடும் என்றெல்லாம்
ஊனோடு கலந்த உறவென்பர் – மீனாடும்
செம்மதுரைக் காரன்நான் சேர்ந்திங்கே சொல்லிடுவேன்
இம்மையில் நட்பதுவும் தான்..
தானாய் வந்திடுமா தங்கத்தில் கற்பனைகள்
பேனா எடுத்துவிடில் பொங்கிடுமோ – காணாத
காட்சிகளைக் கண்டுவந்து கண்களுக்குள் கட்டிவைத்தே
மீட்சிகொள வைக்கவேண்டு மே
வேண்டுமே எந்நாளும் வெண்ணிதயம் மேதினியில்
தீண்ட மென்காற்று தேகத்தை – மீண்டுமே
யாரையும் நோகாமல் ஆட்கொள்ளும் நெஞ்சமெனும்
தேரையே தெய்வம்நீ தா..
**
Last edited by chinnakkannan; 28th July 2015 at 02:39 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
28th July 2015, 07:57 AM
#2170
Junior Member
Seasoned Hubber
Ck - உங்களுக்கு தெரியாததா ? இல்லை புரியாததா ? நாம் மற்றவரை காயப்படுத்தாத வரையில், அவர்களின் மனதை நோகடிக்காமல் இருக்கும் வரை நம் பதிவுகள் பலரின் மனங்களை தொட்டுக்கொண்டுதான் இருக்கும் . . உங்கள் கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவைகள் - மனதை தொடாமல் இருக்க முடியாது - மற்றவர்களின் மனதை தொடவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அப்துல் கலாமின் நெஞ்சை , ஆத்மாவை கண்டிப்பாக தொட்டிருக்கும்
Bookmarks