-
6th August 2015, 08:28 AM
#2441
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2015 08:28 AM
# ADS
Circuit advertisement
-
6th August 2015, 08:29 AM
#2442
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2015, 08:48 AM
#2443
Senior Member
Diamond Hubber
நண்பர்களே!
இன்று உச்சகட்டமாய் தொழிலார்கள் ஒன்று திரண்டு நெய்வேலி தலைமை அலுவலகத்தை காலை 9 மணிக்கு மேல் முற்றுகை இட இருக்கிறோம். நேற்று மாலை ஒவ்வொரு தொழிலாளி வீட்டிற்கும் சென்று பேரணியில் கலந்து கொள்ள வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தோம்.
நேற்று நடந்த பேச்சு வார்த்தையிலும் நிர்வாகம் கொஞ்சமும் மசிந்து கொடுக்காததால் அனைத்து தொழிலாளர்களும் கொதிப்படைந்து இருக்கின்றனர். நெய்வேலியில் கலவர ரேகை படிய ஆரம்பித்திருக்கிறது. இன்றைய காலை போராட்டம் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக பேரணி தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரும் கைதாகலாம். கிட்டத்தட்ட 12000 தொழிலார்கள். இதில் குறைந்தது 6000 பேராவது பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2990 மெகாவாட் உற்பத்தி மின்சாரம் தற்சமயம் 1000 மெகாவாட் குறைந்து விட்டது. ஆனால் நிர்வாகம் பராமரிப்புப் பணியால்தான் உறபத்தி குறைந்துள்ளது என்று சப்பை கட்டு கட்டுகிறது. அதிகாரிகளின் கோழைத்தனமும், பயந்த போக்கும், நிர்வாகத்தின் அதீதமான அச்சுறத்தல்களும் அவர்கள் தொழிளார்களுக்கு சப்போர்ட் பண்ண முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கு இன்று சாவு மணி அடிக்கப்படவேண்டும் என்பதே தொழிலார்களின் நிலைப்பாடு.
மிகப் பெரிய கலவர சூழ்நிலையை உருவாவதற்கு நிர்வாகமே முழுப் பொறுப்பு. இதற்கு அதிகாரிகள் என்ற அடிமாடுகள் உடந்தை.
எந்தக் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில், கட்சித் தலைவர்களும் கண்டுகொள்ளாத நிலையில் தென்னகத்திற்கே மின்சாரம் வழங்கும் ஆசியாவின் மிகப் பெரிய நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தன்னுடைய தொழிலார்களுடன் அனாதையாய் நிற்கிறது. மின்சாரம் மட்டும் சொகுசாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதுமா? அதை உழைத்து உருக்குலைந்து தரும் தொழிலாளிகளின் நிலைமையை எந்தக் கட்சியாவது நினைத்துப் பார்க்கிறதா?
எங்களுக்காக இனி நாங்களே போராடிக் கொள்வது என்று தீர்மானம் எடுக்கும் நிலை வந்துவிட்டது. அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். சுயநலம் பிடித்து அலையும் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தொலைக்காட்சிகளில் கூட எங்கள் நிலைமை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. சன் டிவி, ஜெயா டிவியில் எல்லாம் இதெல்லாம் ஒரு செய்தியே அல்ல என்பது போல நடக்கிறார்கள். மின்சாரம் முழுதும் நின்றுவிட்டால் என்ன செய்வார்கள்? அவரவர்களுக்கும் அவரவர் தலைவர்களின் ஒப்பாரிதான் முக்கியம்.
இந்த நிலையில் இந்தப் பாடலைத்தான் நினைக்க வேண்டியுள்ளது.
எரிமலை எப்படிப் பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்தச் சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும்
விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
-
6th August 2015, 08:51 AM
#2444
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2015, 09:02 AM
#2445
Junior Member
Seasoned Hubber
திரு வாசுதேவன் சார்
நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்தின் நேர்மையற்ற போக்கும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் சில சுயநல யூனியன் தலைவர்களும் , பாராமுகமாக இருக்கும் அரசியல்
கட்சிகள் - இவர்களை நினைத்தால் ...............
உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது . எல்லாம் நல்லபடி நடந்திட வேண்டுகிறேன் .
-
6th August 2015, 09:26 AM
#2446
Senior Member
Veteran Hubber
Jugalbandi 46 - in memory of J.P.Chandrababu
I read somewhere today (5th August) is Chandrababu's birthday. In his memory here is a song he sang for VeeNa Balachander in Penn (1953)
kalyaaNam ha ha ha kalyaanam.......
From the Hindi remake Ladki
shaadi shaadi.....
From the Telugu remake Sangham
pelli pelli...
Last edited by rajraj; 6th August 2015 at 09:30 AM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
6th August 2015, 09:39 AM
#2447
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
இந்தப் பதிவினை நான் எழுதும் போது தங்கள் போராட்டம் துவங்கியிருக்கலாம்.
அதிகாரி வர்க்கம் நிர்வாகத்தின் பக்கமே நின்று தங்களுடைய சுயநலத்தை மட்டுமே குறியாய்க் கொண்டு செயல்படுவது இந்த நூற்றாண்டிலும் தொடர்வது உள்ளபடியே வேதனையாய்த் தான் இருக்கிறது
என்றாலும் வியர்வையின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
தங்கள் போராட்டம் வென்றே தீரும். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
என் மனமார்ந்த பிரார்த்தனைகள் தங்கள் எல்லோருக்காகவும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th August 2015, 11:08 AM
#2448
Senior Member
Diamond Hubber
Vasu ji..
My prayers for you and NLC employees. Ellam nallathagave nadakkum.
-
6th August 2015, 07:01 PM
#2449
Junior Member
Veteran Hubber
தேன் சொட்டும் வானமும் தேள் கொட்டும் வனமும்
கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகள் பொருத்தமான இசைகோர்ப்பில் வளமான குரல் குழைவில் வண்ண மயமான நடனம் கலந்த காட்சியமைப்பில் திறமையான நடிகர்களின் மெருகேற்றலில் வரும்போது அது தேன் சொட்டும் வானமே!!
ஏனோதானோ என்று நாராசமான கற்பனை வறட்சி நிறைந்த சொதப்பலான காட்சியமைப்பில் அதுவே தேள் கொட்டும் வனமாகிவிடும் வாய்ப்பும் உண்டே !!
பகுதி 1 : நடிகர்திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன்
இன்பம் பொங்கும் வெண்ணிலா Vs ஆத்துக்குள்ளே ஊத்தை வெட்டி...
தேன் சிந்தும் வானமான இனிமை பொங்கி வழியும் காட்சியமைப்பு !
விழிபிதுங்கி வெளியே ஓட வைக்கும் வனத் தேள்கடி !!
Last edited by sivajisenthil; 6th August 2015 at 07:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2015, 07:43 PM
#2450
Junior Member
Veteran Hubber
மாற்றார் தோட்ட மதுரங்கள்
பகுதி 29 : டீன் மார்டின் - ஜெர்ரிலூயி ஆடல் பாடல் கலக்கல் !!
சைலன்ஸ்ர்ஸ் படப் புகழ் டீன் மார்டின் மிகச் சிறந்த பாடகரும் கூட ! ஜெர்ரிலூயி நாகேஷின் மானசீக நகைச்சுவை குருநாதர்...அங்கசேஷ்டைகள் கொனஷ்டைகள் நிறைந்த ஆடல் பாடல்களிலும் தூள் பரத்தியவர்!!
இரு ஜாம்பவான்களும் இணைந்து ஏராளமான திரைவிருந்து பங்களிப்பினை நல்கியுள்ளனர் ..கறுப்பு வெள்ளை டு கலர் காலம் வரை!
Last edited by sivajisenthil; 6th August 2015 at 07:51 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks