-
5th August 2015, 03:08 AM
#2411
Junior Member
Veteran Hubber
Gap filler / Monotony breaker
Swings and Dongles!
நடிகர்திலகம் ஆடிய ஊஞ்சல்களும் தொங்கல்களும்
ஊஞ்சலாட்டம் ஒரு மன மகிழ்வான பொழுதுபோக்கே! கவலைகள் மறந்து மனம் தெளிந்து உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பொங்க வைக்கும் விளையாட்டே !
திருமண நிகழ்விலும் அறுபதாம் ஆண்டு நிறைவு போன்ற வைபவங்களிலும் ஊஞ்சலாட்டம் சிம்பாலிக்காக வைக்கப் படுகிறது!சிறுவர் பெரியோர் பேதமின்றி ஆடி மகிழும் ஊஞ்சல்கள் நடிகர் திலகத்தையும் சுமந்தாடிய பெருமை பெற்றன..
அதே போலத்தான் அலங்கார சர விளக்குத் தொங்கல்களும் டார்ஜான் பாணி மரக்கிளை கொடித் தொங்கலும் கயிற்றுத் தொங்கலும்!!
உத்தமபுத்திரனில் அந்தப்புரத்தில் ஆடல் பாடல் மது மங்கை மயக்கத்தில் திளைத்திருக்கும் மோசமான தருணத்தில் அன்னையின் திடீர் வரவு விக்கிரமனை நிலைகுலைய வைக்கிறது அன்னையின் மீது மட்டற்ற பாசமும் மரியாதையும் இருப்பினும் சிவபூஜை கரடியாக தாயின் பிரவேசத்தை விரும்பாத மன நிலையை அலட்சியமாக ஊஞ்சலில் அமர்ந்து கால்களை எத்தி எத்தி ஆடும் அபாரமான உளவியல் வெறுப்பு கலந்த கோபத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு உலக நடிகர்கள் எவரையும் தாள் பணிய வைக்கும் உன்னதமே!!
வியட்நாம் வீடு காவியத்திலும் தம்பதியர் முதுமைத் தள்ளாட்டத்திலும் நாணிக் கோணி ஊஞ்சலாட்டம் பின்னுகிறார்கள்!!(No link available!)
சொர்க்கம் திரைப்படத்திலும் திருமணக் கனவாக வண்ணமயமான ஊஞ்சலாட்டம் இடம் பெறுகிறது !
உத்தம புத்திரன் கயிற்றுத் தொங்கலும் சாண்டலியர் சரவிளக்குத் தொங்கலாட்டமும்
In Deiva Magan too..!!
தங்கசுரங்கம் கயிற்றுத் தொங்கல் ..கிணற்றுக்குள் ரொமான்ஸ்!!
தங்கமலை ரகசியம் மரக் கொடி டார்ஜான் தொங்கலாட்டம்!
Last edited by sivajisenthil; 5th August 2015 at 01:01 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2015 03:08 AM
# ADS
Circuit advertisement
-
5th August 2015, 08:09 AM
#2412
Junior Member
Seasoned Hubber
1952 - rare documents from trichy publications
sivaji magazine ''parasakthi'' review
-
5th August 2015, 08:11 AM
#2413
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th August 2015, 08:13 AM
#2414
Junior Member
Seasoned Hubber
-
5th August 2015, 08:14 AM
#2415
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2015, 08:15 AM
#2416
Junior Member
Seasoned Hubber
-
5th August 2015, 08:17 AM
#2417
Junior Member
Seasoned Hubber
-
5th August 2015, 08:29 AM
#2418
Senior Member
Veteran Hubber
jugalbandi 45 aah/avan
From avan(1953), Tamil dubbed version of Aah(1953)
kalyaaNa oorvalam varum........
From the Hindi original Aah(1953)
raja ki ayegi baraat........
From Prema Lekhalu(1953), Telugu dubbed version
panditlo pellavuthunnadi..
I don't think I posted this jugalbandi earlier. I thought I should post some songs from Aah because I said that was my most favorite movie !
I sing this in jugalbandi in our annual music party. I sing the Tamil version and my friend from the north sings the Hindi version! Just for fun !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
5th August 2015, 10:05 AM
#2419
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
23
'அன்பைக் குறிப்பது 'அ'னா'
'என்ன முதலாளி சௌக்கியமா?'
இன்றைய தொடரில் அண்ணா புரொடக்ஷன்ஸ் அளிக்கும் டி.கே.சங்கரின் 'என்ன முதலாளி சௌக்கியமா?'
கம்யூனிசக் கொள்கைகளை முழங்கும் படம்.
மேஜர் மெயின் ரோல். அப்புறம் கே.ஆர்.விஜயா. ஜெமினி, நாகேஷ், ஜெயபாரதி. எம்.ஆர்.ஆர். வாசு, வி.எஸ்.ராகவன் என்று நட்சத்திரங்கள். கவர்ச்சிக்கு ஹலம், விஜயலலிதா கூட உண்டு.
முதலாளித்துவ வெறி பிடித்த மேஜரை விஜயா ஏமாற்றி திருமணம் கொண்டு நாகேஷ் துணையோடு அவரை அடக்குவதே கதை.
இந்தப் படத்தின் மூலக்கதை கண்ணதாசன். 'திரையுலகத் தாரகை' என்று விஜயாவின் பெயருக்கு டைட்டில் கொடுத்திருப்பார்கள். ஒளிப்பதிவு இயக்குனர் நிமாய் கோஷ். இசை 'மெல்லிசை மன்னர்'. அசோசியட் டைரெக்டர் K.விஜயன். திரைக்கதை, வசனம், இயக்கம் 'மல்லியம்' ராஜகோபால்.
ஈஸ்வரி பாடும்,
'என்ன முதலாளி சௌக்கியமா?' (மேஜரிடம் விஜயா கிண்டல்)
'எகிப்து நாட்டின் இளவரசி' (ஹலம் டான்ஸ்).
'நல்ல காரியம் நடக்கட்டும்...நமக்குள்ளாகவே இருக்கட்டும்' (விஜயலலிதா டான்ஸ்)
அப்புறம் 'பாடகர் திலகம்' நாகேஷுக்கு (மலையாளக் கரை ஜெயபாரதியைக் கிண்டல் செய்து) பாடும்
'வாடி வாடி என் மாளிகை மான்குட்டி'
என்று தெரிந்தும் தெரியாத பாடல்கள்.
பிறகு தொடரில் இடம் பெறப் போகும் பாலாவின் 'அன்பைக் குறிப்பது 'அ'னா பாடல்.
மீண்டும் ஜெமினிக்கு பாலா. ஜெமினி பள்ளிக் குழந்தைகள் மூலமே சிலேட்டில் 'அ'னா, 'ஆ'வன்னா எழுதி கே.ஆர்.விஜயாவை அவருக்கே உரித்தான பாணியில் கணக்குப் பண்ணப் பார்ப்பது அருமைதான். ஆனால் மனிதருக்கு வயது ஏறி முகம் பலாப்பழம் போல் முற்றிப் போய் எங்காவது வெடித்து விடப் போகிறது என்று நாம் அஞ்சும் அளவிற்கு இருப்பார். அவரைக் குறை கூறி என்ன பயன்? இயற்கைக்கு எல்லோரும் அடி பணிதுதானே ஆக வேண்டும்?
பாலா பாடல் முழுதும் கொஞ்சி விளையாடுவார். குழைவும் அருமை. அப்படியே பாடலில் சொக்க வைப்பார். அனுபவம் மெருகேறி பாலகக் குரல் கொஞ்சம் மறைந்து பாலாவின் குரலாகவே கேட்க ஆரம்பிக்கும்.
வெளிப்புறப் படப்பிடிப்பும், வண்ணக் குழைவும், பூங்காவும், குழந்தைகளும் நேர்த்தி. Tata Ace ன் உருவம் அகோரமாக இருந்தாலும் முகம் களையாகவே இருக்கும். புன்னகைக்கு அரசிதான்.
முதலில் உயிரெழுத்துக்களை வைத்தே கவிஞர் சிம்பிளாகவும், அழகாகவும் பாடலை முடித்து குழந்தைகள் வாயிலாக ஜெமினி மூலம் விஜயாவிற்கு காதல் தூது விட்டு விட்டார்.
அன்பைக் குறிப்பது 'அ' னா
ஆசையின் விளக்கம் 'ஆ' வன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ' யன்னா
(அன்பை)
உயிர்க்குயிர் என்பது 'உ' னா
ஊடலில் கூடல் 'ஊ' வன்னா
என்னையே தருவது 'எ' னா
ஏக்கமோ ஏக்கம் 'ஏ' யன்னா
லாலாலலலலலாலா
லாலலலாலாலாலா
(பாலா புகுந்து விளையாடி விடுவார் இந்த 'லாலா'வில். என்ன இனிமை! என்ன இனிமை!)
ஐக்கியப்படுவது 'ஐ'யன்னா
ஒழுக்கத்தை உணர்த்தும் 'ஒ' னா
ஓர் முடிவெடுப்பது 'ஓ' வன்னா
ஒளடதம் நோய்க்கென்ன 'ஒள' வன்னா
ஃ தே காதலாம் 'ஃ' ன்னா
லாலாலலலலலாலா
லாலலலாலாலாலா
'அ' னா 'ஆ' வன்னா 'இ' னா
'அ' னா 'ஆ' வன்னா 'இ' னா
லாலாலலலலலாலா
லாலலலாலாலாலா
இப்போது கணக்குக் குறியீடுகளை வைத்து கண்ணதாசன் விளையாடுவார். காதல், இல்லற வாழ்வின் தத்துவங்களை கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் இவற்றை வைத்தே முடித்துவிடும் சாமர்த்தியம் சாகாவரம் பெற்ற, எந்த நிலையிலும் தனக்கு மரணமில்லாத, கண்ணதாசனை அன்றி வேறு யாருக்கு உண்டு?
உள்ளத்தில் ஆர்வத்தைக் கூட்டி விடில்
உண்மைக் காதல் கையில் கூடி விடும்
உள்ளத்தில் ஆர்வத்தைக் கூட்டி விடில்
உண்மைக் காதல் கையில் கூடி விடும்
கள்ளத்தை எண்ணத்தில் கழித்து விடில்
கற்பு நெறி ஒன்றே மிச்சப்படும்
இல்லற வாழ்க்கையை வகுத்து விடில்
இருவரின் பங்கென்ன புரிந்து விடும்
இல்லற வாழ்க்கையை வகுத்து விடில்
இருவரின் பங்கென்ன புரிந்து விடும்
வெள்ளம் போல் ஆசையைப் பெருக்கி விடில்
வேலியிட்டு (சிகப்பு) முக்கோணம் தடுத்து விடும்
(அனைத்தும் ஜெமினி மூலம் சிலேட்டில் எழுதிக் காட்டப் படும். பாடல் முழுக்க ஜெமினி உற்சாக துள்ளாட்டம் போட்டபடி இருப்பது ரசிக்க வைக்கும்)
அன்பைக் குறிப்பது 'அ' னா
ஆசையின் விளக்கம் 'ஆ' வன்னா
அன்பைக் குறிப்பது 'அ' னா
ம்?!...
ஆசையின் விளக்கம் 'ஆ' வன்னா
Last edited by vasudevan31355; 5th August 2015 at 12:56 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
5th August 2015, 10:44 AM
#2420
Senior Member
Diamond Hubber
சின்னா!
கொஞ்சுமெழில் வச்சு மூணு பாட் எழுதினீரே. நன்னாயிட்டு. ஆமாம்! அமைதி கொள்ளாமல் குளிக்கும் அந்த நடிகைகள் யாரென்று சொல்லவே இல்லையே?
சரி! அது 'அக்கி பிடுகு' என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்றுத் தமிழ்ப் படம். 'வீராதி வீரன்' என்று தமிழில் 1964-ல் வந்தது. என்.டி. ராமாராவ் ஹீரோ. கிருஷ்ணகுமாரி, ராஜஸ்ரீ நாயகிகள். ராஜன் நாகேந்திரா இசையமைத்திருந்தார். ('இரு நிலவுகள்' என்ற கமல் நடித்த தெலுகு தமிழ் டப்பிங் படத்துக்கும் இவரே இசை. 'ஆனந்தம் அது என்னடா?' )
'எவரனுக்குன்னாவே' என்று தெலுங்கில் இந்தப் பாடல் தொடங்கும். புரட்சிதாசன் அதை 'அமைதி கொள்ளாமல்' என்று மாற்றி தமிழுக்கு எழுதி இருப்பார். 'எவரே...எவரே'... என்பதை 'எவன்டி?... எவன்டி?' என்று சாமர்த்தியமாக தமிழுக்குத் தக்கபடி வார்த்தைகளைப் போட்டிருப்பார்.
இரண்டிலுமே பாடல் கேட்க செம ஜோர். நான் சில மாதங்களுக்கு முன் கேட்டேன். இப்போது உங்கள் புண்ணியத்தால் இரண்டு மொழிகளிலும் மீண்டும் கேட்டு ரசித்தேன். தேங்க்ஸ் சின்னா
போனஸ் கொசுறு செய்தி.
'அக்கி பிடுகு' படம் எம்.கே ராதா, ரஞ்சன் நடித்து வந்து தமிழில் சக்கை போடு போட்ட ஜெமனி தயாரித்த 'அபூர்வ சகோதர்கள்', இந்தியில் ராஜேந்திர குமார் நடித்த 'கோரா அவுர் காலா', அப்புறம் ஒரிஜினல் தமிழில் மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'நீரும் நெருப்பும்' படத்தின் கார்பன் காப்பி உல்டா. தமிழில் மீண்டும் டப்பிங்கில் 'வீராதி வீரன்'
இதோ தெலுங்கு வடிவம். Enjoy. ஆமாம்! தமிழுக்கு மாஞ்சி மாஞ்சி லிரிக்ஸ் எழுதுனீரே! அப்படியே தெலுங்குக்கும் கொஞ்சம் எழுதுமே ஓய்..
Last edited by vasudevan31355; 5th August 2015 at 10:49 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks